Tag: Mutton Kola

  • மட்டன் உப்பு கண்டம் செய்வது எப்படி?

    மட்டன் உப்புகண்டத்தை பொதுவாக நன்றாக வெயில் அடிக்கும் கோடையில் செய்து வைத்தால் தான் நன்கு காய்ந்து இருக்கும். நன்கு காய்ந்தால் தான் மழைகாலத்தில் பொரித்தோ அல்லது உப்புகண்டம் குழம்பு வைத்தோ சாப்பிடலாம்.

    ஆட்டு இறைச்சி சாப்பிடுவதற்கு சுவையான மற்றும் சத்தான உணவு. உப்பு சேர்த்து நன்கு உலர்த்தி உப்புகண்டமாக சேர்த்து சாப்பிட கூடுதல் சுவை கிடைக்கும். இன்றும் தென் மாவட்ட கிராமங்களில் செய்து சாப்பிடுகிறார்கள்.

    மட்டன் உப்புகண்டம் பொதுவாக வெப்பமான கோடை காலத்தில் தயாரிக்கப்படுகிறது மற்றும் மழைக்காலத்தில் வறுத்த அல்லது உப்புகண்டம் குழம்புடன் உண்ணப்படுகிறது. கிராமத்தில் உள்ள விவசாயிகள் தினமும் உப்புகண்டத்தை ஊறுகாயாக சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    ஆட்டு இறைச்சி – 1 கிலோ

    பூண்டு – 20 பல்,

    காய்ந்த மிளகாய் – 15

    மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

    செய்முறை

    மட்டன் உப்பு கண்டம் செய்வது எப்படி:

    ஆட்டு இறைச்சியை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

    பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். இந்த விழுதினை நறுக்கி வைத்த கறியில் சேர்த்து நன்கு கலக்கவும்.

    மசாலா நன்றாக பிடிக்க வேண்டும். இதனை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் காய வைக்கவும்.

    ஈரம் வற்றும் வரை இரண்டு மூன்று நாட்கள் வரை காய வைக்கவும். நன்றாக காய்ந்த உடன் காற்று புகாதா டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

    சில மாதம் வரை கெட்டுப்போகாது. தேவைப்படும் போது உப்புக்கண்டத்தை எடுத்து சிறு சிறு துண்டுகளாக அம்மிக்கல்லில் தட்டி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.

    சுவையான ருசியான உப்புக்கண்டம் ரெடி.

  • மட்டன் கோலா செய்வது எப்படி?

    ஆங்கிலத்தில் Meatballs என்று அழைக்கப்படும் இந்த கோலா உருண்டைகள் இந்திய துணைக்கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான உணவாகும். இவையும் இறைச்சி சேர்க்காமல் செய்யப்படுகின்றன. இறைச்சி இல்லாமல் தயாரிக்கப்படும் கோலா உருண்டைகள் கிரேக்க மொழியில் hortokeftedes என்றும் துருக்கியில் Çiğ köfte என்றும் அழைக்கப்படுகிறது.

    இறைச்சிக்கு பதிலாக உருளைக்கிழங்கு அல்லது சீஸ் கொண்டு இறைச்சி இல்லாத கோலா உருண்டைகள் தயாரிக்கப்படுகின்றன. சில பகுதிகளில் இவை குழம்புகளாகவும் செய்யப்படுகின்றன.

    மட்டன் கோலா உருண்டைகளின் சிறப்பு என்னவென்றால், அவை மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் மட்டுமல்லாமல், சத்தான மாலை நேர சிற்றுண்டியாகவும் இருக்கும்.

    குழந்தைகளுக்கு மாலையில் பிஸ்கட் மற்றும் சிப்ஸ் கொடுப்பதற்கு பதிலாக, இந்த சத்தான மட்டன் கோலா உருண்டைகளை உருவாக்குங்கள்.

    தேவையான பொருட்கள்

    250 g மட்டன் கொத்துக்கறி

    1 பெரிய வெங்காயம்

    1 மேஜைக்கரண்டி பொட்டுகடலை

    1 பச்சை மிளகாய்

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    1 மேஜைக்கரண்டி சோம்பு

    1 பட்டை துண்டு

    2 கிராம்பு

    1 ஏலக்காய்

    1 இஞ்சி துண்டு

    2 பூண்டு பல்

    மிளகாய் தூள் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    1 கை அளவு கொத்தமல்லி

    செய்முறை

    மட்டன் கோலா செய்வது எப்படி:

    முதலில் வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை நன்றாக பொடியாக நறுக்கி, பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பவுடராக்கி வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு பட்டை, ஒரு மேஜைக்கரண்டி சோம்பு, 2 கிராம்பு, மற்றும் ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    பின்பு அதில் 2 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, மற்றும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.

    எண்ணெய் சுசூடானதும் அதில் கொத்துக்கறி, மஞ்சள் தூள், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கிண்டி சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்குப் பிறகு வெந்த கொத்துக்கறியை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். (கறியிலிருந்து தண்ணீர் வந்திருந்தால் தண்ணீர் இல்லாமல் கறியை மட்டும் எடுத்து வைக்கவும்.)

    இப்பொழுது இந்த கரியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

    அடுத்து அரைத்த கறியில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கொத்தமல்லி, மற்றும் அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலையை போட்டு நன்கு பிணைந்து கொள்ளவும்.

    கோலா உருண்டைகளை பொரித்து எடுக்கும் போது கரி தனியாக பிரிந்து விடாமல் இருப்பதற்காகவே பொட்டுகடலை அரைத்து சேர்க்கிறோம்.

    அதனால் மாவு தண்ணியாக இருந்தால் அதற்கேற்றவாறு பொட்டுக்கடலை பவுடரை கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

    இப்பொழுது பிணைந்து வைத்திருக்கும் இந்தக் கரியை உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    பின்னர் ஒரு வட சட்டியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த உருண்டைகளை பொரித்து எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் பிடித்து வைத்திருக்கும் இந்த உருண்டைகளை வட சட்டியின் அளவிற்கேற்ப ஒரு முறையோ அல்லது இரு முறையோ போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பிவிட்டு பொன்னிறமானதும் எண்ணெய்யை வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கெட்சப் உடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான மட்டன் கோலா உருண்டை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

    இதையும் செய்யலாம்!: மட்டன் சுக்கா செய்வது எப்படி?