Tag: காலிஃபிளவர் பட்டாணி குருமா செய்வது எப்படி

  • காலிஃபிளவர் பட்டாணி குருமா செய்வது எப்படி?

    சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி போன்றவற்றுக்கு இது ஒரு சிறந்த சைட் டிஷ். குறிப்பாக சப்பாத்தி குருமா கலவையின் சுவையே தனி. ஹோட்டல்களில் மட்டுமின்றி பெரும்பாலான வீடுகளில் காலை டிபனாகவோ அல்லது இரவிலோ சமைக்கப்படும் இந்த கலவையானது கூட்டத்தை ரசிக்க வைக்கிறது.

    தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற குருமா, பல்வேறு பொருட்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பின்பற்றி வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களால் வெவ்வேறு வழிகளில் சமைக்கப்படுகிறது.

    குருமாக்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பிரபலமானவை மட்டன் குருமா, சிக்கன் குருமா, வெஜிடபிள் குருமா, உருளைக்கிழங்கு குருமா மற்றும் காலிஃபிளவர் பட்டாணி குருமா.

    அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் மட்டன் குருமா மற்றும் சைவ பிரியர்களுக்கு காய்கறி மற்றும் காலிஃபிளவர் பட்டாணி குருமா. இவற்றைத் தயாரிக்க தேவையான பொருட்கள் சற்று அதிகமாக இருந்தாலும், தயாரிப்பது எளிது.

    இப்போது சுவையான வெஜிடபிள் பட்டாணி குருமா செய்ய தேவையான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை கீழே பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    1 medium காலிஃபிளவர்

    1/2 கப் fresh பச்சை பட்டாணி

    2 பெரிய வெங்காயம்

    2 தக்காளி

    1/4 கப் துருவிய தேங்காய்

    2 பச்சை மிளகாய்

    2 பிரியாணி இலை

    1 துண்டு பட்டை

    2 கிராம்பு

    2 ஏலக்காய்

    1/4 மேசைக்கரண்டி கடுகு

    சோம்பு தேவையான அளவு

    இஞ்சி தேவையான அளவு

    2 பூண்டு பல்

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள்த் தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    2 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    மிளகாய்த்தூள் தேவையான அளவு

    1 மேஜைக்கரண்டி பொட்டுக்கடலை

    1/2 மேஜைக்கரண்டி சீரகம்

    எண்ணெய் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    6 to 7 முந்திரி

    செய்முறை

    முதலில் காலிஃப்ளவர், தக்காளி, மற்றும் வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை பேஸ்ட் செய்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை துண்டு, கிராம்பு, கடுகு, மற்றும் 1 மேஜைக்கரண்டி சோம்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.

    பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், அவரவர் தேவைக்கேற்ப மிளகாய்த்தூள், கரம் மசாலா, மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

    அடுத்து இதனுடன் காலிஃபிளவர், பச்சை பட்டாணி, மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி ஒரு மூடி போட்டு காய்கறிகள் வேகும் வரை அடுப்பில் வைக்கவும்.

    காய்கறிகள் வேகுவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, அரை மேஜைக்கரண்டி சோம்பு, சீரகம், மற்றும் 6 லிருந்து 7 முந்திரியை ஒன்றாகப் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    காய்கறிகள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் ஊற்றி நன்கு கிளறவும். பின்னர் 3 லிருந்து 5 நிமிடம் வரை pan ல் மூடி போட்டு வேக விடவும்.

    குருமாவை இறக்குவதற்கு முன் தேவையான அளவு கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

    இப்பொழுது உங்கள் சூடான, சுவையான மற்றும் மணமான காலிஃபிளவர் பட்டாணி குருமா தயார். இதை வீட்டில் செய்து பார்த்து உண்டு மகிழுங்கள்.