Tag: செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி செய்வது எப்படி

  • கொண்டைக்கடலை கிரேவி செய்வது எப்படி?

    இந்தியாவில் தினசரி பிரதான உணவாக குழம்பு சாதம் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் எல்லோர் வீட்டிலும் சாதத்தில் குழம்புடன் தயாரித்து சாப்பிடுவது வழக்கம். குழம்புகளில் பல வகைகள் உள்ளன. சாம்பார், பருப்பு குழம்பு, கறிவேப்பிலை, புளி குழம்பு, தக்காளி குழம்பு, வத்த குழம்பு, கத்தரிக்காய் குழம்பு போன்றவை.

    அப்படியானால் இன்று இங்கு இருப்பது வித்தியாசமான கொண்டைக்கடலை குழம்பு.

    கொண்டைக்கடலை கிரேவியின் விசேஷம் என்னவென்றால், அதற்கு கடலைப்பருப்பு, வெங்காயம் மற்றும் தக்காளி மட்டுமே தேவைப்படுவதால், வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு எளிதாக செய்யலாம்.

    கொண்டைக்கடலை உடலுக்கு மிகவும் தேவையான புரதச்சத்து நிறைந்துள்ளதால் நமது உடலுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல், அவை நமது வழக்கமான கிரேவிகளுக்கு சிறந்த மாற்றாகும்.

    தேவையான பொருட்கள்

    200 கிராம் கொண்டைக்கடலை

    2 பெரிய வெங்காயம்

    2 தக்காளி

    2 பச்சை மிளகாய்

    3 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    1 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    1 மேஜைக்கரண்டி அம்ச்சூர் தூள்

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் கொண்டைக்கடலை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைத்து பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கொண்டைக்கடலையை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் கொண்டைக்கடலை, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மற்றும் சிறிதளவு உப்பு போட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 3 லிருந்து 4 விசில் வரும் வரை வேக விடவும்.

    4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கொண்டைக்கடலையை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையில் இருந்து ஒரு கையளவு கொண்டைக்கடலையை எடுத்து போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
    எண்ணெய் சுட்ட பின் அதில் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.

    அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, அம்ச்சூர் தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி நன்கு மசியும் வரை அதை வேக விடவும்.

    தக்காளி நன்கு மசிந்தவுடன் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (சுமார் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

    பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை போட்டு நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும்.

    குழம்பு நன்கு கொதித்ததும் அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை பக்குவமாக சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்குப் பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு கொண்டைக்கடலை குழம்பை எடுத்து சாதத்தில் ஊற்றி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அருமையான கொண்டைக்கடலை குழம்பு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • சுவையான பெப்பர் மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி?

    காளான் பொதுவாக பல வழிகளில் சமைத்து உண்ணப்படுகிறது. அதில் பெப்பர் மஷ்ரூம் கிரேவியும் ஒன்று. இவை சப்பாத்தி, பிரைடு ரைஸ், ரசம் சாதம் மற்றும் வெள்ளை சாதம் ஆகியவற்றுடன் பரிமாறுவது சிறந்தது. இதனுடன் சேர்க்கப்படும் காளானை தூள் துண்டுகளாக வெட்டி மாலை நேர சாண்ட்விச் ஸ்டஃபிங்காக பயன்படுத்தலாம்.

    காலையில் டிபனுக்கு சைட் டிஷ் ஆகவோ, மாலையில் சாண்ட்விச் ஆகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ செய்வது எளிது. காளான்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, குறிப்பாக வைட்டமின் டி, இது பெரும்பாலும் இறைச்சியில் மட்டுமே காணப்படுகிறது.

    காளான் மற்றும் மிளகு சேர்த்து செய்வதால் உடலுக்கும் மிகவும் சத்தானது. காளான்கள் சமைப்பதற்கு அதிக நேரம் எடுக்காததால் இவற்றைச் செய்வதும் மிகவும் எளிதானது. இப்போது மிளகு காளான் கிரேவிக்கான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை கீழே பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    2 பாக்கெட் பட்டன் மஷ்ரூம்

    2 பெரிய வெங்காயம்

    1 தக்காளி

    1 துண்டு இஞ்சி

    3 பூண்டு பல்

    மிளகாய் தூள் தேவையான அளவு

    1 மேசைக்கரண்டி தனியாதூள்

    1 மேசைக்கரண்டி மிளகு

    1 மேசைக்கரண்டி சோம்பு

    1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்

    எண்ணெய் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    கருவேப்பிலை சிறிதளவு

    செய்முறை:

    முதலில் மஷ்ரூம் ஐ ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும். (இவ்வாறு செய்தால் மஷ்ரூம் வெள்ளை நிறமாக மற்றும் சமைக்கும் வரை நிறம் மாறாமல் இருக்கும்.)

    அடுத்து மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, மற்றும் இஞ்சி பூண்டு ஐ ஒரு மிக்சியில் போட்டு பேஸ்ட் ஆக தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரை மேசைக்கரண்டி சோம்பு மற்றும் ஒரு மேசைக்கரண்டி மிளகு சேர்த்து சோம்பு சிறிது நிறம் மாறும் அளவிற்கு வறுக்கவும்.

    பின்பு அதை சிறுது நேரம் ஆற விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.

    பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 அல்லது 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை காய விடவும்.

    எண்ணெய் காய்ந்ததும் அரை மேஜைக்கரண்டி அளவு சோம்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை மற்றும் ஒரு பின்ச் அளவு உப்பையும் அதில் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் அளவிற்கு வதக்கவும்.

    பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
    அடுத்து அதில் தேவையான அளவு மிளகாய்த்தூள், தனியாத்தூள், நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பட்டன் மஷ்ரூம் ஐ சேர்த்து நன்கு பிரட்டி பின்பு அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து வேக விடவும்.

    மஷ்ரூம் ஐ கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். (தேவைப்பட்டால் மட்டுமே சிறுது அளவு தண்ணீர் தெளிக்கவும் ஏனென்றால் மஷ்ரூம் தண்ணீர் விடும் தன்மை கொண்டது.)

    மஷ்ரூம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள சோம்பு மற்றும் மிளகு துளை இதனுடன் சேர்த்து நன்கு பிரட்டவும். பின்பு இறக்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு சிறிதளவு கருவேப்பிலையை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான சுவையான மற்றும் சத்தான பெப்பர் மஷ்ரூம் கிரேவி தயார்.

    இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி!

    பொதுவாக, சிக்கன் குழம்பு எப்படிச் செய்தாலும், கோழியின் சுவை குழம்பை இன்னும் சுவையாக்கும் அல்லவா?

    இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் கிரேவியை எப்படி சரியாக தயாரிப்பது என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    கோழிக்கறி – 1/2 கிலோ

    வெங்காயம் – 4

    பச்சை மிளகாய் – 4

    தக்காளி – 4

    சிவப்பு மிளகாய் – 8

    தனியா – ஒரு கைப்பிடி

    மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

    மிளகு – 1 தேக்கரண்டி

    சீரகம் – 1 தேக்கரண்டி

    சோம்பு – 1/2 தேக்கரண்டி

    இஞ்சி – 1 துண்டு

    பூண்டு – 1(முழு)

    கசகசா – 1 தேக்கரண்டி

    தேங்காய் – 1/2 மூடி

    கிராம்பு, பட்டை, ஏலக்காய் – சிறிதளவு

    எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

    கறிவேப்பிலை – 1 கொத்து

    உப்பு – தேவையான அளவு

    செய்முறை:

    கோழியை நன்றாக கழுவவும். வர மிளகாய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா ஆகியவற்றை எண்ணெயில்லாமல் வறுத்து, நைசாக அரைக்கவும்.

    இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வேண்டுமானால் சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கவும். தக்காளியை நறுக்கவும்.

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காயை தோல் நீக்கி, பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கவும். சிவந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, கோழிக்கறி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    கறி நன்றாக வெந்ததும், அரைத்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, கறியின் மேல் மட்ட அளவு தண்ணீர் ஊற்றவும். குழம்பு கொதித்து கெட்டியானதும் இறக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்க்கவும். சுவையான கிராமத்து சிக்கன் குழம்பு தயார்.

    குறிப்பு: தேங்காய்க்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்து சிக்கன் கிரேவி செய்யலாம். இது மிகவும் சுவையாக இருக்கும்.