நாவூறும் சுவையில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

நெல்லிக்காய் ஊறுகாய்

Written by

in

ஊறுகாய் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். இன்று உடனே செய்யக்கூடிய நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் – 10

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1

டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4

வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

கடுகு   – 1/4 டீஸ்பூன்

கல் உப்பு     – தேவையான அளவு

செய்முறை :

இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி இட்லி அவிப்பது போன்று நெல்லிக்காயை நன்று அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரில் போட்டு அவித்தல் அதன் சத்துக்கள் தண்ணீரில் சென்றுவிடும்.

சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை சட்டியில் இருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.

இப்போது நெல்லிக்காயையும், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு ஆகியவற்றையும் போட்டு, 5 நிமிடங்கள் வதக்கவேண்டும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.

வெறும் கடாயில் வெந்தயத்தையும் கடுகையும் போட்டு இலேசாக வறுத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்த பின் பிசறி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். ஒரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர், வெந்தய, கடுகு பொடியை தூவி நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

சூப்பரான உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *