Tag: காலிபிளவர்

  • காலிபிளவர் பிரியாணி செய்வது எப்படி?

    பிரியாணி குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு பிரியாணி.

    பிரியாணி என்றால் பெரும்பாலும் பலரது வீட்டில் அது ஒன்று சிக்கன் பிரியாணியாக இருக்கும் இல்லை மட்டன் பிரியாணியாகத்தான் இருக்கும். சைவ பிரியர்கள் என்றால் அது வெஜிடபிள் பிரியாணி ஆக இருக்கும் அல்லது மஷ்ரூம் பிரியாணியாக இருக்கும்.

    நாம் வழக்கமாக செய்து சுவைக்கும் பிரியாணிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக இந்த காலிஃப்ளவர் தம் பிரியாணி நிச்சயம் இருக்கும். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

    காலிஃபிளவரை நறுக்கி கொதிக்கும் நீரில் பத்து நிமிடம் வைத்தால் புழுக்கள் அனைத்தும் அழிந்துவிடும்.

    பாசுமதி அரிசியை வேகவைத்த தண்ணீரில் அரை டேபிள்ஸ் பூன் எண்ணெய் சேர்த்தால் அரிசி ஒட்டாமல் இருக்கும்.

    பாஸ்மதி அரிசியை அடுப்பிலிருந்து இறக்கும் முன் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால் சாதம் நன்கு மிருதுவாக இருக்கும். இன்று நாம் இங்கு காண இருப்பது காலிஃபிளவர் தம் பிரியாணி.

    தேவையான பொருட்கள்

    1 cup பாசுமதி அரிசி

    1 முழு காலிஃப்ளவர்

    1 cup பச்சை பட்டாணி

    2 தக்காளி

    1 1/2 வெங்காயம்

    3 பச்சை மிளகாய்

    8 பல் பூண்டு

    இஞ்சி 1 சிறு துண்டு

    தயிர் 1 cup

    மஞ்சள் தூள் 1 tsp

    மிளகாய் தூள் 4 tsp

    மல்லி தூள் 2 tsp

    கசூரி மேத்தி 1 tsp

    சீரக தூள் 1 tsp

    கரம் மசாலா 2 tsp

    எலுமிச்சை சாறு 1/2 tsp

    குங்குமப்பூ பால் 15 tsp

    உப்பு தேவையான அளவு

    புதினா தேவையான அளவு

    கொத்தமல்லி தேவையான அளவு

    நெய் தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    தண்ணீர் தேவையான அளவு

    செய்முறை

    முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    அடுத்து காலிஃப்ளவர், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினாவை நறுக்கி, பச்சை பட்டாணியை உறித்து, மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

    அரை மணி நேரத்திற்க்கு பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சாதம் வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    தண்ணீர் சுட்டதும் அதில் பாசுமதி அரிசியை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் அரை மேஜைக்காண்டி அளவு எண்ணெய் சேர்த்து சாதத்தை சுமார் 90 சதவீதம் அளவிற்கு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்திலிருந்து அரை வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நன்கு பொன்னிறமாகும் வரை அதை வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், கரம் மசாலா, கசூரி மேத்தி, மற்றும் ரெண்டு மேஜைகரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காலிஃபிளவர், மற்றும் உரித்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அதில் ஒரு கையளவு நாம் வறுத்தெடுத்து வைத்திருக்கும் வெங்காயம், புதினா, மற்றும் கொத்தமல்லியை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் பத்து நிமிடம் வரை ஊற விடவும்.

    இப்பொழுது சுமார் 15 மேஜைகரண்டி அளவு சுடவைத்த பாலில் குங்குமப்பூவை ஊற வைத்துக் கொள்ளவும்.

    பத்து நிமிடத்திற்க்கு பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

    நெய் சுசூடானதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் காய்கறி கலவைகளை பக்குவமாக சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 15 நிமிடம் வரை வேக விடவும். (உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள்).

    15 நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்து அதை நன்கு கிளறி விட்டு அந்த காய்கறி கலவையிலிருந்து பாதியை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது அந்த பாத்திரத்தில் இருக்கும் காய்கறி கலவையை நன்கு சமம் செய்து நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியில் இருந்து பாதியை எடுத்து அதில் போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் சாதம் உடைந்து விடாமல் பக்குவமாக சமம் செய்யவும்.

    பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி அளவு நெய், நாம் தயார் செய்து வைத்திருக்கும் குங்குமப்பூ பாலில் இருந்து பாதி, ஒரு கை அளவு வறுத்த வெங்காயம், புதினா, மற்றும் கொத்தமல்லியை தூவி விடவும்.

    அதைத்தொடர்ந்து அதன் மேலே நாம் கிண்ணத்தில் எடுத்து வைத்திருக்கும் காய்கறி கலவைகளை சேர்த்து அதை நன்கு பரப்பி விடவும்.

    அடுத்து அதன் மேலே மீதம் உள்ள பாசுமதி அரிசியை போட்டு அதை சமம் செய்து அதன் மேலே ஒரு மேஜைகரண்டி அளவு நெய், மீதமுள்ள குங்குமப்பூ பால், வறுத்து வைத்திருக்கும் வெங்காயம், கொத்தமல்லி, மற்றும் புதினாவை தூவி விடவும்.

    பின்பு அதன் மேலே ஒரு மூடி போட்டு அதை சுமார் 15 நிமிடம் வரை வேக விடவும்.

    15 நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்த ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக சாதம் உடைந்து விடாமல் அதை கிளறி விடவும். அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான காலிஃபிளவர் தம் பிரியாணி ரெடி.

  • காலை உணவிற்கு காலிபிளவர் சட்னி செய்வது எப்படி?

    காலை உணவிற்கு சட்னி இல்லாம சாப்பிடமுடியுமா? இட்லிக்கு ஏற்ற சட்னியான காலிபிளவர் சட்னிதான் இன்னைக்கு ரெடி பண்ணப்போறோம்.

    தேவையான பொருள்கள்:

    காளிப்ளவர்               – ½ கிலோ

    தேங்காய்                 – ½ மூடி (சிறியது)

    இஞ்சி                    – 1 சிறிய துண்டு

    சோம்பு                   – 1 ஸ்பூன்

    ஏலக்காய்                 – 1

    மிளகாய் (அல்லது) வற்றல்  – 6

    பூண்டு                        – 5 பல்

    முந்திரிப் பருப்பு               -10

    கசகசா                         – 1 மேஜைக்கரண்டி

    கிராம்பு                        – 1

    பட்டை                        – 1 சிறிய துண்டு

    சிறிய வெங்காயம்             – 20

    தக்காளி                       – 1

    உப்பு                          – தேவையானது

    எண்ணெய்                     – 1 முட்டைக் கரண்டி

    செய்முறை:

    காளிப்பளவரை பொடிப் பொடியாக வெட்டவும்.

    இஞ்சி, பூண்டு, ஏலக்காய், சோம்பு, கிராம்பு, பச்சை மிளகாய், கசகசா, தேங்காய் எல்லாவற்றையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி போட்டு காளிப்ளவரை வதக்கி அரைத்த மசாலை ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்து வெந்தபின் இறக்கவும்.

    சப்பாத்தி, இட்லிக்குத் தொட்டு சாப்பிடலாம். தேங்காயை பால் எடுத்தும் ஊற்றலாம்.