Tag: Cooked Rice Recipes in Tamil

  • மீதம் இருக்கும் சாதத்தை இப்படி செய்யலாமா? இத்தனை நாளாக குப்பையிலை கொட்டிட்டேனே!!

    எங்கள் வீட்டில் முதல் நாள் அல்லது மதியம் சமைத்த சாதம் மீதம் இருக்கும் ஆனால் சிலர் அதை என்ன செய்வது என்று தெரியாமல் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

    ஆனால் சிலர் வத்தல் போல் செய்து சாப்பிடுவார்கள். எனவே வீட்டில் முதல் நாள் அல்லது மதியம் சமைத்த சாதம் மிச்சம் இருந்தால் இந்தப் பதிவில் சொல்லப்பட்டுள்ள செய்முறையை ஒருமுறை முயற்சி செய்து சுவைத்துப் பாருங்கள்.

    தேவையான பொருட்களை

    சாதம் – 2 கப்

    வெங்காயம் – 4

    பச்சைமிளகாய் – 2

    கொத்தமல்லியிலை – 2 கைப்பிடி அளவு

    கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு

    அரிசிமாவு – 1 1/2 கப்

    மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்

    சீரகம் – 1 டீஸ்பூன்

    பூண்டு – 10 பற்கள்

    சிவப்புமிளகாய் சாஸ் – 2 டீஸ்பூன்

    பச்சைமிளகாய் சாஸ் – 2 டீஸ்பூன்

    சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

    சோளமாவு(Corn Flour) – 2 டீஸ்பூன்

    எண்ணெய் – தேவையான அளவு

    தண்ணீர் – தேவையான அளவு

    உப்பு – தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் மீதமான சாதத்தை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.

    பின் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் 2 வெங்காயம், 2 பச்சை மிளகாய், 1 கைப்பிடி கொத்தமல்லி தழை மற்றும் 1 கைப்பிடி கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு கலக்கவும்.

    அதனுடன் 1 1/2 கப் அரிசி மாவு, 1 டீஸ்பூன் சீரகம், 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.

    பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். பின் அதில் நாம் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு நன்றாக பொரிக்கவும்.

    பிறகு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். 10 பல் பூண்டு மற்றும் 2 வெங்காயம் சேர்த்து பொடியாக நறுக்கி வதக்கவும்.

    2 டீஸ்பூன் ரெட் சில்லி சாஸ், 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் சாஸ் மற்றும் 1 டீஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பிறகு 2 டீஸ்பூன் சோளமாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து ஊற்றவும். இவை அனைத்தும் ஒன்றாகக் கலந்தவுடன் தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கொதித்ததும் நாம் முன்பு செய்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பின்னர் அதன் மீது 1 கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி அனைவருக்கும் பரிமாறவும்.