Tag: Chettinad How To Make Mushroom Biryani

  • மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

    பிரியாணி அனைவருக்கும் பிடித்த உணவு. நறுமணத்திற்காகவே பலர் கூடுதலாக ஒரு ஸ்பூன் பிரியாணி சாப்பிடுகிறார்கள். அவ்வளவு சுவையான பிரியாணி.

    பிரியாணியில் பல வகைகள் உண்டு. சிக்கன் பிரியாணி, காளான் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி என பல வகைகள் உள்ளன. பிரியாணியில் பல வகைகள் இருந்தாலும், மட்டன் பிரியாணியின் சுவைக்கு இணையான பிரியாணி வேறில்லை.

    மதிய உணவிற்கு சுவையான மட்டன் பிரியாணி செய்வது எப்படி? இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

    பிரியாணி மசாலா பொருட்கள்

    நட்சத்திர சோம்பு (அன்னாசி பூ) – ஒன்று

    ஜாதிபத்திரி – 1

    இலவங்கப்பட்டை – 1

    ஏலக்காய் – 3

    கிராம்பு – 4

    சீரகம் – 1 டீஸ்பூன்

    சோம்பு – 1/2 டீஸ்பூன்

    மிளகு – 1/2 டீஸ்பூன்

    மல்லி – 2 ஸ்பூன்

    பிரியாணி இலை – 1

    தேவையான பொருட்கள்

    எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

    நெய் – 2 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் – 3

    கிராம்பு – 3

    பிரியாணி இலை – 1

    பெரிய வெங்காயம் – 2 (நைசாக நாறுகிறது)

    உப்பு – தேவையான அளவு

    பச்சை மிளகாய் – 5 (நேர் வாக்கில் கீறியது)

    இஞ்சி பூண்டி விழுது – 2 ஸ்பூன்

    மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் – 1 அல்லது 2 ஸ்பூன்

    மல்லி இலை – ஒரு கைப்பிடியளவு

    புதினா இலை – ஒரு கைப்பிடியளவு

    தக்காளி – 2 (பொடிதாக நறுக்கின)

    கட்டி தயிர் – 1/2 கப்

    பாஸ்மதி அரிசி – 500 கிராம்

    ஆட்டுக்கறி – 500 கிராம்

    செய்முறை

    கேஸ் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் பிரியாணி மசாலா செய்வதற்கு மேல் முதலாவதாக கூறப்பட்டுள்ள பொருட்களான நட்சத்திர சோம்பு, ஜாதிபத்திரி, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம், சோம்பு, மிளகு, மல்லி மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின் மிக்ஸியில் இந்த பொருட்களை நைசாக அரைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் பிரியாணி மசாலா தயார்.

    இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அவற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் சூடேறியதும் ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக வந்த பிறகு இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 5 பச்சமிளகாய், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், அரைத்த பிரியாணி மசாலா 1 1/2 ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

    மசாலா நன்கு வதங்கிய பின் ஒரு கையளவு மல்லி இலை, ஒரு கையளவு புதினா ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள்.

    பிறகு பொடிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும், தக்காளி நன்கு வதங்கியதும், 1/2 கப் தயிர் சேர்த்து கிளறிவிடுங்கள்.

    அடுத்ததாக 500 கிராம் ஆட்டுக்கறி சேர்த்து வதக்க வேண்டும். பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 4 விசில் வரும் வரைக்கும் வேக வைக்கவேண்டும்.

    நான்கு விசில் வந்த பிறகு பிரஷர் அடங்கியது குக்கரை தின்றது 500 கிராம் பாஸ்மதி அரிசி, ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பி தேவையான அளவு சேர்த்து கிளறி விடுங்கள். பின் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரைக்கு வேக வைக்க வேண்டும். ஒரு விசில் வந்த பிறகு அடுப்பை ஆப் செய்து விடுங்கள்.

    பின் குக்கரை 15 நிமிடங்கள் கழித்து குக்கரை திறக்க வேண்டும். அவ்வளவு தாங்க சுவையான மற்றும் உதிரி உதிரியான மட்டன் பிரியாணி தயார். உங்கள் வீட்டில் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

  • செட்டிநாடு பச்சை பட்டாணி காளான் மசாலா செய்வது எப்படி?

    சைவ உணவு உண்பவர்களுக்கு காளான் மிகவும் பிடித்தமானது. அனைத்து வகையான காளான்களிலும் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

    காளான்களில் புரதங்கள், வைட்டமின் சி, பி மற்றும் டி, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

    அப்படிப்பட்ட காளான்களை வைத்து செட்டிநாடு பச்சை பட்டாணி காளான் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    காளான் – 450 கிராம்

    பச்சை பட்டாணி – 3/4 கப்

    வெங்காயம் – 1 (நறுக்கியது)

    தக்காளி – 2 (நறுக்கியது)

    இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் – 2

    மிளகாய் தூள் – 1 1 /4 டீஸ்பூன்

    மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

    கரம் மசாலா – 1 /4 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் – 1 /4 டீஸ்பூன்

    கெட்டியான தேங்காய் பால் – 1 /4 கப்

    கொத்தமல்லி – சிறிது

    சீரகம் – 1 /2 டீஸ்பூன்

    உப்பு – சுவைக்கேற்ப

    எண்ணெய் – 1 1 /2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    முதலில் காளானை சுத்தம் செய்து, நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் பச்சை பட்டாணியை நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், காளானை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியில் மீண்டும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, பின் தக்காளியைப் போட்டு, உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    வதக்கிக் வைத்திருக்கும் அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்து அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பச்சை மிளகாய் மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்ததும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, சிறிது நீர் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

    இறுதியாக தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லி மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், செட்டிநாடு பச்சை பட்டாணி காளான் மசாலா தயார்.

  • ருசியான செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?

    ருசியான செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?

    காளான் பயன்படுத்தி பல வகையான சமையல் செய்யலாம். அந்த வகையில் சைவ பிரியர்களுக்கு காளான் பிரியாணி மிகவும் பிடித்த உணவாகும். அதுவும் செட்டிநாடு முறைப்படி காளான் பிரியாணி செய்தால் ருசியே தனிதான். செட்டிநாடு முறைப்படி காளான் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    காளான் : 1/2 கிலோ

    பாசுமதி அரிசி : 2 கப்

    வெங்காயம் : 1 நறுக்கியது

    தக்காளி : 2 நறுக்கியது

    இஞ்சி பூண்டு பேஸ்ட் : 2 டீஸ்பூன்

    கொத்தமல்லி : 1/4 கப் (துருவியது)

    புதினா : 1/4 கப் (துருவியது)

    பச்சை மிளகாய் : 3 நறுக்கியது

    எண்ணெய் : 3 டேபிள் ஸ்பூன்

    நெய் : 3 டேபிள் ஸ்பூன்

    தேங்காய் பால் : 1/2 கப்

    தயிர் : சிறிது

    மிளகாய் தூள் : 2 டீஸ்பூன்

    சோம்பு தூள் : 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் : 1/4 டீஸ்பூன்

    தண்ணீர் : 3 கப்

    உப்பு : தேவையான அளவு

    தாளிக்க :

    பிரியாணி இலை

    ஏலக்காய்

    லவங்கம்

    கிராம்பு அனைத்தும் தேவைக்கேற்ப

    செய்முறை:

    முதலில் காளானை கழுவவும். பின்னர் அதை சிறிது சிறிதாக நறுக்க வேண்டும்.

    அதே நேரத்தில், அரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

    பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை சேர்த்து வதக்கவும்.

    பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

    பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் காளானை சேர்த்து மஞ்சள் தூள், மல்லித்தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்றாக குழம்பு வரும் வரை கொதிக்கவிடவும்.

    அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து அதில் அரிசியைக் கழுவி, கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வேக விடவும்.

    இப்போது சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி ரெடி. சைவ பிரியர்களுக்கு ஏற்ற காளான் பிரியாணி.

    இதையும் செய்துபார்க்கலாமே!: செட்டிநாடு காளான் குழம்பு செய்வது எப்படி!

  • இறால், காய்கறி பிரியாணி (prawn vegetable fried rice)

    தேவையான பொருள்கள்

    இறால்                       – 1/4கிலோ

    பட்டாணி                   – 1/4கிலோ

    காரட்                       – 50கிராம்

    பீன்ஸ்காய்                 – 100கிராம்

    பெல்லாரி வெங்காயம்      – 1/4கிலோ

    தக்காளிப்பழம்             – 2

    எலும்மிச்சம்பழம்          – 1

    உப்புத்தூள்                – தேவையான அளவு

    வற்றல் தூள்               – தேவையான அளவு

    பச்சை மிளகாய்            – 10

    பிரியாணி அரிசி            – 1/2 கி்லோ

    நெய்                       – 100 மிலி

    இஞ்சி                     – 2 அங்குலத்துண்டு

    பூண்டு                      – 1

    பட்டை                     – 2 துண்டு

    கிராம்பு                     – 3

    மல்லி                      – தேவையான அளவு

    புதினா இலை               – தேவையான அளவு

    ஏலம்                      – 3

    செய்முறை

    முதலில் ராலை உரித்து சுத்தம் செய்து தேவையான வற்றல் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து சிறிது நெய்யில் சிவக்க பொரித்து வைத்துக் கொள்ளவும். அதே போல் காய்கறிகளையும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

    அரிசியை லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ளவும். அரிசியின் அளவில் ழூன்று பங்கு தண்ணீர் வைத்து கொதித்ததும் அரிசியைப் போட்டு பாதி வெந்ததும்  (நெற்று  பதத்தில்) வடித்து விடவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி வாசனை சாமான்களைப் போட்டு நறுக்கிய வெங்காயம் கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, அரைத்து  வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு கல‌ந்து நன்றாகக் கிளறி எலும்மிச்சம்பழம் பிழிந்து மல்லி புதினா, இலை தூவி தகுந்த உப்புத்தூள் சேர்த்து தம்மில் போடவும். கீழே சிறு தணல் போதும்.

    முட்டை, கொத்துக்கறி இத்துடன் சேர்க்கப்பிரியப்பட்டால், முட்டையை வெங்காயத்துடன் உதிரியாக கிளறி, கொத்துக்கறியையும் தனியாக காரம், உப்புடன் சேர்த்து வேக வைத்து கடைசியில் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.