Tag: அல்வா

  • திகட்டாத கோதுமை அல்வா செய்வது எப்படி?

    கோதுமை மிகவும் ஆரோக்கியமான தானியமாகும். விதவிதமான உணவுகள் செய்து சாப்பிடுவோம். எனவே இன்று கோதுமை மாவில் அல்வா செய்வது எப்படி என்று கற்றுக்கொள்வோம்.

    தேவையான பொருள்கள் :

    சம்பா கோதுமை   –    250 கிராம்

    சீனி               –   750கிராம்

    நெய்              –   250கிராம்

    முந்திரிப்பருப்பு    –   50 கிராம்

    ஏலக்காய்         –   1 தேக்கரண்டி

    எலும்பிச்சம்பழ்    –   ½ மூடி

    செய்முறை:

    சம்பா கோதுமையை முன் தினம் இரவு  ஊறவைத்ததும் மறுநாள் காலை 3 முறை ஆட்டி பிழிந்து பால் எடுக்கவும்.

    பாலும், தண்ணீரும் சேர்ந்து 1 லிட்டர் இருக்கும்படி எடுக்கவும். மாலையில் உருளியை அடுப்பில் வைத்து தயார் செய்து வைத்து இருக்கும் கோதுமை பாலில் சீனியைக் கொட்டி கலர்ப்பொடி சேர்ந்து அடிப்பிடிக்காமல் கிண்டிக் கொண்டே  இருக்கவும்.

    ஒட்டும் பொழுது சிறிது சிறிதாக நெய்விட்டு கிளறவும். அல்வா பதம் வரும்பொழுது நெய்க்கக்கும். நெய் கக்க ஆரம்பிக்கும் பொழுது எலும்பிச்சம்பழம் பிழிந்து, ஏலப்பொடி கலந்து, சிறிது நெய்யில் முந்திரிப் பருப்பை  வறுத்து சேர்த்துக் கிண்டவும். நெய் கக்கின பிறகு சுமார் அரைப மணிநேரம் வரை கிண்டி இறக்கவும்.

    குறிப்பு:

    கக்கும் நெய்யை தனியாக வடித்து வைத்து விடவும்.

  • ஊட்டசத்துமிக்க பாதாம் அல்வா செய்து அசத்துங்க!!

    ஊட்டசத்துமிக்க பாதாம் அல்வா செய்து அசத்துங்க!!

    இனிப்புகளை விரும்பாதவர் யார்? பல மக்கள் மிகவும் வித்தியாசமான இனிப்புகளை சுவைக்க விரும்புகிறார்கள்.அந்த வகையில் நெய்யில் செய்யப்படும் பாதாம் அல்வாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்:

    பாதாம் – 1/2 கப் (இரவில் ஊற வைத்து, காலையில் அரைத்தது)

    சர்க்கரை – 1/2 கப்

    பால் – 1 கப்

    நெய் – 1/2 கப்

    குங்குமப்பூ – சிறிது (பாலில் ஊற வைத்தது)

    செய்முறை:

    முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி வாணலியில் பரப்பிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே வாணலியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் சர்க்கரை சேர்த்து கரைய விட வேண்டும்.

    பிறகு அதில் பாதாம் பேஸ்ட் சேர்த்து, பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

    அப்படி கிளறி விடும் போது, கலவையானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் பாதி நெய் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து தொடர்ந்து கிளறி விடும் போது, நெய்யை அல்வா முற்றிலும் உறிஞ்சிவிடும்.

    அப்படி நெய்யானது முற்றிலும் வற்றியதும், வாணலியை இறக்கி, மீதமுள்ள நெய் சேர்த்து ஒருமுறை கிளறி குளிர வைத்தால், பாதாம் அல்வா ரெடி..

    இதையும் செய்யலாமே!: பாதாம் அல்வா செய்து அசத்துங்க!!