இட்லி மற்றும் சாதத்திற்கு பருப்பு பொடி செய்வது எப்படி?

Written by

in

பருப்பு பொடியை நெய்யில் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் கையில் ஒட்டியிருக்கும் ஒரு பருக்கை கூட விட மாட்டோம். இது மிகவும் சுவையாக இருக்கும். அந்த சுவையை நீங்களே அனுபவிக்க இன்றே முயற்சி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு – 1 கப்

பாசி பருப்பு – 1 கப்

உடைத்த கடலை – 1 கப்

காய்ந்த மிளகாய் – 5

சீரகம் – 2 tsp

பெருங்காயக் கட்டி – 1 சிறிதளவு

கறிவேப்பிலை – 2 ஸ்பிரிங்

எண்ணெய் – 1 tsp

பூண்டு – 10

கல் உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மேலே உள்ள ஒவ்வொரு பொருட்களையும் எண்ணெய் இல்லாமல் பொன்னிறமாக வறுக்கவும்.

பூண்டை மட்டும் எண்ணெயில் வதக்கவும்.

பின் அனைத்தையும் ஆற வைத்து சூடு இல்லாமல் மிக்ஸியில் போட்டு கல் உப்பு சேர்த்து அரைக்கவும்.

நன்கு பொடியாக அரைக்கவும் இல்லை என்றால் குருணை போன்று இருக்கும்.

இதையும் செய்யலாம்!: இட்லி, தோசைக்கு சுவையான பூண்டு பொடி

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *