Tag: நண்டு மிளகு வறுவல்

  • மிகவும் சுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி?

    பாரம்பரிய செட்டிநாட்டு உணவுகள் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும். செட்டிநாட்டு உணவு வகைகளுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படியென்றால் இங்கு நாம் பார்ப்பது செட்டிநாடு வாழைக்காய் வறுவல்.

    இது செட்டிநாடு வாழை மீன் வறுவல் என்றும் அழைக்கப்படுகிறது.

    தமிழகத்தின் காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளில் நடைபெறும் திருமண விழாக்களில் இவை கட்டாயம் இருக்க வேண்டும். செட்டிநாட்டு வாழைக்காய் பொரியல் தயிர் சாதம் மற்றும் ரசம் சாதத்திற்கு அருமையான சைட் டிஷ் ஆகும். இவை தனியாகவும் மாலை நேர சிற்றுண்டியாகவும் உண்ணப்படுகின்றன.

    இவை பிரஞ்சு பொரியல்களைப் போலவே வெளியில் மிருதுவாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும், மேலும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    2 வாழைக்காய்

    1 பெரிய வெங்காயம்

    1 தக்காளி

    1/2 எலுமிச்சம் பழம்

    1/2 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    6 பல் பூண்டு

    2 துண்டு இஞ்சி

    1 மேஜைக்கரண்டி சோம்பு தூள்

    1/2 மேஜைக்கரண்டி சோம்பு

    1 துண்டு பட்டை

    சிறிதளவு கருவேப்பிலை

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு நெய்

    செய்முறை:

    முதலில் வாழைக்காயை நன்கு கழுவி தோலை சீவி அவரவர் விருப்பத்திற்கேற்ற வடிவில் நறுக்கி, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

    பின்பு அதில் சிறிதளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூள், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காயையும் போட்டு தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது அதை அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    பின்னர் தண்ணீரை வடிகட்டி விட்டு நாம் வேக வைத்த வாழைக்காய் துண்டுகளை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து அதை ஆற விடவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் சோம்பு தூள், தேவையான அளவு உப்பு, நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு எலுமிச்சை சாறை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அந்த மசாலாவில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் வாழைக்காய் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி அதை சுமார் 10 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விடவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் கடாயின் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் வாழைக்காயை 2 முறையாகவோ அல்லது 3 முறையாகவோ போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து அதை சூடாக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் பட்டை மற்றும் அரை மேஜைக்கரண்டி அளவு சோம்பை சேர்த்து வறுக்கவும்.

    சோம்பு வறுபட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் கருவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சிறிது வதங்கியதும் அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் வாழைக்காயை போட்டு பக்குவமாக நன்கு கிளறி விட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை அவ்வப்போது கிளறி விட்டு வேக விடவும்.

    5 நிமிடத்திற்குப் பிறகு அடுப்பை அணைத்து விட்டு வாழைக்காய் வறுவலை சுட சுட எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அறுசுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் தயார்.

  • செட்டிநாடு ரெசிபியானா Stuffed Crab Delight எப்படி செய்வது?

    நண்டு என்றாலே அது செட்டிநாடு வகையில் செய்வதுதான் அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் நாம் இன்று Stuffed Crab Delight செய்வது எப்படி என்று பார்ப்போம்.

    தேவையான பொருள்கள் :

    நண்டு -6

    வெங்காயம் வெட்டியது -3 மேஜைக்கரண்டி

    சீரகம் -1 தேக்கரண்டி

    இஞ்சி , பூண்டு -1/2 தேக்கரண்டி மசித்தது

    முருங்கையிலை –  சிறிது

    செய்முறை :

    வெந்நீரில் நண்டை சிறிது நேரம் போட்டு வைக்கவும். நண்டை எடுத்து கால் மற்றும் கொடுக்குகளை ஒடித்து தனியே உடம்பு பகுதி கால் கொடுக்குகளின் உள்ளே உள்ள கறியை தனியே எடுத்து உதிர்த்து கொள்ளவும்.

    நண்டின் ஓட்டில் உடம்பு பகுதியை தனியே எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

    செட்டிநாடு ரெசிபியானா Stuffed Crab Delight எப்படி செய்வது?

    உதிர்த்து வைத்திருக்கும் நண்டை தனியே உப்பு சேர்த்து புரட்டவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெங்காயம், முருங்கையிலை, மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பின் மசித்த இஞ்சி, பூண்டு உதிர்த்த நண்டையும் சேர்க்கவும். தண்ணீர் சத்து வற்றும் வரை அடுப்பில் வைத்திருந்து எடுக்கவும். இந்த நண்டு புட்டை எடுத்து நண்டு ஓட்டில் அடைக்கவும்.

    நண்டு ஓட்டின் பின் பகுதியை முட்டையில் தேய்த்து ரஸ்க்தூளில் புரட்டி எடுத்து பெரிய தட்டில் எடுத்து வைக்கவும்.

    காய்கறிகளை அழகாக அடுக்கி நடுவே நண்டை வைத்து பரிமாறவும்.