Tag: ஐயர் வீட்டு மோர் குழம்பு செய்வது எப்படி

  • கொண்டைக்கடலை கிரேவி செய்வது எப்படி?

    இந்தியாவில் தினசரி பிரதான உணவாக குழம்பு சாதம் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் எல்லோர் வீட்டிலும் சாதத்தில் குழம்புடன் தயாரித்து சாப்பிடுவது வழக்கம். குழம்புகளில் பல வகைகள் உள்ளன. சாம்பார், பருப்பு குழம்பு, கறிவேப்பிலை, புளி குழம்பு, தக்காளி குழம்பு, வத்த குழம்பு, கத்தரிக்காய் குழம்பு போன்றவை.

    அப்படியானால் இன்று இங்கு இருப்பது வித்தியாசமான கொண்டைக்கடலை குழம்பு.

    கொண்டைக்கடலை கிரேவியின் விசேஷம் என்னவென்றால், அதற்கு கடலைப்பருப்பு, வெங்காயம் மற்றும் தக்காளி மட்டுமே தேவைப்படுவதால், வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு எளிதாக செய்யலாம்.

    கொண்டைக்கடலை உடலுக்கு மிகவும் தேவையான புரதச்சத்து நிறைந்துள்ளதால் நமது உடலுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல், அவை நமது வழக்கமான கிரேவிகளுக்கு சிறந்த மாற்றாகும்.

    தேவையான பொருட்கள்

    200 கிராம் கொண்டைக்கடலை

    2 பெரிய வெங்காயம்

    2 தக்காளி

    2 பச்சை மிளகாய்

    3 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    1 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    1 மேஜைக்கரண்டி அம்ச்சூர் தூள்

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் கொண்டைக்கடலை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைத்து பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கொண்டைக்கடலையை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் கொண்டைக்கடலை, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மற்றும் சிறிதளவு உப்பு போட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 3 லிருந்து 4 விசில் வரும் வரை வேக விடவும்.

    4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கொண்டைக்கடலையை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையில் இருந்து ஒரு கையளவு கொண்டைக்கடலையை எடுத்து போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
    எண்ணெய் சுட்ட பின் அதில் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.

    அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, அம்ச்சூர் தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி நன்கு மசியும் வரை அதை வேக விடவும்.

    தக்காளி நன்கு மசிந்தவுடன் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (சுமார் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

    பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை போட்டு நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும்.

    குழம்பு நன்கு கொதித்ததும் அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை பக்குவமாக சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்குப் பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு கொண்டைக்கடலை குழம்பை எடுத்து சாதத்தில் ஊற்றி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அருமையான கொண்டைக்கடலை குழம்பு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • ஐயர் வீட்டு மோர் குழம்பு நமது வீட்டிலேயே செய்யலாம் வாங்க..!

    பொதுவாக, சிலருக்கு சமையலைப் பற்றி பேசவே தேவையில்லை, ஏனென்றால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் சிலர் அதை ரசித்து சாப்பிடுவார்கள். வீட்டில் சமைத்தாலும் அவர்கள் எதிர்பார்த்தது போல் சுவை இல்லை என்று சொல்வார்கள்.

    சிலர் வீட்டில் சொல்வார்கள் ஐயர் வீட்டில் சமையலான புளி குழம்பு , சாம்பார் சாதம், மோர் குழம்பு அல்லது வத்தல் குழம்பு அவர்கள் செய்வது போல இல்லை என்று வீட்டில் சொல்வார்கள்.

    இதெல்லாம் தெரியாதுன்னு சொன்னாலும் நல்லா இருக்காது. எனவே இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இந்த பதிவில், உங்கள் வீட்டில் உங்கள் கை பக்குவத்தில் சுவையுடன் கூடிய ஐயர் வீட்டு மோர் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டு வீட்டில் உள்ளவர்களுக்கும் செய்து கொடுப்போம்.

    தேவையான பொருட்கள்:

    தயிர்- 1 கப்

    தேங்காய்- 1/2 கப்

    பச்சை மிளகாய்- 3

    வெள்ளரிக்காய்- சிறிய துண்டு

    இஞ்சி- சிறிய துண்டு

    சின்ன வெங்காயம்- 3

    காய்ந்த மிளகாய்- 3

    கடலை பருப்பு- 1 தேக்கரண்டி

    சீரகம்- 1/2 தேக்கரண்டி

    கடுகு- 1 தேக்கரண்டி

    மஞ்சள்தூள்- 1/2 தேக்கரண்டி

    பெருங்காயத்தூள்- 1/2 தேக்கரண்டி

    உளுத்தம் பருப்பு- 1/2 தேக்கரண்டி

    உப்பு- தேவையான அளவு

    எண்ணைய்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி நறுக்கிய வெள்ளரிக்காயை கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, கடலை பருப்பை தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    இப்போது மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சீரகம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், ஊறவைத்த கடலை பருப்பை சேர்த்து ஒரு பாத்திரத்தில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

    அடுத்து அடுப்பில் வேகவைத்த வெள்ளரிக்காய் நன்கு வெந்ததும் தேங்காய் துருவல், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். அதன் பிறகு, 1 கப் தயிர் எடுத்து சிறிது தண்ணீரில் கலக்கவும்.

    கடைசியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெயை காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயப் பொடி, கருவேப்பிலை தாளித்து அடுப்பை அணைக்கவும்.

    இப்போது வேகவைத்த வெள்ளரிக்காய், கடுகு மற்றும் மோரினை சேர்த்து நன்றாகக் கலக்கினால், சுவையான ஐயர் வீட்டு மோர் குழம்பு ரெடி.