Tag: how to make mushroom biryani

  • மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

    பிரியாணி அனைவருக்கும் பிடித்த உணவு. நறுமணத்திற்காகவே பலர் கூடுதலாக ஒரு ஸ்பூன் பிரியாணி சாப்பிடுகிறார்கள். அவ்வளவு சுவையான பிரியாணி.

    பிரியாணியில் பல வகைகள் உண்டு. சிக்கன் பிரியாணி, காளான் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி என பல வகைகள் உள்ளன. பிரியாணியில் பல வகைகள் இருந்தாலும், மட்டன் பிரியாணியின் சுவைக்கு இணையான பிரியாணி வேறில்லை.

    மதிய உணவிற்கு சுவையான மட்டன் பிரியாணி செய்வது எப்படி? இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

    பிரியாணி மசாலா பொருட்கள்

    நட்சத்திர சோம்பு (அன்னாசி பூ) – ஒன்று

    ஜாதிபத்திரி – 1

    இலவங்கப்பட்டை – 1

    ஏலக்காய் – 3

    கிராம்பு – 4

    சீரகம் – 1 டீஸ்பூன்

    சோம்பு – 1/2 டீஸ்பூன்

    மிளகு – 1/2 டீஸ்பூன்

    மல்லி – 2 ஸ்பூன்

    பிரியாணி இலை – 1

    தேவையான பொருட்கள்

    எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

    நெய் – 2 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் – 3

    கிராம்பு – 3

    பிரியாணி இலை – 1

    பெரிய வெங்காயம் – 2 (நைசாக நாறுகிறது)

    உப்பு – தேவையான அளவு

    பச்சை மிளகாய் – 5 (நேர் வாக்கில் கீறியது)

    இஞ்சி பூண்டி விழுது – 2 ஸ்பூன்

    மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் – 1 அல்லது 2 ஸ்பூன்

    மல்லி இலை – ஒரு கைப்பிடியளவு

    புதினா இலை – ஒரு கைப்பிடியளவு

    தக்காளி – 2 (பொடிதாக நறுக்கின)

    கட்டி தயிர் – 1/2 கப்

    பாஸ்மதி அரிசி – 500 கிராம்

    ஆட்டுக்கறி – 500 கிராம்

    செய்முறை

    கேஸ் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் பிரியாணி மசாலா செய்வதற்கு மேல் முதலாவதாக கூறப்பட்டுள்ள பொருட்களான நட்சத்திர சோம்பு, ஜாதிபத்திரி, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம், சோம்பு, மிளகு, மல்லி மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின் மிக்ஸியில் இந்த பொருட்களை நைசாக அரைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் பிரியாணி மசாலா தயார்.

    இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அவற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் சூடேறியதும் ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக வந்த பிறகு இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 5 பச்சமிளகாய், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், அரைத்த பிரியாணி மசாலா 1 1/2 ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

    மசாலா நன்கு வதங்கிய பின் ஒரு கையளவு மல்லி இலை, ஒரு கையளவு புதினா ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள்.

    பிறகு பொடிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும், தக்காளி நன்கு வதங்கியதும், 1/2 கப் தயிர் சேர்த்து கிளறிவிடுங்கள்.

    அடுத்ததாக 500 கிராம் ஆட்டுக்கறி சேர்த்து வதக்க வேண்டும். பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 4 விசில் வரும் வரைக்கும் வேக வைக்கவேண்டும்.

    நான்கு விசில் வந்த பிறகு பிரஷர் அடங்கியது குக்கரை தின்றது 500 கிராம் பாஸ்மதி அரிசி, ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பி தேவையான அளவு சேர்த்து கிளறி விடுங்கள். பின் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரைக்கு வேக வைக்க வேண்டும். ஒரு விசில் வந்த பிறகு அடுப்பை ஆப் செய்து விடுங்கள்.

    பின் குக்கரை 15 நிமிடங்கள் கழித்து குக்கரை திறக்க வேண்டும். அவ்வளவு தாங்க சுவையான மற்றும் உதிரி உதிரியான மட்டன் பிரியாணி தயார். உங்கள் வீட்டில் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

  • அனைவரும் விரும்பும் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி?

    இந்திய உணவு வகைகளில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. உணவைத் தவிர, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு இவை.

    தென்னிந்தியாவில் பிரியாணிக்கு தனி அந்தஸ்து உண்டு என்றால் அது மிகையாகாது. பிரியாணியில் பல வகைகள் உண்டு. குறிப்பாக சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி, காளான் பிரியாணி, பன்னீர் பிரியாணி போன்றவை பிரபலம். இன்று நாம் இங்கு பார்ப்பது வெஜிடபிள் பிரியாணி.

    அசைவ பிரியாணிக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, மற்றும் இறால் பிரியாணி மற்றும் சைவ பிரியாணிக்கு காளான் பிரியாணி, பன்னீர் பிரியாணி.

    இறைச்சி பிரியாணியில் உள்ள அளவுக்கு புரதச்சத்து இதில் இல்லை என்றாலும், வெஜிடபிள் பிரியாணியில் பலவகையான காய்கறிகளைச் சேர்ப்பது உடலுக்கும் நல்லது.

    தேவையான பொருட்கள்:

    2 கப் பாசுமதி அரிசி

    2 பெரிய வெங்காயம்

    2 தக்காளி

    2 கேரட்

    8 to 10 பீன்ஸ்

    ¼ காலிஃப்ளவர்

    1 உருளைக்கிழங்கு

    ¼ கப் பச்சை பட்டாணி

    ¼ கப் தயிர்

    2 பச்சை மிளகாய்

    3 பூண்டு பல்

    1 இஞ்சி துண்டு

    ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    2 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    2 பிரியாணி இலை

    1 துண்டு பட்டை

    3 ஏலக்காய்

    3 கிராம்பு

    1 நட்சத்திர பூ

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு நெய்

    தேவையான அளவு உப்பு

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு புதினா

    செய்முறை:

    முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், காலிபிளவர், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து வைத்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் பாசுமதி அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.

    அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி அதை உருக விடவும்.

    நெய் உருகியதும் அதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர பூ, மற்றும் பட்டையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.

    அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு உப்பு போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதை நன்கு கலந்து விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், மற்றும் பச்சை பட்டாணியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்கு பிறகு அதில் கால் கப் அளவு தயிரை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை நன்கு கிளறி விடவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (சுமார் ரெண்டரை கப்பில்லிருந்து மூன்று கப் வரை தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

    பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி அதில் சேர்த்து அதை பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் கிளறி விடவும்.

    பின்பு அதில் ஒரு மூடி போட்டு ஆவி வந்ததும் விசிலை போட்டு சுமார் ஒரு விசில் வரும் வரை அதை வேக விடவும். (பாசுமதி அரிசி எளிதாக வேகும் தன்மை கொண்டதால் கவனமாக இருக்க வேண்டும்.)

    ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை அப்படியே சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வைக்கவும்.

    20 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து வெஜிடபிள் பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆனியன் ரைத்தா உடன் அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அட்டகாசமாக இருக்கும் வெஜிடபிள் பிரியாணி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • ருசியான செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?

    ருசியான செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?

    காளான் பயன்படுத்தி பல வகையான சமையல் செய்யலாம். அந்த வகையில் சைவ பிரியர்களுக்கு காளான் பிரியாணி மிகவும் பிடித்த உணவாகும். அதுவும் செட்டிநாடு முறைப்படி காளான் பிரியாணி செய்தால் ருசியே தனிதான். செட்டிநாடு முறைப்படி காளான் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    காளான் : 1/2 கிலோ

    பாசுமதி அரிசி : 2 கப்

    வெங்காயம் : 1 நறுக்கியது

    தக்காளி : 2 நறுக்கியது

    இஞ்சி பூண்டு பேஸ்ட் : 2 டீஸ்பூன்

    கொத்தமல்லி : 1/4 கப் (துருவியது)

    புதினா : 1/4 கப் (துருவியது)

    பச்சை மிளகாய் : 3 நறுக்கியது

    எண்ணெய் : 3 டேபிள் ஸ்பூன்

    நெய் : 3 டேபிள் ஸ்பூன்

    தேங்காய் பால் : 1/2 கப்

    தயிர் : சிறிது

    மிளகாய் தூள் : 2 டீஸ்பூன்

    சோம்பு தூள் : 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் : 1/4 டீஸ்பூன்

    தண்ணீர் : 3 கப்

    உப்பு : தேவையான அளவு

    தாளிக்க :

    பிரியாணி இலை

    ஏலக்காய்

    லவங்கம்

    கிராம்பு அனைத்தும் தேவைக்கேற்ப

    செய்முறை:

    முதலில் காளானை கழுவவும். பின்னர் அதை சிறிது சிறிதாக நறுக்க வேண்டும்.

    அதே நேரத்தில், அரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

    பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை சேர்த்து வதக்கவும்.

    பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

    பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் காளானை சேர்த்து மஞ்சள் தூள், மல்லித்தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்றாக குழம்பு வரும் வரை கொதிக்கவிடவும்.

    அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து அதில் அரிசியைக் கழுவி, கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வேக விடவும்.

    இப்போது சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி ரெடி. சைவ பிரியர்களுக்கு ஏற்ற காளான் பிரியாணி.

    இதையும் செய்துபார்க்கலாமே!: செட்டிநாடு காளான் குழம்பு செய்வது எப்படி!

  • சுவையான செட்டிநாடு காளான் குழம்பு செய்வது எப்படி?

    சைவ உணவு உண்பவர்களுக்கு காளான் மிகவும் பிடித்தமானது. அப்படிப்பட்ட காளான்களை பயன்படுத்தி செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம்.

    அனைத்து வகையான காளான்களிலும் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

    காளான்களில் புரதங்கள், வைட்டமின் சி, பி மற்றும் டி, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

    அப்படிப்பட்ட காளான்களை வைத்து செட்டிநாடு ஸ்டைல் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    காளான் – 300 கிராம்

    வெங்காயம் – 2

    தக்காளி – 2

    மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

    கொத்துமல்லி விதை(தனியா) – 1 ஸ்பூன்

    சீரகம் – 3/4 ஸ்பூன்

    சோம்பு – 1/2 ஸ்பூன்

    பட்டை- 2 இன்ச் துண்டு

    கிராம்பு – 2

    ஏலக்காய் – 2

    காய்ந்த மிளகாய் – 5 (அ) காரத்துக்கேற்ப

    தேங்காய் – கால் மூடி

    எண்ணெய்

    உப்பு

    கறிவேப்பிலை

    கொத்துமல்லி இலை

    செய்முறை:

    முதலில் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.

    கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி, வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.

    எல்லாம் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

    இப்போது காளானை நன்கு கழுவி, உலர்த்தி துடைத்து சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    அடுத்து அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    குழம்பு நன்றாக கொதி வந்ததும் காளான் துண்டுகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    குழம்பு கெட்டியானதும் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பித்ததும் கொத்தமல்லித் தழையைத் தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சூப்பர் காளான் குழம்பு தயார். இந்த கிரேவியை சாதம், தோசை, இட்லியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    இந்த கிரேவியும் செய்து பாருங்களேன்!: கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி!