கேரளா முறையில் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி!!

Written by

in

இனிப்பு உணவுகள் பொதுவாக அனைவருக்கும் பிடித்தமானவை. குறிப்பாக பால் கொழுக்கட்டை எல்லோருக்கும் எச்சில் ஊற வைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால் கொழுக்கட்டையை விரும்பாதவர்கள் இல்லை.

இந்த வகையில் இன்றைய ரெசிபியில் கேரளா ஸ்டைல் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

கெட்டியான தேங்காய் பால்-3 கப்
அரிசி மாவு- 1 கப்
உப்பு- தேவையான அளவு
ஏலக்காய்- 6
தண்ணீர்- தேவையான அளவு
சர்க்கரை- 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு கொதிக்கும் நீரை சிறிது சிறிதாக சேர்த்து, கொழுக்கட்டை கொழுக்கட்டை பிடிக்கும் பக்குவம் வரை நன்கு பிசையவும்.

நன்கு பிசைந்த பிறகு, உங்கள் கையில் சிறிது தண்ணீரைத் தொட்டு, அதை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு பெரிய தட்டில் ஒற்றோடு ஒன்று சேராதபடி உருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 கப் தேங்காய் பால் சேர்க்கவும். இதனுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

தேங்காய்ப்பால் நன்கு கொதித்ததும் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். 2 நிமிடம் கொதிக்க விடவும்.

2 நிமிடம் கழித்து அடுப்பை மிதமான தீயில் வைத்து உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

இப்போது ஏலக்காயை அரைத்து சேர்க்கவும். பிறகு 1 ஸ்பூன் அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து கொதிக்க வைக்கவும்.

பின் அதனுடன் 1 கப் கெட்டியான தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கும் முன் கொதிக்க வைத்து இறக்கினால், கேரளா ஸ்டைல் சுவையான பால் கொழுக்கட்டை ரெடி.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *