Tag: How to make mushroom gravy

  • ருசியான செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?

    ருசியான செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?

    காளான் பயன்படுத்தி பல வகையான சமையல் செய்யலாம். அந்த வகையில் சைவ பிரியர்களுக்கு காளான் பிரியாணி மிகவும் பிடித்த உணவாகும். அதுவும் செட்டிநாடு முறைப்படி காளான் பிரியாணி செய்தால் ருசியே தனிதான். செட்டிநாடு முறைப்படி காளான் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    காளான் : 1/2 கிலோ

    பாசுமதி அரிசி : 2 கப்

    வெங்காயம் : 1 நறுக்கியது

    தக்காளி : 2 நறுக்கியது

    இஞ்சி பூண்டு பேஸ்ட் : 2 டீஸ்பூன்

    கொத்தமல்லி : 1/4 கப் (துருவியது)

    புதினா : 1/4 கப் (துருவியது)

    பச்சை மிளகாய் : 3 நறுக்கியது

    எண்ணெய் : 3 டேபிள் ஸ்பூன்

    நெய் : 3 டேபிள் ஸ்பூன்

    தேங்காய் பால் : 1/2 கப்

    தயிர் : சிறிது

    மிளகாய் தூள் : 2 டீஸ்பூன்

    சோம்பு தூள் : 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் : 1/4 டீஸ்பூன்

    தண்ணீர் : 3 கப்

    உப்பு : தேவையான அளவு

    தாளிக்க :

    பிரியாணி இலை

    ஏலக்காய்

    லவங்கம்

    கிராம்பு அனைத்தும் தேவைக்கேற்ப

    செய்முறை:

    முதலில் காளானை கழுவவும். பின்னர் அதை சிறிது சிறிதாக நறுக்க வேண்டும்.

    அதே நேரத்தில், அரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

    பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை சேர்த்து வதக்கவும்.

    பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

    பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் காளானை சேர்த்து மஞ்சள் தூள், மல்லித்தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்றாக குழம்பு வரும் வரை கொதிக்கவிடவும்.

    அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து அதில் அரிசியைக் கழுவி, கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வேக விடவும்.

    இப்போது சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி ரெடி. சைவ பிரியர்களுக்கு ஏற்ற காளான் பிரியாணி.

    இதையும் செய்துபார்க்கலாமே!: செட்டிநாடு காளான் குழம்பு செய்வது எப்படி!

  • சுவையான செட்டிநாடு காளான் குழம்பு செய்வது எப்படி?

    சைவ உணவு உண்பவர்களுக்கு காளான் மிகவும் பிடித்தமானது. அப்படிப்பட்ட காளான்களை பயன்படுத்தி செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம்.

    அனைத்து வகையான காளான்களிலும் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

    காளான்களில் புரதங்கள், வைட்டமின் சி, பி மற்றும் டி, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

    அப்படிப்பட்ட காளான்களை வைத்து செட்டிநாடு ஸ்டைல் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    காளான் – 300 கிராம்

    வெங்காயம் – 2

    தக்காளி – 2

    மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

    கொத்துமல்லி விதை(தனியா) – 1 ஸ்பூன்

    சீரகம் – 3/4 ஸ்பூன்

    சோம்பு – 1/2 ஸ்பூன்

    பட்டை- 2 இன்ச் துண்டு

    கிராம்பு – 2

    ஏலக்காய் – 2

    காய்ந்த மிளகாய் – 5 (அ) காரத்துக்கேற்ப

    தேங்காய் – கால் மூடி

    எண்ணெய்

    உப்பு

    கறிவேப்பிலை

    கொத்துமல்லி இலை

    செய்முறை:

    முதலில் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.

    கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி, வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.

    எல்லாம் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

    இப்போது காளானை நன்கு கழுவி, உலர்த்தி துடைத்து சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    அடுத்து அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    குழம்பு நன்றாக கொதி வந்ததும் காளான் துண்டுகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    குழம்பு கெட்டியானதும் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பித்ததும் கொத்தமல்லித் தழையைத் தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சூப்பர் காளான் குழம்பு தயார். இந்த கிரேவியை சாதம், தோசை, இட்லியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    இந்த கிரேவியும் செய்து பாருங்களேன்!: கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி!