Tag: அடை தோசை செய்வது எப்படி

  • ரவா தோசை செய்வது எப்படி?

    தோசை என்பது தமிழர்களின் பாரம்பரிய உணவு. தமிழ் சமையல் முறையில் மிக நீண்ட வரலாறு உண்டு. தோசை என்பது தமிழ்நாட்டில் வாழும் பல குடும்பங்களின் காலை டிப்பன். இவை பொதுவாக சாம்பார், தேங்காய் சட்னி மற்றும் பருப்பு பொடியுடன் பரிமாறப்படும்.

    தோசையில் பல வகைகள் உண்டு. ப்ளைன் தோசை, கீ ரோஸ்ட், மசால் தோசை, ரவா தோசை, பன்னீர் தோசை, வெங்காய தோசை, கல் தோசை போன்றவை மிகவும் பிரபலம். இவை தமிழ்நாட்டில் உருவானவை என்றாலும் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டன.

    இந்தியாவில் இவை இல்லாத தென்னிந்திய உணவகங்களை நீங்கள் காண முடியாத அளவுக்கு அவை பிரபலமாக உள்ளன. அதுமட்டுமின்றி, இந்தியர்கள் அதிகம் உள்ள அமெரிக்கப் பகுதிகளிலும் அமெரிக்கர்களின் விருப்ப உணவாக இவை மாறிவிட்டன என்றால் மிகையாகாது.

    தேவையான பொருட்கள்

    1 கப் அரிசி மாவு

    1 கப் ரவை

    2 மேஜைக்கரண்டி மைதா மாவு

    2 மேஜைக்கரண்டி தயிர்

    1 பெரிய வெங்காயம்

    1 பச்சை மிளகாய்

    1 துண்டு இஞ்சி

    8 to 10 முந்திரி

    1/2 மேஜைக்கரண்டி மிளகு தூள்

    1/2 மேஜைக்கரண்டி சீரகத் தூள்

    1/4 மேஜைக்கரண்டி எள்

    1/4 மேஜைக்கரண்டி சர்க்கரை

    1 கை அளவு கொத்தமல்லி

    1 கை அளவு கருவேப்பிலை

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    செய்முறை

    முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் முந்திரியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரவை, மற்றும் மைதா மாவை கொட்டி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும் முந்திரியை சேர்த்து அதனுடன் மிளகு தூள், சீரகத் தூள், எள், தயிர், மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    இப்பொழுது அந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து முதலில் அதை நன்கு கட்டி தட்டாமல் கலந்து கொள்ளவும்.

    மாவை நன்கு கட்டி தட்டாமல் கலந்த பின்பு அதில் மேலும் தண்ணீர் சேர்த்து அதை நன்கு தண்ணியான பதத்திற்கு கொண்டு வந்து அதை சுமார் 20 லிருந்து 30 நிமிடம் வரை ஊற விடவும்.

    20 நிமிடத்திற்குப் பிறகு மாவு கட்டியாக ஆகியிருந்தால் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அதை தண்ணீர் பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு கலந்து விடவும்.

    பின்னர் ஒரு தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து ஒரு பெரிய வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி அந்த கல்லின் மீது வைத்து நன்கு தேய்த்து விடவும்.

    தோசைக்கல் சூடானதும் அதில் நாம் கரைத்து வைத்திருக்கும் மாவை சுத்தி நன்கு பரவலாக ஊற்றவும்.

    ஆங்காங்கே ஏற்படும் சிறு சிறு குழிகளிலும் தேவைப்பட்டால் சிறிதளவு மாவை ஊற்றி கொள்ளவும்.

    அடுத்து நாம் ஊற்றி வைத்திருக்கும் மாவை சுற்றி தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றவும். (நெய்யை விரும்புபவர்கள் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.)

    தோசை நன்கு பொன்னிறம் வரும் வரை அதை வேக விட்டு பொன்னிறம் வந்ததும் அதை ஒரு தோசை கரண்டியின் மூலம் எடுத்து மடித்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பொதுவாக ரவை தோசையை ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பிப் போட வேண்டிய அவசியமில்லை. எனினும் தேவைப்பட்டால் அதைத் திருப்பிப் போட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பான ரவா தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • ஆரோக்கியமான, சுவையான, காரசாரமான அடை தோசை செய்வது எப்படி?

    ஆரோக்கியமான, சுவையான, காரசாரமான அடை தோசை செய்வது எப்படி?

    பொதுவாக தோசை அனைவருக்கும் பிடிக்கும். அடை தோசை என்று சொல்லவே வேண்டாம். அரிசி, பருப்பு, மிளகாய் சேர்த்து தோசை மாவு போல் ஊற்றினால், எவ்வளவு கொடுத்தாலும் போதாது. இவ்வளவு அற்புதமான சுவையுடன் கூடிய இந்த அடை தோசையை அனைவரும் செய்யும் வகையில் மிக எளிதான முறையில் செய்வது எப்படி?

    தேவையான பொருள்கள் :

    இட்லி அரிசி – ஒரு டம்ளர்

    பச்சரிசி – முக்கால் டம்ளர்

    துவரம் பருப்பு – முக்கால் டம்ளர்

    உளுந்து – முக்கால் டம்ளர்

    கடலைப்பருப்பு – முக்கால் டம்ளர்

    வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன்

    சீரகம் – ஒரு ஸ்பூன்

    வரமிளகாய் – 6

    கட்டி பெருங்காயம் – ஒரு சிறு துண்டு

    கறிவேப்பிலை – இரண்டு கொத்து

    சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி

    நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு

    உப்பு – தேவையான அளவு.

    செய்முறை :

    அடை தோசை செய்ய முதலில் பருப்பு மற்றும் அரிசி வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டபடி எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    தானியங்கள் எல்லாம் சேர்த்து உள்ளதால் அடை தோசை ஆரோக்கியம் மிகுந்தது எனவே இதனை வாரம் ஒரு முறை ஆவது செய்து சாப்பிட்டால் நலம் பெருகும்.

    ஒரு பெரிய பாத்திரத்தை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். 200 கிராம் அளவிற்கு ஒரு டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா அளவுகளும் இதே டம்ளரை வைத்து அளந்து கொள்ளுங்கள்.

    முதலில் ஒரு டம்ளர் முழுவதுமாக இட்லி அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். மீதி எல்லா பொருட்களையும் முக்கால் டம்ளர் அளவிற்கு அளந்து எடுக்க வேண்டும்.

    பச்சரிசி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை அளந்து எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் இவற்றை நன்கு ஓரிரு முறை அலசி நல்ல தண்ணீரை ஊற்றி குறைந்தது 2 மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

    2 மணி நேரம் கழித்து கிரைண்டரை கழுவி அதில் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு துண்டு கட்டி பெருங்காயம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். சில பருப்பு வகைகள் வாய்வு என்பதால் சீரகம் மற்றும் கட்டிப் பெருங்காயம் சேர்த்தால் வாய்வை எடுத்துவிடும்.

    இவற்றுடன் கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து ஊற வைத்துள்ள அரிசி, பருப்பு வகைகளை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொரகொரவென மாவை அரைக்க வேண்டும்.

    அதிகபட்சம் 20 நிமிடத்தில் நன்கு மாவு கொரகொரவென்று அரைந்துவிடும். கடைசியாக பொடிபொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்து அடை மாவு பதத்திற்கு மாவு நன்கு கெட்டியாக அரைந்து வந்ததும் அதனை எடுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

    கிரைண்டர் கழுவிய தண்ணீரையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.

    ஒரு மணி நேரத்தில் மாவு நன்கு புளித்துவிடும். மாவு லேசாக புளித்ததும் கெட்டியாக இருந்தால் தேவையான அளவிற்கு கிரைண்டர் கழுவிய தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.

    நறுக்கிய கொத்தமல்லி தழையை சேர்த்து கலந்து தோசைக் கல்லை சுட வைத்து அடை போல தோசை வார்த்தால் அடை தோசை ரெடி.

    மல்லித் தழையுடன் முருங்கைக் கீரையை கொஞ்சம் உருவி அலசி சேர்த்துக் கொள்ளலாம் இன்னும் ஆரோக்கியமும், சுவையும் அதிகரிக்கும்.

    ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த அடை தோசையை நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

    இதையும் செய்யலாமே!: ரசகுல்லா செய்வது எப்படி?

  • அடை தோசை செய்வது எப்படி?

    அடை தோசை செய்வது எப்படி?

    பொதுவாக தோசை அனைவருக்கும் பிடிக்கும். அடை தோசை என்று சொல்லவே வேண்டாம். அரிசி, பருப்பு, மிளகாய் சேர்த்து தோசை மாவு போல் ஊற்றினால், எவ்வளவு கொடுத்தாலும் போதாது. இவ்வளவு அற்புதமான சுவையுடன் கூடிய இந்த அடை தோசையை அனைவரும் செய்யும் வகையில் மிக எளிதான முறையில் செய்வது எப்படி?

    தேவையான பொருள்கள் :

    இட்லி அரிசி – ஒரு டம்ளர்

    பச்சரிசி – முக்கால் டம்ளர்

    துவரம் பருப்பு – முக்கால் டம்ளர்

    உளுந்து – முக்கால் டம்ளர்

    கடலைப்பருப்பு – முக்கால் டம்ளர்

    வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன்

    சீரகம் – ஒரு ஸ்பூன்

    வரமிளகாய் – 6

    கட்டி பெருங்காயம் – ஒரு சிறு துண்டு

    கறிவேப்பிலை – இரண்டு கொத்து

    சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி

    நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு

    உப்பு – தேவையான அளவு.

    செய்முறை :

    அடை தோசை செய்வது எப்படி:

    அடை தோசை செய்ய முதலில் பருப்பு மற்றும் அரிசி வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டபடி எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    தானியங்கள் எல்லாம் சேர்த்து உள்ளதால் அடை தோசை ஆரோக்கியம் மிகுந்தது எனவே இதனை வாரம் ஒரு முறை ஆவது செய்து சாப்பிட்டால் நலம் பெருகும்.

    ஒரு பெரிய பாத்திரத்தை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். 200 கிராம் அளவிற்கு ஒரு டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா அளவுகளும் இதே டம்ளரை வைத்து அளந்து கொள்ளுங்கள்.

    முதலில் ஒரு டம்ளர் முழுவதுமாக இட்லி அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். மீதி எல்லா பொருட்களையும் முக்கால் டம்ளர் அளவிற்கு அளந்து எடுக்க வேண்டும்.

    பச்சரிசி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை அளந்து எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் இவற்றை நன்கு ஓரிரு முறை அலசி நல்ல தண்ணீரை ஊற்றி குறைந்தது 2 மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

    2 மணி நேரம் கழித்து கிரைண்டரை கழுவி அதில் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு துண்டு கட்டி பெருங்காயம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். சில பருப்பு வகைகள் வாய்வு என்பதால் சீரகம் மற்றும் கட்டிப் பெருங்காயம் சேர்த்தால் வாய்வை எடுத்துவிடும்.

    இவற்றுடன் கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து ஊற வைத்துள்ள அரிசி, பருப்பு வகைகளை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொரகொரவென மாவை அரைக்க வேண்டும்.

    அதிகபட்சம் 20 நிமிடத்தில் நன்கு மாவு கொரகொரவென்று அரைந்துவிடும். கடைசியாக பொடிபொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்து அடை மாவு பதத்திற்கு மாவு நன்கு கெட்டியாக அரைந்து வந்ததும் அதனை எடுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

    கிரைண்டர் கழுவிய தண்ணீரையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.

    ஒரு மணி நேரத்தில் மாவு நன்கு புளித்துவிடும். மாவு லேசாக புளித்ததும் கெட்டியாக இருந்தால் தேவையான அளவிற்கு கிரைண்டர் கழுவிய தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.

    நறுக்கிய கொத்தமல்லி தழையை சேர்த்து கலந்து தோசைக் கல்லை சுட வைத்து அடை போல தோசை வார்த்தால் அடை தோசை ரெடி.

    மல்லித் தழையுடன் முருங்கைக் கீரையை கொஞ்சம் உருவி அலசி சேர்த்துக் கொள்ளலாம் இன்னும் ஆரோக்கியமும், சுவையும் அதிகரிக்கும்.

    ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த அடை தோசையை நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

    இதையும் செய்யலாமே!: மசாலா தோசை செய்வது எப்படி?