மழைக்காலம் தொடங்கிவிட்டது. குளிர்ந்த காலநிலைக்கு சில சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். இதற்கு ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து விடுங்கள்.
குழந்தைகள் சாக்லேட் மற்றும் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள் கடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க சுண்டைக்காய் பயன்படுத்தி பக்கோடா செய்யலாம்.
சற்றே கசப்பாக இருந்தாலும், சுண்டையக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. பசியே இல்லை என்று சொல்பவர்கள் வாரம் ஒரு முறையாவது சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
சுண்டைகாயைப் பயன்படுத்தி ஆரோக்கியமான பக்கோடா செய்வது எப்படி என்பதை பார்ப்போம். இன்றே செய்து ருசித்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் – அரை கிலோ
கடலை மாவு- 1 கப்
கடலை எண்ணெய் – தேவையான அளவு
பெருங்காயம் – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு
உப்பு – சுவைக்கு ஏற்ப
சோம்பு – சிறிதளவு
மிளகாய் வத்தல் – 5
செய்முறை
சுண்டைக்காய் பக்கோடா செய்வதற்கு முதலில் சுண்டைக்காயை இரு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ளவும். குழந்தைகளுக்கு விதைகள் சாப்பிட பிடிக்கவில்லையென்றால் நீக்கிக் கொள்ளலாம்.
பின்னர் இஞ்சி, பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதையடுத்து சோம்பு, மிளகாய் வத்தலையும் அரைத்து தனித்தனியாக வைத்துக் கொள்ளவும்.
இதையடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, மிளகாய் வத்தவல் கலவையையும் ஒன்றாக தண்ணீர் விட்டு பிசைந்துக் கொள்ள வேண்டும். இதனுடனே நறுக்கி வைத்துள்ள சுண்டைக்காயையும் அதனுடன் சேர்ந்துக் கலந்து கொண்டு அரை மணி நேரத்திற்கு அப்படியே வைத்து விட வேண்டும்.
இறுதியாக கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள சுண்டைக்காய் கலவையை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் போதும். சுவையாக சுண்டைக்காய் பக்கோடா ரெடி.
இதுபோன்ற முறைகளைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு செய்துக் கொடுக்கவும். சுண்டைக்காய் என்று கூறினால் தான் சாப்பிடுவதற்குத் தயக்கம் காட்டுவார்கள். சாதாரண பக்கோடா என்று கொடுங்கள், நிச்சயம் சுவையை ருசித்து சாப்பிடுவார்கள். நீங்களும் இந்த ரெசிபியை நிச்சயம் உங்களது வீடுகளில் செய்துக் கொடுக்க மறந்து விடாதீர்கள்.
