Category: Biryani

  • ஃபிஷ் பிரியாணி செய்வது எப்படி?

      பிரியாணி உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பிடித்தமான உணவாகும். பொதுவாக அனைவரும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி செய்து ருசிப்பார்கள். ஆனால் மீன் பிரியாணியும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போன்ற ஒரு அற்புதமான பிரியாணி.

    மீன் பிரியாணி மீன் பிரியர்களுக்கு அவசியம். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போல மீன் மிருதுவாக இருப்பதினால் மீனை அதிக நேரம் வேக விட்டால் குழைந்து விடும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்முறையை சரியாகப் பின்பற்றினால், மீன் உடையாமல் சரியாக சமைக்கப்படும்.

    தேவையான பொருட்கள்:

    1/2 கிலோ மீன்

    1/2 கிலோ பாசுமதி அரிசி

    3 தக்காளி

    1 பெரிய வெங்காயம்

    3 பச்சை மிளகாய்

    1 எலுமிச்சம்பழம்

    1/4 கப் தேங்காய்

    1 கப் தேங்காய் பால்

    1/2 மேஜைக்கரண்டி மிளகுத் தூள்

    மல்லித் தூள்  1/4 மேஜைக்கரண்டி 

    சீரக தூள்  1/4 மேஜைக்கரண்டி 

    சோம்பு தூள்  1/4 மேஜைக்கரண்டி 

    1/2 மேஜைக்கரண்டி சோம்பு

    5 துண்டு இஞ்சி

    13 பூண்டு பல்

    6 கிராம்பு

    8 ஏலக்காய்

    2 துண்டு பட்டை

    1 பிரியாணி இலை

    1/4 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    8 to 10 முந்திரி

    எண்ணெய் தேவையான அளவு

    நெய் தேவையான அளவு

    மிளகாய் தூள் தேவையான அளவு

    சிறிதளவு புதினா

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் மீனை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி வைத்து பாசுமதி அரிசியை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    பின்பு வெங்காயம், தக்காளி, தேங்காய், முந்திரியை தயார் செய்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய், 3 ஏலக்காய், சோம்பு, மற்றும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது சிறு சிறு துண்டங்களாக ஆக்கி வைத்திருக்கும் மீனை ஒரு bowl ல் போட்டு அதில் தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

    பின்பு அதில் கால் மேஜைக்கரண்டி மிளகுத் தூள், சோம்பு தூள், மல்லி தூள், சீரகத் தூள், ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு பிரட்டி அதை சுமார் 25 நிமிடம் வரை அதை அப்படியே ஊற விடவும்.

    25 நிமிடத்திற்கு பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 10 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் 4 மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத் துமீன் பொரித்தெடுத்த எண்ணெய்யை வடி கட்டி அதில் சேர்த்து சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, மற்றும் ஒரு பிரியாணி இலையை சேர்த்து அதை வதக்கவும்.

    இவை வதங்கியதும் அதில் 2 பச்சை மிளகாய், முந்திரி, மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் சாதத்திற்கு தேவையான அளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி அளவு மிளகுத் தூள், சோம்பு தூள், கரம் மசாலா, அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் மற்றும் 3 மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.

    இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து இந்த மசாலாவில் சேர்த்து பக்குவமாக கிளறி விடவும்.

    அரிசியை நன்கு கிளறி விட்டதும் அதில் ஒரு கப் அளவு தேங்காய் பால் ஒன்றரை கப் அளவு தண்ணீர் மற்றும் மீதமுள்ள எலுமிச்சம் பழ சாறை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    பின்பு குக்கரில் மூடியை போட்டு விசில் போடாமல் சுமார் 2 நிமிடம் வரை ஆவி வரும் வரை அதை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு மூடியை திறந்து 2 கரண்டி அளவு பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது நாம் வறுத்து வைத்திருக்கும் மீனை சாதத்தில் வைத்து சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லியை தூவி விடவும்.

    பின்பு தட்டில் இருக்கும் சாதத்தை அதன் மேலே போட்டு மீதமுள்ள மீன், புதினா மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றி மூடி போட்டு விசில் வைத்து சுமார் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு பின்பு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு குக்கரை அடுப்பிலேயே 3 நிமிடம் வரை வைத்திருக்கவும்.

    3 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட ரைத்தா உடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான ஃபிஷ் பிரியாணி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • அனைவரும் விரும்பும் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி?

    இந்திய உணவு வகைகளில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. உணவைத் தவிர, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு இவை.

    தென்னிந்தியாவில் பிரியாணிக்கு தனி அந்தஸ்து உண்டு என்றால் அது மிகையாகாது. பிரியாணியில் பல வகைகள் உண்டு. குறிப்பாக சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி, காளான் பிரியாணி, பன்னீர் பிரியாணி போன்றவை பிரபலம். இன்று நாம் இங்கு பார்ப்பது வெஜிடபிள் பிரியாணி.

    அசைவ பிரியாணிக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, மற்றும் இறால் பிரியாணி மற்றும் சைவ பிரியாணிக்கு காளான் பிரியாணி, பன்னீர் பிரியாணி.

    இறைச்சி பிரியாணியில் உள்ள அளவுக்கு புரதச்சத்து இதில் இல்லை என்றாலும், வெஜிடபிள் பிரியாணியில் பலவகையான காய்கறிகளைச் சேர்ப்பது உடலுக்கும் நல்லது.

    தேவையான பொருட்கள்:

    2 கப் பாசுமதி அரிசி

    2 பெரிய வெங்காயம்

    2 தக்காளி

    2 கேரட்

    8 to 10 பீன்ஸ்

    ¼ காலிஃப்ளவர்

    1 உருளைக்கிழங்கு

    ¼ கப் பச்சை பட்டாணி

    ¼ கப் தயிர்

    2 பச்சை மிளகாய்

    3 பூண்டு பல்

    1 இஞ்சி துண்டு

    ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    2 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    2 பிரியாணி இலை

    1 துண்டு பட்டை

    3 ஏலக்காய்

    3 கிராம்பு

    1 நட்சத்திர பூ

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு நெய்

    தேவையான அளவு உப்பு

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு புதினா

    செய்முறை:

    முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், காலிபிளவர், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து வைத்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் பாசுமதி அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.

    அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி அதை உருக விடவும்.

    நெய் உருகியதும் அதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர பூ, மற்றும் பட்டையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.

    அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு உப்பு போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதை நன்கு கலந்து விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், மற்றும் பச்சை பட்டாணியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்கு பிறகு அதில் கால் கப் அளவு தயிரை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை நன்கு கிளறி விடவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (சுமார் ரெண்டரை கப்பில்லிருந்து மூன்று கப் வரை தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

    பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி அதில் சேர்த்து அதை பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் கிளறி விடவும்.

    பின்பு அதில் ஒரு மூடி போட்டு ஆவி வந்ததும் விசிலை போட்டு சுமார் ஒரு விசில் வரும் வரை அதை வேக விடவும். (பாசுமதி அரிசி எளிதாக வேகும் தன்மை கொண்டதால் கவனமாக இருக்க வேண்டும்.)

    ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை அப்படியே சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வைக்கவும்.

    20 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து வெஜிடபிள் பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆனியன் ரைத்தா உடன் அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அட்டகாசமாக இருக்கும் வெஜிடபிள் பிரியாணி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • ருசியான செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?

    ருசியான செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?

    காளான் பயன்படுத்தி பல வகையான சமையல் செய்யலாம். அந்த வகையில் சைவ பிரியர்களுக்கு காளான் பிரியாணி மிகவும் பிடித்த உணவாகும். அதுவும் செட்டிநாடு முறைப்படி காளான் பிரியாணி செய்தால் ருசியே தனிதான். செட்டிநாடு முறைப்படி காளான் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    காளான் : 1/2 கிலோ

    பாசுமதி அரிசி : 2 கப்

    வெங்காயம் : 1 நறுக்கியது

    தக்காளி : 2 நறுக்கியது

    இஞ்சி பூண்டு பேஸ்ட் : 2 டீஸ்பூன்

    கொத்தமல்லி : 1/4 கப் (துருவியது)

    புதினா : 1/4 கப் (துருவியது)

    பச்சை மிளகாய் : 3 நறுக்கியது

    எண்ணெய் : 3 டேபிள் ஸ்பூன்

    நெய் : 3 டேபிள் ஸ்பூன்

    தேங்காய் பால் : 1/2 கப்

    தயிர் : சிறிது

    மிளகாய் தூள் : 2 டீஸ்பூன்

    சோம்பு தூள் : 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் : 1/4 டீஸ்பூன்

    தண்ணீர் : 3 கப்

    உப்பு : தேவையான அளவு

    தாளிக்க :

    பிரியாணி இலை

    ஏலக்காய்

    லவங்கம்

    கிராம்பு அனைத்தும் தேவைக்கேற்ப

    செய்முறை:

    முதலில் காளானை கழுவவும். பின்னர் அதை சிறிது சிறிதாக நறுக்க வேண்டும்.

    அதே நேரத்தில், அரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

    பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை சேர்த்து வதக்கவும்.

    பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

    பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் காளானை சேர்த்து மஞ்சள் தூள், மல்லித்தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்றாக குழம்பு வரும் வரை கொதிக்கவிடவும்.

    அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து அதில் அரிசியைக் கழுவி, கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வேக விடவும்.

    இப்போது சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி ரெடி. சைவ பிரியர்களுக்கு ஏற்ற காளான் பிரியாணி.

    இதையும் செய்துபார்க்கலாமே!: செட்டிநாடு காளான் குழம்பு செய்வது எப்படி!

  • இறால், காய்கறி பிரியாணி (prawn vegetable fried rice)

    தேவையான பொருள்கள்

    இறால்                       – 1/4கிலோ

    பட்டாணி                   – 1/4கிலோ

    காரட்                       – 50கிராம்

    பீன்ஸ்காய்                 – 100கிராம்

    பெல்லாரி வெங்காயம்      – 1/4கிலோ

    தக்காளிப்பழம்             – 2

    எலும்மிச்சம்பழம்          – 1

    உப்புத்தூள்                – தேவையான அளவு

    வற்றல் தூள்               – தேவையான அளவு

    பச்சை மிளகாய்            – 10

    பிரியாணி அரிசி            – 1/2 கி்லோ

    நெய்                       – 100 மிலி

    இஞ்சி                     – 2 அங்குலத்துண்டு

    பூண்டு                      – 1

    பட்டை                     – 2 துண்டு

    கிராம்பு                     – 3

    மல்லி                      – தேவையான அளவு

    புதினா இலை               – தேவையான அளவு

    ஏலம்                      – 3

    செய்முறை

    முதலில் ராலை உரித்து சுத்தம் செய்து தேவையான வற்றல் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து சிறிது நெய்யில் சிவக்க பொரித்து வைத்துக் கொள்ளவும். அதே போல் காய்கறிகளையும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

    அரிசியை லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ளவும். அரிசியின் அளவில் ழூன்று பங்கு தண்ணீர் வைத்து கொதித்ததும் அரிசியைப் போட்டு பாதி வெந்ததும்  (நெற்று  பதத்தில்) வடித்து விடவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி வாசனை சாமான்களைப் போட்டு நறுக்கிய வெங்காயம் கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, அரைத்து  வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு கல‌ந்து நன்றாகக் கிளறி எலும்மிச்சம்பழம் பிழிந்து மல்லி புதினா, இலை தூவி தகுந்த உப்புத்தூள் சேர்த்து தம்மில் போடவும். கீழே சிறு தணல் போதும்.

    முட்டை, கொத்துக்கறி இத்துடன் சேர்க்கப்பிரியப்பட்டால், முட்டையை வெங்காயத்துடன் உதிரியாக கிளறி, கொத்துக்கறியையும் தனியாக காரம், உப்புடன் சேர்த்து வேக வைத்து கடைசியில் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.

  • நீங்கள் மீண்டும் மீண்டும் சாப்பிடக்கூடிய சிக்கன் பிரியாணி செய்முறை!!

    நீங்கள் மீண்டும் மீண்டும் சாப்பிடக்கூடிய சிக்கன் பிரியாணி செய்முறை!!

    நாம் அனைவரும் விரும்பும் அசைவ உணவுகளில் சிக்கன் பிரியாணியும் ஒன்று. இந்த பதிவில் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எப்படி எளிதாக சமைப்பது என்று பார்ப்போம்.

    தேவையானவை :

    பிரியாணி அரிசி                            –  1/4 படி

    சிக்கன் கறி                                       –  250 கிராம்

    தேங்காய்                                          –  1/2 மூடி பால் எடுக்கவும்

    இஞ்சி                                                 –  3 அங்குலம் அரைப்பதற்கு

    பூண்டு                                                –  1

    நெய்யில் வறுத்த பட்டை         –  1 அங்குலம்

    கிராம்பு                                              –  6

    கொத்தமல்லி                                 –  2 டீஸ்பூன் (வறுத்தது)

    புதினா, கொத்தமல்லி தழை
    பெல்லாரி                                         –  2

    மிளகாய்                                           –  6

    ஏலக்காய்                                         –  6

    பெருஞ்சீரகம்                                 –  1 டீஸ்பூன்

    செய்முறை :

    அரிசியை கல்நீக்கி சுத்தம் செய்து வடிகட்டி வைக்கவும். பிரஷர் குக்கரில் வெட்டிய சிக்கன் கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள் 1/3 படி நீர் சேர்த்து வேக வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி நீளமாக அரித்த வெங்காயம் புதினா மல்லி இலை சேர்த்து வதக்கவும்.

    அரைத்த மசால், அவித்த கறி, அரிசியையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். பிரஷர் குக்கரில் கறி வெந்த தண்ணீர் தேங்காய் பால் சேர்த்து அரை படியாக்கி கொதிக்க வைக்கவும்.

    கொதிக்கும் தேங்காய் பாலில் வதக்கிய மசால் அரிசி, கறி, இவற்றையும் உப்பும் சேர்த்துக் கிளறி இளந்தீயில் குக்கரை வெயிட் வைத்து மூடி 10 நிமிடத்தில் இறக்கவும்.