Tag: திண்டுக்கல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

  • ஃபிஷ் பிரியாணி செய்வது எப்படி?

      பிரியாணி உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பிடித்தமான உணவாகும். பொதுவாக அனைவரும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி செய்து ருசிப்பார்கள். ஆனால் மீன் பிரியாணியும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போன்ற ஒரு அற்புதமான பிரியாணி.

    மீன் பிரியாணி மீன் பிரியர்களுக்கு அவசியம். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போல மீன் மிருதுவாக இருப்பதினால் மீனை அதிக நேரம் வேக விட்டால் குழைந்து விடும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்முறையை சரியாகப் பின்பற்றினால், மீன் உடையாமல் சரியாக சமைக்கப்படும்.

    தேவையான பொருட்கள்:

    1/2 கிலோ மீன்

    1/2 கிலோ பாசுமதி அரிசி

    3 தக்காளி

    1 பெரிய வெங்காயம்

    3 பச்சை மிளகாய்

    1 எலுமிச்சம்பழம்

    1/4 கப் தேங்காய்

    1 கப் தேங்காய் பால்

    1/2 மேஜைக்கரண்டி மிளகுத் தூள்

    மல்லித் தூள்  1/4 மேஜைக்கரண்டி 

    சீரக தூள்  1/4 மேஜைக்கரண்டி 

    சோம்பு தூள்  1/4 மேஜைக்கரண்டி 

    1/2 மேஜைக்கரண்டி சோம்பு

    5 துண்டு இஞ்சி

    13 பூண்டு பல்

    6 கிராம்பு

    8 ஏலக்காய்

    2 துண்டு பட்டை

    1 பிரியாணி இலை

    1/4 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    8 to 10 முந்திரி

    எண்ணெய் தேவையான அளவு

    நெய் தேவையான அளவு

    மிளகாய் தூள் தேவையான அளவு

    சிறிதளவு புதினா

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் மீனை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி வைத்து பாசுமதி அரிசியை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    பின்பு வெங்காயம், தக்காளி, தேங்காய், முந்திரியை தயார் செய்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய், 3 ஏலக்காய், சோம்பு, மற்றும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது சிறு சிறு துண்டங்களாக ஆக்கி வைத்திருக்கும் மீனை ஒரு bowl ல் போட்டு அதில் தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

    பின்பு அதில் கால் மேஜைக்கரண்டி மிளகுத் தூள், சோம்பு தூள், மல்லி தூள், சீரகத் தூள், ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு பிரட்டி அதை சுமார் 25 நிமிடம் வரை அதை அப்படியே ஊற விடவும்.

    25 நிமிடத்திற்கு பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 10 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் 4 மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத் துமீன் பொரித்தெடுத்த எண்ணெய்யை வடி கட்டி அதில் சேர்த்து சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, மற்றும் ஒரு பிரியாணி இலையை சேர்த்து அதை வதக்கவும்.

    இவை வதங்கியதும் அதில் 2 பச்சை மிளகாய், முந்திரி, மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் சாதத்திற்கு தேவையான அளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி அளவு மிளகுத் தூள், சோம்பு தூள், கரம் மசாலா, அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் மற்றும் 3 மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.

    இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து இந்த மசாலாவில் சேர்த்து பக்குவமாக கிளறி விடவும்.

    அரிசியை நன்கு கிளறி விட்டதும் அதில் ஒரு கப் அளவு தேங்காய் பால் ஒன்றரை கப் அளவு தண்ணீர் மற்றும் மீதமுள்ள எலுமிச்சம் பழ சாறை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    பின்பு குக்கரில் மூடியை போட்டு விசில் போடாமல் சுமார் 2 நிமிடம் வரை ஆவி வரும் வரை அதை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு மூடியை திறந்து 2 கரண்டி அளவு பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது நாம் வறுத்து வைத்திருக்கும் மீனை சாதத்தில் வைத்து சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லியை தூவி விடவும்.

    பின்பு தட்டில் இருக்கும் சாதத்தை அதன் மேலே போட்டு மீதமுள்ள மீன், புதினா மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றி மூடி போட்டு விசில் வைத்து சுமார் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு பின்பு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு குக்கரை அடுப்பிலேயே 3 நிமிடம் வரை வைத்திருக்கவும்.

    3 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட ரைத்தா உடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான ஃபிஷ் பிரியாணி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?

    பொதுவாக அசைவ பிரியர்கள் மத்தியில் சிக்கன் மிகவும் பிரபலமானது. பிரபலமான சிக்கன் உணவுகளில் சிக்கன் 65, பட்டர் சிக்கன், தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன், பெப்பர் சிக்கன் போன்றவை அடங்கும்.

    இவற்றில் காரத்தை விரும்புவோருக்கு பெப்பர் சிக்கன் சிறந்த தேர்வாகும். இந்த உணவு மிகவும் எளிமையானது மற்றும் பாரம்பரிய செட்டிநாடு சமையல் முறையைப் பின்பற்றுகிறது. ஏனெனில் மிளகு தவிர வேறு எந்த மசாலாவும் சேர்க்கப்படுவதில்லை.

    மிளகாயை சிக்கனில் சேர்ப்பதால் மற்ற சிக்கன் உணவுகளை விட இவை அதிக சத்தானவை. ஜலதோஷம், வாயு பிரச்சனை மற்றும் செரிமானத்திற்கு மிளகு மிகவும் நல்லது.

    இப்போது பெப்பர் சிக்கன் தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை கீழே பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    500 கிராம் சிக்கன்

    2 பெரிய வெங்காயம்

    1 1/2 மேசைக்கரண்டி மிளகு

    1 மேசைக்கரண்டி சோம்பு

    1 மேசைக்கரண்டி சீரகம்

    1 துண்டு பட்டை

    2 கிராம்பு

    2 காய்ந்த மிளகாய்

    2 பச்சை மிளகாய்

    1 துண்டு இஞ்சி

    4 பல் பூண்டு

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    கருவேப்பிலை சிறிதளவு

    கொத்தமல்லி சிறிதளவு

    செய்முறை

    முதலில் மிளகு, சோம்பு, மற்றும் சீரகத்தை ஒன்றாக ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி மற்றும் பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் கிராம்பு, பட்டை, காய்ந்த மிளகாய், மற்றும் சிறிதாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்றாக பொன் நிறம் வரும் அளவிற்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கி பொன்னிறமானதும் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய், மற்றும் அரைத்து வைத்துள்ள மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    பின்னர் சிக்கன் துண்டுகளை அதில் போட்டு பெப்பர் நன்றாக சிக்கன் துண்டுகளில் ஓட்டும் அளவிற்கு புரட்டிப் போடவும்.

    பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் ஒரு மூடியைப் போட்டு சிக்கனை வேக விடவும்.

    சிக்கன் வெந்ததும் அதில் சிறிது அளவு கருவேப்பிலையை போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து சிறிது கொத்தமல்லியை மேலே தூவவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பெப்பர் சிக்கன் தயார்.

    இதை வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?

    சிக்கன் கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாகும். இன்னும் கொஞ்சம் காரம் தூக்கலாக செய்தால் எப்படி இருக்கும்?. அதைத்தான் இன்று பார்க்க வந்திருக்கிறோம். நமது உள்ளூர் சிக்கன் கிரேவிக்கும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவிக்கும் உள்ள பெரிய வித்தியாசம் காரமானது.

    ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி நமது உள்ளூர் சிக்கன் கிரேவியை விட இரண்டு மடங்கு காரமாக இருக்கும். ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி நம் உள்ளூர் சிக்கன் கிரேவியை சாப்பிட்டு அலுப்பவர்களுக்கு நல்ல மாற்று. அதிக காரமாக விரும்பாதவர்கள் அதில் நாம் சேர்க்கும் மிளகாய்த்தூள் மற்றும் பச்சை மிளகாயின் அளவைக் குறைத்துக்கொள்ளலாம்.

    மசாலாப் பிரியர்கள் இதை அப்படியே செய்து, சாதத்தில் அல்லது சப்பாத்தி, நாண், பராத்தா போன்றவற்றில் சைட் டிஷ்ஷாக சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுதே உங்கள் நாவில் எச்சில் ஊர ஆரம்பித்து விட்டதா?

    தேவையான பொருட்கள்

    500 கிராம் சிக்கன்

    2 பெரிய வெங்காயம்

    2 தக்காளி

    3 பச்சை மிளகாய்

    10 to 15 தேங்காய் துண்டுகள்

    3 பூண்டு பல்

    1 இஞ்சி துண்டு

    2 மேஜைக்கரண்டி தனியா

    1 மேஜைக்கரண்டி கசகசா

    ½ மேஜைக்கரண்டி சீரகம்

    ½ மேஜைக்கரண்டி சோம்பு

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    1 பட்டை துண்டு

    2 ஏலக்காய்

    3 கிராம்பு

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கருவேப்பிலை

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு பிரட்டி ஒரு மூடி போட்டு அப்படியே வைத்து சுமார் 30 நிமிடம் வரை ஊற விடவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தனியா, சீரகம், சோம்பு, 2 மேஜைக்கரண்டி கசகசா, பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பை சேர்த்து அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் நாம் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி அளவு கசகசாவை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை போட்டு வெங்காயம் நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் நிறம் மாறியதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை அதில் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வதக்கவும்.

    10 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 5 நிமிடம் வரை அதை வதக்கவும்.
    (உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பை சேர்த்து கொள்ளவும்.)

    5 நிமிடத்திற்கு பிறகு இதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அடுப்பை குறைத்து மூடி போட்டு சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும்.

    10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து நன்கு கிளறி விட்டு பின்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விட்டு மூடி போட்டு அதை மீண்டும் ஒரு10 நிமிடம் வேக விடவும்.(150 ml லிருந்து 200 ml வரை தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)

    10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சாதத்தில் ஊற்றி சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான, சுவையான, மற்றும் காரமான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • விரும்பி சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு சில்லி சிக்கன் செய்வது எப்படி?

    சில்லி சிக்கன் என்பது இந்தோ-சீன உணவாகும், இது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இவைகளை ஃப்ரைடு ரைஸ் மற்றும் பிரியாணியுடன் அடிக்கடி சாப்பிடுவார்கள். இது ஒரு கூட்டத்தை எளிமையாக ரசித்து சாப்பிட வைக்கிறது.

    உண்மையில், பல துரித உணவு உணவகங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சில்லி சிக்கன் என்று சொன்னால் அது மிகையாகாது. சில்லி சிக்கன் பிரியர்கள் பொதுவாக துரித உணவு உணவகங்களில் ஆர்டர் செய்வார்கள்.

    ஆனால் இதை நாம் வீட்டிலேயே சுகாதாரமான முறையில் எளிதாக செய்யலாம். சில்லி சிக்கன் பெரும்பாலான குழந்தைகளின் விருப்பமான உணவாகும். எனவே இதை வீட்டிலேயே சுகாதாரமாக செய்து குழந்தைகளுக்கு பயமின்றி கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    500 கிராம் போன்லெஸ் சிக்கன்

    1 முட்டை

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    2 பச்சை மிளகாய்

    6 பூண்டு பல்

    2 துண்டு இஞ்சி

    4 மேஜைக்கரண்டி சோள மாவு

    4 மேஜைக்கரண்டி மைதா மாவு

    2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்

    1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

    1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்

    ¼ மேஜைக்கரண்டி மிளகு தூள்

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு வெங்காய தாள்

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை:

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து அதை கழுவி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து நாம் கழுவி வைத்திருக்கும் சிக்கனை ஒரு bowl ல் போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற விடவும்.

    கோழி கறியே தண்ணீர் விடும் என்பதால் அதில் நாம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

    பின்பு ஒரு bowl ல் முட்டையை உடைத்து ஊற்றி அதில் 3 மேஜைக்கரண்டி அளவு சோள மாவு, ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் மைதா மாவை போட்டு தேவையான அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு அடித்து மாவை கெட்டியான பதத்திற்கு கொண்டு வரவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கோழி கறியை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்ட பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் மாவில் நன்கு முக்கி எண்ணெய்யில் போடவும்.

    பின்பு அது ஒரு புறம் வெந்ததும் அதை ஒரு கரண்டியின் மூலம் மறு புறம் திருப்பி விட்டு அது பொன் நிறம் ஆனதும் கரண்டியில் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமிருக்கும் சிக்கன் துண்டுகளையும் பொரித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

    பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் ஒரு சிட்டிகை அளவு உப்பை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் பெப்பர் தூளைப் போட்டு அதை நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மற்றும் சில்லி சாஸை ஊற்றி அதை நன்கு கிளறி விடவும்.

    பின்னர் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் பொரித்தெடுத்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து அது நன்கு மசாலாவுடன் சேருமாறு அதை கிண்டி விட்டு சிறிது நேரம் வேக விடவும்.

    பின்பு அதை இறக்குவதற்கு முன் அதில் சிறிதளவு வெங்காய தாள் மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சில்லி சிக்கன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • சுவையான திண்டுக்கல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி!!

    நீங்கள் பிரியாணி பிரியர்களா? நீங்கள் திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி ரசிகரா? இந்த பிரியாணியை வீட்டிலேயே செய்ய வேண்டுமா?

    திண்டுக்கல் சிக்கன் பிரியாணியின் இந்த எளிய செய்முறையைப் படித்து, இந்த விடுமுறை வார இறுதியில் செய்து பாருங்கள், உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    சீரக சம்பா அரிசி – 1 1/2 கப்;
    சுடுநீர் – 2 1/2-3 கப்
    சிக்கன் – 500-600 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
    இஞ்சி – 1 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
    பூண்டு – 1 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
    பச்சை மிளகாய் – 6
    சின்ன வெங்காயம் – 20
    பிரியாணி மசாலா பவுடர் – 2 டேபிள் ஸ்பூன் (இதன் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
    நெய் + எண்ணெய் – 3 + 2 டேபிள் ஸ்பூன்
    தயிர் – 1/3 கப் * மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
    மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்
    சுடுநீர் – 1/4 கப்
    புதினா மற்றும் கொத்தமல்லி – தலா 1/3 கப் (பொடியாக நறுக்கியது)
    உப்பு – சுவைக்கேற்ப
    நெய் – 1 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

    பிரியாணி மசாலா பவுடர் அரைப்பதற்கு:

    மல்லி – 2 டீஸ்பூன்
    சோம்பு – 1/2 டீஸ்பூன்
    சீரகம் – 1/2 டீஸ்பூன்
    ஏலக்காய் – 5
    கிராம்பு – 5
    பட்டை – 1 1/2 இன்ச்
    முந்திரி – 5
    ஜாதிக்காய் – 1/8 டீஸ்பூன்
    அன்னாசிப்பூ – 1
    கல்பாசி – 1 டீஸ்பூன்
    பிரியாணி இலை – 2 சிறியது

    செய்முறை:

    முதலில் பிரியாணி மசாலாப் பொடியை அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி குறைந்த தீயில் சூடாக்கவும்.

    இதற்கிடையில், மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.

    இப்போது அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு பச்சை வாசனை போகும் வரை 12-15 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு அரைத்த பிரியாணி மசாலா தூள் சேர்த்து வதக்கவும், மிகவும் வறண்டு போய் இருந்தால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கிளறி ஒரு நிமிடம் குறைந்த தீயில் சமைக்கவும்.

    அதன் பிறகு, அதில் சிக்கனைக் கழுவி, உப்பு சேர்த்து, சிக்கன் நிறம் மாறும் வரை சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

    பிறகு அதனுடன் தயிர், புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி, சிக்கனை மிதமான தீயில் வேக வைக்கவும். பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்னர் 1/4 கப் சூடான நீரை ஊற்றி கிளறி, அடிக்கடி கிளறி சிக்கனை 15 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.

    பிறகு சிக்கன் துண்டுகளை மட்டும் எடுத்து தனி தட்டில் வைக்கவும். இப்போது கடாயில் எவ்வளவு குழம்பு உள்ளது என்பதை அளவிடவும். இது சுமார் 1/2 கப் இருக்க வேண்டும்.

    1 1/2 கப் சீரக சம்பா அரிசிக்கு 3 கப் தண்ணீர் தேவை. எனவே கடாயில் 1/2 கப் கிரேவியுடன் 2 1/2 கப் வெந்நீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். அதன் பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி 1-2 நிமிடம் கொதிக்க விடவும். இப்போது உப்பு சுவையை கவனித்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.

    பிறகு தண்ணீரில் நன்றாகக் கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 4-5 நிமிடம் வேகவிடவும்.

    பின் மூடியைத் திறந்து கிளறி மீண்டும் மூடி 6 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும். அரிசியை அவ்வப்போது கிளறவும். இதனால் அரிசி கெட்டுப் போகாமல் இருக்கும். 6 நிமிடங்களுக்குப் பிறகு, அலுமினியத் தாளில் கடாயை போர்த்தி, ஒரு மூடியால் மூடி, ஒரு கனமான பொருளை மேலே வைக்கவும்.

    அதே சமயம் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். கல் சூடாகியதும், தீயைக் குறைத்து, அதன் மேல் பிரியாணியை வைத்து, 8-10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும்.

    10-15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்த பின் பிரியாணி சட்டியை திறந்து மெதுவாக கிளறி மீண்டும் 5-6 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான திண்டுக்கல் சிக்கன் பிரியாணி ரெடி.

    இதையும் செய்யலாமே: செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?

  • சுவையான திண்டுக்கல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

    நீங்கள் பிரியாணி பிரியர்களா? நீங்கள் திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி ரசிகரா? இந்த பிரியாணியை வீட்டிலேயே செய்ய வேண்டுமா?

    திண்டுக்கல் சிக்கன் பிரியாணியின் இந்த எளிய செய்முறையைப் படித்து, இந்த விடுமுறை வார இறுதியில் செய்து பாருங்கள், உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    சீரக சம்பா அரிசி – 1 1/2 கப்

    சுடுநீர் – 2 1/2-3 கப்

    சிக்கன் – 500-600 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது)

    இஞ்சி – 1 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

    பூண்டு – 1 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

    பச்சை மிளகாய் – 6

    சின்ன வெங்காயம் – 20

    பிரியாணி மசாலா பவுடர் – 2 டேபிள் ஸ்பூன் (இதன் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

    நெய் + எண்ணெய் – 3 + 2 டேபிள் ஸ்பூன்

    தயிர் – 1/3 கப் * மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

    மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்

    சுடுநீர் – 1/4 கப்

    புதினா மற்றும் கொத்தமல்லி – தலா 1/3 கப் (பொடியாக நறுக்கியது)

    உப்பு – சுவைக்கேற்ப

    நெய் – 1 டேபிள் ஸ்பூன்

    எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

    பிரியாணி மசாலா பவுடர் அரைப்பதற்கு:

    மல்லி – 2 டீஸ்பூன்

    சோம்பு – 1/2 டீஸ்பூன்

    சீரகம் – 1/2 டீஸ்பூன்

    ஏலக்காய் – 5

    கிராம்பு – 5

    பட்டை – 1 1/2 இன்ச்

    முந்திரி – 5

    ஜாதிக்காய் – 1/8 டீஸ்பூன்

    அன்னாசிப்பூ – 1

    கல்பாசி – 1 டீஸ்பூன்

    பிரியாணி இலை – 2 சிறியது

    செய்முறை:

    முதலில் பிரியாணி மசாலாப் பொடியை அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி குறைந்த தீயில் சூடாக்கவும்.

    இதற்கிடையில், மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.

    இப்போது அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு பச்சை வாசனை போகும் வரை 12-15 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு அரைத்த பிரியாணி மசாலா தூள் சேர்த்து வதக்கவும், மிகவும் வறண்டு போய் இருந்தால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கிளறி ஒரு நிமிடம் குறைந்த தீயில் சமைக்கவும்.

    அதன் பிறகு, அதில் சிக்கனைக் கழுவி, உப்பு சேர்த்து, சிக்கன் நிறம் மாறும் வரை சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

    பிறகு அதனுடன் தயிர், புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி, சிக்கனை மிதமான தீயில் வேக வைக்கவும். பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்னர் 1/4 கப் சூடான நீரை ஊற்றி கிளறி, அடிக்கடி கிளறி சிக்கனை 15 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.

    பிறகு சிக்கன் துண்டுகளை மட்டும் எடுத்து தனி தட்டில் வைக்கவும். இப்போது கடாயில் எவ்வளவு குழம்பு உள்ளது என்பதை அளவிடவும். இது சுமார் 1/2 கப் இருக்க வேண்டும்.

    1 1/2 கப் சீரக சம்பா அரிசிக்கு 3 கப் தண்ணீர் தேவை. எனவே கடாயில் 1/2 கப் கிரேவியுடன் 2 1/2 கப் வெந்நீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். அதன் பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி 1-2 நிமிடம் கொதிக்க விடவும். இப்போது உப்பு சுவையை கவனித்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.

    பிறகு தண்ணீரில் நன்றாகக் கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 4-5 நிமிடம் வேகவிடவும்.

    பின் மூடியைத் திறந்து கிளறி மீண்டும் மூடி 6 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும். அரிசியை அவ்வப்போது கிளறவும். இதனால் அரிசி கெட்டுப் போகாமல் இருக்கும். 6 நிமிடங்களுக்குப் பிறகு, அலுமினியத் தாளில் கடாயை போர்த்தி, ஒரு மூடியால் மூடி, ஒரு கனமான பொருளை மேலே வைக்கவும்.

    அதே சமயம் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். கல் சூடாகியதும், தீயைக் குறைத்து, அதன் மேல் பிரியாணியை வைத்து, 8-10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும்.

    10-15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்த பின் பிரியாணி சட்டியை திறந்து மெதுவாக கிளறி மீண்டும் 5-6 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான திண்டுக்கல் சிக்கன் பிரியாணி ரெடி.

    இதையும் செய்யலாமே: செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?