Tag: பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி

  • மிகவும் சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா செய்வது எப்படி?

    பன்னீர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு. பன்னீர் கொண்டு செய்யப்படும் உணவுகள், உணவு பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    எனவே இன்று இங்கு இருப்பது தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா. இவை சப்பாத்தி, நான், புல்கா, மற்றும் பரோட்டாவிற்கு சைடிஷ் ஆக தொட்டு உண்ண மிகவும் அட்டகாசமாக இருக்கும். அதுமட்டுமின்றி, ஃபிரைடு ரைஸ் மற்றும் நூடுல்ஸுக்கு சைட் டிஷ் ஆகவும் சிறந்தவை.

    தாபா ஸ்டைல் பன்னீர் மசாலாவின் சிறப்பு என்னவென்றால், மற்ற எந்த பன்னீர் உணவையும் செய்வது போல் இதுவும் எளிதாக செய்யக்கூடியது. பனீரை வறுக்கும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் கொஞ்சம் அதிகமாக வறுத்தால் பன்னீர் மிருதுவாக இருக்காது.

    தேவையான பொருட்கள்:

    250 கிராம் பன்னீர்

    3 பெரிய வெங்காயம்

    4 தக்காளி

    2 to 3 ஏலக்காய்

    3 to 4 கிராம்பு

    1 பட்டை துண்டு

    1 இஞ்சி துண்டு

    3 to 4 பல் பூண்டு

    1 மேஜைக்கரண்டி கடலை மாவு

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    1 மேஜைக்கரண்டி கசூரி மேத்தி

    ½ மேஜைக்கரண்டி சீரக தூள்

    ½ மேஜைக்கரண்டி மல்லி தூள்

    ¼ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு நெய்

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு புதினா

    செய்முறை:

    முதலில் பன்னீர், வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் புதினாவை தயார் செய்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்த ஒரு bowl லை எடுத்து அதில் நாம் சதுரமாக வெட்டி வைத்திருக்கும் பன்னீரை போட்டு அதனுடன் அரை மேஜைக்கரண்டி அளவு கரம் மசாலா, மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை பக்குவமாக நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் 2 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு அப்படியே சுமார் 30 லிருந்து 35 நிமிடம் வரை ஊற விடவும்.

    பின்னர் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    நெய் சூடான பின் அதில் சீரகம், ஏலக்காய், கிராம்பு, மற்றும் பட்டை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு வெங்காயம் நன்கு பொன்னிறம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் நன்கு பொன்னிறமானதும் அதில் கருப்பு மிளகு தூள், கசூரி மேத்தி, சீரக தூள், மல்லி தூள், கடலை மாவு, அரை மேஜைக்கரண்டி அளவு கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பின்பு அதில் நாம் செய்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்டை ஊற்றி நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை வேக விடவும்.

    4 நிமிடத்திற்கு பின்னர் மூடியை திறந்து மசாலாவை நன்கு கிண்டி விட்டு மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வேக விடவும்.

    எண்ணெய் பிரிந்து வருவதற்குள் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை உருக விடவும்.

    நெய் உருகியதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் பன்னீரை எடுத்து போட்டு அதை பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் திருப்பி போட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை சூடாக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அந்த பன்னீரை வெந்து கொண்டிருக்கும் மசாலாவுடன் சேர்த்து அதனுடன் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதை பக்குவமாக கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • பன்னீர் 65 மசாலா வீட்டிலேயே செய்வது எப்படி?

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு பன்னீர். பன்னீரைக் கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுகளும் உணவுப் பிரியர்களிடையே தனி ஈர்ப்பைக் கொண்டுள்ளன என்றால் அது மிகையாகாது.

    எனவே இன்று நாம் இப்போது பார்க்க இருப்பது பன்னீல் வித்தியாசமாக செய்யப்படும் பன்னீர் 65 மசாலா. பன்னீர் பிரியர்களுக்கு மட்டுமின்றி அனைவரும் விரும்பி உண்பார்கள்.

    நூடுல்ஸ், சப்பாத்தி, நாண், புல்கா, பிரைடு ரைஸ் போன்றவற்றுக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம். இவை மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றவை. நாம் வழக்கமாக மாலையில் சாப்பிடும் ஸ்நாக்ஸ் அல்லது டிபனுக்கு இவை சிறந்த மாற்றாகும். இதை நம் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    300 கிராம் பன்னீர்

    4 மேஜைக்கரண்டி சோள மாவு

    3 மேஜைக்கரண்டி மைதா மாவு

    ½ கப் தயிர்

    2 பச்சை மிளகாய்

    4 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு

    2 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி

    1 மேஜைக்கரண்டி கடுகு

    2 to 3 காய்ந்த மிளகாய்

    1 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்

    1 மேஜைக்கரண்டி சீரக தூள்

    1 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    1 மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கருவேப்பிலை

    சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்

    செய்முறை:

    முதலில் பன்னீர், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, ஸ்பிரிங் ஆனியன், மற்றும் கருவேப்பிலையை நறுக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் 3 மேஜைக்கரண்டி அளவு சோள மாவு, மைதா மாவு, கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு, ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி, நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை நன்கு கெட்டியான பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

    பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பன்னீரை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப அதில் பன்னீரை எடுத்து பக்குவமாக போட்டு அது நன்கு பொன்னிறமாகும் வரை அதை பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் கடுகை போட்டு அது வெடித்தவுடன் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், 3 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு, ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி, மற்றும் கருவேப்பிலையை போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், ரெட் சில்லி சாஸ், சீரக தூள், மல்லி தூள், மற்றும் கரம் மசாலாவை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு தயிரில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை போட்டு அதை கரைத்து அதில் சேர்த்து அது நன்கு கெட்டியாகும் வரை அதை கிளறி கொண்டே இருக்கவும்.

    பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும். (50ml தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

    அது கொதித்ததும் அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் பன்னீரை போட்டு அதை நன்கு பக்குவமாக கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனை சேர்த்து அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் பன்னீர் 65 மசாலா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.