சத்தான பாதாம் அல்வா செய்து அசத்தலாம்!!
இனிப்புகளை விரும்பாதவர் யார்? பலர் மிகவும் வித்தியாசமான இனிப்புகளை சுவைக்க விரும்புகிறார்கள். நெய்யில் செய்யப்படும் பாதாம் அல்வாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாதாம் – 1/2 கப் (இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அரைக்கவும்)
சர்க்கரை – 1/2 கப்
பால் – 1 கப்
நெய் – 1/2 கப்
குங்குமப்பூ – சிறிதளவு (பாலில் ஊறவைத்தது)
செய்முறை:
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி, கடாயில் பரப்பவும்.
பிறகு அதே கடாயில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு சர்க்கரை சேர்த்து கரைக்கவும்.
பிறகு அதனுடன் பாதாம் விழுது சேர்த்து, பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும்.
அப்படி கிளறிக் கொண்டிருக்கும் போது, கலவை சிறிது கெட்டியாக வர ஆரம்பித்ததும், அதில் பாதி நெய்யை சேர்த்து, 10 நிமிடம் குறைந்த தீயில் வைத்து கிளறிக்கொண்டே இருந்தால், அல்வா நெய்யை முழுவதுமாக உறிஞ்சிவிடும்.
நெய் முழுவதுமாக காய்ந்ததும் கடாயை எடுத்து விட்டு மீதமுள்ள நெய்யை சேர்த்து ஒரு முறை கிளறி இறக்கினால் பாதாம் அல்வா ரெடி.