Tag: how to make onion baguette

  • மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய பக்கோடா செய்வது எப்படி?

    பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாவில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பான்னீர் பக்கோடா, உருளைக்கிழங்கு பக்கோடா, முந்திரிப் பருப்பு பக்கோடா, முட்டைக்கோஸ் பக்கோடா என்பன மிகவும் பிரபலமானவை.

    இன்று இங்கு காண்பது வெங்காய பக்கோடா. மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடா சாப்பிடுவது பெரும்பாலானோருக்கு விருப்பமான தேர்வாகும். இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய இவைகள், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் படிப்படியாகப் பிரபலமடைந்துள்ளது.

    இங்கிலாந்தில் உள்ள இந்தியர்கள் நடத்தும் உணவகங்களில் பகோராக்கள் பிரபலமான துரித உணவுப் பொருளாகும். தமிழ்நாட்டில் பக்கோடா என்றும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பஜ்ஜி என்றும், மகாராஷ்டிராவில் பகோராஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்:

    ½ கப் கடலை மாவு

    ¼ கப் அரிசி மாவு

    3 பெரிய வெங்காயம்

    2 பச்சை மிளகாய்

    1 மேஜைக்கரண்டி சோம்பு

    1 சிட்டிகை பெருங்காய தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு கருவேப்பிலை

    செய்முறை:

    முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்த ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை கைகளின் மூலம் நன்கு பிரித்து விடவும்.

    பின்பு அதில் நம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், சோம்பு, பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு, ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கிளறி விடவும்.

    பின்னர் அதில் கடலை மாவு மற்றும் அரிசி மாவை கொட்டி அதை நன்கு கலந்து விடவும். (இதில் நாம் தண்ணீர் எதுவும் சேர்த்து விட கூடாது.)

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பக்கோடாவை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் நாம் கலந்து வைத்திருக்கும் கலவையில் சிறிதளவு தண்ணீரை தெளித்து அதை கடாயின் அளவிற்கேற்ப எடுத்து எண்ணெய்யில் உதிர்த்து விடவும். (மாவில் தண்ணீரை தெளித்து தான் விடவேண்டும் ஊற்றினால் அது பஜ்ஜி மாவு போல் ஆகி விடும்.)

    பக்கோடா கட்டியாக இருப்பதை விரும்புவார்கள் அதை சிறு சிறு கட்டிகளாக எண்ணெய்யில் போடவும்.

    பின்பு அது ஒரு புறம் வெந்ததும் அதை ஒரு கரண்டியின் மூலம் மறு புறம் திருப்பி விட்டு அது நன்கு பொன்னிறமானதும் அதை கரண்டியில் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இவ்வாறே மீதமுள்ள மாவையும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து அதை சுட சுட பரிமாறவும். (தேவைப்பட்டால் மாவை எடுத்து எண்ணெய்யில் போடுவதற்கு முன் சிறிதளவு தண்ணீரை தெளித்து கொள்ளவும்.)

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் நன்கு மொறு மொறுப்பாக இருக்கும் வெங்காய பக்கோடா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • மீந்து போன இட்லி வைத்து சூப்பரான பக்கோடா செய்யலாம்!!

    காலை சாப்பாடு முடிந்து இட்லி மீதம் இருந்தால் பொதுவாக உப்புமா செய்வோம் ஆனால் மொறுமொறுன்னு சூப்பரான சுவையில் பக்கோடா செய்து சாப்பிட்டு பாருங்களேன்!.

    நீங்கள் இன்னும் முயற்சி செய்யவில்லை என்றால், இப்போது நான்கு இட்லிகளை வைத்து முயற்சிக்கவும்.

    தேவையான  பொருட்கள்:

    1.  மீந்துபோன இட்லி                  –            4

    2.  நறுக்கிய                                 –    வெங்காயம் அரை கப்

    3.  பச்சை மிளகாய்                     –          1

    4.  இஞ்சி துண்டுகள்              –     ஒரு இஞ்ச்

    5.  அரை டீஸ்பூன்                     –          சோம்பு

    6.  கொத்தமல்லி                      –    இலைகள் நறுக்கியது

    7.  ஒரு டீஸ்பூன்                     –     மிளகாய் பொடி

    8.  கால் டீஸ்பூன்               –            மஞ்சள் பொடி

    9.  தேவையான                      –       அளவு உப்பு

    10.  கடலை மாவு                      –         அரை கப்

    செய்முறை :

    இட்லி பக்கோடா செய்ய முதலில் நான்கு மீதி இட்லிகளை எடுத்துக் கொள்ளவும். உங்களிடம் எவ்வளவு இருந்தாலும், அதற்கேற்ப பொருட்களையும் கூட குறைத்துக்கொள்ளலாம்.

    நான்கு இட்லிகளை சிறு துண்டுகளாக நறுக்கவும். பின் மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். மிக்ஸியை ரொம்ப நேரம் ஓட விடக்கூடாது.

    இதனுடன் ஒரு கப் கடலை மாவு சேர்க்கவும். ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்தால் தான் மிருதுவாக இருக்கும்.

    மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். இட்லியில் ஏற்கனவே உப்பு இருப்பதால் கால் ஸ்பூன் குறைவாக உப்பு சேர்க்கவும்.

    பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து, தோல் நீக்கி, நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். இரண்டு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். சுவைக்காக சோம்புடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

    பிறகு நறுக்கிய கருவேப்பிலை இலைகளை சேர்க்கவும். இப்போது தண்ணீர் சேர்க்காமல் கைகளால் நன்கு கலக்கவும்.

    இது பக்கோடா மாவுக்கு ஈரமான அமைப்புடன் கெட்டியாக வரும். அஅனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்த பின் அப்படியே வைக்கவும்.

    பிறகு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் கொதித்ததும் மிதமான தீயில் வைத்து மாவை சிறு சிறு பக்கோடாக்களாக போட்டு எடுக்கவும்.

    எல்லா புறமும் பொன்னிறமாக வர புரட்டி போட்டு எடுத்து பரிமாறவும்!

  • சுவையான முந்திரிப் பருப்பு பக்கோடா செய்வது எப்படி?

    என்ன பக்கோடா சாப்பிட்டாலும் வாயில் கரையும். கடைகளுக்குச் சென்றால், பலவிதமான பக்கோடா வகைகள் உள்ளன, அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தாலும் சுவை வித்தியாசமாக இருக்கும்.

    தேவையான பொருள்கள்:

    முந்திரிப்பருப்பு – ¼ கிலோ

    கடலைமாவு – 1 கிலோ

    டால்டா – 200 கிராம்

    உப்பு – தேவையானது

    இஞ்சி – 25 கிராம்

    பச்சை மிளகாய் – 25 கிராம்

    சீரகம் தூள் செய்தது – ½ தேக்கரண்டி

    சோடா உப்பு – ½ தேக்கரண்டி

    சுடுவதற்கு ரீபைண்ட் ஆயில் – 2 லிட்டர்

    கருவேப்பிலை, மல்லி இலை – தேவையானது

    செய்முறை:

    முந்திரியை நெய்யில் சிறு தீயில் வறுத்து உப்பு தூவி தனியாக வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, நெய் அல்லது டால்டா, சோடா உப்பு, பொடியாக வெட்டிய இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தூள், மல்லி இலை மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

    பிறகு அதே எண்ணெயில் கறிவேப்பிலையை வறுத்து முந்திரியைத் தூவி இறக்கவும்.

    இப்போது சுவையான முந்திரி பக்கோடா ரெடி.