Tag: நண்டு கிரேவி செய்வது எப்படி

  • கொண்டைக்கடலை கிரேவி செய்வது எப்படி?

    இந்தியாவில் தினசரி பிரதான உணவாக குழம்பு சாதம் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் எல்லோர் வீட்டிலும் சாதத்தில் குழம்புடன் தயாரித்து சாப்பிடுவது வழக்கம். குழம்புகளில் பல வகைகள் உள்ளன. சாம்பார், பருப்பு குழம்பு, கறிவேப்பிலை, புளி குழம்பு, தக்காளி குழம்பு, வத்த குழம்பு, கத்தரிக்காய் குழம்பு போன்றவை.

    அப்படியானால் இன்று இங்கு இருப்பது வித்தியாசமான கொண்டைக்கடலை குழம்பு.

    கொண்டைக்கடலை கிரேவியின் விசேஷம் என்னவென்றால், அதற்கு கடலைப்பருப்பு, வெங்காயம் மற்றும் தக்காளி மட்டுமே தேவைப்படுவதால், வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு எளிதாக செய்யலாம்.

    கொண்டைக்கடலை உடலுக்கு மிகவும் தேவையான புரதச்சத்து நிறைந்துள்ளதால் நமது உடலுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல், அவை நமது வழக்கமான கிரேவிகளுக்கு சிறந்த மாற்றாகும்.

    தேவையான பொருட்கள்

    200 கிராம் கொண்டைக்கடலை

    2 பெரிய வெங்காயம்

    2 தக்காளி

    2 பச்சை மிளகாய்

    3 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    1 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    1 மேஜைக்கரண்டி அம்ச்சூர் தூள்

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் கொண்டைக்கடலை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைத்து பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கொண்டைக்கடலையை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் கொண்டைக்கடலை, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மற்றும் சிறிதளவு உப்பு போட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 3 லிருந்து 4 விசில் வரும் வரை வேக விடவும்.

    4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கொண்டைக்கடலையை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையில் இருந்து ஒரு கையளவு கொண்டைக்கடலையை எடுத்து போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
    எண்ணெய் சுட்ட பின் அதில் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.

    அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, அம்ச்சூர் தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி நன்கு மசியும் வரை அதை வேக விடவும்.

    தக்காளி நன்கு மசிந்தவுடன் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (சுமார் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

    பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை போட்டு நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும்.

    குழம்பு நன்கு கொதித்ததும் அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை பக்குவமாக சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்குப் பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு கொண்டைக்கடலை குழம்பை எடுத்து சாதத்தில் ஊற்றி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அருமையான கொண்டைக்கடலை குழம்பு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • சுவையான பெப்பர் மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி?

    காளான் பொதுவாக பல வழிகளில் சமைத்து உண்ணப்படுகிறது. அதில் பெப்பர் மஷ்ரூம் கிரேவியும் ஒன்று. இவை சப்பாத்தி, பிரைடு ரைஸ், ரசம் சாதம் மற்றும் வெள்ளை சாதம் ஆகியவற்றுடன் பரிமாறுவது சிறந்தது. இதனுடன் சேர்க்கப்படும் காளானை தூள் துண்டுகளாக வெட்டி மாலை நேர சாண்ட்விச் ஸ்டஃபிங்காக பயன்படுத்தலாம்.

    காலையில் டிபனுக்கு சைட் டிஷ் ஆகவோ, மாலையில் சாண்ட்விச் ஆகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ செய்வது எளிது. காளான்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, குறிப்பாக வைட்டமின் டி, இது பெரும்பாலும் இறைச்சியில் மட்டுமே காணப்படுகிறது.

    காளான் மற்றும் மிளகு சேர்த்து செய்வதால் உடலுக்கும் மிகவும் சத்தானது. காளான்கள் சமைப்பதற்கு அதிக நேரம் எடுக்காததால் இவற்றைச் செய்வதும் மிகவும் எளிதானது. இப்போது மிளகு காளான் கிரேவிக்கான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை கீழே பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    2 பாக்கெட் பட்டன் மஷ்ரூம்

    2 பெரிய வெங்காயம்

    1 தக்காளி

    1 துண்டு இஞ்சி

    3 பூண்டு பல்

    மிளகாய் தூள் தேவையான அளவு

    1 மேசைக்கரண்டி தனியாதூள்

    1 மேசைக்கரண்டி மிளகு

    1 மேசைக்கரண்டி சோம்பு

    1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்

    எண்ணெய் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    கருவேப்பிலை சிறிதளவு

    செய்முறை:

    முதலில் மஷ்ரூம் ஐ ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும். (இவ்வாறு செய்தால் மஷ்ரூம் வெள்ளை நிறமாக மற்றும் சமைக்கும் வரை நிறம் மாறாமல் இருக்கும்.)

    அடுத்து மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, மற்றும் இஞ்சி பூண்டு ஐ ஒரு மிக்சியில் போட்டு பேஸ்ட் ஆக தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரை மேசைக்கரண்டி சோம்பு மற்றும் ஒரு மேசைக்கரண்டி மிளகு சேர்த்து சோம்பு சிறிது நிறம் மாறும் அளவிற்கு வறுக்கவும்.

    பின்பு அதை சிறுது நேரம் ஆற விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.

    பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 அல்லது 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை காய விடவும்.

    எண்ணெய் காய்ந்ததும் அரை மேஜைக்கரண்டி அளவு சோம்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை மற்றும் ஒரு பின்ச் அளவு உப்பையும் அதில் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் அளவிற்கு வதக்கவும்.

    பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
    அடுத்து அதில் தேவையான அளவு மிளகாய்த்தூள், தனியாத்தூள், நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பட்டன் மஷ்ரூம் ஐ சேர்த்து நன்கு பிரட்டி பின்பு அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து வேக விடவும்.

    மஷ்ரூம் ஐ கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். (தேவைப்பட்டால் மட்டுமே சிறுது அளவு தண்ணீர் தெளிக்கவும் ஏனென்றால் மஷ்ரூம் தண்ணீர் விடும் தன்மை கொண்டது.)

    மஷ்ரூம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள சோம்பு மற்றும் மிளகு துளை இதனுடன் சேர்த்து நன்கு பிரட்டவும். பின்பு இறக்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு சிறிதளவு கருவேப்பிலையை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான சுவையான மற்றும் சத்தான பெப்பர் மஷ்ரூம் கிரேவி தயார்.

    இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • சுவையாக நண்டு தொக்கு இப்படி செய்து அசத்துங்க..!

    நண்டு என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க முடியாது, அட்டகாசமான சுவை நாக்கில் அப்படியே வைத்திருக்க கூடிய குணம் கொண்ட நண்டை வைத்து எவ்வாறு தொக்கு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    நண்டு

    பெரிய வெங்காயம்

    தக்காளி

    பச்சை மிளகாய்

    இஞ்சி பூண்டு விழுது

    உப்பு

    எண்ணெய்

    மஞ்சள் தூள்

    மல்லி தூள்

    மிளகாய் தூள்

    மிளகுத்தூள்

    கருவேப்பிலை

    செய்முறை

    முதலில் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் இஞ்சி பூண்டு விழுதையும் அதனுடன் பச்சை மிளகாயையும் இரண்டாக உடைத்து போட்டு நன்றாக வதக்கவும்.

    இவை இரண்டின் பச்சை மணம் போனதும் வெட்டி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து அதற்காக சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் ஆகியவை சிறிதளவு சேர்த்துக் கொண்டு நன்றாக கிளறி விடவும்.

    பின், ஏற்கனவே சுத்தம் செய்து வைத்துள்ள நண்டுகளை துண்டு துண்டாக உடைத்து இந்த மசாலா கலவையில் போட்டு நன்கு கிளற வேண்டும். இரண்டு நிமிடம் மட்டும் மசாலாவில் அப்படியே வேக வைத்து விட்டு, ஒரு டம்ளர் மட்டும் தண்ணீர் விட்டு மூடி வைத்து ஒரு பத்து நிமிடம் வேக வைக்கவும்.

    நன்கு வெந்ததும் நண்டில் உள்ள நீர் வெளியேறும் அந்த நீரே சுவையை கொடுக்கும். எனவே அதிக அளவில் நீர் பயன்படுத்த தேவையில்லை நன்கு கிளறி விட்டு லேசாக கருவேப்பிலை தூவி அடுப்பை அணைத்து விட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான நண்டு தொக்கு தயார்.

  • செட்டிநாடு ரெசிபியானா Stuffed Crab Delight எப்படி செய்வது?

    நண்டு என்றாலே அது செட்டிநாடு வகையில் செய்வதுதான் அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் நாம் இன்று Stuffed Crab Delight செய்வது எப்படி என்று பார்ப்போம்.

    தேவையான பொருள்கள் :

    நண்டு -6

    வெங்காயம் வெட்டியது -3 மேஜைக்கரண்டி

    சீரகம் -1 தேக்கரண்டி

    இஞ்சி , பூண்டு -1/2 தேக்கரண்டி மசித்தது

    முருங்கையிலை –  சிறிது

    செய்முறை :

    வெந்நீரில் நண்டை சிறிது நேரம் போட்டு வைக்கவும். நண்டை எடுத்து கால் மற்றும் கொடுக்குகளை ஒடித்து தனியே உடம்பு பகுதி கால் கொடுக்குகளின் உள்ளே உள்ள கறியை தனியே எடுத்து உதிர்த்து கொள்ளவும்.

    நண்டின் ஓட்டில் உடம்பு பகுதியை தனியே எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

    செட்டிநாடு ரெசிபியானா Stuffed Crab Delight எப்படி செய்வது?

    உதிர்த்து வைத்திருக்கும் நண்டை தனியே உப்பு சேர்த்து புரட்டவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெங்காயம், முருங்கையிலை, மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பின் மசித்த இஞ்சி, பூண்டு உதிர்த்த நண்டையும் சேர்க்கவும். தண்ணீர் சத்து வற்றும் வரை அடுப்பில் வைத்திருந்து எடுக்கவும். இந்த நண்டு புட்டை எடுத்து நண்டு ஓட்டில் அடைக்கவும்.

    நண்டு ஓட்டின் பின் பகுதியை முட்டையில் தேய்த்து ரஸ்க்தூளில் புரட்டி எடுத்து பெரிய தட்டில் எடுத்து வைக்கவும்.

    காய்கறிகளை அழகாக அடுக்கி நடுவே நண்டை வைத்து பரிமாறவும்.