Tag: மசால் வடை

  • மசால் வடை செய்வது எப்படி?

    மசால் வடை தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய மாலை நேர சிற்றுண்டியாகும். இன்றும் மசாலா வடை என்பது பலரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாகும். மாலையில், மசாலா வடைகள் விற்கும் ஸ்டால்களின் கூட்டத்தைக் காணலாம்.

    Masal வடை பொதுவாக தனியாக உண்ணலாம் ஆனால் சிலர் சாதத்துடன் சைடிஷ் உணவாக சாப்பிடுவார்கள். ஆமை வடிவில் இருப்பதால் மசால் வடை, ஆமை வடை என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு பருப்பு வாடை என்ற மற்றொரு பெயரும் உண்டு.

    தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் மாலை நேர சிற்றுண்டி. அவை தமிழ்நாட்டில் மசாலா வடை என்றும், கேரளாவில் பரிப்பு வட அல்லது மசாலா வடை என்றும், கர்நாடகாவில் மசாலா வடே என்றும் அழைக்கப்படுகின்றன.

    தேவையான பொருட்கள்

    கடலை பருப்பு 1 கப்

    பெரிய வெங்காயம் 3

    பச்சை மிளகாய் 3

    காய்ந்த மிளகாய் 2

    பூண்டு பல் 4

    இஞ்சி துண்டு 1

    பட்டை துண்டு 1

    சோம்பு 1 மேஜைக்கரண்டி

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    கருவேப்பிலை சிறிதளவு

    கொத்தமல்லி சிறிதளவு

    புதினா சிறிதளவு

    செய்முறை

    முதலில் கடலை பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, மற்றும் பூண்டை தட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சோம்பு, பட்டை, காய்ந்த மிளகாய், மற்றும் இஞ்சியை போட்டு அதை ஒரு சுற்று சுற்றி கொள்ளவும்.

    பின்பு அதில் நாம் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பில் இருந்து 2 மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பை எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து மீதமுள்ள கடலை பருப்புகளை போட்டு அதை அரைத்து கொள்ளவும்.

    இந்த பருப்பை கொரகொரப்பான பதத்திற்கு அரைத்தால் போதும் அதை நன்கு நைசாக அரைத்து விடக்கூடாது.

    இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் இந்த அரைத்த கலவையை போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், தட்டி வைத்திருக்கும் பூண்டு, எடுத்து வைத்திருக்கும் கடலை பருப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா, மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    இந்த கலவையை நன்கு கிளறி விட்ட பின் அதிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து அதை உருண்டையாக உருட்டி பின்பு அதை கையில் வைத்து பக்குவமாக தட்டி அதை தட்டையான வடிவிற்க்கு மாற்றி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமுள்ள மாவுகளையும் உருட்டி பின்பு தட்டி தயார் செய்து தட்டில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த வடைகளை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் வடைகளை வடசட்டியின் அளவிற்கேற்ப பக்குவமாக எடுத்து எண்ணெய்யில் போடவும்.

    பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.

    வடை இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இவ்வாறு மீதமுள்ள வடைகளையும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் நன்கு மொறு மொறுப்பாக இருக்கும் மசால் வடை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • மெது வடை செய்வது எப்படி?

    மெது வடை என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் பிரபலமான சிற்றுண்டி. இது உள்ளே மென்மையாகவும், வெளியில் மொறுமொறுப்பாகவும் இருப்பதால் பலருக்கும் பிடித்தமான சிற்றுண்டியாக அமைகிறது. இவை பொதுவாக காலையில் வெண் பொங்கலுடன் அல்லது மாலையில் தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

    சூடான சாம்பாரில் மெது வடையை போட்டு சுமார் 10 முதல் 15 நிமிடம் ஊற வைத்து அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை தூவி அற்புதமான சாம்பார் வடையாக சாப்பிடலாம். கேரட்டை விரும்புபவர்கள் கேரட்டை துருவி வெங்காயம், கொத்தமல்லி தூவி சாப்பிடலாம்.

    தமிழகத்தில் சாம்பார் வடை பிரியர்களின் தனி கூட்டம் உள்ளது என்றால் மிகையாகாது. சாம்பார் வடையை போன்றே வடையை பல விதமாக சுவைக்கலாம். மெது வடையை தயிரில் போட்டு தயிர் வடை ஆகவும் மற்றும் ரசத்தில் போட்டு ரச வடை ஆகவும் இதை உண்கிறார்கள்.

    தேவையான பொருட்கள்

    1 கப் உளுத்தம் பருப்பு

    1/4 கப் பச்சரிசி

    2 பெரிய வெங்காயம்

    1 பச்சை மிளகாய்

    1/4 மேஜைக்கரண்டி சீரகம்

    1/2 மேஜைக்கரண்டி மிளகு

    1 துண்டு இஞ்சி

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு கருவேப்பிலை

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    செய்முறை

    முதலில் உளுந்து மற்றும் பச்சரிசியை நன்கு கழுவி சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைத்து, வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் உளுந்தை முதலில் கிரைண்டரில் போட்டு பின்பு அதனுடன் பச்சரிசியையும் போட்டு நன்கு நைசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பின்பு அந்த மாவில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும் இஞ்சி சேர்த்த அதனுடன் சீரகம், மிளகு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    இப்பொழுது கலந்து வைத்திருக்கும் மாவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். (வெங்காயம் தண்ணீர் விடும் தன்மை கொண்டதால் வெங்காயத்தை வடை சுடுவதற்கு முன்பு கடைசியாக சேர்க்கவும்.)

    அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வடையை பொரித்து எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடாவதற்குள் ஒரு வாழை இலையில் வடையை தட்டு வதற்கு நன்கு எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும். (கையில் தட்டி போட வாட்டம் பெற்றவர்கள் கையிலேயே எண்ணெய்யை தடவி வடையை தட்டி போடலாம்.)

    எண்ணெய் சூடானதும் அதில் ஒரு கை அளவு மாவை எடுத்து இலையில் வைத்து அதை பக்குவமாக தட்டி நடுவில் துளை இட்டு கடாயில் போடவும்.

    பின்பு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு வடை நன்கு பொன்னிறமாக வந்ததும் அதை ஜல்லி கரண்டியின் மூலம் எண்ணெய்யை நன்கு வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    கடாயின் அளவிற்கேற்ப வடைகளை ஒவ்வொன்றாக தட்டி போட்டு எடுத்து சுட சுட சட்னி அல்லது சாம்பார் உடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான மெது வடை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.