காளான்கள் அனைவருக்கும் பிடித்த உணவாக காணப்படுகின்றன. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டி இது. இப்போது பட்டர் பூண்டு காளான் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
படித்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி இப்போது வெண்ணெய் பூண்டு காளான் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
காளான் – 1 கப் (100 கிராம்)
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
துருவிய பூண்டு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உலர்ந்த மூலிகைகள் (ஓரிகானா அல்லது தைம்) – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் காளானை வெந்நீரில் போட்டு எடுக்கவும்.
பின்னர் மெல்லிய துண்டுகளாக வெட்டவும்.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் வதங்கியதும் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பின்னர் காளான் சேர்த்து ஒரு நிமிடம் சமைக்கவும்.
காளானில் தண்ணீர் வரும் என்பதால் தண்ணீர் வற்றும் வரை சமைக்கவும்.
பிறகு மிளகு தூள் மற்றும் மூலிகைகள் சேர்த்து ஒரு முறை கிளறவும்.
கடைசியில் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால் சுவையான பட்டர் பூண்டு மஷ்ரூம் ரெடி!
இதையும் செய்யலாமே!: செட்டிநாடு காளான் பிரியாணி
