Category: Egg

  • செட்டிநாடு முட்டை மசாலா – வீட்டிலேயே செய்வது எப்படி?

    வழக்கமாக நாம் முட்டைக் குழம்பு அல்லது ஆம்லெட் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், வார இறுதி நாட்களில் அல்லது விருந்தினர்கள் வரும்போது சற்று வித்தியாசமாகவும், அதே சமயம் மிகவும் சுவையாகவும் ஏதாவது செய்ய விரும்பினால், இந்த செட்டிநாடு ஸ்டைல் முட்டை மசாலா ஒரு மிகச்சிறந்த தேர்வாகும்.

    காரசாரமான செட்டிநாடு மசாலாக்கள், தேங்காய் மற்றும் முட்டை ஆகியவை சேரும்போது கிடைக்கும் சுவை அலாதியானது. இந்த மசாலாவில் வேகவைத்த முட்டைகளைச் சேர்த்துப் பிரட்டி எடுக்கும்போது, முட்டையின் ஒவ்வொரு பகுதியிலும் மசாலாக்கள் ஒட்டிக்கொண்டு, சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். சூடான சாதம், சப்பாத்தி, பரோட்டா அல்லது கீ ரைஸ் (Ghee Rice) உடன் பரிமாறினால், தட்டைத் தூக்கி வைத்துச் சாப்பிடுவார்கள். வாருங்கள், இதன் செய்முறையைப் பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    • முட்டை – 4 (வேகவைத்து, பாதியாக நறுக்கியது – உங்கள் தேவைக்கேற்ப)
    • சின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது – செட்டிநாடு சுவைக்குச் சின்ன வெங்காயம் சிறந்தது)
    • தக்காளி – 2 (நடுத்தர அளவு, பொடியாக நறுக்கியது)
    • இஞ்சி பூண்டு விழுது – 1.5 தேக்கரண்டி
    • பச்சை மிளகாய் – 2 (கீறியது)
    • கறிவேப்பிலை – ஒரு கொத்து
    • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
    • மிளகாய்த் தூள் – 1.5 தேக்கரண்டி (உங்கள் காரத்திற்கு ஏற்ப)
    • மல்லித்தூள் (தனியா தூள்) – 2 தேக்கரண்டி
    • கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
    • உப்பு – தேவையான அளவு
    • நல்லெண்ணெய் – 3 மேசைக் கரண்டி (செட்டிநாடு உணவுகளுக்கு நல்லெண்ணெய் கூடுதல் சுவை தரும்)
    • கொத்தமல்லி தழை – சிறிதளவு

    வறுத்து அரைக்க:

    • தேங்காய் துருவல் – 4 மேசைக் கரண்டி
    • சோம்பு (பெரிய சீரகம்) – 1 தேக்கரண்டி
    • மிளகு – 1 தேக்கரண்டி
    • சீரகம் – அரை தேக்கரண்டி
    • காய்ந்த மிளகாய் – 2

    செய்முறை விளக்கம்

    1. மசாலா பொடி தயார் செய்தல்: முதலில் அடுப்பில் ஒரு சிறிய கடாயை வைத்து, வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் (தேங்காய், சோம்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்) லேசாகச் சிவக்க வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து மைய விழுது போல (Fine Paste) அரைத்து வைத்துக் கொள்ளவும்.
    2. தாளித்தல்: அடுப்பில் அகலமான கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்க்கவும். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, அது பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
    3. மசாலா சேர்ப்பு: வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன்பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து, தக்காளி நன்கு குழைந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
    4. பொடிகள் சேர்ப்பு: இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மசாலா கருகாமல் இருக்கக் கவனமாக இருக்க வேண்டும்.
    5. தேங்காய் விழுது மற்றும் முட்டை சேர்ப்பு: நாம் ஏற்கனவே வறுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். மசாலா கொதித்துத் திக்கான பதம் வந்ததும், வேகவைத்து பாதியாக நறுக்கி வைத்துள்ள முட்டைத் துண்டுகளை மெதுவாக மசாலாவில் அமிழும்படி வைக்கவும். முட்டையின் மேல் மசாலா படும்படி கரண்டியால் லேசாகத் திருப்பி விடவும்.
    6. இறுதிக் கட்டம்: இறுதியாகக் கரம் மசாலா தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி, அடுப்பை மிகக் குறைந்த தீயில் வைத்து 5 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும். இதனால் முட்டையின் மஞ்சள் கரு வரை மசாலாக்கள் முழுமையாக ஊறும். 5 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைத்து விடலாம்.

    மணக்க மணக்க, காரசாரமான செட்டிநாடு முட்டை மசாலா இப்போது பரிமாறத் தயார்! இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து பார்த்துவிட்டு உங்களின் கருத்துக்களைப் பகிருங்கள்.

  • கிராமத்து முறையில் முட்டை குழம்பு வைப்பது எப்படி?

    முட்டை அனைவருக்கும் பிடித்தமான உணவு. சாதம் அதிகம் சாப்பிடாதவர்கள் கூட முட்டையில் குழம்பு வைத்தால் கொஞ்சம் கூடுதலாகவே உணவு உண்பர். அந்தளவுக்கு முட்டை குழம்பு சுவையாக இருக்கும்.

    முட்டை குழம்பை ஒவ்வொருவரும் விதவிதமான ஸ்டைலில் செய்வார்கள். வேகவைத்த முட்டை உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. முட்டை குழம்பு சுவையான முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    இந்த முட்டை குழம்பை இன்றே வீட்டில் செய்து பாருங்கள்.

    தேவையான பொருட்கள்

    முட்டை – 3

    வெங்காயம் – 1 (நறுக்கியது)

    தக்காளி – 1 (நறுக்கியது)

    கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

    கரம் மசாலா – 1 டீஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

    எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

    தாளிக்க

    பட்டை – 1/2

    கறிவேப்பிலை – சிறிதளவு

    கிராம்பு – 1

    அரைக்க தேவையான பொருள்

    தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

    வரமிளகாய் – 2

    பூண்டு – 4-5 பற்கள்

    இஞ்சி – 1/2

    மல்லி – 1/2 டீஸ்பூன்

    மிளகு – 1 டீஸ்பூன்

    சீரகம் – 1 டீஸ்பூன்

    செய்முறை

    கிராமத்து ஸ்டைலில் சுவையான முட்டை குழம்பு செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டை வேக வைப்பதற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, முட்டைகளைப் போட்டு வேக வைத்து முட்டையின் மேல் இருக்கும் ஓடுகளை உடைக்க வேண்டும்.

    பிறகு முட்டையை நீளவாக்கில் இரண்டாக வெட்டி தனியாக வைக்கவும்.

    இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும். வாணலியில் மேல் அரைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் லேசாக வறுத்து எடுத்துவிட்டு, மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

    அதன் பிறகு அடுப்பில் இன்னொரு வாணலியை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதனுடன் பட்டை, கறிவேப்பிலை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.

    தாளித்த பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறத்திற்கு வதக்கவும்.

    வதக்கிய பிறகு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, 3-4 நிமிடம் வரை கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.

    பின் அதில் 1/2 -1 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் கரம் மசாலா மற்றும் வேக வைத்துள்ள முட்டைகளை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் சூப்பரான சுவையான கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு தயார்.

    இப்போது சாதத்தில் சுட சுட முட்டை குழம்பை ஊற்றி பரிமாறலாம்.

  • குடைமிளகாய் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி?

    முட்டைகள் பொதுவாக பல வழிகளில் சுவையூட்டப்படுகின்றன. அப்படியானால் இன்று இங்கு நாம் காண இருப்பது வித்தியாசமான சில்லி எக் பொடிமாஸ்.

    மிளகாய் மற்றும் முட்டையுடன் இதை மிக எளிதாக செய்யலாம். குடை மிளகாய் எக் பொடிமாஸ் எந்த உணவிற்கும் ஒரு சிறந்த சைட் டிஷ் ஆகும். இவற்றை மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவது நல்லது.

    தேவையான பொருட்கள்

    3 முட்டை

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    4 to 6 பூண்டு பல்

    ¾ மேஜைக்கரண்டி 65 மசாலா

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    செய்முறை

    குடைமிளகாய் முட்டை பொடிமாஸ்:

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், மற்றும் பூண்டை நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை குறைத்து விட்டு அதில் 65 மசாலாவை போட்டு அதை நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி பின்பு தீயை மிதமான சூட்டிற்கு மாற்றி அதை ஒரு கரண்டியின் மூலம் கிண்டி கொண்டே இருக்கவும்.

    முட்டை நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான குடை மிளகாய் முட்டை பொடிமாஸ் தயார்.

    இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • சுவையான முட்டை பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி?

     குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு முட்டை. முட்டை பொதுவாக வெவ்வேறு வழிகளில் சமைக்கப்படுகிறது. அப்படியென்றால் இன்று நாம் இங்கு காணவிருப்பது வித்தியாசமான முட்டை பெப்பர் ஃப்ரை.

    இந்த முட்டை பெப்பர் ஃப்ரையை பிரைடு ரைஸுடன் அல்லது மற்ற உணவுகளுக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம். இவை மாலை நேர சிற்றுண்டியாக எளிமையாக செய்து சாப்பிடுவதற்கு ஏற்றது.

    இந்த எக் பெப்பர் ஃப்ரையை நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சிரமம் இல்லாமல் எளிதாக செய்யலாம். உடலுக்குத் தேவையான புரதச் சத்து வழங்கும் முட்டை, மிளகாய் சேர்த்துச் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது.

    எனவே இதை நம் குழந்தைகள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்ததும் அவர்களுக்கு ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டியாக செய்யலாம். அல்லது அவர்களுக்கு மதிய உணவு செய்யுங்கள்.

    தேவையான பொருட்கள்

    3 முட்டை

    2 பெரிய வெங்காயம்

    1 தக்காளி

    3 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    1½ மேஜைக்கரண்டி மிளகு

    1 மேஜைக்கரண்டி மல்லி விதைகள்

    ½ மேஜைக்கரண்டி சோம்பு

    ½ மேஜைக்கரண்டி சீரகம்

    2 பட்டை துண்டு

    4 கிராம்பு

    1 ஏலக்காய்

    1 வரமிளகாய்

    மிளகாய் தூள்  தேவையான அளவு 

    எண்ணெய்  தேவையான அளவு 

    உப்பு  தேவையான அளவு

    சிறிதளவு கருவேப்பிலை

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் முட்டைகளை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் முட்டைகளை போட்டு அதை சுமார் 10 லிருந்து 12 நிமிடம் வரை வேக விடவும்.

    12 நிமிடத்திற்கு பிறகு முட்டைகளை வெளியே எடுத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதன் கூடை உரித்து அதை 2 துண்டுகளாக வெட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் மிளகு, சோம்பு, சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய், காஞ்ச மிளகாய், மற்றும் மல்லி விதைகளை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி சிறிது நேரம் ஆற விடவும்.
    அது நன்கு ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் நாம் வெட்டி வைத்திருக்கும் முட்டை துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு அதை நன்கு அந்த மசாலாக்கலோடு ஒட்டுமாறு கிளறி விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, கருவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை போட்டு அதை நன்கு கிளறி விட்டு பின்பு அதில் சிறிதளவு தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை கொதிக்க விடவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் செய்து வைத்திருக்கும் முட்டைகளை போட்டு அது நன்கு மசாலாக்கலோடு ஒட்டுமாறு அதை கிளறி விட்டு பின்பு அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு முட்டை பெப்பர் ஃப்ரையை சுட சுட சாதத்தில் ஊற்றி பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான முட்டை பெப்பர் ஃப்ரை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • மீதமுள்ள சாதத்தில் முட்டையை துருவி இப்படி செய்யுங்கள்.. மிக அருமையாக இருக்கும்..!!

    இன்றிரவு என்ன சமைப்பது என்று குழப்பமா? மதிய உணவு வீட்டில் மீதம் உள்ளதா? இதற்கிடையில், உங்கள் வீட்டில் முட்டை இருக்கிறதா? பிறகு முட்டையை வேகவைத்து துருவினால் அற்புதமான முட்டை புலாவ் செய்முறையை செய்யலாம்.

    இந்த முட்டை புலாவ் அலுவலகத்திலிருந்து சோர்வாக வீட்டிற்கு வருபவர்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் செய்யக்கூடியது. மேலும் இந்த புலாவ் குழந்தைகள் சாப்பிடும் அளவுக்கு சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சாதம் – 1 கப்

    எண்ணெய் – 4 டீஸ்பூன்

    வேக வைத்த முட்டை – 2

    பச்சை முட்டை – 1

    சீரகம் – 1/2 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்

    பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

    பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

    தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

    மஞ்சள் தூள் – 1-4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

    மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

    கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

    மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

    உப்பு – சுவைக்கேற்ப

    செய்முறை:

    முதலில் வேக வைத்த முட்டையை எடுத்து துருவி தனியாக வைக்கவும்.

    பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளிக்கவும்.

    அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பின் அதில் வெங்காயம் சேர்த்து தீயை குறைத்து நன்றாக வதக்கவும்.

    பிறகு பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

    அதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து, அதை நன்றாக அடிக்கவும். பிறகு அடித்து வைத்துள்ள முட்டையை சிறு தீயில் வைத்து நன்றாக கிளறவும்.

    பிறகு சாதம் சேர்த்து மிளகு தூள், கொத்தமல்லி தூவி நன்கு கிளறி இறக்கினால் சுவையான முட்டை புலாவ் ரெடி.

  • சுவையான முட்டை குருமா செய்வது எப்படி?

    முட்டை உடலுக்கு மிகவும் சத்தான உணவு. ஒரு முட்டையில் 80 கலோரிகள் உள்ளன. ஒரு நாளைக்கு ஒரு முட்டையாவது சாப்பிடுங்கள். அந்த அளவு சத்தான முட்டையை பொரியல், ஆம்லெட்டாக சாப்பிடுவோம். இன்று கொஞ்சம் வித்தியாசமாக குழம்பு செய்து சாப்பிடுவோம!!!

    தேவையான பொருட்கள்:

    முட்டை -3

    பெரிய வெங்காயம் – 1

    தக்காளி – 1

    தேங்காய் துருவல் – 1/2 மூடி

    சீரகம் மிளகுத் தூள் – 1 ஸ்பூன்

    மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

    மல்லி தூள் – 1/2 ஸ்பூன்

    கரம் மசாலா – 1/2 ஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

    எண்ணெய் – தேவையான அளவு

    சோம்பு – 1 டீஸ்பூன்

    மஞசள் தூள் – 1/4 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதனுடன் சீரகத் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

    பிறகு இட்லி தட்டில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விடவும்.

    பிறகு வேகவைத்த முட்டையை எடுத்து நான்கு துண்டுகளாக நறுக்கி தனியாக வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், சீரகம், மிளகு தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். துருவிய தேங்காய் சேர்க்கவும்.

    பின் அதில் வேகவைத்த முட்டை துண்டுகளை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். சுவையான முட்டை குருமா தயார்.

  • சூப்பரான மொறு மொறு சில்லி முட்டை போண்டா செய்வது எப்படி?

    காபி, டீ குடிக்கும் போது, பலரும் சூடான பஜ்ஜி, போண்டா சாப்பிட விரும்புவார்கள். சூரியன் இல்லாமல் மேகமூட்டமாக இருந்தால் இந்த ஆசை இன்னும் அதிகமாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

    இந்த நேரத்தில், நீங்கள் வீட்டில் முட்டைகளை வைத்திருந்தால், அவற்றைக் கொண்டு ஒரு சுவையான சிற்றுண்டி செய்யுங்கள். அது சில்லி எக் போண்டா. இந்த செய்முறையை பசியுள்ள குழந்தைகளுக்கு எப்போது வேண்டுமானாலும் பரிமாறலாம், அவர்கள் அதை விரும்புவார்கள்.

    முட்டை போண்டா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? வாங்க பார்க்கலாம்!!

    தேவையான பொருட்கள்:

    முட்டை போண்டாவிற்கு

    வேக வைத்த முட்டை – 4

    கடலை மாவு – 3/4 கப்

    அரிசி மாவு – 1/4 கப்

    பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

    மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

    கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

    உப்பு – சுவைக்கேற்ப

    தண்ணீர் – தேவையான அளவு

    எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

    முட்டை சில்லிக்கு…

    எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

    கடுகு – 1/4 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் – 3

    வரமிளகாய் – 2

    கறிவேப்பிலை – சிறிது

    இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

    வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

    மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

    சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்

    கரம் மசாலா – 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

    உப்பு – சுவைக்கேற்ப

    கொத்தமல்லி – சிறிது

    செய்முறை:

    முதலில் முட்டை போண்டாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு கலக்கவும்.

    பிறகு அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.

    எண்ணெய் சூடானதும் வேகவைத்த முட்டையை இரண்டாக வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது முட்டை போண்டா தயார்.

    பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    அடுத்து மசாலா பொடிகளை ஒவ்வொன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    மசாலாவில் இருந்து பச்சை வாசனை போனதும் முட்டை போண்டாவை சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கினால், இறுதியாக சில்லி எக் ஃபோண்டா ரெடி.

    இதையும் முயற்சிக்கலாமே!: உருளைக்கிழங்கு போண்டா செய்முறை

  • இந்தியன் ஸ்டைல் காளான் ஆம்லெட் செய்வது எப்படி?

    காளான் ஆம்லெட் மிகவும் ருசியானது, தயாரிக்க எளிதானது.  நீங்கள் அதை காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு வைத்திருக்கலாம். இது ரொட்டி, சாதத்திற்கு சேர்த்து உணவருந்தலாம்.

    காளான்கள் கால்சியத்தின் வளமான மூலமாகும், மேலும் அவை நமது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகின்றன. எனவே முடிந்தவரை அவற்றை நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. எளிதான காளான் ஆம்லெட்டை எவ்வாறு தயாரிப்பது என்பதை இன்று நாம் கற்றுக்கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை – 2

    நீர் – 2 தேக்கரண்டி

    தேவைக்கேற்ப மிளகு தூள்

    உப்பு – ஒரு சிட்டிகை

    பொத்தான் காளான்கள் – 6-8 அல்லது (100 கிராம்)

    எண்ணெய் – 3 தேக்கரண்டி

    வெங்காயம் – 1/3 கப்

    பூண்டு கிராம்பு – 3 துண்டு துண்டாக வெட்டப்பட்டது

    மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி

    தேவைக்கேற்ப உப்பு

    உலர்ந்த வெந்தயம் இலைகள் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)

    செய்முறை:

    காளான்களை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்க்கவும். வெங்காயம் வெளிப்படையாக (கண்ணாடி பதமாக) மாறும் வரை வதக்கவும்.

    வெட்டப்பட்ட காளான்களுடன், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.

    காளான்கள் நிறைய தண்ணீரை வெளியேற்றும், அனைத்து நீரும் ஆவியாகி, கலவை வறண்டு போகும் வரை மிதமான வெப்பத்தில் சமைக்கவும்.

    தேவையான உப்பு மற்றும் உலர்ந்த வெந்தயம் இலைகளைச் சேர்க்கவும் வெந்தயம் இல்லாமல் உங்களுக்கு விருப்பமான எந்த மூலிகையையும் நீங்கள் சேர்க்கலாம்.

    இந்தியன் ஸ்டைல் காளான் ஆம்லெட் செய்வது எப்படி?
    Indian Style Mushroom Omelet

    ஒரு பாத்திரத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊத்தவும், சிறிது உப்பு, 2 தேக்கரண்டி தண்ணீர் மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.

    நீங்கள் குமிழ்கள் கிடைக்கும் வரை ஒரு முட்கரண்டி கொண்டு அடிக்கவும். ஒரு தவாவை எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    சூடானதும், முட்டை கலவையை ஊற்றி, வெப்பத்தை குறைக்கவும்.

    ஆம்லெட் சிறிது சமைத்ததும், காளான் கலவையை ஆம்லெட் முழுவதும் பரப்பி சிறிது அழுத்தவும். சில விநாடிகள் சமைக்கவும்.

    நீங்கள் விரும்பினால், நீங்கள் அதை மறுபுறம் புரட்டலாம் அல்லது அதை மடித்து இன்னும் சில விநாடிகள் சமைக்கலாம்.

    ஆம்லெட்டை ஒரு தட்டில் எடுத்து, ரொட்டி அல்லது சாதத்துடன் சூடாக பரிமாறவும்.

    சுவையான சத்தான காளான்  ஆம்லெட் ரெடி.

  • இனி முட்டை பொடிமாஸ் இப்படி செய்து அசத்துங்க!!

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை வைத்து செய்யும் அனைத்து உணவுக்களையுமே விரும்பி சாப்பிடுவது உண்டுலந்த வகையில் அனைவரும் ருசித்து சாப்பிடும் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

    தேவையானவை:

    பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது

    பச்சை மிளகாய் – 1 நறுக்கியது

    எண்ணெய் – தேவைக்கேற்ப

    தக்காளி – 1 நறுக்கியது

    மிளகு தூள் – 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

    கார மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

    கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்

    உப்பு – தேவைக்கேற்ப

    முட்டை – 3

    கொத்தமல்லி – சிறிதளவு

    செய்முறை:

    முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து, சிறிது உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும்.

    பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்கவும், பிறகு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

    பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.

    பின் அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு கிளறி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    முட்டை நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் ரெடி.