Tag: பக்கோடா செய்வது எப்படி

  • பாலக்கீரை பக்கோடா செய்வது எப்படி?

    பக்கோடா என்பது நம்மில் பலருக்கு விருப்பமான உணவு. பொதுவாக வெங்காய பக்கோடா, காலிபிளவர் பக்கோடா, முட்டைக்கோஸ் பக்கோடா, முந்திரிப் பருப்பு பக்கோடா என்று சுவைக்கத்தான் செய்கிறோம். ஆனால் இன்று நாம் காண இருப்பது வித்தியாசமான சத்தான பாலக் கீரை பக்கோடா.

    நம்மில் பலர் மாலையில் சூடான டீ அல்லது காபியுடன் பக்கோடா சாப்பிட்டு மகிழ்வோம். நாம் வழக்கமாக செய்யும் பக்கோடாவுக்கு பதிலாக சத்தான பக்கோடா சாப்பிடுவது எப்படி?

    பாலக் கீரையின் சத்துக்கள் மற்றும் பக்கோடாவின் மொறுமொறுப்புடன், இந்த பாலக் கீரை பக்கோடாக்கள் உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    1 கட்டு பாலக் கீரை

    1/2 cup அரிசி மாவு

    1 cup கடலை மாவு

    2 வெங்காயம்

    2 பச்சை மிளகாய்

    1/2 tsp மஞ்சள் தூள்

    1 tsp மிளகாய் தூள்

    1 tsp ஓம விதைகள்

    1/2 tsp பெருங்காய தூள்

    1 சிறு துண்டு இஞ்சி

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு கருவேப்பிலை

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு தண்ணீர்

    செய்முறை

    முதலில் பாலக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் இஞ்சியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பாலக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் இஞ்சியை போட்டு நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஓம விதைகள், பெருங்காய தூள் மற்றும் 1 tsp அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 tsp அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதை நாம் செய்து வைத்திருக்கும் கலவையில் ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிளறி விடவும்.

    அடுத்து அதில் ஒரு கையளவு தண்ணீர் தெளித்து நம் கைகளின் மூலம் அதை நன்கு கிளறி விடவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பக்கோடாவை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதை உறுதி செய்த பின் அதில் நாம் செய்து வைத்திருக்கும் பக்கோடா மாவில் இருந்து கொஞ்சமாக எடுத்து அதை கவனமாக எண்ணெயில் உதிர்த்து விட்டு அது ஒருபுறம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    ஒருபுறம் பொன்னிறமானதும் அதை மறுபுறம் ஒரு கரண்டியின் மூலம் திருப்பிவிட்டு அந்தப் புறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    கடைசியாக கருவேப்பிலையை உருவி அந்தப் பக்கோடாவுடன் போட்டு பொரித்து எடுக்கவும்.

    அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான பாலக் கீரை பக்கோடா ரெடி. அதை சுட சுட எடுத்து ஒரு தட்டில் வைத்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • மீந்து போன இட்லி வைத்து சூப்பரான பக்கோடா செய்யலாம்!!

    காலை சாப்பாடு முடிந்து இட்லி மீதம் இருந்தால் பொதுவாக உப்புமா செய்வோம் ஆனால் மொறுமொறுன்னு சூப்பரான சுவையில் பக்கோடா செய்து சாப்பிட்டு பாருங்களேன்!.

    நீங்கள் இன்னும் முயற்சி செய்யவில்லை என்றால், இப்போது நான்கு இட்லிகளை வைத்து முயற்சிக்கவும்.

    தேவையான  பொருட்கள்:

    1.  மீந்துபோன இட்லி                  –            4

    2.  நறுக்கிய                                 –    வெங்காயம் அரை கப்

    3.  பச்சை மிளகாய்                     –          1

    4.  இஞ்சி துண்டுகள்              –     ஒரு இஞ்ச்

    5.  அரை டீஸ்பூன்                     –          சோம்பு

    6.  கொத்தமல்லி                      –    இலைகள் நறுக்கியது

    7.  ஒரு டீஸ்பூன்                     –     மிளகாய் பொடி

    8.  கால் டீஸ்பூன்               –            மஞ்சள் பொடி

    9.  தேவையான                      –       அளவு உப்பு

    10.  கடலை மாவு                      –         அரை கப்

    செய்முறை :

    இட்லி பக்கோடா செய்ய முதலில் நான்கு மீதி இட்லிகளை எடுத்துக் கொள்ளவும். உங்களிடம் எவ்வளவு இருந்தாலும், அதற்கேற்ப பொருட்களையும் கூட குறைத்துக்கொள்ளலாம்.

    நான்கு இட்லிகளை சிறு துண்டுகளாக நறுக்கவும். பின் மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். மிக்ஸியை ரொம்ப நேரம் ஓட விடக்கூடாது.

    இதனுடன் ஒரு கப் கடலை மாவு சேர்க்கவும். ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்தால் தான் மிருதுவாக இருக்கும்.

    மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். இட்லியில் ஏற்கனவே உப்பு இருப்பதால் கால் ஸ்பூன் குறைவாக உப்பு சேர்க்கவும்.

    பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து, தோல் நீக்கி, நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். இரண்டு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். சுவைக்காக சோம்புடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

    பிறகு நறுக்கிய கருவேப்பிலை இலைகளை சேர்க்கவும். இப்போது தண்ணீர் சேர்க்காமல் கைகளால் நன்கு கலக்கவும்.

    இது பக்கோடா மாவுக்கு ஈரமான அமைப்புடன் கெட்டியாக வரும். அஅனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்த பின் அப்படியே வைக்கவும்.

    பிறகு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் கொதித்ததும் மிதமான தீயில் வைத்து மாவை சிறு சிறு பக்கோடாக்களாக போட்டு எடுக்கவும்.

    எல்லா புறமும் பொன்னிறமாக வர புரட்டி போட்டு எடுத்து பரிமாறவும்!

  • சுவையான முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி?

    முட்டைக்கோஸ் பலவித நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதில் நார்சத்து அதிகம் உள்ளது. முட்டைகோஸ் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. மேலும் இது சரும ஆரோக்கியத்தை பராமரிக்க பயன்படுகிறது. முட்டைகோஸ் பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    நீளமாக நறுக்கிய முட்டைகோஸ்- 1 கப்

    கடலை மாவு – 1 கப்

    அரிசி மாவு – 1/4 கப்

    மிளகாய் துாள்- 1/2 டீ ஸ்பூன்

    பெருங்காயம் – 1 சிட்டிகை

    ஓமம் – 1 சிட்டிகை

    சீரகம் – 1 டீ ஸ்பூன்

    சோம்பு – 1 டீ ஸ்பூன்

    கறிவேப்பிலை  -சிறிது

    உப்பு – 1 சிட்டிகை

    கடலை எண்ணெய்  – 200 மிலி

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில், சிறிதாக நறுக்கிய முட்டைக்கோஸ், சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொஞ்சம் இஞ்சி சேர்க்கவும்.

    கடலை மாவுடன் வெங்காயம், முட்டைக்கோஸ், நறுக்கிய கொத்தமல்லி இலைகள், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், பெருங்காயம், ஓமம், சீரகம், சோம்பு, கறிவேப்பிலை சேர்க்கவும்.

    பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

    Delicious Cabbage Baguette

    சிறிது நேரம் கழித்து ஒரு கடாயில் எண்ணெய்யை  சூடாக்கவும். மிதமான தீயில் அந்தக் கலவையை சிறிது சிறிதாக பொரித்து எடுக்கவும்.

    இப்பொழுது சுவையான முட்டைக்கோஸ் பக்கோடா ரெடி.

    பின்னர் முட்டைக்கோஸ் பக்கோடாவை  தக்காளி சட்னி அல்லது புதினா சட்னியுடன் சூடாக பரிமாறவும்.