புலாவ் பொதுவாக நம்மில் பலருக்குப் பிடித்தமான உணவு. புலாவை பல வழிகளில் செய்யலாம். எனவே இன்று நாம் இங்கு காண இருப்பது ஆந்திரா பாணி வெஜிடபிள் புலாவ் ஆகும், இது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் செய்முறையின் படி செய்யப்படுகிறது.
பிரியாணிக்கு முன்னதாக உதயமான உணவு புலாவ் என்றால் நம்ப முடிகிறதா? எட்டாம் நூற்றாண்டில் Abbasid பேரரசின் போது உருவான ஒரு உணவாக புலாவை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
காலப்போக்கில் இவை உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தன. இப்போதெல்லாம், புலாவ் உலகெங்கிலும் உள்ள மக்களால் அந்தந்த பிராந்தியங்களின் சமையல் பாணிக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு ருசிக்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்
1 cup பாசுமதி அரிசி
1 bowl காலிஃப்ளவர்
1 bowl பீன்ஸ்
1 bowl பச்சை பட்டாணி
2 வெங்காயம்
1 உருளைக்கிழங்கு
1 தக்காளி
1 cup கேரட்
3 பச்சை மிளகாய்
3 பல் பூண்டு
15 முந்திரிப் பருப்பு
2 ஏலக்காய்
1 இலவங்கப்பட்டை
4 கிராம்பு
1 நட்சத்திர சோம்பு
1 pcs மராத்தி மொக்கு
1 pcs ஜாதிக்காய்
2 pcs ஜாதிப்பத்திரி
1 tsp கொத்தமல்லி விதைகள்
1 tsp மிளகு
2 pcs கல்பாசி
1 tsp சீரகம்
1 tsp கசகசா
1 tsp கல் உப்பு
1 tsp தூள் உப்பு
2 tsp நெய்
1 தேங்காய் துண்டு
1 சிறு துண்டு இஞ்சி
1 பிரியாணி இலை
தேவையான அளவு புதினா
தேவையான அளவு கொத்தமல்லி
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி:
முதலில் பாசுமதி அரிசியை எடுத்து அதை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
அடுத்து காலிஃப்ளவர், பீன்ஸ், பச்சை பட்டாணி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, கேரட், பச்சை மிளகாய், தேங்காய், புதினா, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது மிக்ஸி ஜாரை எடுத்து அதில் பூண்டு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, மராத்தி மொக்கு, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, கொத்தமல்லி விதைகள், மிளகு, கல்பாசி, சீரகம், கசகசா, நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, தேங்காய், இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் புதினாவை சேர்த்து அதை நன்கு அரைக்கவும்.
பின்பு அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதை நன்கு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
அது சூடானதும் அதில் பிரியாணி இலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து முந்திரி பருப்பு பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.
முந்திரி பருப்பு பொன்னிறமானதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வெங்காயம் சற்று நிறம் மாறும்வரை அதை வறுக்கவும்.
வெங்காயம் சற்று நிறம் மாறியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
2 நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி அளவு கல்லுப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.
5 நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை நன்கு கிளறி விடவும்.
3 நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து அரிசி உடைந்து விடாமல் அதை பக்குவமாக நன்கு கிளறி விடவும்.
பின்பு அதில் சுமார் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் கலந்து விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 15 நிமிடம் வரை வேக விடவும்.
15 நிமிடத்திற்குக்ப் பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து புலாவை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக ஒரு கிளறு கிளறி மீண்டும் மூடியை போட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.
5 நிமிடத்திற்க்குப் பிறகு ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுடசுட பரிமாறவும்.
