சைவ உணவு உண்பவர்களுக்கு காளான் மிகவும் பிடித்தமானது. அப்படிப்பட்ட காளான்களை பயன்படுத்தி செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம்.
அனைத்து வகையான காளான்களிலும் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
காளான்களில் புரதங்கள், வைட்டமின் சி, பி மற்றும் டி, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
அப்படிப்பட்ட காளான்களை வைத்து செட்டிநாடு ஸ்டைல் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காளான் – 300 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கொத்துமல்லி விதை(தனியா) – 1 ஸ்பூன்
சீரகம் – 3/4 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
பட்டை- 2 இன்ச் துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
காய்ந்த மிளகாய் – 5 (அ) காரத்துக்கேற்ப
தேங்காய் – கால் மூடி
எண்ணெய்
உப்பு
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
செய்முறை:
முதலில் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி, வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
எல்லாம் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
இப்போது காளானை நன்கு கழுவி, உலர்த்தி துடைத்து சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
அடுத்து அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாக கொதி வந்ததும் காளான் துண்டுகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
குழம்பு கெட்டியானதும் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பித்ததும் கொத்தமல்லித் தழையைத் தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
சூப்பர் காளான் குழம்பு தயார். இந்த கிரேவியை சாதம், தோசை, இட்லியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
இந்த கிரேவியும் செய்து பாருங்களேன்!: கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி!
