தித்திக்கும் இனிப்பான உளுந்து குலோப் ஜாமூன் செய்வது எப்படி?

Written by

in

இனிப்பு இல்லாமல் எந்தவொரு விசேஷமும் முழுமையடையாது. இந்திய ரெசிபிகளில் பெரும்பாலும் இனிப்புகள் மற்றும் கேக்குகள் கண்டிப்பாக இருக்கும். அதுவும் அனைவருக்கும் மிகவும் பிடித்த இனிப்பு குலாப் ஜாமூன்.

தேவையான பொருள்கள் :

உளுந்தம் பருப்பு -250 மி.லி

பச்சரிசி -ஒரு பிடியளவு

சீனி -500 மி.லி

தண்ணீர் -250 மி.லி

ரிபைண்ட் ஆயில் -பொரித்து எடுப்பதற்கு

செய்முறை :

உளுந்தம் பருப்பை பச்சரிசியுடன் ஊற வைக்கவும். உளுந்தம் பருப்பை வடைக்கு ஆட்டுவது போல் நன்கு பந்து மாதிரி வரும் வரை சிறிது தண்ணீர் தொட்டு தொட்டு ஆட்டவும். மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும்.

உளுந்து குலோப் ஜாமூன் எப்படி செய்வது?

வாணலியில் எண்ணெய் விட்டு ஆட்டி வைத்த மாவை குலோப் ஜாமூன் வடிவத்தில் போட்டு எடுத்து சீனிப்பாகில் போடவும். சீனிப்பாகில் குங்குமப்பூ ஒரு சிட்டிகை போடவும்.

சீனிப்பாகு காய்ச்சும் பக்குவம்

சீனியை தண்ணீருடன் கலந்து சற்று பிசுக் பக்குவம் வரும் வரை காய்ச்சவும். கலர் வேண்டுமாயின் சீனிப்பாகில் கலந்து கொள்ளலாம். சீனிப்பாகில் மிதக்கும் உளுந்து குலோப் ஜாமுனை அப்படியே கிண்ணங்களில் பரிமாறலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *