பிரியாணியில் பல வகைகள் உண்டு. ஆனால் புலாவ்களில் பல வகைகள் உண்டு என்கிறார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மை. இன்று நாம் காண இருக்கும் புலாவ்களில் ஒன்றான, ஒரு சிறப்பு மற்றும் வித்தியாசமான நவரத்ன புலாவ் உள்ளது.

உங்கள் அறிவுப் பசியையும் திருப்திப்படுத்த சில சுவாரஸ்யமான நவரத்னா புலாவ் வரலாற்றுக் குறிப்புகள் கீழே உள்ளன.

நவரத்ன புலாவ் மிகவும் சிறப்பான மற்றும் ரிச்சான உணவு. பண்டிகைக் காலங்களில் அல்லது மங்களகரமான நாட்களில் நாம் செய்யும் உணவுகளுக்கு இது ஒரு அற்புதமான மாற்றாகும்.

வரும் பண்டிகை நாளில் இந்த நவரத்ன புலாவ்வை முயற்சி செய்து உங்கள் விருந்தினர்களை ஆச்சரியப்படுத்துங்கள். கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

1 cup பாசுமதி அரிசி

200 gms பன்னீர்

1 கை பச்சை பட்டாணி

15 பீன்ஸ்

4 கேரட்

1/4 காலிபிளவர்

1 உருளைக்கிழங்கு

1/2 வெங்காயம்

15 முந்திரிப் பருப்பு

பாதாம் பருப்பு  15

10 உலர் திராட்சை

குங்குமப்பூ பால் 10 tsp

1 tsp ஷாஹி ஜீரா

மிளகு 1 tsp

1/2 tsp எலுமிச்சை சாறு

2 பிரியாணி இலை

3 ஏலக்காய்

2 இலவங்கப்பட்டை

7 கிராம்பு

1 நட்சத்திர சோம்பு

தேவையான அளவு உப்பு

நெய்  தேவையான அளவு

எண்ணெய்  தேவையான அளவு

தண்ணீர்  தேவையான அளவு

செய்முறை

முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

அடுத்து பீன்ஸ், கேரட், காலிபிளவர், உருளைக்கிழங்கு, வெங்காயம், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, மற்றும் பன்னீரை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து, மற்றும் எலும்பிச்சம்பழத்தைப் பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

பின்பு சுமார் பத்து மேஜைக்கரண்டி அளவு பாலில் குங்குமப்பூவை போட்டு அதை சுடவைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நன்கு பொன் நிறமாகும் வரை அதை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்க்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் கவனமாக நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அது அரிசியை போடவும்.

பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து அதை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

நெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பை போட்டு அது நன்கு பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.

அவை பொன்னிறமானதும் அதில் உலர் திராட்சையை சேர்த்து சுமார் அரை நிமிடம் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

பின்பு pan னில் சற்று நெய்யை சேர்த்து அதில் நம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக வைத்து வறுக்கவும். பன்னீர் துண்டுகளை சீரான இடைவெளியில் திருப்பி போட்டு எல்லா பக்கமும் நன்கு வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

அடுத்து pan னில் மீண்டும் சற்று நெய்யை சேர்த்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

ஒரு நிமிடத்திற்க்குப் பிறகு அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விட்டு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு pan னில் மீண்டும் சற்று நெய்யை சேர்த்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிபிளவர், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.

ஐந்து நிமிடத்திற்க்குப் பிறகு மூடியை திறந்து அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விட்டு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ரெண்டு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

நெய் சுட்டதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, மிளகு, மற்றும் ஷாஹி ஜீராவை சேர்த்து அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.

அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து அதை நன்கு பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் கிளறி விடவும்.

பின்பு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் காய்கறிகள் மற்றும் வறுத்து எடுத்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து அதை நன்கு பக்குவமாக கிளறி விடவும். (உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள்).

அடுத்து இதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் குங்குமப்பூ பாலை சேர்த்து அதை நன்கு பக்குவமாக கிளறி விடவும்.
பின்பு அதில் நாம் வறுத்தெடுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு பாதாம் பருப்பு மற்றும் திராட்சையை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

இப்பொழுது நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் வெங்காயத்தை இதன் மேலே தூவி ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை அதை வேக விடவும்.

ஐந்து நிமிடத்திற்க்குப் பிறகு மூடியை திறந்து நவரத்ன புலாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.