சுவையான தும்ப பூவா செய்வது எப்படி!!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 300 கிராம்
எண்ணெய் – 50 மில்லி
உளுந்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி
கேரட் துருவல் – ஒரு தேக்கரண்டி
பச்சை பட்டாணி – 25 கிராம்
மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை
டால்டா – சிறிது
அவல் – 150 கிராம்
கடுகு – ஒரு தேக்கரண்டி
புளி – நெல்லிக்காய்
மிளகாய் – 4 அலங்கரிக்க
முந்திரி – 50 கிராம்
மல்லி செடி, கருவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் வேகவைக்கவும். புளியை கரைத்து உள்ள தண்ணீரில் அவலை ஊற வைக்கவும். 10 நிமிடம் கழித்து அதில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு ஊறவைத்த அவல், பட்டாணி, வெந்த உருளைக்கிழங்கு நறுக்கிப் போட்டு நன்றாக கிளறவும்.
இறக்கும் முன்னர் கருவேப்பிலை, மல்லிச்செடி சேர்க்கவும். ஒரு கிண்ணத்தில் செய்த தும்பை பூவாவை நிரப்பி சிறுபுட்டுகள் மாதிரி கவிழ்த்து வைக்கவும். அதன் மீது வறுத்த முந்திரிப்பருப்பு, கேரட், தேங்காய் துருவல் கொண்டு அலங்கரிக்கவும். அது விருந்தினார்க்கு ஏற்ற மாலை சிற்றுண்டி ஆகும்.