Tag: இட்லி சட்னி

  • கதம்ப சட்னி செய்வது எப்படி?

    எத்தனை சட்னிகள் தெரிந்தாலும், காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்யலாம் என்று தினமும் யோசிப்போம். நீங்களும் அதையே நினைக்கிறீர்களா?

    எனவே வழக்கமான தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னி செய்வதற்கு பதிலாக கதம்ப சட்னியை ஒரு முறை செய்து பாருங்கள். இந்த கதம்பா சட்னி செய்வது எளிதானது மற்றும் அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

    மேலும் இது இட்லி, தோசை மட்டுமின்றி சாதம் மற்றும் சப்பாத்தியுடன் கூட நன்றாக இருக்கும். கதம்ப சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

    கதம்பா சட்னி செய்முறைக்கான எளிய செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து சுவைத்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்

    நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

    கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

    உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

    வறுத்த வேர்க்கடலை – 3 டேபிள் ஸ்பூன்

    சின்ன வெங்காயம் – 15

    வரமிளகாய் – 5

    பச்சை மிளகாய் – 1

    பெரிய வெங்காயம் – 1

    பூண்டு – 6 பல்

    இஞ்சி – 1 இன்ச்

    புதினா – 1 கைப்பிடி

    கொத்தமல்லி – 1 கைப்பிடி

    கறிவேப்பிலை – 2 கொத்து

    தக்காளி – 2

    புளி – சிறிய துண்டு

    உப்பு – 3/4 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு…

    நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

    கடுகு – 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

    பூண்டு – 3 பல்

    வரமிளகாய் – 1

    கறிவேப்பிலை – 1 கொத்து

    செய்முறை

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

    பின் அதில் சின்ன வெங்காயம், வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.

    பிறகு அதில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.

    பின்பு நறுக்கிய தக்காளி, புளி, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து லேசாக கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கதம்ப சட்னி தயார்.

  • ரோட்டுக்கடை காரச் சட்னி செய்வது எப்படி?

    காலையில் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லியுடன் என்ன சட்னி செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? ஆனால் சட்னி செய்ய உங்கள் வீட்டில் தேங்காய் இல்லையா? அதனால் கவலைப்பட வேண்டாம்.

    தேங்காய் சேர்க்காமல் தேங்காய் இல்லாத ரோட்டுக்கடை கார சட்னி செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கார சட்னியை செய்யலாம்.

    தேங்காய் இல்லாமல் ரோட்டுக்கடை கார சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? படித்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்

    எண்ணெய் – 1 டீஸ்பூன்

    வரமிளகாய் – 7

    பூண்டு – 6 பல்

    இஞ்சி – 1 இன்ச் துண்டு

    கறிவேப்பிலை – 1 கொத்து

    சீரகம் – 1 டீஸ்பூன்

    புளி – சிறிய துண்டு

    பொட்டுக்கடலை – 1 1/2 கப் அல்லது 150 கிராம்

    பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)

    உப்பு – 1 டீஸ்பூன்

    தண்ணீர் – தேவையான அளவு

    தாளிப்பற்கு…

    எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

    வரமிளகாய் – 1

    கடுகு – 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

    சீரகம் – 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை – 1 கொத்து

    கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)

    செய்முறை

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், பூண்டு இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம் மற்றும் புளி சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    பின் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் வதக்கி குளிர வைத்துள்ள பொருட்களை சேர்த்து ஒருமுறை கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து தாளிக்கவேண்டும்.

    தாளித்த பின் அதை அரைத்த சட்னியை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான தேங்காய் சேர்க்காத ரோட்டுக்கடை கார சட்னி தயார்.