Category: Fast Food

  • நவரத்ன புலாவ் செய்வது எப்படி?

    பிரியாணியில் பல வகைகள் உண்டு. ஆனால் புலாவ்களில் பல வகைகள் உண்டு என்கிறார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மை. இன்று நாம் காண இருக்கும் புலாவ்களில் ஒன்றான, ஒரு சிறப்பு மற்றும் வித்தியாசமான நவரத்ன புலாவ் உள்ளது.

    உங்கள் அறிவுப் பசியையும் திருப்திப்படுத்த சில சுவாரஸ்யமான நவரத்னா புலாவ் வரலாற்றுக் குறிப்புகள் கீழே உள்ளன.

    நவரத்ன புலாவ் மிகவும் சிறப்பான மற்றும் ரிச்சான உணவு. பண்டிகைக் காலங்களில் அல்லது மங்களகரமான நாட்களில் நாம் செய்யும் உணவுகளுக்கு இது ஒரு அற்புதமான மாற்றாகும்.

    வரும் பண்டிகை நாளில் இந்த நவரத்ன புலாவ்வை முயற்சி செய்து உங்கள் விருந்தினர்களை ஆச்சரியப்படுத்துங்கள். கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்

    1 cup பாசுமதி அரிசி

    200 gms பன்னீர்

    1 கை பச்சை பட்டாணி

    15 பீன்ஸ்

    4 கேரட்

    1/4 காலிபிளவர்

    1 உருளைக்கிழங்கு

    1/2 வெங்காயம்

    15 முந்திரிப் பருப்பு

    பாதாம் பருப்பு  15

    10 உலர் திராட்சை

    குங்குமப்பூ பால் 10 tsp

    1 tsp ஷாஹி ஜீரா

    மிளகு 1 tsp

    1/2 tsp எலுமிச்சை சாறு

    2 பிரியாணி இலை

    3 ஏலக்காய்

    2 இலவங்கப்பட்டை

    7 கிராம்பு

    1 நட்சத்திர சோம்பு

    தேவையான அளவு உப்பு

    நெய்  தேவையான அளவு

    எண்ணெய்  தேவையான அளவு

    தண்ணீர்  தேவையான அளவு

    செய்முறை

    முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    அடுத்து பீன்ஸ், கேரட், காலிபிளவர், உருளைக்கிழங்கு, வெங்காயம், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, மற்றும் பன்னீரை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து, மற்றும் எலும்பிச்சம்பழத்தைப் பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

    பின்பு சுமார் பத்து மேஜைக்கரண்டி அளவு பாலில் குங்குமப்பூவை போட்டு அதை சுடவைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நன்கு பொன் நிறமாகும் வரை அதை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்க்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் கவனமாக நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அது அரிசியை போடவும்.

    பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து அதை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

    நெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பை போட்டு அது நன்கு பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.

    அவை பொன்னிறமானதும் அதில் உலர் திராட்சையை சேர்த்து சுமார் அரை நிமிடம் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    பின்பு pan னில் சற்று நெய்யை சேர்த்து அதில் நம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக வைத்து வறுக்கவும். பன்னீர் துண்டுகளை சீரான இடைவெளியில் திருப்பி போட்டு எல்லா பக்கமும் நன்கு வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து pan னில் மீண்டும் சற்று நெய்யை சேர்த்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்க்குப் பிறகு அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விட்டு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பின்பு pan னில் மீண்டும் சற்று நெய்யை சேர்த்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிபிளவர், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.

    ஐந்து நிமிடத்திற்க்குப் பிறகு மூடியை திறந்து அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விட்டு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ரெண்டு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

    நெய் சுட்டதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, மிளகு, மற்றும் ஷாஹி ஜீராவை சேர்த்து அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.

    அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து அதை நன்கு பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் கிளறி விடவும்.

    பின்பு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் காய்கறிகள் மற்றும் வறுத்து எடுத்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து அதை நன்கு பக்குவமாக கிளறி விடவும். (உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள்).

    அடுத்து இதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் குங்குமப்பூ பாலை சேர்த்து அதை நன்கு பக்குவமாக கிளறி விடவும்.
    பின்பு அதில் நாம் வறுத்தெடுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு பாதாம் பருப்பு மற்றும் திராட்சையை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    இப்பொழுது நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் வெங்காயத்தை இதன் மேலே தூவி ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை அதை வேக விடவும்.

    ஐந்து நிமிடத்திற்க்குப் பிறகு மூடியை திறந்து நவரத்ன புலாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

  • மலேசியன் ஸ்டைல் பிரைட் ரைஸ் செய்வது எப்படி?

    ஃபிரைடு ரைஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு. குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு இவை பிடித்தமான உணவுகள் என்றால் மிகையாகாது.

    ஆரம்ப காலத்தில் ஃபிரைடு ரைஸ் ஓரிரு முறைகளில் செய்யப்பட்டாலும், காலப்போக்கில் பல சமையல் வகைகள் உருவாகி வருகின்றன. இன்று நாம் பார்ப்பது மிகவும் சுவையான மலேசியன் ஃப்ரைட் ரைஸ்.

    இப்போது நாக்கில் எச்சில் உருகிறதா?. உங்கள் சுவை மொட்டுகளை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் பசி வேதனையையும் திருப்திப்படுத்தும் ஒரு சுவாரஸ்யமான ஃபிரைடு ரைஸ் குறிப்புகளை நாங்கள் கீழே குறிப்பிட்டுள்ளோம்.

    தேவையான பொருட்கள்

    1 cup பாசுமதி அரிசி

    250 g மஸ்ரூம்

    1/2 cup பச்சை குடைமிளகாய்

    1/2 cup மஞ்சள் குடை மிளகாய்

    1/2 cup சிவப்பு குடைமிளகாய்

    1/2 cup வேகவைத்த சோளம்

    1/2 cup வேகவைத்த பச்சை பட்டாணி

    8 பூண்டு பல்

    8 சிவப்பு மிளகாய்

    a small piece இஞ்சி

    3 tsp துருவிய தேங்காய்

    2 tsp எள் எண்ணெய்

    2 tsp சோயா சாஸ்

    1 tsp வினிகர்

    1 tsp பெப்பர்

    1 tsp உப்பு

    1/2 tsp சர்க்கரை

    தேவையான அளவு ஸ்ப்ரிங் ஆனியன்

    தேவையான அளவு தண்ணீர்

    செய்முறை

    ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    இப்பொழுது மஸ்ரூம், குடமிளகாய்கள், இஞ்சி, பூண்டு, மற்றும் ஸ்ப்ரிங் ஆனியனை நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு, துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் ஊற வைத்திருக்கும் சிவப்பு மிளகாய்யை மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட் ஆக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். பின்பு அதில் உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை நன்கு வடிகட்டி அதில் போட்டு 15 இல் இருந்து இருபது நிமிடம் வரை அதை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு pan ஐ எடுத்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எள் எண்ணெய் சேர்க்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பேஸ்ட்டை போட்டு அதனின் பச்சை வாசம் போய் எண்ணெய் நன்கு பிரிந்து வரும் வரை வதக்கவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மஸ்ரூம் மற்றும் குடை மிளகாய்களை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    அடுத்து அதில் உப்பு மற்றும் பெப்பரை சேர்த்து சுமார் ஆறிலிருந்து ஏழு நிமிடம் வரை வேக வைக்கவும்.

    ஆறு நிமிடம் கழித்து நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் சோளம் மற்றும் பச்சை பட்டாணியை அதில் சேர்த்து சுமார் ஐந்து நிமிடம் வரை வேக வைக்கவும்.

    ஐந்து நிமிடம் கழித்து அதில் சோயா சாஸ், வினிகர், மற்றும் சர்க்கரையை சேர்த்து சுமார் ஒன்றிலிருந்து இரண்டு நிமிடம் வரை அதை வதக்கவும்.

    இப்பொழுது அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்து பூ போல் சாதம் உடையாதவாறு கிளறவும்.

    அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங்காணியனை போட்டு நன்கு கிளறவும். அவ்வளவுதான் உங்கள் சூடான மற்றும் சுவையான மலேசியன் பிரைட் ரைஸ் ரெடி.

  • மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?

    ஃப்ரைட் ரைஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஃப்ரைட் ரைஸ் விரும்பி சாப்பிடுவார்கள்.

    ஃப்ரைட் ரைஸ்ல் பல வகைகள் உள்ளன. அவற்றில் சிக்கன் ப்ரைடு ரைஸ், இறால் பிரைடு ரைஸ், எக் ப்ரைடு ரைஸ், வெஜிடபிள் ப்ரைடு ரைஸ், பன்னீர் ப்ரைடு ரைஸ், காளான் பிரைடு ரைஸ் போன்றவை மிகவும் பிரபலம். இன்று இங்கு நாம் காண இருப்பது காளான் ஃப்ரைட் ரைஸ்.

    காளான் பிரைடு ரைஸின் சிறப்பு என்னவென்றால், மற்ற பிரைடு ரைஸை விட இதை செய்வது சற்று எளிதாக இருக்கும். காளான்கள் சமைக்க மிகவும் எளிதானது, எனவே நீங்கள் அதை குறைந்த நேரத்தில் செய்யலாம்.

    மேலும் இவை குழந்தைகள் பள்ளி அல்லது அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்ல சிறந்த மதிய உணவு ரெசிபிகள்.

    தேவையான பொருட்கள்

    1 கப் பாசுமதி அரிசி

    500 கிராம் மஷ்ரூம்

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    2 பச்சை மிளகாய்

    1 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு

    வினிகர் 2  மேஜைக்கரண்டி

    சோயா சாஸ் 2  மேஜைக்கரண்டி

    ஷஷான் பேஸ்ட் 2  மேஜைக்கரண்டி

    மிளகு தூள் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்

    செய்முறை

    முதலில் ஒரு கப் அளவு பாசுமதி அரிசியை எடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் வரை அதை ஊற வைக்கவும்.

    அடுத்து வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், மஷ்ரூம், பூண்டு, மற்றும் ஸ்பிரிங் ஆனியன்னை நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

    பின்பு அரை மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து அதில் இருக்கும் தண்ணீரை நன்கு வடிகட்டி வைத்து கொள்ளவும்.

    பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொதிக்க வைக்கவும்.

    பின்னர் தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்க்கவும். (அப்போது தான் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்).

    பின்பு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அதனுடன் நாம் ஊற வைத்து வடிகட்டி வைத்திருக்கும் பாசுமதி அரிசியை போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும். (சாதம் முக்கால் பாகம் வெந்தால் போதும்.)

    20 நிமிடத்திற்கு பிறகு சாதம் வெந்ததும் அதில் இருக்கும் தண்ணீரை வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விடவும். (அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால் தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.)

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நன்கு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாயை மற்றும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மஷ்ரூமை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை வேக விடவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அதில் சோயா சாஸ், வினிகர், மற்றும் ஷஷான் பேஸ்ட்டை சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 4 லிருந்து 6 நிமிடம் வரை வேக விடவும்.

    6 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் வேக வைத்து வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக சாதம் நன்கு மஷ்ரூமோடு சேருமாறு கிளறி விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியன்னை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி?

    புலாவ் பொதுவாக நம்மில் பலருக்குப் பிடித்தமான உணவு. புலாவை பல வழிகளில் செய்யலாம். எனவே இன்று நாம் இங்கு காண இருப்பது ஆந்திரா பாணி வெஜிடபிள் புலாவ் ஆகும், இது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் செய்முறையின் படி செய்யப்படுகிறது.

    பிரியாணிக்கு முன்னதாக உதயமான உணவு புலாவ் என்றால் நம்ப முடிகிறதா? எட்டாம் நூற்றாண்டில் Abbasid பேரரசின் போது உருவான ஒரு உணவாக புலாவை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

    காலப்போக்கில் இவை உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தன. இப்போதெல்லாம், புலாவ் உலகெங்கிலும் உள்ள மக்களால் அந்தந்த பிராந்தியங்களின் சமையல் பாணிக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு ருசிக்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்

    1 cup பாசுமதி அரிசி

    1 bowl காலிஃப்ளவர்

    1 bowl பீன்ஸ்

    1 bowl பச்சை பட்டாணி

    2 வெங்காயம்

    1 உருளைக்கிழங்கு

    1 தக்காளி

    1 cup கேரட்

    3 பச்சை மிளகாய்

    3 பல் பூண்டு

    15 முந்திரிப் பருப்பு

    2 ஏலக்காய்

    1 இலவங்கப்பட்டை

    4 கிராம்பு

    1 நட்சத்திர சோம்பு

    1 pcs மராத்தி மொக்கு

    1 pcs ஜாதிக்காய்

    2 pcs ஜாதிப்பத்திரி

    1 tsp கொத்தமல்லி விதைகள்

    1 tsp மிளகு

    2 pcs கல்பாசி

    1 tsp சீரகம்

    1 tsp கசகசா

    1 tsp கல் உப்பு

    1 tsp தூள் உப்பு

    2 tsp நெய்

    1 தேங்காய் துண்டு

    1 சிறு துண்டு இஞ்சி

    1 பிரியாணி இலை

    தேவையான அளவு புதினா

    தேவையான அளவு கொத்தமல்லி

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு தண்ணீர்

    செய்முறை

    வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி:

    முதலில் பாசுமதி அரிசியை எடுத்து அதை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    அடுத்து காலிஃப்ளவர், பீன்ஸ், பச்சை பட்டாணி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, கேரட், பச்சை மிளகாய், தேங்காய், புதினா, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது மிக்ஸி ஜாரை எடுத்து அதில் பூண்டு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, மராத்தி மொக்கு, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, கொத்தமல்லி விதைகள், மிளகு, கல்பாசி, சீரகம், கசகசா, நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, தேங்காய், இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் புதினாவை சேர்த்து அதை நன்கு அரைக்கவும்.

    பின்பு அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதை நன்கு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

    அது சூடானதும் அதில் பிரியாணி இலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து முந்திரி பருப்பு பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.

    முந்திரி பருப்பு பொன்னிறமானதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வெங்காயம் சற்று நிறம் மாறும்வரை அதை வறுக்கவும்.

    வெங்காயம் சற்று நிறம் மாறியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி அளவு கல்லுப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை நன்கு கிளறி விடவும்.

    3 நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து அரிசி உடைந்து விடாமல் அதை பக்குவமாக நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் சுமார் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் கலந்து விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 15 நிமிடம் வரை வேக விடவும்.

    15 நிமிடத்திற்குக்ப் பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து புலாவை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக ஒரு கிளறு கிளறி மீண்டும் மூடியை போட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.

    5 நிமிடத்திற்க்குப் பிறகு ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுடசுட பரிமாறவும்.

  • சிக்கன் சாண்ட்விச் செய்வது எப்படி?

    சாண்ட்விச் இளைய தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமானது. குறிப்பாக சிக்கன் சாண்ட்விச், கேட்க வேண்டியதில்லை. அவை பெரும்பாலும் மாலை நேர சிற்றுண்டியாக உண்ணப்படுகின்றன, ஆனால் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கும் நல்லது.

    இந்த சாண்ட்விச்கள் அமெரிக்காவில் தோன்றியதாகவும், உலகம் முழுவதும் பிரபலமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இது பொதுவாக சாண்ட்விச் கடைகள் அல்லது உணவகங்களில் உண்ணப்படுகிறது. ஆனால் வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

    இப்போது சிக்கன் சாண்ட்விச் செய்வதற்கான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை கீழே பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    200 கிராம் போன்லெஸ் சிக்கன்

    4 to 6 பிரெட் துண்டுகள்

    1/2 கப் பெரிய வெங்காயம்

    1/2 கப் பச்சை குடைமிளகாய்

    1/2 கப் சிவப்பு குடைமிளகாய்

    4 பல் பூண்டு

    வெண்ணெய் தேவையான அளவு

    மிளகு தூள் தேவையான அளவு

    1/4 கப் mayonnaise

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    கொத்தமல்லி ஒரு கை அளவு

    செய்முறை

    சிக்கன் சாண்ட்விச் செய்வது எப்படி

    முதலில் வெங்காயம் மற்றும் குடை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ளவும். பின்பு சிக்கனை எடுத்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிக்கனை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுட வைக்கவும்.

    தண்ணீர் சிறிது சூடானதும் அதில் கழுவி வைத்திருக்கும் சிக்கனை போட்டு, தேவையான அளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி மிளகுத் தூள் மற்றும் 2 பல் பூண்டு சேர்த்து ஒரு மூடி போட்டு 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    4 விசிலுக்கு பின் சிக்கனை குக்கரில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற விடவும். (சிக்கன் வெந்த தண்ணியை அப்படியே வைத்துக் கொள்ளவும்.)

    சிக்கன் சிறிது ஆறியவுடன் அதை சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.

    எண்ணெய் சுசூடானதும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சிறிதாக நறுக்கிய பூண்டை போட்டு அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மற்றும் சிவப்பு குடை மிளகாய் போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் வேக வைத்து சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் சிக்கன், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகு தூள் போட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை ஏற்றி வைத்து சிக்கன் வெந்த தண்ணியை சிறிதளவு இதில் ஊற்றி நன்கு கிளறி சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்கு பிறகு சிக்கனில் ஊற்றிய தண்ணீர் நன்கு வற்றி இருக்கும். இப்பொழுது இதை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆறவிடவும்.

    அடுத்த ஒரு கிண்ணத்தில் mayonnaise ஐ போட்டு அதில் ஆற வைத்திருக்கும் சிக்கனை மற்றும் ஒரு கை அளவு கொத்தமல்லியை போட்டு நன்கு பிரட்டிக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பிரட்டை எடுத்து அதில் இந்த சாண்ட்விச் fillings ஐ வைத்து அதன் மேலே இன்னொரு பிரட்டை வைக்கவும்.

    பின்பு இதை toast செய்வதற்கு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைகரண்டி அளவு வெண்ணெய்யை ஊற்றி வெண்ணெய் உருகியதும் இந்த சாண்ட்விச்சை அப்படியே எடுத்து அதில் வைக்கவும்.

    இப்பொழுது அதன் மேலே சிறிதளவு வெண்ணெய்யை தடவி சாண்ட்விச்சை திருப்பி போடவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு எடுத்து அதை கெட்சப் உடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சிக்கன் சாண்ட்விச் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்

  • பன்னீர் சாண்ட்விச் செய்வது எப்படி?

    இன்றைய தலைமுறையினரின் விருப்பமான உணவு சாண்ட்விச். சாண்ட்விச்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பிரபலமானவை சிக்கன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், காளான் சாண்ட்விச் மற்றும் பனீர் சாண்ட்விச்.

    இங்கு நாம் பார்ப்பது பன்னீர் சாண்ட்விச். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக் கூடிய உணவு இது. மாலையில் குழந்தைகளுக்கு இதைச் செய்தால், பள்ளியிலிருந்து வரும் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    இதைச் செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. மேலும் பன்னீர் உடலுக்கு மிகவும் நல்லது, பயமின்றி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    400 கிராம் பன்னீர்

    தேவையான அளவு பிரெட்

    1 1/2 பெரிய வெங்காயம்

    2 பச்சை மிளகாய்

    1 குடை மிளகாய்

    5 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    1/2 எலுமிச்சம் பழம்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    கரம் மசாலா 1 மேஜைக்கரண்டி

    சாட் மசாலா 1 மேஜைக்கரண்டி

    தனியா தூள் 1 மேஜைக்கரண்டி

    சீரக தூள் 1 மேஜைக்கரண்டி

    அம்ச்சூர் தூள் 1 மேஜைக்கரண்டி

    1 கை புதினா

    சிறிதளவு கொத்தமல்லி

    பட்டர் தேவையான அளவு

    சீஸ்தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    செய்முறை

    முதலில் வெங்காயம், பூண்டு, குடை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, மற்றும் பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாரை எடுத்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நாம் நறுக்கி வைத்திருக்கும் அரை வெங்காயம், கொத்தமல்லி, புதினா, ஒரு பச்சை மிளகாய், 2 பல் பூண்டு, இஞ்சி, நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 3 பல் பூண்டு மற்றும் ஒரு பச்சை மிளகாயை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை வதக்கவும்.

    8 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு உப்பு, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், கரம் மசாலா, அம்ச்சூர் தூள், சாட் மசாலா, தனியா தூள், மற்றும் சீரக தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும்.

    அடுத்து அந்த மசாலாவில் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு அதை நன்கு மசாலாவோடு ஒட்டுமாறு கிண்டி விட்டு சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும். (பன்னீரை முன்பாகவே நறுக்கி வைத்தால் அதில் தண்ணீர் விடும் அதனால் நாம் செய்யும் போது நறுக்கிப் போட்டால் நல்லது.)

    5 நிமிடத்திற்கு பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை அதன் மேலே தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

    அடுத்து 2 பிரெட் துண்டுகளை எடுத்து அதில் வெண்ணெய்யை தடவி பின்பு நாம் செய்து வைத்திருக்கும் புதினா சட்னியை அதன் மேலே தடவி விடவும்.

    பின்னர் ஒரு பிரெட்டில் பன்னீர் ஸ்டாப்பிங்கை வைத்து அதன் மேலே அவரவர் விருப்பத்திற்கேற்ப சீஸை துருவி போட்டு மற்றொரு பிரட்டை அதன் மேலே வைக்கவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு பட்டரை போட்டு அதை உருக விடவும்.

    பட்டர் உருகியதும் அதை நன்கு pan ல் தடவி விட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் சாண்ட்விச்சை வைத்து அது வெந்து கொண்டிருக்கும் போதே மேலே உள்ள பிரடடில் சிறிதளவு பட்டரை தடவி ஒரு புறம் வெந்ததும் சாண்ட்விச்சை மறு புறம் பக்குவமாக திருப்பி வைக்கவும்.

    பின்பு சிறிது நேரத்திற்குப் பிறகு அதை எடுத்து அப்படியே சுட சுட ஒரு தட்டில் வைத்து கெட்ச்சப்புடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் கிறிஸ்பியான பன்னீர் சாண்ட்விச் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • சிக்கன் ஷவர்மா செய்வது எப்படி?

    ½ கப் ஷவர்மா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இது. குறிப்பாக இளம் தலைமுறையினர் மற்றும் உணவு பிரியர்கள் மத்தியில் தனி ஈர்ப்பை பெற்றுள்ளது. ஷவர்மாவில் பல வகைகள் உள்ளன.

    அவற்றில் சிக்கன் ஷவர்மா, பீஃப் ஷவர்மா, பன்றி இறைச்சி ஷவர்மா மற்றும் வெஜிடபிள் ஷவர்மா ஆகியவை மிகவும் பிரபலமானவை. பொதுவாக மாலையில் விதவிதமான தின்பண்டங்களைச் செய்து சுவைப்போம்.

    இதில் பல தின்பண்டங்கள் நமக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். நமது வழக்கமான மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இது ஒரு சிறந்த மாற்றாகும். இதை உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறை செய்தால், அவர்கள் கண்டிப்பாக மீண்டும் மீண்டும் செய்ய விரும்புவார்கள். ஏனெனில் இது மிகவும் அற்புதமான சுவை.

    தேவையான பொருட்கள்

    500 கிராம் போன்லெஸ் சிக்கன்

    கேரட் ½ கப்

    வெள்ளரிக்காய்

    பச்சை குடை மிளகாய் ½ கப்

    lettuce ½ கப்

    1 பெரிய வெங்காயம்

    3 கப் மைதா மாவு

    1 கப் வினிகர்

    ½ கப் வெஜிடபிள் எண்ணெய்

    1 முட்டை

    25 கிராம் dry yeast

    2 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு

    ¼ மேஜைக்கரண்டி Dijon Mustard

    ½ எலுமிச்சம் பழம்

    3 மேஜைக்கரண்டி தயிர்

    1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

    2 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்

    வெள்ளை மிளகு தூள் தேவையான அளவு

    கருப்பு மிளகு தூள் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    சர்க்கரை தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    செய்முறை

    முதலில் வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட், குடை மிளகாய், lettuce, மற்றும் பூண்டை நறுக்கி எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்த பின்பு சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை பொடி பொடியாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் தண்ணீர், ஒரு கப் வினிகர், 2 மேஜைக்கரண்டி அளவு சர்க்கரை, மற்றும் 2 மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை அதை ஒரு கரண்டியின் மூலம் கிண்டி கொண்டே இருக்கவும்.

    சர்க்கரை நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், மற்றும் குடை மிளகாயை போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் வினிகர் தண்ணீரை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை ஊற விடவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும். (தண்ணீர் மிதமான அளவு சூடானதும் அடுப்பை அணைத்து விடவும்.)

    பின்னர் ஒரு bowl லை எடுத்து அதில் dry yeast டை போட்டு அதனுடன் நாம் சுட வைத்த தண்ணீரை ஊற்றி அதை சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.

    அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் மைதா மாவு கொட்டி அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சர்க்கரையை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் நாம் dry yeast டை போட்டு வைத்திருக்கும் தண்ணீரை அதில் ஊற்றி அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை நன்கு பிசையவும்.

    8 நிமிடத்திற்கு பிறகு அதை எடுத்து ஒரு மேஜையில் வைத்து அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை நன்கு இழுத்து இழுத்து பிசைந்து விடவும்.

    8 நிமிடத்திற்கு பிறகு மாவின் மீது நன்கு எண்ணெய் தடவி பாத்திரத்தை ஒரு துணியின் மூலம் மூடி அதை சுமார் 1 லிருந்து ஒன்றரை மணி நேரம் வரை ஊற விடவும்.

    ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மாவை எடுத்து அதை மீண்டும் சுமார் ஒரு நிமிடத்திற்கு நன்கு பிசைந்து அதை சுமார் 10 உருண்டைகளாக பிரித்து அதன் மீது மீண்டும் எண்ணெய்யை தடவி அதை சுமார் 30 லிருந்து 45 நிமிடம் வரை ஊற விடவும்.

    45 நிமிடத்திற்கு பிறகு ஒரு சப்பாத்தி கல்லை எடுத்து அதில் சிறிது மைதா மாவை தூவி அதில் நாம் ஊற வைத்திருக்கும் மைதா மாவு உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து அதை சப்பாத்தி கல்லில் வைத்து சப்பாத்திக்கு தேய்பதை விட சிறிது கனமாக தேய்த்து அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அது சுட்டதும் அதில் நாம் தேய்த்து வைத்திருக்கும் ரொட்டியை அதில் போட்டு அது ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போட்டு அது வெந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமுள்ள ரொட்டிகளையும் சுட்டு எடுத்து தட்டில் தயாராக வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வெஜிடபிள் எண்ணெய்யை ஊற்றி அதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதை நன்கு அரைத்து கொள்ளவும்.

    பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு, தேவையான அளவு உப்பு, கருப்பு மிளகு தூளை, ஒரு மேஜைக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு, ஒரு மேஜைக்கரண்டி வினிகர், மற்றும் Dijon கடுகை போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதில் ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு, ஒரு மேஜைக்கரண்டி வெள்ளை மிளகு தூள், ஒரு மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தயிர், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி வினிகரை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.

    ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து பக்குவமாக போட்டு அதில் இருக்கும் தண்ணீர் நன்கு வற்றும் வரை அதை வேக விடவும்.

    தண்ணீர் நன்கு வற்றியதும் அடுப்பை அணைத்து விட்டு சிக்கனை எடுத்து கீழே வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் வினிகரில் ஊற வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் lettuce மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் Mayonnaise சை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து நாம் சுட்டு வைத்திருக்கும் பிட்டா பிரட்டை எடுத்து அதில் Mayonnaise சை தடவி பின்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப Mayonnaise கலவை மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் சிக்கனை வைத்து அதை உருட்டி சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் சிக்கன் ஷவர்மா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • சிக்கன் ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?

    ஃபிரைடு ரைஸ் என்பது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான துரித உணவு வகை. ஃபிரைடு ரைஸ்ல் பல வகைகள் உள்ளன. சிக்கன் ப்ரைடு ரைஸ், எக் ப்ரைடு ரைஸ், பன்னீர் ப்ரைடு ரைஸ், காளான் பிரைடு ரைஸ், வெஜிடபிள் ப்ரைடு ரைஸ் ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. இதோ இன்று நாம் காண இருப்பது சிக்கன் ஃப்ரைடு ரைஸ்.

    சிக்கன் ஃப்ரைடு ரைஸ் என்பது இளைய தலைமுறையினரிடையே தனித்தன்மை வாய்ந்தது. பிறந்தநாள் கொண்டாட்டமாக இருந்தாலும் சரி, நண்பர்கள் மத்தியில் பார்ட்டியாக இருந்தாலும் சரி, சிக்கன் ஃப்ரைடு ரைஸ்தான் அவர்களுக்குப் பிடித்தமானவை.

    பொதுவாக, க்ரில் செய்யப்பட்ட சிக்கன், தந்தூரி சிக்கன், சில்லி சிக்கன் அல்லது சிக்கன் பட்டர் மசாலாவுடன் சிக்கன் ஃப்ரைடு ரைஸ் ஆகியவை மிகவும் பிடித்தமான கலவையாகும்.

    சிக்கன் ஃப்ரைடு ரைஸ் என்பது நம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்று. எனவே, உணவகங்கள் மற்றும் துரித உணவு விற்பனை நிலையங்களில் அவற்றை வாங்குவதற்குப் பதிலாக, அதே சுவையான உணவக பாணி சிக்கன் பிரைடு ரைஸை வீட்டிலேயே சுகாதாரமான முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    1/2 கிலோ பாசுமதி அரிசி

    1/2 கிலோ சிக்கன்

    3 முட்டை

    2 கேரட்

    6 to 8 பீன்ஸ்

    1/2 முட்டைகோஸ் சிறியது

    1 1/2 பெரிய வெங்காயம்

    1 1/2 குடை மிளகாய்

    6 பூண்டு பல்

    1 துண்டு இஞ்சி

    1 பச்சை மிளகாய்

    1/2 எலுமிச்சம் பழம்

    ஒரு கை அளவு ஸ்பிரிங் ஆனியன்

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    வெள்ளை மிளகுத் தூள்  1 மேஜைக்கரண்டி 

    சோயா சாஸ்  1 1/2 மேஜைக்கரண்டி 

    சில்லி சாஸ்  1 1/2 மேஜைக்கரண்டி 

    மிளகாய் தூள் தேவையான அளவு 

    உப்பு  தேவையான அளவு 

    எண்ணெய்  தேவையான அளவு 

    செய்முறை

    முதலில் பாசுமதி அரிசியை எடுத்து அதை தண்ணீரில் நன்கு கழுவி அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    அடுத்து சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

    பின்பு வெங்காயம், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் ஸ்பிரிங் ஆனியனை தயார் செய்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாரை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் ஒரு bowl ல் நாம் நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு கொள்ளவும்.

    பின்பு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மிளகு தூள், மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டிலிருந்து அரை மேஜைக்கரண்டி சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை ஊற விடவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிக்கன் துண்டுகளை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய்சூடானதும் அதில் pan ன் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை பக்குவமாக போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு அதை நன்கு வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் ஒவ்வொன்றாக முட்டைகளை உடைத்து ஊற்றி அதை சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை ஒரு கரண்டியின் மூலம் வதக்கி முட்டை சிறிது வெந்ததும் ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.
    தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய்யை ஊற்றவும். (அப்போது தான் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்).

    அடுத்து அதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை நன்கு வடிகட்டி அதில் போட்டு பாசுமதி அரிசியை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும். (பாசுமதி அரிசியை முக்கால் பாகம் மட்டுமே வேக வைக்கவும்.)

    சாதம் முக்கால் பாகம் வெந்ததும் தண்ணீரை வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும். (அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால்தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.)

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும். (ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் செய்வதாக இருந்தால் 3 லிருந்து 4 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.)

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் நன்கு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தை அதில் போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ் மற்றும் குடை மிளகாயை அதில் போட்டு முக்கால் பாகம் வேகும் அளவிற்கு வதக்கி கொள்ளவும்.

    அடுத்து அதில் தேவையான அளவிற்கு உப்பு, சோயா சாஸ், மற்றும் சில்லி சாஸ் சேர்த்து அதை நன்கு கிளறவும்.

    காய்கறிகள் வெந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்.

    இப்பொழுது ஆற வைத்துள்ள சாதத்தை எடுத்து இதில் சேர்த்து சாதம் உடையாமல் பக்குவமாக நன்கு கிளறி விடவும்.

    அடுத்து அதில் நாம் பொரித்து எடுத்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் வெள்ளை மிளகுத் தூள் மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியன் ஐ சேர்த்து மீண்டும் மிதமான சூட்டில் 2 நிமிடங்கள் வரை கிளறவும்.

    பின்பு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட கெட்சப் உடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சிக்கன் ஃப்ரைட் ரைஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • எக் ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?

    ஃபிரைடு ரைஸ் சீனாவில் உருவானது என்றாலும், இந்தியாவிலும் இது மிகவும் பிரபலமானது. துரித உணவு என்பது இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான உணவு வகை. ஃபிரைடு ரைஸ் பாஸ்ட் புட் என்றால் கேட்க வேண்டியதில்லை. ஃபிரைடு ரைஸ் பல வகைகள் உள்ளன.

    சிக்கன் ப்ரைடு ரைஸ், பனீர் ப்ரைடு ரைஸ், காளான் பிரைடு ரைஸ், வெஜிடபிள் ப்ரைடு ரைஸ். ஃபிரைடு ரைஸில் பல வகைகள் இருந்தாலும், முட்டை பிரைடு ரைஸ் என்பது ஒரு சிறப்பு இனம்.

    சிக்கன் பட்டர் மசாலா, சில்லி சிக்கன் அல்லது பனீர் பட்டர் மசாலாவுடன் முட்டை பிரைடு ரைஸ் மிகவும் பிடித்தமான கலவையாகும்.

    முட்டை மற்றும் காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படுவதால் அவை சத்து நிறைந்தவை. இருப்பினும், வயதானவர்கள் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிட வேண்டும்.

    உணவகங்களில் அல்லது துரித உணவை சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டில் தயாரிப்பது ஆரோக்கியமானது. ரெஸ்டாரண்டில் ஃப்ரைடு ரைஸ் செய்வது போல, வீட்டிலேயே செய்யலாம்.

    இப்போது எக் ப்ரைடு ரைஸ் செய்வதற்கான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை கீழே பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    250 கிராம் பாசுமதி அரிசி

    4 முட்டை

    1 கேரட்

    5 பீன்ஸ்

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    1 கையளவு ஸ்பிரிங் ஆனியன்

    எண்ணெய் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    1 மேஜைக்கரண்டி வெள்ளை மிளகுத் தூள்

    1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

    1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்

    8 பல் பூண்டு பொடியாக நறுக்கியது

    1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது

    செய்முறை

    முதலில் பாசுமதி அரிசியை எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அரை மணி நேரத்திற்கு பிறகு அதை எடுத்து தண்ணீரை நன்கு வடிகட்டி கொள்ளவும்.

    பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
    (அப்போதுதான் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்).

    அடுத்து அதில் உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை அதில் போட்டு பாசுமதி அரிசியை 15 லிருந்து 20 நிமிடம் வேக வைக்கவும். (முக்கால் பாகம் வேகும் அளவிற்கு.)

    சாதம் வெந்ததும் தண்ணீரை வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும். (அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால்தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.)

    இப்பொழுது கேரட், பீன்ஸ் மற்றும் குடை மிளகாயை நறுக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்து பச்சை மிளகாய் மற்றும் பூண்டை எடுத்து நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும். (ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் செய்வதாக இருந்தால் 3 லிருந்து 4 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.)

    எண்ணெய் சூடானதும் அதில் ஒவ்வொன்றாக முட்டைகளை உடைத்து ஊற்றி சுமார் 4 லிருந்து 5 நிமிடம் முட்டையை சிறிது வேகும் வரை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பின்பு அதே pan ல் நன்றாக பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை அதில் போடவும்.

    பின்னர் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ் மற்றும் குடை மிளகாயை அதில் போட்டு முக்கால் பாகம் வேகும் அளவிற்கு வதக்கிக் கொள்ளவும்.

    தேவையான அளவிற்கு உப்பு, ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி சில்லி சாஸ் சேர்த்து நன்கு கிளறவும்.
    காய்கறி வெந்ததும் அடுத்து அதனுடன் செய்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்.

    இப்பொழுது ஆற வைத்துள்ள சாதத்தை எடுத்து அதனுடன் சேர்க்கவும். சாதம் உடையாமல் மெதுவாக கவனமாக கிளறவும்.

    பிறகு ஒரு மேஜைக்கரண்டி வெள்ளை மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் ஐ சேர்த்து மீண்டும் மிதமான சூட்டில் இரண்டு நிமிடங்கள் வரை கிளறவும்.

    பின்பு அதை எடுத்து ஒரு பவுலில் போட்டு சிறிது ஸ்பிரிங் ஆனியன் ஐ மேலே தூவி அலங்கரிக்கவும்.

    இப்பொழுது உங்கள் சூடான சுவையான எக் ஃப்ரைட் ரைஸ் தயார்.
    இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.

  • சுவையான இந்திய ஸ்டைல் பாஸ்தா செய்வது எப்படி?

    பாஸ்தா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உணவாகும் மற்றும் பல உணவுப் பிரியர்களால் விரும்பப்படுகிறது. இவை இத்தாலிய சமையல் பாணியை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும், உலகம் முழுவதும் இதற்கு தனித்துவமான வரவேற்பு உள்ளது.

    குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே இது குறித்து ஒரு தனி மனப்பான்மை உள்ளது. இத்தாலியில் தோன்றிய இது, அதன் சிறந்த சுவை மற்றும் எளிமையான செய்முறை காரணமாக மெதுவாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.

    பாஸ்தாவுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. முதல் நூற்றாண்டிலேயே இன்றைய இத்தாலியில் வாழும் மக்களின் உணவின் ஒரு பகுதியாக அவை இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

    இத்தாலி மக்களின் பாரம்பரிய உணவாக இருப்பதால், உலகிலேயே அதிக பாஸ்தாவை உண்ணும் நாடு இத்தாலி. இத்தாலியில் வாழும் ஒருவர் சராசரியாக வருடத்திற்கு 27 கிலோ பாஸ்தா சாப்பிடுகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

    பாஸ்தாவின் சுவையை அதிகரிக்க தக்காளி சாஸ் சேர்ப்பதே உலகம் முழுவதும் பலரைச் சென்றடைந்ததற்குக் காரணம் என்கிறார்கள் சில உணவு நிபுணர்கள்.

    தேவையான பொருட்கள்:

    1 1/2 கப் பாஸ்தா

    2 பெரிய வெங்காயம்

    2 தக்காளி

    1/2 கப் கேரட்

    1/2 கப் பீன்ஸ்

    1 குடை மிளகாய்

    1 பச்சை மிளகாய்

    3 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    தேவையான அளவு மிளகாய் தூள்

    1/2 மேஜைக்கரண்டி மிளகு தூள்

    1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    1/2 மேஜைக்கரண்டி சீரக தூள்

    2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    செய்முறை:

    இந்திய ஸ்டைல் பாஸ்தா

    முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், குடை மிளகாய், மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாஸ்தாவை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீரை சுட வைக்கவும்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும். (பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காகவே நாம் எண்ணெய்யை சேர்க்கிறோம்.)

    பின்பு கொதித்து கொண்டிருக்கும் தண்ணீரில் பாஸ்தாவை போட்டு அதை அவ்வப்போது வெந்து விட்டதா என்று பார்த்துக் கொள்ளவும். (பொதுவாக இவை வேகுவதற்கு சுமார் 12 லிருந்து 15 நிமிடம் வரை ஆகும்.)

    பாஸ்தா வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஓரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், மற்றும் குடை மிளகாயை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு மூடி போட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு மீண்டும் மூடி போட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை அதை வேக விடவும்.

    3 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் மிளகுத் தூள், கரம் மசாலா, சீரக தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கி மீண்டும் மூடி போட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பாஸ்தாவை சேர்த்து அதை நன்கு மசாலாவோடு சேருமாறு கிளறி விடவும்.

    பின்பு இதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு தக்காளி சாஸ்சை சேர்த்து நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கி அதை சுட சுட ஒரு தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.

    இப்போழது உங்கள் சூடான மற்றும் சுவையான இந்தியன் ஸ்டைல் பாஸ்தா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.