இந்திய உணவு வகைகளில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. உணவைத் தவிர, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு இவை.

தென்னிந்தியாவில் பிரியாணிக்கு தனி அந்தஸ்து உண்டு என்றால் அது மிகையாகாது. பிரியாணியில் பல வகைகள் உண்டு. குறிப்பாக சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி, காளான் பிரியாணி, பன்னீர் பிரியாணி போன்றவை பிரபலம். இன்று நாம் இங்கு பார்ப்பது வெஜிடபிள் பிரியாணி.

அசைவ பிரியாணிக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, மற்றும் இறால் பிரியாணி மற்றும் சைவ பிரியாணிக்கு காளான் பிரியாணி, பன்னீர் பிரியாணி.

இறைச்சி பிரியாணியில் உள்ள அளவுக்கு புரதச்சத்து இதில் இல்லை என்றாலும், வெஜிடபிள் பிரியாணியில் பலவகையான காய்கறிகளைச் சேர்ப்பது உடலுக்கும் நல்லது.

தேவையான பொருட்கள்:

2 கப் பாசுமதி அரிசி

2 பெரிய வெங்காயம்

2 தக்காளி

2 கேரட்

8 to 10 பீன்ஸ்

¼ காலிஃப்ளவர்

1 உருளைக்கிழங்கு

¼ கப் பச்சை பட்டாணி

¼ கப் தயிர்

2 பச்சை மிளகாய்

3 பூண்டு பல்

1 இஞ்சி துண்டு

½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

2 மேஜைக்கரண்டி மல்லி தூள்

2 பிரியாணி இலை

1 துண்டு பட்டை

3 ஏலக்காய்

3 கிராம்பு

1 நட்சத்திர பூ

தேவையான அளவு மிளகாய் தூள்

தேவையான அளவு நெய்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு கொத்தமல்லி

சிறிதளவு புதினா

செய்முறை:

முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், காலிபிளவர், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து வைத்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் பாசுமதி அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.

அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி அதை உருக விடவும்.

நெய் உருகியதும் அதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர பூ, மற்றும் பட்டையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.

அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு உப்பு போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதை நன்கு கலந்து விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், மற்றும் பச்சை பட்டாணியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

5 நிமிடத்திற்கு பிறகு அதில் கால் கப் அளவு தயிரை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை நன்கு கிளறி விடவும்.

ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (சுமார் ரெண்டரை கப்பில்லிருந்து மூன்று கப் வரை தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

பிறகு நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி அதில் சேர்த்து அதை பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் கிளறி விடவும்.

பின்பு அதில் ஒரு மூடி போட்டு ஆவி வந்ததும் விசிலை போட்டு சுமார் ஒரு விசில் வரும் வரை அதை வேக விடவும். (பாசுமதி அரிசி எளிதாக வேகும் தன்மை கொண்டதால் கவனமாக இருக்க வேண்டும்.)

ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை அப்படியே சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வைக்கவும்.

20 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து வெஜிடபிள் பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆனியன் ரைத்தா உடன் அதை சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அட்டகாசமாக இருக்கும் வெஜிடபிள் பிரியாணி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.