சுவையான முந்திரிப் பருப்பு பக்கோடா செய்வது எப்படி?

Written by

in

என்ன பக்கோடா சாப்பிட்டாலும் வாயில் கரையும். கடைகளுக்குச் சென்றால், பலவிதமான பக்கோடா வகைகள் உள்ளன, அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தாலும் சுவை வித்தியாசமாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

முந்திரிப்பருப்பு – ¼ கிலோ

கடலைமாவு – 1 கிலோ

டால்டா – 200 கிராம்

உப்பு – தேவையானது

இஞ்சி – 25 கிராம்

பச்சை மிளகாய் – 25 கிராம்

சீரகம் தூள் செய்தது – ½ தேக்கரண்டி

சோடா உப்பு – ½ தேக்கரண்டி

சுடுவதற்கு ரீபைண்ட் ஆயில் – 2 லிட்டர்

கருவேப்பிலை, மல்லி இலை – தேவையானது

செய்முறை:

முந்திரியை நெய்யில் சிறு தீயில் வறுத்து உப்பு தூவி தனியாக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, நெய் அல்லது டால்டா, சோடா உப்பு, பொடியாக வெட்டிய இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தூள், மல்லி இலை மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

பிறகு அதே எண்ணெயில் கறிவேப்பிலையை வறுத்து முந்திரியைத் தூவி இறக்கவும்.

இப்போது சுவையான முந்திரி பக்கோடா ரெடி.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *