Author: Arumugam K

  • மதிய உணவிற்கு உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி?

    நாம் அன்றாடம் சமைத்து உண்ணும் பொரியல்களில் உருளைக்கிழங்கு பொரியலும் ஒன்று. இவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானவை.

    பல வீடுகளில், மற்ற காய்கறிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உருளைக்கிழங்கு பொரியல் அனைவருக்கும் பிடிக்கும். இன்று வழக்கமான உருளைக்கிழங்கு பொரியலில் இருந்து கொஞ்சம் மாற்றங்களுடன் வித்தியாசமான உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    இப்போது கீழே உருளைக்கிழங்கு பொரியல் செய்வதற்கான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையைப் பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    3 உருளைக்கிழங்கு

    1 பெரிய வெங்காயம்

    1 தக்காளி

    1 பச்சை மிளகாய்

    1 துண்டு இஞ்சி

    3 பல் பூண்டு

    2 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    ¼ மேஜைக்கரண்டி மிளகு தூள்

    ¼ மேஜைக்கரண்டி சாம்பார் தூள்

    ½ மேஜைக்கரண்டி மல்லி தூள்

    ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா

    ½ மேஜைக்கரண்டி கடுகு

    ½ மேஜைக்கரண்டி கடலை பருப்பு

    ½ மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு மிளகாய் தூள்

    சிறிதளவு கருவேப்பிலை

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை:

    முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, இஞ்சி பூண்டை தட்டி, மற்றும் தேங்காயை துருவி வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.

    25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு pan ஐ அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் கடுகு, கடலை பருப்பு, மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு அதை கடுகு வெடிக்கும் வரை வறுக்கவும்.

    கடுகு வெடித்தவுடன் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், சாம்பார் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை அதை வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியவுடன் அதில் நாம் வேக வைத்து நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விட்டு பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான உருளைக்கிழங்கு பொரியல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • மதிய உணவுக்கு வெங்காய சாதம் செய்வது எப்படி?

    குறைந்த நேரத்தில் மிக சுவையான உணவை சமைத்து சுவைக்க யாருக்குத்தான் பிடிக்காது? எனவே இன்று இங்கு காணவிருப்பது வெங்காய சாதம் மிக எளிதாகவும், குறைந்த நேரத்திலும் செய்யப்படும். இப்போது நாக்கில் எச்சில் ஊறுவது என்ன? உங்கள் சுவை மொட்டுகளை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் அறிவுப் பசியையும் தணிக்கும் வெங்காய சாதம்.

    அவசரகாலத்தில் நாம் உண்ணக்கூடிய உணவுகளின் பட்டியல் நம் அனைவரிடமும் உள்ளது. அந்த லிஸ்டில் இந்த வெங்காய சாதத்தையும் சேர்க்கவும்.

    காலையில் அவசரமாக அலுவலகத்திற்குச் செல்லும் போதோ அல்லது நம் குழந்தைகளுக்கு மதிய உணவைத் தயாரித்து, சிறிது நேரத்தில் பள்ளிக்கு அனுப்பும் போதோ இந்த ஆனியன் ரைஸ் சரியாக இருக்கும். அதை முயற்சி செய்து, கருத்துகள் பிரிவில் அது எப்படி சென்றது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

    தேவையான பொருட்கள்:

    1 cup பாசுமதி அரிசி

    1/2 cup வறுத்த வேர்க்கடலை

    2 வெங்காயம்

    4 பச்சை மிளகாய்

    1 முழு பூண்டு

    2 tsp கடலை பருப்பு

    1/4 tsp மஞ்சள் தூள்

    1 tsp மிளகாய் தூள்

    1 tsp சீரகம்

    1 tsp கடுகு

    1/4 tsp பெருங்காய தூள்

    1 tsp உப்பு

    1/4 cup புளி தண்ணீர்

    தேவையான அளவு கருவேப்பிலை

    தேவையான அளவு கொத்தமல்லி

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு தண்ணீர்

    செய்முறை:

    முதலில் ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    இப்பொழுது வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை நறுக்கி வைத்து பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு சிறு துண்டு புளியை சுமார் பத்து நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.

    பின்பு அதில் 1/2 tsp உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை நன்கு வடிகட்டி அதில் போட்டு 20 இல் இருந்து 25 நிமிடம் வரை அதை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு pan ஐ எடுத்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 tsp அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சற்று சூடானதும் அதில் கடுகு, சீரகம், கடலை பருப்பு, மற்றும் வேர்க்கடலையை போட்டு வேர்க்கடலை நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    வேர்க்கடலை பொன்னிறமானதும் அதில் நாம் உரித்து வைத்திருக்கும் பூண்டு மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து சுமார் இரண்டில் லிருந்து மூன்று நிமிடம் வரை அதை வதக்கவும்.

    மூன்று நிமிடத்திற்கு பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம், 1/2 tsp உப்பு, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய்யை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    அடுத்து அதில் கருவேப்பிலை மற்றும் நாம் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் 1/4 cup அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் மூன்றி லிருந்து நான்கு நிமிடம் வரை வேக வைக்கவும்.

    நான்கு நிமிடத்திற்க்குப் பிறகு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை அதில் சேர்த்து பக்குவமாக சாதம் உடையாதவாரு சுமார் ரெண்டு நிமிடம் வரை அதை கிளறி விடவும்.

    ரெண்டு நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி விடவும்.

    அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான வெங்காய சாதம் ரெடி. இதை சுட சுட உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • சுவையான முட்டைக்கோஸ் மஞ்சூரியன் செய்வது எப்படி?

    மஞ்சூரியன் என்பது இந்தோ-சீன உணவு வகையாகும், இது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு. குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, மவுசே தனித்தன்மை வாய்ந்தது. மஞ்சூரியனில் பல வகைகள் உண்டு.

    அவற்றில் சிக்கன் மஞ்சூரியன், மீன் மஞ்சூரியன், பன்னீர் மஞ்சூரியன், வெஜிடபிள் மஞ்சூரியன், முட்டை மஞ்சூரியன், உருளைக்கிழங்கு மஞ்சூரியன் ஆகியவை அடங்கும். ஆனால் இன்று இங்கு காண்பது வித்தியாசமான முட்டைகோஸ் மஞ்சூரியன்.

    நாம் வழக்கமாக மஞ்சூரியன் செய்வது போல் முட்டைக்கோஸ் மஞ்சூரியனும் செய்யப்படுகிறது. எனவே இதை மற்ற மஞ்சூரியன் உணவுகளைப் போல ஃப்ரைடு ரைஸ் மற்றும் நூடுல்ஸுக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம். அல்லது முட்டைக்கோஸ் மஞ்சூரியன் ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டியாக முயற்சிக்கவும். முட்டைக்கோஸ் மஞ்சூரியாவின் சிறப்பு என்னவென்றால், இந்த அற்புதமான மஞ்சூரியாவை வெறும் முட்டைக்கோசுடன் செய்யலாம்.

    மேலும் நம் பிறந்தநாளில் அல்லது நம் வீட்டிற்கு விருந்துக்கு வரும்போது இந்த முட்டைக்கோஸ் மஞ்சூரியன் செய்து நம் உறவினர்களை ஆச்சரியப்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள்

    2 கப் துருவிய முட்டைகோஸ்

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    5 பூண்டு பல்

    1½ இஞ்சி துண்டு

    2 மேஜைக்கரண்டி சோள மாவு

    2 மேஜைக்கரண்டி மைதா மாவு

    1 மேஜைக்கரண்டி டார்க் சோயா சாஸ்

    2 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்

    2 மேஜைக்கரண்டி டொமேட்டோ கெட்சப்

    1 மேஜைக்கரண்டி வினிகர்

    ½ மேஜைக்கரண்டி மிளகு தூள்

    மிளகாய் தூள் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்

    செய்முறை

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், இஞ்சி, பூண்டு, மற்றும் ஸ்பிரிங் ஆனியன்னை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் முட்டைகோஸை நன்கு பொடியாக துருவி எடுத்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து நாம் பொடியாக துருவி வைத்திருக்கும் முட்டைகோஸை எடுத்து அதை ஒரு bowl ல் போட்டு அதனுடன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து அதை கலந்து விடவும்.

    பின்பு அதில் சோள மாவு மற்றும் மைதா மாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். (முட்டைகோஸ் தண்ணீர் விடும் என்பதால் நாம் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.)

    இந்த கலவையை நன்கு கலந்த பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்து அதை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை பிரிட்ஜில் வைக்கவும்.

    15 நிமிடத்திற்கு பிறகு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப அதில் நாம் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை ஒவ்வொன்றாக போடவும்.

    பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.

    முட்டைகோஸ் உருண்டை இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வதக்கவும்.

    3 நிமிடத்திற்கு பிறகு அதில் சோயா சாஸ், வினிகர், டொமேட்டோ கெட்சப், மற்றும் ரெட் சில்லி சாஸ்ஸை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதில் சுமார் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் நன்கு கலந்து விட்டு அதை சுமார் 2 மணி நேரம் வரை கொதிக்க விடவும்.

    மஞ்சூரியன் சிறிது கிரேவியாக வேண்டும் என்றால் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் சேர்த்து கொள்ளவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு நாம் பொரித்து எடுத்து வைத்திருக்கும் முட்டைகோஸ் உருண்டைகளை அதில் போட்டு அதை பக்குவமாக அது நன்கு மசாலாவோடு சேருமாறு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதை நன்கு கிளறி விட்டு பின்பு அதில் சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்னை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அருமையான முட்டைகோஸ் மஞ்சூரியன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • மருத்துவ குணம் கொண்ட மிளகு ரசம் செய்வது எப்படி?

    ரசம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் மருத்துவ குணம் கொண்ட உணவு. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இவை எவ்வளவு பிரபலமாக உள்ளனவோ, ரசம் இல்லாத எந்தக் விருந்தும் முழுமையடையாது. ரசங்களில் பல வகைகள் உள்ளன.

    மிளகு ரசம், தக்காளி ரசம், பூண்டு ரசம், முருங்கை ரசம், இஞ்சி ரசம், புதினா ரசம், பன்னீர் ரசம் போன்றவை மிகவும் பிரபலம். இன்று இங்கு காண இருப்பது அதிக மருத்துவ குணம் கொண்ட மிளகு ரசம்.

    மிளகு ரசம் அஜீரணம் மற்றும் சளிக்கு மிகவும் நல்ல உணவு. அதனால்தான் நம் முன்னோர்கள் ஆடம்பரமான விருந்துக்குப் பிறகு அதை கடைசி உணவாக வைத்திருந்தார்கள்.

    மேலும் மருத்துவர்கள் பொதுவாக ஜலதோஷத்திற்கு பெப்பர்மின்ட் சாற்றை பரிந்துரைக்கின்றனர். அவை எடை இழப்புக்கு மிகவும் நல்லது என்றும் கூறப்படுகிறது. எனவே உடல் எடையை குறைக்கும் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் தினமும் ஒரு டம்ளர் மிளகு ஜூஸ் அருந்தலாம்.

    தேவையான பொருட்கள்:

    பெரிய நெல்லிக்காய் சைஸ் புளி

    1 தக்காளி

    2 பூண்டு பல்

    2 காஞ்ச மிளகாய்

    10 to 12 வெந்தயம்

    2 மேஜைக்கரண்டி மிளகு

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    ¼ மேஜைக்கரண்டி கடுகு

    ¼ மேஜைக்கரண்டி பெருங்காய தூள்

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு கறிவேப்பிலை

    செய்முறை:

    முதலில் பெரிய நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து பின்பு கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு மற்றும் சீரகத்தை போட்டு அதை நன்கு அரைத்து கொள்ளவும். (இதை மிக்ஸி ஜார்க்கு பதிலாக அம்மிக்கல்லிலும் தூள் செய்து கொள்ளலாம்.)

    பின்பு 2 பல் பூண்டை அம்மிக்கல்லில் தட்டி மிளகு மற்றும் சீரக தூளுடன் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் தக்காளியை போட்டு அதை நம் கைகளின் மூலம் பக்குவமாக பிசைந்து வைத்து கொள்ளவும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் கடுகைப் போட்டு கடுகு வெடித்தவுடன் அதில் வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு அதை வதக்கவும்.

    பிறகு அதில் பெருங்காய தூள், மஞ்சள் தூள், மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மிளகு மற்றும் சீரக தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் நாம் பிசைந்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    இப்பொழுது நாம் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை அதில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும்.

    ரசம் கொதிக்க ஆரம்பித்த உடனே அடுப்பை அணைத்து விட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி சுட சுட சாதத்தில் ஊற்றி பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் உடம்பிற்கு மிகவும் சத்தான மிளகு ரசம் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.

  • மிகவும் சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா செய்வது எப்படி?

    பன்னீர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு. பன்னீர் கொண்டு செய்யப்படும் உணவுகள், உணவு பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    எனவே இன்று இங்கு இருப்பது தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா. இவை சப்பாத்தி, நான், புல்கா, மற்றும் பரோட்டாவிற்கு சைடிஷ் ஆக தொட்டு உண்ண மிகவும் அட்டகாசமாக இருக்கும். அதுமட்டுமின்றி, ஃபிரைடு ரைஸ் மற்றும் நூடுல்ஸுக்கு சைட் டிஷ் ஆகவும் சிறந்தவை.

    தாபா ஸ்டைல் பன்னீர் மசாலாவின் சிறப்பு என்னவென்றால், மற்ற எந்த பன்னீர் உணவையும் செய்வது போல் இதுவும் எளிதாக செய்யக்கூடியது. பனீரை வறுக்கும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் கொஞ்சம் அதிகமாக வறுத்தால் பன்னீர் மிருதுவாக இருக்காது.

    தேவையான பொருட்கள்:

    250 கிராம் பன்னீர்

    3 பெரிய வெங்காயம்

    4 தக்காளி

    2 to 3 ஏலக்காய்

    3 to 4 கிராம்பு

    1 பட்டை துண்டு

    1 இஞ்சி துண்டு

    3 to 4 பல் பூண்டு

    1 மேஜைக்கரண்டி கடலை மாவு

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    1 மேஜைக்கரண்டி கசூரி மேத்தி

    ½ மேஜைக்கரண்டி சீரக தூள்

    ½ மேஜைக்கரண்டி மல்லி தூள்

    ¼ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு நெய்

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு புதினா

    செய்முறை:

    முதலில் பன்னீர், வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் புதினாவை தயார் செய்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்த ஒரு bowl லை எடுத்து அதில் நாம் சதுரமாக வெட்டி வைத்திருக்கும் பன்னீரை போட்டு அதனுடன் அரை மேஜைக்கரண்டி அளவு கரம் மசாலா, மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை பக்குவமாக நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் 2 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு அப்படியே சுமார் 30 லிருந்து 35 நிமிடம் வரை ஊற விடவும்.

    பின்னர் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    நெய் சூடான பின் அதில் சீரகம், ஏலக்காய், கிராம்பு, மற்றும் பட்டை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு வெங்காயம் நன்கு பொன்னிறம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் நன்கு பொன்னிறமானதும் அதில் கருப்பு மிளகு தூள், கசூரி மேத்தி, சீரக தூள், மல்லி தூள், கடலை மாவு, அரை மேஜைக்கரண்டி அளவு கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பின்பு அதில் நாம் செய்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்டை ஊற்றி நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை வேக விடவும்.

    4 நிமிடத்திற்கு பின்னர் மூடியை திறந்து மசாலாவை நன்கு கிண்டி விட்டு மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வேக விடவும்.

    எண்ணெய் பிரிந்து வருவதற்குள் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை உருக விடவும்.

    நெய் உருகியதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் பன்னீரை எடுத்து போட்டு அதை பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் திருப்பி போட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை சூடாக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அந்த பன்னீரை வெந்து கொண்டிருக்கும் மசாலாவுடன் சேர்த்து அதனுடன் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதை பக்குவமாக கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • விரும்பி சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு சில்லி சிக்கன் செய்வது எப்படி?

    சில்லி சிக்கன் என்பது இந்தோ-சீன உணவாகும், இது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இவைகளை ஃப்ரைடு ரைஸ் மற்றும் பிரியாணியுடன் அடிக்கடி சாப்பிடுவார்கள். இது ஒரு கூட்டத்தை எளிமையாக ரசித்து சாப்பிட வைக்கிறது.

    உண்மையில், பல துரித உணவு உணவகங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சில்லி சிக்கன் என்று சொன்னால் அது மிகையாகாது. சில்லி சிக்கன் பிரியர்கள் பொதுவாக துரித உணவு உணவகங்களில் ஆர்டர் செய்வார்கள்.

    ஆனால் இதை நாம் வீட்டிலேயே சுகாதாரமான முறையில் எளிதாக செய்யலாம். சில்லி சிக்கன் பெரும்பாலான குழந்தைகளின் விருப்பமான உணவாகும். எனவே இதை வீட்டிலேயே சுகாதாரமாக செய்து குழந்தைகளுக்கு பயமின்றி கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    500 கிராம் போன்லெஸ் சிக்கன்

    1 முட்டை

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    2 பச்சை மிளகாய்

    6 பூண்டு பல்

    2 துண்டு இஞ்சி

    4 மேஜைக்கரண்டி சோள மாவு

    4 மேஜைக்கரண்டி மைதா மாவு

    2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்

    1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

    1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்

    ¼ மேஜைக்கரண்டி மிளகு தூள்

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு வெங்காய தாள்

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை:

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து அதை கழுவி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து நாம் கழுவி வைத்திருக்கும் சிக்கனை ஒரு bowl ல் போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற விடவும்.

    கோழி கறியே தண்ணீர் விடும் என்பதால் அதில் நாம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

    பின்பு ஒரு bowl ல் முட்டையை உடைத்து ஊற்றி அதில் 3 மேஜைக்கரண்டி அளவு சோள மாவு, ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் மைதா மாவை போட்டு தேவையான அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு அடித்து மாவை கெட்டியான பதத்திற்கு கொண்டு வரவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கோழி கறியை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்ட பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் மாவில் நன்கு முக்கி எண்ணெய்யில் போடவும்.

    பின்பு அது ஒரு புறம் வெந்ததும் அதை ஒரு கரண்டியின் மூலம் மறு புறம் திருப்பி விட்டு அது பொன் நிறம் ஆனதும் கரண்டியில் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமிருக்கும் சிக்கன் துண்டுகளையும் பொரித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

    பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் ஒரு சிட்டிகை அளவு உப்பை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் பெப்பர் தூளைப் போட்டு அதை நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மற்றும் சில்லி சாஸை ஊற்றி அதை நன்கு கிளறி விடவும்.

    பின்னர் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் பொரித்தெடுத்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து அது நன்கு மசாலாவுடன் சேருமாறு அதை கிண்டி விட்டு சிறிது நேரம் வேக விடவும்.

    பின்பு அதை இறக்குவதற்கு முன் அதில் சிறிதளவு வெங்காய தாள் மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சில்லி சிக்கன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • அனைவரும் விரும்பும் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி?

    இந்திய உணவு வகைகளில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. உணவைத் தவிர, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு இவை.

    தென்னிந்தியாவில் பிரியாணிக்கு தனி அந்தஸ்து உண்டு என்றால் அது மிகையாகாது. பிரியாணியில் பல வகைகள் உண்டு. குறிப்பாக சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி, காளான் பிரியாணி, பன்னீர் பிரியாணி போன்றவை பிரபலம். இன்று நாம் இங்கு பார்ப்பது வெஜிடபிள் பிரியாணி.

    அசைவ பிரியாணிக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, மற்றும் இறால் பிரியாணி மற்றும் சைவ பிரியாணிக்கு காளான் பிரியாணி, பன்னீர் பிரியாணி.

    இறைச்சி பிரியாணியில் உள்ள அளவுக்கு புரதச்சத்து இதில் இல்லை என்றாலும், வெஜிடபிள் பிரியாணியில் பலவகையான காய்கறிகளைச் சேர்ப்பது உடலுக்கும் நல்லது.

    தேவையான பொருட்கள்:

    2 கப் பாசுமதி அரிசி

    2 பெரிய வெங்காயம்

    2 தக்காளி

    2 கேரட்

    8 to 10 பீன்ஸ்

    ¼ காலிஃப்ளவர்

    1 உருளைக்கிழங்கு

    ¼ கப் பச்சை பட்டாணி

    ¼ கப் தயிர்

    2 பச்சை மிளகாய்

    3 பூண்டு பல்

    1 இஞ்சி துண்டு

    ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    2 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    2 பிரியாணி இலை

    1 துண்டு பட்டை

    3 ஏலக்காய்

    3 கிராம்பு

    1 நட்சத்திர பூ

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு நெய்

    தேவையான அளவு உப்பு

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு புதினா

    செய்முறை:

    முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், காலிபிளவர், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து வைத்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் பாசுமதி அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.

    அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி அதை உருக விடவும்.

    நெய் உருகியதும் அதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர பூ, மற்றும் பட்டையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.

    அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு உப்பு போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதை நன்கு கலந்து விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், மற்றும் பச்சை பட்டாணியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்கு பிறகு அதில் கால் கப் அளவு தயிரை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை நன்கு கிளறி விடவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (சுமார் ரெண்டரை கப்பில்லிருந்து மூன்று கப் வரை தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

    பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி அதில் சேர்த்து அதை பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் கிளறி விடவும்.

    பின்பு அதில் ஒரு மூடி போட்டு ஆவி வந்ததும் விசிலை போட்டு சுமார் ஒரு விசில் வரும் வரை அதை வேக விடவும். (பாசுமதி அரிசி எளிதாக வேகும் தன்மை கொண்டதால் கவனமாக இருக்க வேண்டும்.)

    ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை அப்படியே சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வைக்கவும்.

    20 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து வெஜிடபிள் பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆனியன் ரைத்தா உடன் அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அட்டகாசமாக இருக்கும் வெஜிடபிள் பிரியாணி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • நாவிற்கு சுவையான புதினா சாதம் செய்வது எப்படி?

    புதினா சாதம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும். புதினா சாதம் மக்களின் அன்றாட உணவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

    இன்று இங்கு காண இருப்பது புதினா சாதம். புதினாவில் உடலுக்கு மிகவும் நல்லது அது மட்டுமல்ல பல சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, புரதம், கால்சியம் போன்றவை இதில் நிறைந்துள்ளன.

    பச்சை பட்டாணி மற்றும் வேர்க்கடலை சேர்ப்பதன் மூலம், உடலுக்கு நல்ல புரதம் கிடைக்கும்.

    புதினா சாதம் உடலுக்கு மிகவும் இதமாக இருப்பதுதான் அதன் சிறப்பு. தயாரிப்பதற்கு சிறிது நேரம் எடுத்தாலும், செய்முறை மிகவும் எளிமையானது. இதில் பல்வேறு சத்துக்கள் இருப்பதால் வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    1 கப் புதினா இலை

    1 கப் வேக வைத்த ரைஸ்

    100 கிராம் பச்சை பட்டாணி

    6 to 8 சின்ன வெங்காயம்

    4 to 6 பல் பூண்டு

    2 பச்சை மிளகாய்

    2 சிவப்பு மிளகாய்

    ½ மேஜைக்கரண்டி கடுகு

    1 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு

    1 மேஜைக்கரண்டி கடலை பருப்பு

    1½ மேஜைக்கரண்டி வேர்க்கடலையை

    1 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்

    1 எலுமிச்சம் பழம்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    செய்முறை:

    முதலில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் பூண்டை தயார் செய்து, தேங்காயை துருவி, எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து, புதினா இலையை நன்கு சுத்தம் செய்து கழுவி, மற்றும் அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 25 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்.

    30 நிமிடத்திற்கு பிறகு அரிசியை மீண்டும் நன்கு கழுவி அதை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சுமார் 2 விசில் வரும் வரை அதை வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பச்சை பட்டாணியை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அது சுட்டதும் அதில் பச்சை பட்டாணியை போட்டு அதை வேக வைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மற்றும் பூண்டை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.

    அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து அதை சுமார் 1 லிருந்து 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் புதினா இலையை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும். (புதினா இலை நன்கு சுருளும் வரை அதை வதக்கவும்.)

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.

    அது ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரூக்கு மாற்றி அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயை போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். (தேவையான அளவு தண்ணீர் சேர்த்தால் போதும் அதிகமாக தண்ணீர் சேர்த்து விடக்கூடாது.)

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் உளுத்தம் பருப்பு, மற்றும் கடலை பருப்பை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.

    அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பச்சை பட்டாணி மற்றும் நாம் அரைத்து வைத்திருக்கும் புதினா பேஸ்ட்டையும் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு அதனுடன் வேர்க்கடலையையும் சேர்த்து அதை பக்குவமாக நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு புதினா ரைஸ்ஸை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் உடம்பிற்கு மிகவும் சத்தான புதினா ரைஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • சுவையான புடலங்காய் கூட்டு செய்வது எப்படி?

    புடலங்காய் கூட்டு என்பது தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய வகை பொரியலாகும். தமிழகத்தில் பெரும்பாலான திருமண விழாக்களில் இவை கட்டாயம்.

    தமிழகத்தில் இவை பெரும்பாலான கல்யாண விருந்துகளில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். பல வகையான கலவைகள் உள்ளன. அவற்றில் குறிப்பாக பிரபலமானது காலிஃபிளவர் கூட்டு, சுரைக்காய் கூட்டு, கத்திரிக்காய் கூட்டு, பூசணி கூட்டு, வெள்ளரி கூட்டு மற்றும் வாழை தண்டு கூட்டு. இன்று நாம் இங்கு காண இருப்பது புடலங்காய் கூட்டுவைத்தான்.

    புடலங்காய் கூட்டின் சிறப்பு அம்சம், எந்த சிரமமும் இன்றி, குறைந்த நேரத்தில் மிக எளிதாக செய்து முடிக்க முடியும். மேலும், இது குறைந்த பொருட்களை கொண்டு செய்ய முடியும்.

    பாசி பருப்பு, கடலை பருப்பு மற்றும் பிற வீட்டுப் பொருட்களைக் கொண்டு இதை எளிதாக செய்யலாம். மேலும், புடலங்காயில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நம் உடலுக்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்:

    1½ கப் புடலங்காய்

    ¼ கப் கடலை பருப்பு

    ¼ கப் துருவிய தேங்காய்

    1 மேஜைக்கரண்டி அரிசி மாவு

    2 மேஜைக்கரண்டி பாசி பருப்பு

    2 சின்ன வெங்காயம்

    2 பச்சை மிளகாய்

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    ½ மேஜைக்கரண்டி சீரக தூள்

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    ½ மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு

    ¼ மேஜைக்கரண்டி கடுகு

    1 சிட்டிகை பெருங்காய தூள்

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு தேஉப்பு

    சிறிதளவு கருவேப்பிலை

    செய்முறை:

    முதலில் வெங்காயம், புடலங்காய், பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, தேங்காயை துருவி, கடலை பருப்பு மற்றும் பாசி பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 30 லிருந்து 45 நிமிடம் வரை ஊற வைக்கவும்.

    45 நிமிடத்திற்கு பிறகு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பு மற்றும் பாசி பருப்பை மீண்டும் ஒரு முறை நன்கு சுத்தம் செய்து போடவும்.

    பின்பு அதில் கடலை பருப்பு முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள், சீரக தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயை போட்டு ஒரு மூடி போட்டு சுமார் 2 விசில் வரும் வரை அதை வேக விடவும். (புடலங்காயை கடைசியாகவே போடவும் அப்பொழுது தான் அது குழைந்து விடாமல் இருக்கும்.)

    2 விசில் வருவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய், நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு, மற்றும் ஒரு சிட்டிகை அளவு பெருங்காயத்தை போடவும்.

    பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொற கொறப்பான பதத்திற்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    பிறகு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் புடலங்காயை போட்டு அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை அதை கொதிக்க விடவும்.

    6 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே அடுப்பில் வைத்திருக்கவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை போட்டு உளுத்தம் பருப்பு லேசாக பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.

    உளுத்தம் பருப்பு லேசாக பொன்னிறமானதும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் புடலங்காய் கூட்டில் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் புடலங்காய் கூட்டு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • மிக சுவையான மசாலா தோசை செய்வது எப்படி?

    தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும். தோசையில் பல வகைகள் உண்டு. அதில் பன்னீர் தோசை, வெங்காய ரவா தோசை, முட்டை தோசை, பொடி தோசை போன்றவை மிகவும் பிரபலமானவை.

    எனவே இன்று இங்கு இருப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மசாலா தோசை. உணவு பிரியர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    மசாலா தோசையிலேயே பல வகைகள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை பேப்பர் மசாலா தோசை, மெட்ராஸ் ஸ்பெஷல் மசாலா தோசை, கேரளா மசாலா தோசை, மற்றும் மைசூர் மசாலா தோசை.

    மசாலா தோசை வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையுடன் அவர்களின் சமையல் பாணிக்கு ஏற்ப செய்து சுவைக்கிறார்கள்.

    தேவையான பொருட்கள்:

    1/2 கப் இட்லி அரிசி

    1/2 கப் புழுங்கல் அரிசி

    1/4 கப் உளுத்தம் பருப்பு

    1/4 கப் அவல்

    2 பெரிய வெங்காயம்

    3 உருளைக்கிழங்கு

    4 பூண்டு பல்

    1 பச்சை மிளகாய்

    8 காஞ்ச மிளகாய்

    2 1/2 மேஜைக்கரண்டி கடலை பருப்பு

    1 1/2 மேஜைக்கரண்டி வெந்தயம்

    3 மேஜைக்கரண்டி சீரகம்

    1/4 மேஜைக்கரண்டி கடுகு

    1/4 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்

    1/2 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    சிறிதளவு கருவேப்பிலை

    சிறிதளவு கொத்தமல்லி

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு நெய்

    தேவையான அளவு உப்பு

    செய்முறை:

    தோசை செய்வதற்கு முந்தைய நாள் ஒரு bowl ல் இட்லி அரிசி மற்றும் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    மற்றொரு bowl ல் உளுத்தம் பருப்பு, வெந்தயம், மற்றும் அரை மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பையும் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதையும் சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    மற்றொரு bowl ல் அவலை போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதையும் சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    3 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை எடுத்து கிரைண்டரில் போட்டு அதை சிறிது அரைத்த பின் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை போட்டு அரைக்கவும்.

    பருப்பு சிறிது அரைபட்டதும் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் அவலையும் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலக்கி அதை சுமார் 8 மணி நேரம் வரை room temperature யில் புளிக்க விடவும்.

    8 மணி நேரத்திற்கு பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்டதும் அதில் 2 மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பு மற்றும் சீரகத்தை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு வெங்காயம், பூண்டு, மற்றும் காஞ்ச மிளகாயை போட்டு அதை நன்கு வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.

    பின்பு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை high flame ல் வைத்து அதில் உருளைக்கிழங்கு வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு சுமார் 25 லிருந்து 30 நிமிடம் வரை அதை வேக வைத்து எடுத்து மசித்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்டதும் அதில் கடுகு, கால் மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு, மற்றும் கால் மேஜைக்கரண்டி சீரகத்தை சேர்த்து கடுகு வெடிக்கும் போது அதில் பெருங்காயத் தூள் மற்றும் சிறிதளவு கருவேப்பிலை போட்டு அதை வறுக்கவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மீதமுள்ள ஒரு வெங்காயத்தையும் மற்றும் பச்சை மிளகாயையும் போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் நாம் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சிறிது நேரம் வேக விடவும்.

    பிறகு அதை இறக்குவதற்கு முன் சிறிதளவு கொத்தமல்லியை அதில் தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.

    தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும்.

    தோசை ஒரு புறம் வெந்ததும் அதை மறு புறம் திருப்பி போட்டு வேக விடவும்.

    பின்பு தோசையை திருப்பி போட்டு அதன் உள்புறத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியை எடுத்து நன்கு தடவிய பின் அதில் நாம் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து தோசையை மடித்து கல்லிலிருந்து எடுத்து தட்டில் வைத்து சுட சுட சாம்பார் சட்னியுடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான மசாலா தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.