பிரியாணி அனைவருக்கும் பிடித்த உணவு. நறுமணத்திற்காகவே பலர் கூடுதலாக ஒரு ஸ்பூன் பிரியாணி சாப்பிடுகிறார்கள். அவ்வளவு சுவையான பிரியாணி.
பிரியாணியில் பல வகைகள் உண்டு. சிக்கன் பிரியாணி, காளான் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி என பல வகைகள் உள்ளன. பிரியாணியில் பல வகைகள் இருந்தாலும், மட்டன் பிரியாணியின் சுவைக்கு இணையான பிரியாணி வேறில்லை.
மதிய உணவிற்கு சுவையான மட்டன் பிரியாணி செய்வது எப்படி? இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
பிரியாணி மசாலா பொருட்கள்
நட்சத்திர சோம்பு (அன்னாசி பூ) – ஒன்று
ஜாதிபத்திரி – 1
இலவங்கப்பட்டை – 1
ஏலக்காய் – 3
கிராம்பு – 4
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
மல்லி – 2 ஸ்பூன்
பிரியாணி இலை – 1
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
பிரியாணி இலை – 1
பெரிய வெங்காயம் – 2 (நைசாக நாறுகிறது)
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 5 (நேர் வாக்கில் கீறியது)
இஞ்சி பூண்டி விழுது – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 அல்லது 2 ஸ்பூன்
மல்லி இலை – ஒரு கைப்பிடியளவு
புதினா இலை – ஒரு கைப்பிடியளவு
தக்காளி – 2 (பொடிதாக நறுக்கின)
கட்டி தயிர் – 1/2 கப்
பாஸ்மதி அரிசி – 500 கிராம்
ஆட்டுக்கறி – 500 கிராம்
செய்முறை
கேஸ் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் பிரியாணி மசாலா செய்வதற்கு மேல் முதலாவதாக கூறப்பட்டுள்ள பொருட்களான நட்சத்திர சோம்பு, ஜாதிபத்திரி, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம், சோம்பு, மிளகு, மல்லி மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் மிக்ஸியில் இந்த பொருட்களை நைசாக அரைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் பிரியாணி மசாலா தயார்.
இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அவற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் சூடேறியதும் ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வந்த பிறகு இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 5 பச்சமிளகாய், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், அரைத்த பிரியாணி மசாலா 1 1/2 ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
மசாலா நன்கு வதங்கிய பின் ஒரு கையளவு மல்லி இலை, ஒரு கையளவு புதினா ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள்.
பிறகு பொடிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும், தக்காளி நன்கு வதங்கியதும், 1/2 கப் தயிர் சேர்த்து கிளறிவிடுங்கள்.
அடுத்ததாக 500 கிராம் ஆட்டுக்கறி சேர்த்து வதக்க வேண்டும். பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 4 விசில் வரும் வரைக்கும் வேக வைக்கவேண்டும்.
நான்கு விசில் வந்த பிறகு பிரஷர் அடங்கியது குக்கரை தின்றது 500 கிராம் பாஸ்மதி அரிசி, ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பி தேவையான அளவு சேர்த்து கிளறி விடுங்கள். பின் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரைக்கு வேக வைக்க வேண்டும். ஒரு விசில் வந்த பிறகு அடுப்பை ஆப் செய்து விடுங்கள்.
பின் குக்கரை 15 நிமிடங்கள் கழித்து குக்கரை திறக்க வேண்டும். அவ்வளவு தாங்க சுவையான மற்றும் உதிரி உதிரியான மட்டன் பிரியாணி தயார். உங்கள் வீட்டில் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.
