கோதுமை அல்வா செய்வது எப்படி?

திகட்டாத கோதுமை அல்வா செய்வது எப்படி?

கோதுமை மிகவும் ஆரோக்கியமான தானியமாகும். விதவிதமான உணவுகள் செய்து சாப்பிடுவோம். எனவே இன்று கோதுமை மாவில் அல்வா செய்வது எப்படி என்று கற்றுக்கொள்வோம்.

தேவையான பொருள்கள் :

சம்பா கோதுமை   –    250 கிராம்

சீனி               –   750கிராம்

நெய்              –   250கிராம்

முந்திரிப்பருப்பு    –   50 கிராம்

ஏலக்காய்         –   1 தேக்கரண்டி

எலும்பிச்சம்பழ்    –   ½ மூடி

செய்முறை:

சம்பா கோதுமையை முன் தினம் இரவு  ஊறவைத்ததும் மறுநாள் காலை 3 முறை ஆட்டி பிழிந்து பால் எடுக்கவும்.

பாலும், தண்ணீரும் சேர்ந்து 1 லிட்டர் இருக்கும்படி எடுக்கவும். மாலையில் உருளியை அடுப்பில் வைத்து தயார் செய்து வைத்து இருக்கும் கோதுமை பாலில் சீனியைக் கொட்டி கலர்ப்பொடி சேர்ந்து அடிப்பிடிக்காமல் கிண்டிக் கொண்டே  இருக்கவும்.

ஒட்டும் பொழுது சிறிது சிறிதாக நெய்விட்டு கிளறவும். அல்வா பதம் வரும்பொழுது நெய்க்கக்கும். நெய் கக்க ஆரம்பிக்கும் பொழுது எலும்பிச்சம்பழம் பிழிந்து, ஏலப்பொடி கலந்து, சிறிது நெய்யில் முந்திரிப் பருப்பை  வறுத்து சேர்த்துக் கிண்டவும். நெய் கக்கின பிறகு சுமார் அரைப மணிநேரம் வரை கிண்டி இறக்கவும்.

குறிப்பு:

கக்கும் நெய்யை தனியாக வடித்து வைத்து விடவும்.

Leave a Reply

Previous Post

Next Post

Discover more from Dad's Kitchen

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading