Tag: பக்கோடா

  • சுண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி?

    மழைக்காலம் தொடங்கிவிட்டது. குளிர்ந்த காலநிலைக்கு சில சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். இதற்கு ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து விடுங்கள்.

    குழந்தைகள் சாக்லேட் மற்றும் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள் கடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க சுண்டைக்காய் பயன்படுத்தி பக்கோடா செய்யலாம்.

    சற்றே கசப்பாக இருந்தாலும், சுண்டையக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. பசியே இல்லை என்று சொல்பவர்கள் வாரம் ஒரு முறையாவது சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

    சுண்டைகாயைப் பயன்படுத்தி ஆரோக்கியமான பக்கோடா செய்வது எப்படி என்பதை பார்ப்போம். இன்றே செய்து ருசித்து பாருங்கள்.

    தேவையான பொருட்கள்

    சுண்டைக்காய் – அரை கிலோ

    கடலை மாவு- 1 கப்

    கடலை எண்ணெய் – தேவையான அளவு

    பெருங்காயம் – சிறிதளவு

    இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு

    உப்பு – சுவைக்கு ஏற்ப

    சோம்பு – சிறிதளவு

    மிளகாய் வத்தல் – 5

    செய்முறை

    சுண்டைக்காய் பக்கோடா செய்வதற்கு முதலில் சுண்டைக்காயை இரு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ளவும். குழந்தைகளுக்கு விதைகள் சாப்பிட பிடிக்கவில்லையென்றால் நீக்கிக் கொள்ளலாம்.

    பின்னர் இஞ்சி, பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதையடுத்து சோம்பு, மிளகாய் வத்தலையும் அரைத்து தனித்தனியாக வைத்துக் கொள்ளவும்.

    இதையடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, மிளகாய் வத்தவல் கலவையையும் ஒன்றாக தண்ணீர் விட்டு பிசைந்துக் கொள்ள வேண்டும். இதனுடனே நறுக்கி வைத்துள்ள சுண்டைக்காயையும் அதனுடன் சேர்ந்துக் கலந்து கொண்டு அரை மணி நேரத்திற்கு அப்படியே வைத்து விட வேண்டும்.

    இறுதியாக கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள சுண்டைக்காய் கலவையை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் போதும். சுவையாக சுண்டைக்காய் பக்கோடா ரெடி.

    இதுபோன்ற முறைகளைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு செய்துக் கொடுக்கவும். சுண்டைக்காய் என்று கூறினால் தான் சாப்பிடுவதற்குத் தயக்கம் காட்டுவார்கள். சாதாரண பக்கோடா என்று கொடுங்கள், நிச்சயம் சுவையை ருசித்து சாப்பிடுவார்கள். நீங்களும் இந்த ரெசிபியை நிச்சயம் உங்களது வீடுகளில் செய்துக் கொடுக்க மறந்து விடாதீர்கள்.

  • பாலக்கீரை பக்கோடா செய்வது எப்படி?

    பக்கோடா என்பது நம்மில் பலருக்கு விருப்பமான உணவு. பொதுவாக வெங்காய பக்கோடா, காலிபிளவர் பக்கோடா, முட்டைக்கோஸ் பக்கோடா, முந்திரிப் பருப்பு பக்கோடா என்று சுவைக்கத்தான் செய்கிறோம். ஆனால் இன்று நாம் காண இருப்பது வித்தியாசமான சத்தான பாலக் கீரை பக்கோடா.

    நம்மில் பலர் மாலையில் சூடான டீ அல்லது காபியுடன் பக்கோடா சாப்பிட்டு மகிழ்வோம். நாம் வழக்கமாக செய்யும் பக்கோடாவுக்கு பதிலாக சத்தான பக்கோடா சாப்பிடுவது எப்படி?

    பாலக் கீரையின் சத்துக்கள் மற்றும் பக்கோடாவின் மொறுமொறுப்புடன், இந்த பாலக் கீரை பக்கோடாக்கள் உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    1 கட்டு பாலக் கீரை

    1/2 cup அரிசி மாவு

    1 cup கடலை மாவு

    2 வெங்காயம்

    2 பச்சை மிளகாய்

    1/2 tsp மஞ்சள் தூள்

    1 tsp மிளகாய் தூள்

    1 tsp ஓம விதைகள்

    1/2 tsp பெருங்காய தூள்

    1 சிறு துண்டு இஞ்சி

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு கருவேப்பிலை

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு தண்ணீர்

    செய்முறை

    முதலில் பாலக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் இஞ்சியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பாலக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் இஞ்சியை போட்டு நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஓம விதைகள், பெருங்காய தூள் மற்றும் 1 tsp அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 tsp அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதை நாம் செய்து வைத்திருக்கும் கலவையில் ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிளறி விடவும்.

    அடுத்து அதில் ஒரு கையளவு தண்ணீர் தெளித்து நம் கைகளின் மூலம் அதை நன்கு கிளறி விடவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பக்கோடாவை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதை உறுதி செய்த பின் அதில் நாம் செய்து வைத்திருக்கும் பக்கோடா மாவில் இருந்து கொஞ்சமாக எடுத்து அதை கவனமாக எண்ணெயில் உதிர்த்து விட்டு அது ஒருபுறம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    ஒருபுறம் பொன்னிறமானதும் அதை மறுபுறம் ஒரு கரண்டியின் மூலம் திருப்பிவிட்டு அந்தப் புறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    கடைசியாக கருவேப்பிலையை உருவி அந்தப் பக்கோடாவுடன் போட்டு பொரித்து எடுக்கவும்.

    அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான பாலக் கீரை பக்கோடா ரெடி. அதை சுட சுட எடுத்து ஒரு தட்டில் வைத்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • சுவையான முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி?

    முட்டைக்கோஸ் பலவித நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதில் நார்சத்து அதிகம் உள்ளது. முட்டைகோஸ் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. மேலும் இது சரும ஆரோக்கியத்தை பராமரிக்க பயன்படுகிறது. முட்டைகோஸ் பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    நீளமாக நறுக்கிய முட்டைகோஸ்- 1 கப்

    கடலை மாவு – 1 கப்

    அரிசி மாவு – 1/4 கப்

    மிளகாய் துாள்- 1/2 டீ ஸ்பூன்

    பெருங்காயம் – 1 சிட்டிகை

    ஓமம் – 1 சிட்டிகை

    சீரகம் – 1 டீ ஸ்பூன்

    சோம்பு – 1 டீ ஸ்பூன்

    கறிவேப்பிலை  -சிறிது

    உப்பு – 1 சிட்டிகை

    கடலை எண்ணெய்  – 200 மிலி

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில், சிறிதாக நறுக்கிய முட்டைக்கோஸ், சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொஞ்சம் இஞ்சி சேர்க்கவும்.

    கடலை மாவுடன் வெங்காயம், முட்டைக்கோஸ், நறுக்கிய கொத்தமல்லி இலைகள், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், பெருங்காயம், ஓமம், சீரகம், சோம்பு, கறிவேப்பிலை சேர்க்கவும்.

    பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

    Delicious Cabbage Baguette

    சிறிது நேரம் கழித்து ஒரு கடாயில் எண்ணெய்யை  சூடாக்கவும். மிதமான தீயில் அந்தக் கலவையை சிறிது சிறிதாக பொரித்து எடுக்கவும்.

    இப்பொழுது சுவையான முட்டைக்கோஸ் பக்கோடா ரெடி.

    பின்னர் முட்டைக்கோஸ் பக்கோடாவை  தக்காளி சட்னி அல்லது புதினா சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

  • சுவையான முந்திரிப் பருப்பு பக்கோடா செய்வது எப்படி?

    என்ன பக்கோடா சாப்பிட்டாலும் வாயில் கரையும். கடைகளுக்குச் சென்றால், பலவிதமான பக்கோடா வகைகள் உள்ளன, அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தாலும் சுவை வித்தியாசமாக இருக்கும்.

    தேவையான பொருள்கள்:

    முந்திரிப்பருப்பு – ¼ கிலோ

    கடலைமாவு – 1 கிலோ

    டால்டா – 200 கிராம்

    உப்பு – தேவையானது

    இஞ்சி – 25 கிராம்

    பச்சை மிளகாய் – 25 கிராம்

    சீரகம் தூள் செய்தது – ½ தேக்கரண்டி

    சோடா உப்பு – ½ தேக்கரண்டி

    சுடுவதற்கு ரீபைண்ட் ஆயில் – 2 லிட்டர்

    கருவேப்பிலை, மல்லி இலை – தேவையானது

    செய்முறை:

    முந்திரியை நெய்யில் சிறு தீயில் வறுத்து உப்பு தூவி தனியாக வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, நெய் அல்லது டால்டா, சோடா உப்பு, பொடியாக வெட்டிய இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தூள், மல்லி இலை மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

    பிறகு அதே எண்ணெயில் கறிவேப்பிலையை வறுத்து முந்திரியைத் தூவி இறக்கவும்.

    இப்போது சுவையான முந்திரி பக்கோடா ரெடி.