Category: Tips

  • சமைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்!

    சமையல் ஒரு அற்புதமான கலை. ஆரோக்கியத்தில் சமையல் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தால் சில பிரச்சனைகள் வராது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை ஊட்ட விரும்பும் பெற்றோர்கள் சமையலையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

    இன்றைய தலைமுறையினர் சமைப்பதை ஒரு வேலையாக பார்க்கிறார்கள். கத்தியைப் பிடிக்கத் தெரியாததாலும், வெங்காயத்தை வெட்டும்போது கண்ணில் நீர் கசிவதாலும் பலர் சமையலறையைத் தவிர்க்கிறார்கள்.

    சமையல் அறையிலும், சமைக்கும் போதும் தவிர்க்க வேண்டிய தவறுகளை அறிந்தால் யாரும் சமையலறைக்குள் நுழைய தயக்கம் காட்டமாட்டார்கள்.

    சமையலின் போது செய்யக் கூடாதவை

    சமையலறையில் பலரும் சிரமமாக கருதும் மிக எளிதான வேலை காய்கறிகளை நறுக்குவது. காய்கறிகள் நறுக்க அல்லது வெட்ட பயன்படுத்தும் கத்தியின் பிடிப்பு வாட்டமாகவும் வெட்டும் பகுதி நீளமாகவும் இருப்பது அவசியம். கத்தி பிடிக்கும் பகுதியை விட வெட்டும் பகுதி நீளமாக இருக்க வேண்டும். பத்து ரூபாய்க்கு கிடைக்கும் கத்தியை பயன்படுத்தாதீர்கள்.

    கூர்மையான கத்தி இல்லாத பட்சத்தில் அருகமனை பயன்படுத்துவது நல்லது.

    ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் உபயோகம் செய்யாதீர்கள்.

    பூரி சுடுவதற்கு பயன்படுத்திய் எண்ணெய்யை தோசை ஊற்ற பயன்படுத்துவது, கடுகு தாளிப்புக்கு ஊற்றுவது என இவை அனைத்துமே தவறு.

    உபயோகப்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தினால் Trans fat உண்டாகும். இதை சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்.

    பூரி சுடுவதற்கு, அப்பளம் பொரிப்பதற்கு சின்ன கடாய் பயன்படுத்தி எண்ணெய்யை மிச்சம் செய்யலாம்.

    கேசரி பவுடர் உபயோகிப்பதை தவிர்க்கவும். இது முழுக்க முழுக்க நிறமி மட்டுமே. இதனால் எந்த பயனும் கிடையாது.

    சமையலுக்கு பயன்படுத்தும் பேன் டெஃப்லான் கோட்டிங் செய்யப்பட்டதாக பயன்படுத்தாதீர்கள். இது உடல் நலனுக்கு கேடு.

    காய்கறி வேக வைத்த பிறகு அந்த தண்ணியை கீழே ஊற்றி வீண் செய்யாமல் சப்பாத்தி மாவு பிசைய, சாம்பார் வைக்க பயன்படுத்தலாம். இதனால் காய்கறிகளில் இருந்து கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து வீண் ஆகாது.

    இறைச்சியை கடைகளில் இருந்து வாங்கி வந்த பிறகு அதை அன்றே சமைத்துவிடுங்கள். பிரிட்ஜில் வைத்து இரண்டு மணி நேரம் கழித்து வெளியே எடுத்து பாதி சமைத்துவிட்டு மீதி பாதியை உள்ளே வைப்பது அல்லது முழுவதையும் சமைத்து மிச்சத்தை பிரிட்ஜில் வைத்து இரண்டு நாட்கள் கழித்து சூடுபடுத்தி சாப்பிடுவது உடலுக்கு தீங்கு. இதனால் தான் உணவு நஞ்சாக மாறுகிறது.

    வெங்காயத்தை குளிர்ந்த நீரில் கழுவி வெட்டினால் கண்களில் இருந்து தண்ணீர் வராது.

  • சமையல் ருசிக்கு சிம்பிள் டிப்ஸ்கள்!!

    சமையல் ஒரு கலை. அதை நன்றாகக் கெடுப்பதும், ருசிக்காவே முடியாத அளவுக்குக் கெடுப்பதும் சமையற்காரர்களின் கையில்தான் இருக்கிறது. குறிப்பாக வீட்டில் பெண்கள் பார்த்து பார்த்து சமைத்தாலும் சில சமயம் சுவையாக இருக்காது.

    ஒரு நாள் சமையல் ருசியாக அமைந்துவிட்டால், அதை இன்னும் சுவையாகச் செய்ய விரும்புவார்கள். உங்கள் உணவில் கூடுதல் சுவையை சேர்க்க சில எளிய சமையல் குறிப்புகள் இங்கே.

    சமையலை ருசியாக்கும் சிம்பிள் டிப்ஸ்கள்:

    தக்காளி, லெமன், தயிர் போன்ற கலவை சாதம், பிரியாணி போன்வற்றைக் குக்கரில் செய்யும் போது மூடியைத் திறந்ததுமே சிறிது எலுமிச்சைச் சாறை விட்டு கிளறவும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது சாதம் கொழந்தைவிடாமல் உதிரி உதிரியாக வரும்.

    வாழைப்பூவைப் பிரித்தெடுத்து வைத்தால் அது கருமை நிறத்திற்கு வரக்கூடும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், வாழைப்பூவை எப்போதும் நறுக்கியவுடன் உப்பு, மஞ்சள் பொடி கரைத்த நீரில் ஊறப் போட வேண்டும். இவ்வாறு செய்யும் போது பூ கறுக்காமல் இருக்கும்.

    கோடை விடுமுறையில் கட்டாயம் உங்களது குழந்தைகளுக்கு ஒருமுறையாவது பக்கோடா செய்து கொடுத்திருப்போம். சில நேரங்களில் மொறு மொறுவென்று இருக்கும். சில நேரங்களில் நமத்துப்போயிருக்கும். இதை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றால், பக்கோடா செய்யும் போது வேர்ககடலையை பொடி செய்து கடலைமாவில் கலந்துக்கொள்ளும் போது மொறு மொறுன்னு இருக்கும்.

    சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு சாப்பிட்டால் நாக்கு அரிக்கும். ஆனாலும் ஃப்ரை செய்து சாப்பிடுவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடுவார்கள். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் சேனைக்கிழங்கை சமைக்கும் போது, புளிநீரில் வேக வைத்தால் சாப்பிடும் போது நாக்கு அரிக்காமல் இருக்கும்.

    குழந்தைகளுக்கு மதிய உணவிற்காகத் தக்காளி சாதம் செய்துக் கொடுக்க வேண்டும் என்று நினைப்போம். சில நேரங்களில் நாமே சாப்பிட முடியாத அளவிற்கு கொடுமையாகிவிடும். இதன் ருசியை மேலும் அதிகமாக்க வேண்டும் என்றால், தக்காளி சாதம் செய்யும் போது சிறிது இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி போன்றவற்றை அரைத்து ஊற்றினால் போதும். தக்காளி சாதம் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

    அப்பளம் பொரித்து சாப்பிடுவதே மொறு மொறு சுவைக்காகத் தான். ஒருவேளை நமத்துவிடும் போது அதன் சுவை முற்றிலும் மாறிவிடும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், அப்பளத்தின் இருபுறமும் லேசாக எண்ணெய் தடவி நெருப்பில் சுட்டால் பொரித்தது போலவே இருக்கும். இதுபோன்ற முறைகளைப் பின்பற்றி நீங்கள் சமைக்கும் உணவுகளுக்குக் கொஞ்சம் கூடுதல் சுவையைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

  • சமையலறை தொட்டி சுத்தம் செய்வது எப்படி??

    ஒரு சுத்தமான சமையலறை ஒரு மகிழ்ச்சியான சமையலறை. பெண்கள் பெரும்பாலான நேரத்தை சமையலறையில் செலவிடுவதால், பெண்கள் சமையலறை சுத்தமாக இருக்க விரும்புகிறார்கள். சமையலறை சுத்தமாக இருந்தால் மட்டுமே சமையல் நன்றாக அமையும்.

    சமையலறை சிங்கை மிகவும் முக்கியமானது மற்றும் புறக்கணிக்கப்படக்கூடாது. பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க இதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எனக்கு ரசாயன பொருட்களுக்கு ஒவ்வாமை இருப்பதால், துப்புரவு நோக்கங்களுக்காக கடுமையான இரசாயனங்கள் பயன்படுத்துவதை பெண்கள் தவிர்க்கிறார்கள். சுத்தம் நோக்கங்களுக்காக வினிகர், பேக்கிங் சோடா, எலுமிச்சை மற்றும் உப்பு ஆகியவற்றைப் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துகிறார்கள்.

    தேவையான பொருட்கள்

    செயற்கை வினிகர்

    சமையல் சோடா

    எலுமிச்சை சாறு

    உப்பு

    ரப்பர் கையுறைகள்

    ஸ்க்ரப்பர்

    பழைய பல் துலக்கும் பிரஷ்

    மென்மையான துணி

    முறை 1

    வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி துருப்பிடிக்காத ஸ்டீல் சிங்கை சுத்தம் செய்வது எப்படி?

    முதலில் உங்கள் துருப்பிடிக்காத ஸ்டீல் சிங்கை தண்ணீரில் கழுவவும் அல்லது ஈரப்படுத்தவும்.

    பேக்கிங் சோடாவை அல்லது சமையல் சோடாவை சிங்க் முழுவதும் தெளிக்கவும். பேக்கிங் சோடா ஒரு இயற்கை சுத்தப்படுத்தியாகும்.

    பின்னர் 1-2 டீஸ்பூன் வெள்ளை வினிகர் சேர்க்கவும். நைலான் ஸ்க்ரப் அல்லது சிராய்ப்பு இல்லாத ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தி சிங்க் பகுதி முழுவதும் பரப்பவும்.

    இது 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள்.

    சிங்கை கழுவ வேண்டாம். 3-4 சொட்டு டிஷ் வாஷிங் சோப்பை ஒரு ஸ்க்ரப்பரில் எடுத்து, ஒரு வட்ட இயக்கத்தில் சிறிய தண்ணீரில் சிங்க் முழுவதும் துடைக்கவும்.

    இயற்கை தயாரிப்புகளைப் பயன்படுத்தி சமையலறை சிங்கின் வடிகால் துளைகளைத் சுத்தம் செய்வது எப்படி?

    பழைய பல் துலக்கும் பிரஷை பயன்படுத்தி, சிங்கின் வடிகால் துளைகளைத் துடைத்து, குழாய்களைத் தட்டவும். நீங்கள் பயன்படுத்திய எலுமிச்சை தோலை தேய்த்து குழாய் சுத்தம் செய்யலாம்.

    பின்னர் சிங்க் மற்றும் குழாய் ஆகியவற்றை நிறைய தண்ணீரைப் பயன்படுத்தி கழுவவும்.

    இறுதியாக உலர்ந்த துணியால் சிங்கைத் துடைக்கவும்.

    உங்கள் சிங்கின் நிலையைப் பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை இதைச் செய்யலாம்.

    உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தி எஃகு மடுவை சுத்தம் செய்வது எப்படி?

    வீட்டில் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா இல்லையென்றால், எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்யலாம்.

    எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சம பாகங்களாக பிரித்து ஒன்றாக கலக்கவும்.

    இந்த கலவையை சிங்கின் மீது நன்றாக தேய்த்து, 30-40 நிமிடங்கள் விட்டுவிட்டு, பின்னர் ஒரு ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தி துடைக்கவும்.

    பின்னர் தண்ணீரைப் பயன்படுத்து நன்கு சுத்த்ம் செய்யவும்.

    செய்யக்கூடாதவை:

    ஸ்க்ரப்பிங்கிற்கு எஃகு கம்பளியைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது கீறல்களை விட்டுவிடும்.

    அழுக்கு உணவுகளை ஒருபோதும் சிங்கில் விட வேண்டாம்.

    உடனடியாக பாத்திரங்களை கழுவ சோம்பலாக உணர்ந்தால், அதை ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் போட்டு சமையலறைக்கு வெளியே வைத்திருக்கலாம்.

  • கொத்தமல்லி அழுகாமல் இருக்க சில டிப்ஸ்!!

    ஒருமுறை வாங்கிய கொத்தமல்லி நீண்ட நாட்கள் புதிதாக இருப்பதில்லை. அடுத்த சில நாட்களில் காய்ந்து அல்லது அழுகும் நிலை உண்டாகிறது. அதனை குப்பையில் வீசுவது தவிர வேறு வழியில்லை.

    ஆனால் இந்த ஆரோக்கியம் மிக்க வாசனைமிக்க கொத்தமல்லியை பாதுகாப்பதற்கான வழி தெரிந்தால், அதன் ஆயுளை இரண்டு வாரம் வரை நீட்டிக்க முடியும். உங்கள் வீட்டில் கொத்தமல்லியை ஒரு வாரம்திற்கு மேல் புதிதாக வைத்துக் கொள்ள நாங்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.

    ஒரு கொத்தமல்லி கட்டு வாங்கி அதன் வேர்ப்பகுதியை வெட்டி விடவும்.

    பிறகு ஒரு பாத்திரம் எடுத்து அதில் தண்ணீர் நிரப்பி ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    இந்நீரில் கொத்தமல்லி கட்டை அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு நன்றாக கழுவி அதனை உலர விடவும். நன்கு உலர்ந்ததை உறுதிசெய்ய கொத்தமல்லி கட்டை ஒரு பேப்பர் டவலில் ஒத்தி எடுக்கவும்.

    உலர்ந்த கொத்தமல்லியை , பேப்பர் டவலில் வைத்து மற்றொரு பாத்திரத்தில் வைக்கவும். பிறகு அதன் மீது ஒரு பேப்பர் டவல் போர்த்தி இறுக்கமாக மூடி வைக்கவும்.

    கொத்தமல்லி இலைகளில் ஒரு சிறு துளி கூட ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். இந்த காற்றுப்புகாத டப்பாவை உங்கள் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் இந்த இலைகள் வாடாமல் புதிதாக இருக்கும்.

    கொத்தமல்லியின் வேர் பகுதியை நீக்கிவிட்டு கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.

    பேப்பர் டவல் பயன்படுத்தி ஈரத்தை உலர விடவும். * ஒரு கண்ணாடி ஜாடியில் குளிர்ந்த நீரை கால் பகுதி நிரப்பிக் கொள்ளவும். கொத்தமல்லியின் தண்டுகள் நீரில் மூழ்கும் படி வைக்கவும். அதன் இலைகள் நீரின் மேற் பகுதியில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். தண்ணீரில் இலைகள் படும்படி இருந்தால் அந்த இலைகளை நீக்கி விடவும்.

    கண்ணாடி ஜாடியை ஒரு ஜிப் லாக் பை கொண்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். பை சற்று லூசாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

    அடுத்த சில தினங்களுக்கு ஒருமுறை இந்த நீரை மாற்ற வேண்டும்.

    இப்படி செய்வதால் அடுத்த இரண்டு வாரங்கள் கொத்தமல்லி புதிதாக இருக்க முடியும்.

    கொத்தமல்லி கட்டில் வேரை நீக்கிவிட்டு நன்றாக கழுவிக் கொள்ளவும்.

    கழுவிய இலைகளை நன்றாக உலர விடவும். * ஒரு கட்டு கொத்தமல்லி இலைகளை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவும்.

    பிரித்து வைத்த ஒவ்வொரு பகுதி கொத்தமல்லி கட்டையும் ஒவ்வொரு பேப்பர் டவலில் சுற்றி கொள்ளவும். சுற்றி வைத்த கட்டுகளை ஒரு ஜிப் லாக் பையில் போட்டுக் கொள்ளவும்.

    எல்லா கட்டுகளையும் பையில் வைத்து சரியாக மூடி பிரிட்ஜில் வைக்கவும்.

    இந்த முறையை பின்பற்றுவதால் கொத்தமல்லி இலைகள் இரண்டு வாரத்திற்கு மேல் புதிதாக இருக்கும். மேலே கூறிய வழிகளைப் பின்பற்றுவதால் கொத்தமல்லி இரண்டு வாரத்திற்கு பிறகும், நறுமணத்துடன் அதன் நிறம் மாறாமல் பாதுகாப்பாக இருக்கும்.