Author: Arumugam K

  • சுவையான சத்தான பாசிப்பருப்பு வெஜிடபிள் கிச்சடி செய்வது எப்படி?

    சாதாரணமாகவே வெஜிடேபிள் சேர்த்துக்கொள்வது உடம்புக்கு நல்லது. குழந்தைகளுக்கு சாதத்தில் சேர்த்து கொடுத்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். நல்ல ஆரோக்கியமான வெஜிடேபிள் கிச்சடியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    அரிசி – 1 கப்

    பாசிப்பருப்பு – 1/2 கப்

    உருளைக்கிழங்கு – 2 (நறுக்கியது)

    குடைமிளகாய் – 1 (நறுக்கியது)

    பச்சை பட்டாணி – 1/2 கப்

    பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

    இஞ்சி – 1 இன்ச் (துருவியது)

    நெய் – 1-2 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை

    சீரகம் – 1 டீஸ்பூன்

    மிளகு – 4-6

    கிராம்பு – 4

    மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

    செய்முறை

    முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை நீரில் ஒருமுறை கழுவி, இரண்டையும் நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் மிளகு, கிராம்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, காய்கறிகள் நன்கு வேகும் வரை குறைந்தது 3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

    பாசிப்பருப்பு வெஜிடபிள் கிச்சடி செய்வது எப்படி

    காய்கறிகளானது நன்கு வெந்ததும், அதில் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை மீண்டு கழுவி சேர்த்து கிளறி, பொருட்கள் அனைத்தும் ஒன்று சேர வதக்கி விட வேண்டும்.

    பின் அதில் 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒருமுறை கிளறி விட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    ஒரு பேனில் நெய் விட்டு, அதில் பெருங்காயம், சீரகம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நல்லா வதக்குங்க. இப்போது இதில் நறுக்கிய கேரட், முட்டைகோஸை சேர்த்து வதக்குங்க. பிறகு பச்சை பட்டாணியும் சேர்த்து தொடர்ந்து வதக்குங்க.

    இப்போது இந்த கலவைல நறுக்கிய குடை மிளகாயையும் சேர்த்து வதக்குங்க. காய்கள் எல்லாம் நல்லா வதங்கிய பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்துக்கோங்க.

    பிறகு பச்சை மிளகாயையும் சேர்த்து அதோடு உப்பு, மஞ்சள் தூள், சிறிதளவு சிகப்பு மிளகாய்த் தூள் ஆகிய பொருட்களை போட்டு எல்லா பொருட்களை நல்லா கலந்துவிட்டு மிதமான தீயில் 3 முதல் 4 நிமிடங்கள் வேக விடுங்க.

    இப்போது ஏற்கனவே குக்கரில் வேகவைத்து வைச்சிருக்குற அரிசி பருப்பு கலவையை குக்கர் ஆறியதும் திறந்து, அதில் நாம தயாரிச்சு வெச்சிருக்கிற காய்கறி மசாலா கலவையை சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து நல்லா கலந்து விடுங்க.

    சூடாக இருக்கும்போதே மேலாக 1 ஸ்பூன் நெய்யை விட்டு கலந்து சூடாக பரிமாறுங்க.

  • தென்னிந்திய ஸ்டைல் பலாக்காய் கூட்டு எளிதான ரெசிபி!!

    தென்னிந்திய ஸ்டைல் பலாக்காய் கூட்டு எளிதான ரெசிபி!!

    தென்னிந்திய பாணியான பலாக்காய் கூட்டு சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பலாக்காய் – 2 கப் நறுக்கியது

    புளி – நெல்லிக்காய் அளவிலான

    மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

    உப்பு – தேவைகேற்ப

    வறுத்து அரைக்க

    கடலை பருப்பு – 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி விதைகள் – 2 டீஸ்பூன்

    சிவப்பு மிளகாய் – 2

    அரிசி – 1/2 தேக்கரண்டி

    தேங்காய் – 3 டீஸ்பூன்

    சுவையூட்ட

    எண்ணெய் – 2 தேக்கரண்டி

    கடுகு – சிறிதளவு

    உ பருப்பு – சிறிதளவு

    சிவப்பு மிளகாய் – 1

    கறிவேப்பிலை – ஒரு ஸ்ப்ரிக்

    கொத்தமல்லி இலைகள் – 2 டீஸ்பூன் இறுதியாக நறுக்கியது

    தென்னிந்திய ஸ்டைல் பலாக்காய் கூட்டு எளிதான ரெசிபி!!

    செய்முறை

    1/2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கடலை பருப்பை வறுக்கவும்.

    அதோடு சேர்த்து கொத்தமல்லி விதைகள், சிவப்பு மிளகாய் மற்றும் மூல அரிசி ஆகியவற்றை நடுத்தர வெப்பத்தில் வதக்கி, பருப்பு லேசான தங்க பழுப்பு நிறமாக மாறும் வரை தொடர்ந்து கிளறவும்.

    வெப்பத்தை அணைத்து, துருவியதேங்காய் சேர்த்து வாணலியில் வதக்கவும்.

    அது குளிர்ந்ததும், நன்றாக பேஸ்ட் போல அரைக்கவும். அதை ஒதுக்கி வைக்கவும்.

    புளி 20 நிமிடம் சூடான நீரில் ஊற வைக்கவும். ஒரு கப் புளி சாற்றை பிரித்தெடுத்து வைக்கவும்.

    பிரஷர் குக்கரில் மஞ்சள் தூள் கொண்டு பருப்பை மென்மையாகும் வரை சமைக்கவும். அதை நன்றாக பிசைந்து ஒதுக்கி வைக்கவும்.

    ஒரு கடாயில், சமைத்த மற்றும் நறுக்கிய பலாப்பழம், மஞ்சள் தூள் மற்றும் புளி சாறு சேர்க்கவும்.

    புளி மூல வாசனை போகும் வரை மிதமான வெப்பத்தில் சமைக்கவும்.

    சமைத்த பருப்பு, தரையில் விழுது, ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

    சில நிமிடங்களுக்கு நடுத்தர வெப்பத்தில் கொதிக்கவைத்து, ஒரே மாதிரியான கலவையாக மாறும் வரை அவ்வப்போது கிளறி விடுங்கள்.

    2 தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்த்து, அது பொரியும்போது, உளுந்தம் பருப்பு, சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

    பருப்பு தங்க பழுப்பு நிறமாக மாறும் போது, அதை கூட்டில் சேர்க்கவும்.

    கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து அரிசி சாதம் மற்றும் அப்பளத்துடன்அல்லது ரசம் அல்லது சாம்பார் அல்லது தயிர் சாதத்துடன் சேர்த்து பறிமாறுங்கள்.

  • சுவையான கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி?

    சுவையான கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி?

    கறிவேப்பிலை குழம்பு வைத்து சாப்பிட்டால் பித்ததிற்கு நல்லது. பெண்களுக்கு முடி நன்கு வளரும். குழந்தை பிறந்த காலத்தில் தாய்மார்களுக்கு கறிவேப்பிலை குழம்பு நல்லது.

    தேவையான பொருட்கள் :

    பூண்டு, வெந்தயம், சோம்பு

    நல்ல எண்ணெய்

    கடுகு

    தக்காளி

    மஞ்சள்தூள்

    உப்பு

    மிளகாய் தூள்

    கறிவேப்பிலை

    புளி தண்ணீர்

    செய்முறை:

    கறிவேப்பிலை குழம்பு

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, சோம்பு மற்றும் வெந்தையம் போட்டு பொரிந்த உடன் நருக்கிய பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.

    வதைக்கிகொண்டுருக்கும்போதே உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். 5 நிமிடம் ஆனபின் மிக்சியில் நன்கு அரைத்த தக்காளி மற்றும் கருவேப்பில்லையை சேர்த்து வதக்கவும்.

    சிறிது நேரம் கழித்து புளி தண்ணீரை அதனுடன் சேர்த்து கலக்கவும். இதனுடன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து 15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

    குறிப்பு: இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் மதிய உணவிற்கும் பரிமாறலாம்.

  • இந்தியன் ஸ்டைல் காளான் ஆம்லெட் செய்வது எப்படி?

    காளான் ஆம்லெட் மிகவும் ருசியானது, தயாரிக்க எளிதானது.  நீங்கள் அதை காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு வைத்திருக்கலாம். இது ரொட்டி, சாதத்திற்கு சேர்த்து உணவருந்தலாம்.

    காளான்கள் கால்சியத்தின் வளமான மூலமாகும், மேலும் அவை நமது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகின்றன. எனவே முடிந்தவரை அவற்றை நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. எளிதான காளான் ஆம்லெட்டை எவ்வாறு தயாரிப்பது என்பதை இன்று நாம் கற்றுக்கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை – 2

    நீர் – 2 தேக்கரண்டி

    தேவைக்கேற்ப மிளகு தூள்

    உப்பு – ஒரு சிட்டிகை

    பொத்தான் காளான்கள் – 6-8 அல்லது (100 கிராம்)

    எண்ணெய் – 3 தேக்கரண்டி

    வெங்காயம் – 1/3 கப்

    பூண்டு கிராம்பு – 3 துண்டு துண்டாக வெட்டப்பட்டது

    மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி

    தேவைக்கேற்ப உப்பு

    உலர்ந்த வெந்தயம் இலைகள் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)

    செய்முறை:

    காளான்களை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்க்கவும். வெங்காயம் வெளிப்படையாக (கண்ணாடி பதமாக) மாறும் வரை வதக்கவும்.

    வெட்டப்பட்ட காளான்களுடன், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.

    காளான்கள் நிறைய தண்ணீரை வெளியேற்றும், அனைத்து நீரும் ஆவியாகி, கலவை வறண்டு போகும் வரை மிதமான வெப்பத்தில் சமைக்கவும்.

    தேவையான உப்பு மற்றும் உலர்ந்த வெந்தயம் இலைகளைச் சேர்க்கவும் வெந்தயம் இல்லாமல் உங்களுக்கு விருப்பமான எந்த மூலிகையையும் நீங்கள் சேர்க்கலாம்.

    இந்தியன் ஸ்டைல் காளான் ஆம்லெட் செய்வது எப்படி?
    Indian Style Mushroom Omelet

    ஒரு பாத்திரத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊத்தவும், சிறிது உப்பு, 2 தேக்கரண்டி தண்ணீர் மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.

    நீங்கள் குமிழ்கள் கிடைக்கும் வரை ஒரு முட்கரண்டி கொண்டு அடிக்கவும். ஒரு தவாவை எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    சூடானதும், முட்டை கலவையை ஊற்றி, வெப்பத்தை குறைக்கவும்.

    ஆம்லெட் சிறிது சமைத்ததும், காளான் கலவையை ஆம்லெட் முழுவதும் பரப்பி சிறிது அழுத்தவும். சில விநாடிகள் சமைக்கவும்.

    நீங்கள் விரும்பினால், நீங்கள் அதை மறுபுறம் புரட்டலாம் அல்லது அதை மடித்து இன்னும் சில விநாடிகள் சமைக்கலாம்.

    ஆம்லெட்டை ஒரு தட்டில் எடுத்து, ரொட்டி அல்லது சாதத்துடன் சூடாக பரிமாறவும்.

    சுவையான சத்தான காளான்  ஆம்லெட் ரெடி.

  • வீடே மணக்கும் நெய் சாதம்.. அற்புதமாக செய்யுங்கள்..!!

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. தினமும் சாம்பார், காரக்குழம்பு என்று சமைக்காமல் ஒரு நாள் மாறாக நெய் சாதம் செய்து பாருங்கள். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. நெய் சாதம் செய்வது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்:

    சீரகம் – 1 ஸ்பூன்

    கறிவேப்பிலை – சிறிதளவு

    பட்டை -2

    கிராம்பு – 2

    நெய் – 2 அல்லது 3 ஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

    கொத்தமல்லி, புதினா – சிறிதளவு

    ப மிளகாய் – தேவையென்றால் சேர்க்கவும்

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் 2 கப் அரிசி சேர்த்து சாதமாக வடித்து ஒரு பௌலில் சாதத்தை கொட்டி ஆற விட வேண்டும். அப்படி செய்தால் சாதம் உதிரி உதிரியாக கிடைக்கும்.

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் நெய் 2 அல்லது 3 ஸ்பூன் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.

    பிறகு அதில் வாசனைக்காக பட்டை, கிராம்பு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து வறுத்து கொள்ளவும்.

    பொன்னிறமாக வறுத்த பிறகு வடித்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து பத்து நிமிடம் கிளற வேண்டும்.

    கடைசியில் கொத்தமல்லியை தூவி இறக்கினால் சுவையான நெய் சோறு தயார். இப்போ சுடசுட நெய் சாதத்தை பறிமாறி அசத்துங்க.

  • சுவையாக நண்டு தொக்கு இப்படி செய்து அசத்துங்க..!

    நண்டு என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க முடியாது, அட்டகாசமான சுவை நாக்கில் அப்படியே வைத்திருக்க கூடிய குணம் கொண்ட நண்டை வைத்து எவ்வாறு தொக்கு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    நண்டு

    பெரிய வெங்காயம்

    தக்காளி

    பச்சை மிளகாய்

    இஞ்சி பூண்டு விழுது

    உப்பு

    எண்ணெய்

    மஞ்சள் தூள்

    மல்லி தூள்

    மிளகாய் தூள்

    மிளகுத்தூள்

    கருவேப்பிலை

    செய்முறை

    முதலில் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் இஞ்சி பூண்டு விழுதையும் அதனுடன் பச்சை மிளகாயையும் இரண்டாக உடைத்து போட்டு நன்றாக வதக்கவும்.

    இவை இரண்டின் பச்சை மணம் போனதும் வெட்டி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து அதற்காக சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் ஆகியவை சிறிதளவு சேர்த்துக் கொண்டு நன்றாக கிளறி விடவும்.

    பின், ஏற்கனவே சுத்தம் செய்து வைத்துள்ள நண்டுகளை துண்டு துண்டாக உடைத்து இந்த மசாலா கலவையில் போட்டு நன்கு கிளற வேண்டும். இரண்டு நிமிடம் மட்டும் மசாலாவில் அப்படியே வேக வைத்து விட்டு, ஒரு டம்ளர் மட்டும் தண்ணீர் விட்டு மூடி வைத்து ஒரு பத்து நிமிடம் வேக வைக்கவும்.

    நன்கு வெந்ததும் நண்டில் உள்ள நீர் வெளியேறும் அந்த நீரே சுவையை கொடுக்கும். எனவே அதிக அளவில் நீர் பயன்படுத்த தேவையில்லை நன்கு கிளறி விட்டு லேசாக கருவேப்பிலை தூவி அடுப்பை அணைத்து விட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான நண்டு தொக்கு தயார்.

  • நாவூறும் சுவையில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

    நாவூறும் சுவையில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

    ஊறுகாய் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். இன்று உடனே செய்யக்கூடிய நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    நெல்லிக்காய் – 10

    மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

    டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1

    டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4

    வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

    கடுகு   – 1/4 டீஸ்பூன்

    கல் உப்பு     – தேவையான அளவு

    செய்முறை :

    இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி இட்லி அவிப்பது போன்று நெல்லிக்காயை நன்று அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரில் போட்டு அவித்தல் அதன் சத்துக்கள் தண்ணீரில் சென்றுவிடும்.

    சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை சட்டியில் இருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.

    இப்போது நெல்லிக்காயையும், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு ஆகியவற்றையும் போட்டு, 5 நிமிடங்கள் வதக்கவேண்டும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.

    வெறும் கடாயில் வெந்தயத்தையும் கடுகையும் போட்டு இலேசாக வறுத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

    அதே வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்த பின் பிசறி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். ஒரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர், வெந்தய, கடுகு பொடியை தூவி நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

    சூப்பரான உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

  • நாவூறும் சுவையில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி!!

    நாவூறும் சுவையில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி!!

    ஊறுகாய் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். இன்று உடனே செய்யக்கூடிய நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    நெல்லிக்காய் – 10

    மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

    டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1

    டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4

    வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

    கடுகு   – 1/4 டீஸ்பூன்

    கல் உப்பு     – தேவையான அளவு

    செய்முறை :

    இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி இட்லி அவிப்பது போன்று நெல்லிக்காயை நன்று அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரில் போட்டு அவித்தல் அதன் சத்துக்கள் தண்ணீரில் சென்றுவிடும்.

    சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை சட்டியில் இருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.

    இப்போது நெல்லிக்காயையும், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு ஆகியவற்றையும் போட்டு, 5 நிமிடங்கள் வதக்கவேண்டும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.

    வெறும் கடாயில் வெந்தயத்தையும் கடுகையும் போட்டு இலேசாக வறுத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

    அதே வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்த பின் பிசறி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். ஒரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர், வெந்தய, கடுகு பொடியை தூவி நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

    சூப்பரான உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

  • மீந்து போன இட்லி வைத்து சூப்பரான பக்கோடா செய்யலாம்!!

    காலை சாப்பாடு முடிந்து இட்லி மீதம் இருந்தால் பொதுவாக உப்புமா செய்வோம் ஆனால் மொறுமொறுன்னு சூப்பரான சுவையில் பக்கோடா செய்து சாப்பிட்டு பாருங்களேன்!.

    நீங்கள் இன்னும் முயற்சி செய்யவில்லை என்றால், இப்போது நான்கு இட்லிகளை வைத்து முயற்சிக்கவும்.

    தேவையான  பொருட்கள்:

    1.  மீந்துபோன இட்லி                  –            4

    2.  நறுக்கிய                                 –    வெங்காயம் அரை கப்

    3.  பச்சை மிளகாய்                     –          1

    4.  இஞ்சி துண்டுகள்              –     ஒரு இஞ்ச்

    5.  அரை டீஸ்பூன்                     –          சோம்பு

    6.  கொத்தமல்லி                      –    இலைகள் நறுக்கியது

    7.  ஒரு டீஸ்பூன்                     –     மிளகாய் பொடி

    8.  கால் டீஸ்பூன்               –            மஞ்சள் பொடி

    9.  தேவையான                      –       அளவு உப்பு

    10.  கடலை மாவு                      –         அரை கப்

    செய்முறை :

    இட்லி பக்கோடா செய்ய முதலில் நான்கு மீதி இட்லிகளை எடுத்துக் கொள்ளவும். உங்களிடம் எவ்வளவு இருந்தாலும், அதற்கேற்ப பொருட்களையும் கூட குறைத்துக்கொள்ளலாம்.

    நான்கு இட்லிகளை சிறு துண்டுகளாக நறுக்கவும். பின் மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். மிக்ஸியை ரொம்ப நேரம் ஓட விடக்கூடாது.

    இதனுடன் ஒரு கப் கடலை மாவு சேர்க்கவும். ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்தால் தான் மிருதுவாக இருக்கும்.

    மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். இட்லியில் ஏற்கனவே உப்பு இருப்பதால் கால் ஸ்பூன் குறைவாக உப்பு சேர்க்கவும்.

    பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து, தோல் நீக்கி, நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். இரண்டு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். சுவைக்காக சோம்புடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

    பிறகு நறுக்கிய கருவேப்பிலை இலைகளை சேர்க்கவும். இப்போது தண்ணீர் சேர்க்காமல் கைகளால் நன்கு கலக்கவும்.

    இது பக்கோடா மாவுக்கு ஈரமான அமைப்புடன் கெட்டியாக வரும். அஅனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்த பின் அப்படியே வைக்கவும்.

    பிறகு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் கொதித்ததும் மிதமான தீயில் வைத்து மாவை சிறு சிறு பக்கோடாக்களாக போட்டு எடுக்கவும்.

    எல்லா புறமும் பொன்னிறமாக வர புரட்டி போட்டு எடுத்து பரிமாறவும்!

  • இட்லிக்கு கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி!

    கத்தரிக்காய் கடையல் இட்லிக்கு ஏற்ற குழம்பு. காலையில் எந்த பதற்றமும் இல்லாமல் நிதானமாக சமைக்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    *. கத்தரிக்காய் – 5
    *. சிறு பருப்பு – 1/4 கப்
    *. சின்னவெங்காயம் – 6
    *. தக்காளி – 1
    *. பூண்டு – 3
    *. மஞ்சள் பொடி – 1/4 tsp
    *. பச்சை மிளகாய் – 5
    *. புளி சிறிய – நெல்லிக்காய் அளவு
    *. கறிவேப்பிலை – சிறிதளவு
    *. உப்பு – தேவையான அளவு

    தாளிக்க
    *. எண்ணெய் – 1 tsp
    *. வெங்காயம் – 1
    *. கொத்தமல்லி – சிறிதளவு

    செய்முறை

    புளியை ஊற வைத்துக்கொள்ளுங்கள். சிறு பருப்பை 10 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள். அதற்குள் காய்கறிகளை நறுக்கிக் கொள்ளுங்கள்.

    பின் குக்கரில் பருப்பை கழுவிக் கொட்டுங்கள். அடுத்ததாக கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு என அனைத்தையும் ஒன்றாகக் கொட்டி ஒரு கப் தண்ணீர் ஊற்றுங்கள். குக்கரை மூடிவிட்டு அடுப்பில் வையுங்கள்.

    3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். பிரஷர் இறங்கியதும் மூடியைத் திறந்து உப்பு சேர்த்து மத்து வைத்து கடைந்துகொள்ளுங்கள்.

    கத்தரிக்காய் கடையல் செய்வது எப்படி

    பின் புளித்தண்ணீர் ஊற்றி கலந்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள். அதற்குள் இடையில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டுங்கள்.

    இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் கத்தரிக்காய் கடையல் தயார்.

    இதையும் செய்யலாமே!: கத்திரிக்காய் துவையல் செய்வது எப்படி!!