வீடே மணக்கும் நெய் சாதம்.. அற்புதமாக செய்யுங்கள்..!!

Written by

in

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. தினமும் சாம்பார், காரக்குழம்பு என்று சமைக்காமல் ஒரு நாள் மாறாக நெய் சாதம் செய்து பாருங்கள். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. நெய் சாதம் செய்வது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

சீரகம் – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

பட்டை -2

கிராம்பு – 2

நெய் – 2 அல்லது 3 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி, புதினா – சிறிதளவு

ப மிளகாய் – தேவையென்றால் சேர்க்கவும்

செய்முறை:

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தில் 2 கப் அரிசி சேர்த்து சாதமாக வடித்து ஒரு பௌலில் சாதத்தை கொட்டி ஆற விட வேண்டும். அப்படி செய்தால் சாதம் உதிரி உதிரியாக கிடைக்கும்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் நெய் 2 அல்லது 3 ஸ்பூன் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.

பிறகு அதில் வாசனைக்காக பட்டை, கிராம்பு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து வறுத்து கொள்ளவும்.

பொன்னிறமாக வறுத்த பிறகு வடித்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து பத்து நிமிடம் கிளற வேண்டும்.

கடைசியில் கொத்தமல்லியை தூவி இறக்கினால் சுவையான நெய் சோறு தயார். இப்போ சுடசுட நெய் சாதத்தை பறிமாறி அசத்துங்க.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *