Tag: Chicken Biryani

  • நாவில் கரையும் சுவையில் செட்டிநாடு மிளகு சிக்கன் ரோஸ்ட் – வீட்டிலேயே செய்வது எப்படி?

    ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம் வீட்டில் சிக்கன் இல்லாமல் இருக்காது. வழக்கமாகச் செய்யும் சிக்கன் குழம்பு அல்லது ப்ரை சாப்பிட்டுச் சலித்துவிட்டதா? அப்படியானால், வாசனையான மிளகு மற்றும் மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் இந்த செட்டிநாடு மிளகு சிக்கன் ரோஸ்ட் ஒரு அருமையான மாற்றாக இருக்கும்.

    மிளகின் காரமும், சின்ன வெங்காயத்தின் சுவையும் சேர்ந்து இந்த ரோஸ்ட்டை மிகவும் அருமையாக மாற்றும். சப்பாத்தி, பரோட்டா, சூடான சாதம் அல்லது ரச சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவதற்கு இது மிகச் சிறந்த காம்பினேஷனாகும். வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், மிகச் சுலபமான முறையில் இதை எப்படிச் செய்வது என்று கீழே விரிவாகப் பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    • சிக்கன் – 500 கிராம் (நன்றாகச் சுத்தம் செய்தது)
    • சின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
    • இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
    • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
    • கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடி (தாராளமாகச் சேர்க்கவும்)
    • மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
    • மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
    • மல்லித்தூள் (தனியா தூள்) – 2 தேக்கரண்டி
    • கரம் மசாலா – அரை தேக்கரண்டி
    • நல்லெண்ணெய் – 3 மேசைக் கரண்டி
    • உப்பு – தேவையான அளவு
    • கொத்தமல்லி தழை – சிறிதளவு

    வறுத்து அரைக்க வேண்டியவை:

    • மிளகு – 2 மேசைக் கரண்டி
    • சீரகம் – 1 தேக்கரண்டி
    • சோம்பு (பெரிய சீரகம்) – 1 தேக்கரண்டி
    • பட்டை – 1 சிறிய துண்டு
    • கிராம்பு – 3

    செய்முறை விளக்கம்

    1. மிளகு மசாலா தயாரித்தல்: அடுப்பில் ஒரு சிறிய கடாயை வைத்து, வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள மிளகு, சீரகம், சோம்பு, பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து குறைந்த தீயில் வாசனை வரும் வரை வறுத்து, ஆறிய பிறகு மிக்ஸியில் கொரகொரகப்பாகப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
    2. சிக்கனை வேகவைத்தல்: அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்க வேண்டும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
    3. தக்காளி மற்றும் மசாலா சேர்ப்பு: இதன்பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து மசிய வதக்கிய பின், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துச் சிறிய தீயில் வதக்கவும்.
    4. சிக்கன் ரோஸ்ட் பதம்: இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளைச் சேர்த்து மசாலாவுடன் நன்கு பிரட்டவும். சிக்கனில் இருந்து தண்ணீர் பிரிந்து வெந்து வரும். சிக்கன் பாதியளவு வெந்ததும், நாம் பொடித்து வைத்துள்ள மிளகு மசாலாப் பொடியை இதனுடன் சேர்க்கவும்.
    5. இறுதிக் கட்டம்: தண்ணீர் முற்றிலும் வற்றி, மசாலா சிக்கனுடன் கெட்டியாக ஒட்டிக்கொண்டு ரோஸ்ட் பதம் வரும் வரை மிதமான தீயில் கிளறவும். இறுதியாகக் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கினால், மணக்க மணக்கச் செட்டிநாடு மிளகு சிக்கன் ரோஸ்ட் தயார்!

    கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி!

  • மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

    பிரியாணி அனைவருக்கும் பிடித்த உணவு. நறுமணத்திற்காகவே பலர் கூடுதலாக ஒரு ஸ்பூன் பிரியாணி சாப்பிடுகிறார்கள். அவ்வளவு சுவையான பிரியாணி.

    பிரியாணியில் பல வகைகள் உண்டு. சிக்கன் பிரியாணி, காளான் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி என பல வகைகள் உள்ளன. பிரியாணியில் பல வகைகள் இருந்தாலும், மட்டன் பிரியாணியின் சுவைக்கு இணையான பிரியாணி வேறில்லை.

    மதிய உணவிற்கு சுவையான மட்டன் பிரியாணி செய்வது எப்படி? இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

    பிரியாணி மசாலா பொருட்கள்

    நட்சத்திர சோம்பு (அன்னாசி பூ) – ஒன்று

    ஜாதிபத்திரி – 1

    இலவங்கப்பட்டை – 1

    ஏலக்காய் – 3

    கிராம்பு – 4

    சீரகம் – 1 டீஸ்பூன்

    சோம்பு – 1/2 டீஸ்பூன்

    மிளகு – 1/2 டீஸ்பூன்

    மல்லி – 2 ஸ்பூன்

    பிரியாணி இலை – 1

    தேவையான பொருட்கள்

    எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

    நெய் – 2 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் – 3

    கிராம்பு – 3

    பிரியாணி இலை – 1

    பெரிய வெங்காயம் – 2 (நைசாக நாறுகிறது)

    உப்பு – தேவையான அளவு

    பச்சை மிளகாய் – 5 (நேர் வாக்கில் கீறியது)

    இஞ்சி பூண்டி விழுது – 2 ஸ்பூன்

    மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் – 1 அல்லது 2 ஸ்பூன்

    மல்லி இலை – ஒரு கைப்பிடியளவு

    புதினா இலை – ஒரு கைப்பிடியளவு

    தக்காளி – 2 (பொடிதாக நறுக்கின)

    கட்டி தயிர் – 1/2 கப்

    பாஸ்மதி அரிசி – 500 கிராம்

    ஆட்டுக்கறி – 500 கிராம்

    செய்முறை

    கேஸ் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் பிரியாணி மசாலா செய்வதற்கு மேல் முதலாவதாக கூறப்பட்டுள்ள பொருட்களான நட்சத்திர சோம்பு, ஜாதிபத்திரி, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம், சோம்பு, மிளகு, மல்லி மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின் மிக்ஸியில் இந்த பொருட்களை நைசாக அரைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் பிரியாணி மசாலா தயார்.

    இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அவற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் சூடேறியதும் ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக வந்த பிறகு இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 5 பச்சமிளகாய், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், அரைத்த பிரியாணி மசாலா 1 1/2 ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

    மசாலா நன்கு வதங்கிய பின் ஒரு கையளவு மல்லி இலை, ஒரு கையளவு புதினா ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள்.

    பிறகு பொடிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும், தக்காளி நன்கு வதங்கியதும், 1/2 கப் தயிர் சேர்த்து கிளறிவிடுங்கள்.

    அடுத்ததாக 500 கிராம் ஆட்டுக்கறி சேர்த்து வதக்க வேண்டும். பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 4 விசில் வரும் வரைக்கும் வேக வைக்கவேண்டும்.

    நான்கு விசில் வந்த பிறகு பிரஷர் அடங்கியது குக்கரை தின்றது 500 கிராம் பாஸ்மதி அரிசி, ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பி தேவையான அளவு சேர்த்து கிளறி விடுங்கள். பின் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரைக்கு வேக வைக்க வேண்டும். ஒரு விசில் வந்த பிறகு அடுப்பை ஆப் செய்து விடுங்கள்.

    பின் குக்கரை 15 நிமிடங்கள் கழித்து குக்கரை திறக்க வேண்டும். அவ்வளவு தாங்க சுவையான மற்றும் உதிரி உதிரியான மட்டன் பிரியாணி தயார். உங்கள் வீட்டில் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

  • விரும்பி சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு சில்லி சிக்கன் செய்வது எப்படி?

    சில்லி சிக்கன் என்பது இந்தோ-சீன உணவாகும், இது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இவைகளை ஃப்ரைடு ரைஸ் மற்றும் பிரியாணியுடன் அடிக்கடி சாப்பிடுவார்கள். இது ஒரு கூட்டத்தை எளிமையாக ரசித்து சாப்பிட வைக்கிறது.

    உண்மையில், பல துரித உணவு உணவகங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சில்லி சிக்கன் என்று சொன்னால் அது மிகையாகாது. சில்லி சிக்கன் பிரியர்கள் பொதுவாக துரித உணவு உணவகங்களில் ஆர்டர் செய்வார்கள்.

    ஆனால் இதை நாம் வீட்டிலேயே சுகாதாரமான முறையில் எளிதாக செய்யலாம். சில்லி சிக்கன் பெரும்பாலான குழந்தைகளின் விருப்பமான உணவாகும். எனவே இதை வீட்டிலேயே சுகாதாரமாக செய்து குழந்தைகளுக்கு பயமின்றி கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    500 கிராம் போன்லெஸ் சிக்கன்

    1 முட்டை

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    2 பச்சை மிளகாய்

    6 பூண்டு பல்

    2 துண்டு இஞ்சி

    4 மேஜைக்கரண்டி சோள மாவு

    4 மேஜைக்கரண்டி மைதா மாவு

    2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்

    1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

    1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்

    ¼ மேஜைக்கரண்டி மிளகு தூள்

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு வெங்காய தாள்

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை:

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து அதை கழுவி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து நாம் கழுவி வைத்திருக்கும் சிக்கனை ஒரு bowl ல் போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற விடவும்.

    கோழி கறியே தண்ணீர் விடும் என்பதால் அதில் நாம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

    பின்பு ஒரு bowl ல் முட்டையை உடைத்து ஊற்றி அதில் 3 மேஜைக்கரண்டி அளவு சோள மாவு, ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் மைதா மாவை போட்டு தேவையான அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு அடித்து மாவை கெட்டியான பதத்திற்கு கொண்டு வரவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கோழி கறியை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்ட பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் மாவில் நன்கு முக்கி எண்ணெய்யில் போடவும்.

    பின்பு அது ஒரு புறம் வெந்ததும் அதை ஒரு கரண்டியின் மூலம் மறு புறம் திருப்பி விட்டு அது பொன் நிறம் ஆனதும் கரண்டியில் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமிருக்கும் சிக்கன் துண்டுகளையும் பொரித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

    பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் ஒரு சிட்டிகை அளவு உப்பை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் பெப்பர் தூளைப் போட்டு அதை நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மற்றும் சில்லி சாஸை ஊற்றி அதை நன்கு கிளறி விடவும்.

    பின்னர் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் பொரித்தெடுத்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து அது நன்கு மசாலாவுடன் சேருமாறு அதை கிண்டி விட்டு சிறிது நேரம் வேக விடவும்.

    பின்பு அதை இறக்குவதற்கு முன் அதில் சிறிதளவு வெங்காய தாள் மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சில்லி சிக்கன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • இறால், காய்கறி பிரியாணி (prawn vegetable fried rice)

    தேவையான பொருள்கள்

    இறால்                       – 1/4கிலோ

    பட்டாணி                   – 1/4கிலோ

    காரட்                       – 50கிராம்

    பீன்ஸ்காய்                 – 100கிராம்

    பெல்லாரி வெங்காயம்      – 1/4கிலோ

    தக்காளிப்பழம்             – 2

    எலும்மிச்சம்பழம்          – 1

    உப்புத்தூள்                – தேவையான அளவு

    வற்றல் தூள்               – தேவையான அளவு

    பச்சை மிளகாய்            – 10

    பிரியாணி அரிசி            – 1/2 கி்லோ

    நெய்                       – 100 மிலி

    இஞ்சி                     – 2 அங்குலத்துண்டு

    பூண்டு                      – 1

    பட்டை                     – 2 துண்டு

    கிராம்பு                     – 3

    மல்லி                      – தேவையான அளவு

    புதினா இலை               – தேவையான அளவு

    ஏலம்                      – 3

    செய்முறை

    முதலில் ராலை உரித்து சுத்தம் செய்து தேவையான வற்றல் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து சிறிது நெய்யில் சிவக்க பொரித்து வைத்துக் கொள்ளவும். அதே போல் காய்கறிகளையும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

    அரிசியை லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ளவும். அரிசியின் அளவில் ழூன்று பங்கு தண்ணீர் வைத்து கொதித்ததும் அரிசியைப் போட்டு பாதி வெந்ததும்  (நெற்று  பதத்தில்) வடித்து விடவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி வாசனை சாமான்களைப் போட்டு நறுக்கிய வெங்காயம் கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, அரைத்து  வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு கல‌ந்து நன்றாகக் கிளறி எலும்மிச்சம்பழம் பிழிந்து மல்லி புதினா, இலை தூவி தகுந்த உப்புத்தூள் சேர்த்து தம்மில் போடவும். கீழே சிறு தணல் போதும்.

    முட்டை, கொத்துக்கறி இத்துடன் சேர்க்கப்பிரியப்பட்டால், முட்டையை வெங்காயத்துடன் உதிரியாக கிளறி, கொத்துக்கறியையும் தனியாக காரம், உப்புடன் சேர்த்து வேக வைத்து கடைசியில் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.