மங்களூர் முறையில் வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி!!

Written by

in

வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த காய்கறி. அப்படிப்பட்ட வெண்டைக்காயைக் கொண்டு மங்களூர் ஸ்டைல் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா?

இது சற்று வித்தியாசமான செய்முறையைக் கொண்டுள்ளது. ஆனால் அது அற்புதமான சுவை குறிப்பாக இந்த சாம்பார் சற்று இனிப்பு சுவை கொண்டது.

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் – 10 (சற்று நீள நீளமாக வெட்டவும்)

துவரம் பருப்பு – 1 கப்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)

புளி – 1 நெல்லிக்காய் அளவு

வெல்லம் – 2 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

தேங்காய் எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன் * சீரகம் – 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும்.

பின் துவரம் பருப்பை நன்கு கழுவி குக்கரில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு வேக விடவும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை போட்டு பிசுபிசுப்பு மறையும் வரை வதக்கி, வெங்காயம் ஓரளவு சுருங்கும் வரை வதக்கவும்.

பிறகு புளி சாறு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், வறுத்த வெங்காயம் ஆகியவற்றை ஒரு கடாயில் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடவும்.

வெண்டைக்காய் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பு, உப்பு, வெல்லம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறு தீயில் கொதிக்கவிடவும்.

அடுத்து, மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய கடாயை வைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, மற்றொரு அடுப்பில் கொதிக்கும் சாம்பாரில் ஊற்றி இறக்கினால், சுவையான மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் தயாராக உள்ளது.

இதையும் செய்யலாமே!: கருணை கிழங்கு புளிக் குழம்பு

Comments

One response to “மங்களூர் முறையில் வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி!!”

  1. […] அளவு: பருப்பு அதிகமாகிவிட்டால் சாம்பார் கெட்டியாகிவிடும்; எனவே சாம்பார் நீர்த்த பதத்தில் […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *