குழந்தைகளுக்கான மாலை நேர ஸ்னாக்ஸ் ரவை பணியாரம் செய்வது எப்படி!!

ரவை பணியாரம் செய்வது எப்படி!!

Written by

in

ரவை பணியாரம் குழந்தைகளுக்கு மாலையில் கொடுக்கக்கூடிய ஒரு அவசர சிற்றுண்டி. இதைச் செய்ய அதிக நேரம் எடுக்காது. உடனே ரவை பணியாரம் செய்து அசத்துங்க!!

தேவையான பொருள்கள் :

ரவை – 1 கப்

மைதா – 1 கப்

சீனி – 1 கப்

தேங்க்காய் – 1/2 மூடி

ஏலக்காய் – 5

முந்திரிபருப்பு – 1மேஜைக்கரண்டி

செய்முறை :

ரவை  மைதா இரண்டையும் தேங்காய்பால் விட்டு கட்டியாக கரைத்து, ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஊறி  பின், பிறகு மிக்ஸியில் அரைத்து, சீனியை சேர்த்து இட்லி மாவு போல் கலந்து கொள்ளவும்.

ஏலப்பொடி, சிறியதாக வெட்டிய முந்திரி பருப்பு சேர்த்து கொள்ளவும். சிறு தீயில் வாணலியில் எண்ணெய் காய வைத்து ஒரு உருண்டை கரண்டியினால் மாவை ஊற்ற வேண்டும்.

பணியாரம் எழும்பியவுடன் திருப்பி போட்டு வெந்தது பார்த்து, ஓரம் சிவந்து வந்தவுடன் எடுத்தால் ரவை பணியாரம் ரெடி.

குறிப்பு:
தேங்காய்பாலுக்கு பதில் பூவும் துருவி போடலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *