காலை சாப்பாடு முடிந்து இட்லி மீதம் இருந்தால் பொதுவாக உப்புமா செய்வோம் ஆனால் மொறுமொறுன்னு சூப்பரான சுவையில் பக்கோடா செய்து சாப்பிட்டு பாருங்களேன்!.

நீங்கள் இன்னும் முயற்சி செய்யவில்லை என்றால், இப்போது நான்கு இட்லிகளை வைத்து முயற்சிக்கவும்.

தேவையான  பொருட்கள்:

1.  மீந்துபோன இட்லி                  –            4

2.  நறுக்கிய                                 –    வெங்காயம் அரை கப்

3.  பச்சை மிளகாய்                     –          1

4.  இஞ்சி துண்டுகள்              –     ஒரு இஞ்ச்

5.  அரை டீஸ்பூன்                     –          சோம்பு

6.  கொத்தமல்லி                      –    இலைகள் நறுக்கியது

7.  ஒரு டீஸ்பூன்                     –     மிளகாய் பொடி

8.  கால் டீஸ்பூன்               –            மஞ்சள் பொடி

9.  தேவையான                      –       அளவு உப்பு

10.  கடலை மாவு                      –         அரை கப்

செய்முறை :

இட்லி பக்கோடா செய்ய முதலில் நான்கு மீதி இட்லிகளை எடுத்துக் கொள்ளவும். உங்களிடம் எவ்வளவு இருந்தாலும், அதற்கேற்ப பொருட்களையும் கூட குறைத்துக்கொள்ளலாம்.

நான்கு இட்லிகளை சிறு துண்டுகளாக நறுக்கவும். பின் மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். மிக்ஸியை ரொம்ப நேரம் ஓட விடக்கூடாது.

இதனுடன் ஒரு கப் கடலை மாவு சேர்க்கவும். ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்தால் தான் மிருதுவாக இருக்கும்.

மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். இட்லியில் ஏற்கனவே உப்பு இருப்பதால் கால் ஸ்பூன் குறைவாக உப்பு சேர்க்கவும்.

பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து, தோல் நீக்கி, நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். இரண்டு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். சுவைக்காக சோம்புடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

பிறகு நறுக்கிய கருவேப்பிலை இலைகளை சேர்க்கவும். இப்போது தண்ணீர் சேர்க்காமல் கைகளால் நன்கு கலக்கவும்.

இது பக்கோடா மாவுக்கு ஈரமான அமைப்புடன் கெட்டியாக வரும். அஅனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்த பின் அப்படியே வைக்கவும்.

பிறகு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் கொதித்ததும் மிதமான தீயில் வைத்து மாவை சிறு சிறு பக்கோடாக்களாக போட்டு எடுக்கவும்.

எல்லா புறமும் பொன்னிறமாக வர புரட்டி போட்டு எடுத்து பரிமாறவும்!