Category: Dosa

  • சிறுதானிய தோசை செய்வது எப்படி?

    இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் தங்களின் நிதித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இயந்திர உலகில் பயணிக்கின்றனர். நம் வாழ்வில் நோய் நொடி இல்லாமல், நம் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாமல், நமக்குப் பிடித்த பொருட்களை வாங்கி, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக உழைக்கிறோம்.

    ஆம், குறிப்பாக ஆரோக்கியமான உணவை பின்பற்றுவதில்லை. புரோட்டோ, பீட்சா, பர்கர் போன்ற பிரபலமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை கடைகளில் அதிகம் சாப்பிடுகிறோம். இதனால், அதிக விலை கொடுத்து, சுகாதார சீர்கேடுகளை சந்திக்கிறோம்.

    ஒருபுறம், சிலர் இந்த விளைவைத் தவிர்க்க சிறு தானியங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். சிறுதானியக் கடைகளும் ஆங்காங்கே பெருகி வருகின்றன. இந்தச் சூழலில் நீங்கள் இன்னும் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், சிறு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சில உணவுப் பொருட்களை உங்கள் வாடிக்கையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    இன்று சிறு தானியங்களில் தோசை செய்வது எப்படி? என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

    சிறுதானிய தோசை:

    கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, வரகு, குதிரைவாலி போன்ற எண்ணற்ற சிறுதானியங்கள் உள்ளது. இவற்றில் ஏதையாவது ஒன்றை வைத்து நீங்கள் உங்களது வீட்டிலேயே சிறு தானிய தோசை செய்ய முடியும்.

    தேவையானப் பொருட்கள்

    சிறுதானியங்களில் ஏதாவது ஒன்று – 1 கப்

    அரிசி – 2 கப்

    உளுந்து – அரைகப்

    சீரகம்- 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை – சிறிதளவு

    எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு

    செய்முறை

    சிறுதானிய தோசை செய்வதற்கு முதலில் 2 கப் அரிசி, வரகு அல்லது, கேப்பை போன்ற சிறுதானியம் 1 கப், உளுந்து அரை கப் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஊறவைத்துக் கொள்ளவும்.

    இதையடுத்து கிரைண்டர் அல்லது மிக்ஸியில் நன்கு மாவு பதத்திற்க அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் புளிக்க வைத்தால் போது சிறுதானிய தோசை மாவு ரெடி.

    மாவு புளித்து வந்ததும், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வழக்கம் போல் தோசை மாவு போன்று ஊற்றி எண்ணெய் ஊற்றி எடுத்தால் போதும். சுவையான சிறுதானிய தோசை ரெடி. ஒருவேளை நீங்கள் மாவு அரைக்கவில்லையென்றால், சிறுதானிய மாவை கலந்தும் சுடலாம்.

    குறிப்பு – ஒரு சிறுதானியத்தை மட்டும் வைத்துத் தான் தோசை செய்ய வேண்டும் என்பதில்லை. நவதானியங்களை அனைத்தும் மாவாக அரைத்து வழக்கமான தோசை மாவுடனும் கலந்தும் சுடலாம்.

  • தக்காளி தோசை செய்வது எப்படி?

    தோசை தென்னிந்தியாவின் பழமையான உணவுகளில் ஒன்றாகும். இவை மிகவும் பிரபலமான மற்றும் அதிகமான நபர்களால் விரும்பி உண்ணும் காலை உணவு. இதை மிக எளிதாக செய்யலாம்.

    தோசையில் கொழுப்பை உண்டாக்கும் பொருட்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எதுவும் இல்லை. மேலும் அவை செய்ய எளிமையான மற்றும் எளிதான உணவு.

    தோசையில் பல வகைகள் உள்ளன, இன்று நாம் இங்கு காண இருப்பது மிகவும் சுவையான மற்றும் தனித்துவமான தக்காளி தோசையாகும். உங்கள் அறிவார்ந்த பசியையும் திருப்திப்படுத்த ஒரு சுவாரஸ்யமான தோசை வரலாற்றைக் கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படித்து செய்துபாருங்கள்.

    தேவையான பொருட்கள்

    3/4 cup கப் அரிசி

    1/2 cup உளுத்தம் பருப்பு

    3 தக்காளி

    6 காய்ந்த மிளகாய்

    2 பூண்டு பல்

    தேவையான அளவு கொத்தமல்லி

    1/2 tblsp கல்லுப்பு

    தேவையான அளவு நெய்

    செய்முறை

    தக்காளி தோசை செய்வது எப்படி:

    முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    அடுத்த தக்காளி மற்றும் பூண்டை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    2 மணி நேரம் கழித்து தண்ணியை நன்கு வடித்து அதை மிக்ஸியில் போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, பூண்டு, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், மற்றும் கல்லுப்பை போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து சுமார் ஒரு மணி நேரம் வரை நன்கு ஊற வைக்கவும்.

    ஒரு மணி நேரம் கழித்து அந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அதை கரைத்துக் கொள்ளவும்.

    அடுத்து pan ஐ அடுப்பில் வைத்து அதில் அரை ஸ்பூன் அளவு நெய் விட்டு அதை சூடாக்கவும்.

    Pan சூடானவுடன் அதில் தோசையை ஊற்றி அதை சுற்றி ஒரு ஸ்பூன் அளவு நெய் விட்டு சற்று நேரம் வேக விடவும்.

    தோசை லேசாக பொன்னிறம் ஆனதும் அதை திருப்பிப் போட்டு சற்று நேரம் வேக விடவும்.

    தோசை வெந்ததும் அதை சுடச்சுட ஒரு தட்டில் எடுத்து வைத்து உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் அதை பரிமாறவும்.

  • தேங்காய் பால் ஆப்பம் செய்வது எப்படி?

    ஆப்பம் தென்னிந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமான காலை உணவாகும். இவை மிகவும் பிரபலமான மற்றும் குறிப்பாக தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு. ஆப்பத்தில் பல வகைகள் உள்ளன.

    அவற்றுள் குறிப்பிடத்தக்கவை சாதாரண ஆப்பம், தேங்காய் ஆப்பம், இடியாப்பம், முட்டை ஆப்பம், அச்சா ஆப்பம், நெய் ஆப்பம். இன்று நாம் இங்கு நாம் காண இருப்பது பார்ப்பது தேங்காய் பால் ஆப்பம்.

    தேங்காய்ப்பால் ஆப்பம் பற்றிய பெரிய விஷயம் என்னவென்றால், பலர் நினைப்பதை விட இது மிகவும் எளிதானது. இன்றைய இயந்திரமயமான உலகில் கடைகளில் கிடைக்கும் மாவை உடனுக்குடன் பயன்படுத்துவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    அந்த வகையில், கடையில் இருந்து ஆப்பம் செய்ய நாம் பயன்படுத்தும் மாவையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதிக வேலை இல்லாமல் வீட்டிலேயே மிக எளிதாக தயாரிக்கலாம். அதுமட்டுமின்றி தேங்காய்ப்பால் ஆப்பம் உடலுக்கும் மிகவும் நல்லது.

    உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு தேங்காய் எண்ணெயுடன் ஆப்பம் அல்லது இடியப்பம் சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஏனெனில் தேங்காய்ப்பால் ஆப்பம் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

    மேலும் தேங்காய் பால் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக வயிற்றுப்புண்களுக்கு இது நல்லது. அதனால்தான் அப்பம் பெரும்பாலும் தேங்காய்ப் பாலுடன் பரிமாறப்படுகிறது.

    தேவையான பொருட்கள்

    இட்லி அரிசி 1 கப்

    பச்சரிசி 2 கப்

    துருவிய தேங்காய் 1 கப்

    தேங்காய் 1

    உளுத்தம் பருப்பு 1 மேஜைக்கரண்டி

    வெந்தயம் ½ மேஜைக்கரண்டி

    ஏலக்காய் தூள் ½ மேஜைக்கரண்டி

    சர்க்கரை ½ மேஜைக்கரண்டி

    உப்பு தேவையான அளவு

    செய்முறை

    தேங்காய் பால் ஆப்பம் செய்வது எப்படி:

    ஆப்பம் செய்வதற்கு முந்தைய நாளில் இட்லி அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, மற்றும் வெந்தயத்தை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 4 மணி நேரம் வரை ஊற விட்டு பின்பு அவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரிலோ அல்லது கிரைண்டரிலோ போட்டு நன்கு நைஸாக அரைத்து கொள்ளவும்.

    இப்பொழுது தேங்காய் பால் செய்வதற்கு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் அரை மேஜைக்கரண்டி அளவு ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

    அடுத்து இந்த அரைத்த தேங்காயை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி அதிலிருக்கும் தேங்காய் பாலை பிரித்தெடுத்து அதை ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    பிறகு நாம் அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் சர்க்கரை, சிறிதளவு உப்பு, மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் தேங்காய் பாலை கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஊற்றி அதை தோசை மாவை விட சிறிதளவு கெட்டியான பதத்திற்கு கொண்டு வரவும். (மாவு அதிகம் கெட்டியாக இருந்தால் அது சீக்கிரமாக புளிக்காது.)

    பின்னர் மாவு இருக்கும் பாத்திரத்தில் ஒரு மூடியை போட்டு அதை அப்படியே வைத்து சுமார் 6 லிருந்து 8 வரை புளிக்க விடவும்.
    8 மணி நேரத்திற்கு பிறகு மூடியை திறந்து பார்த்தால் மாவு நன்கு பொங்கி வந்திருக்கும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய்யை தடவி அதை சுட வைக்கவும்.

    கடாய் சிறிது சூடானதும் அதில் ஒரு கரண்டி அளவு மாவை எடுத்து ஊற்றி கடாயை ஒரு இடுக்கியின் மூலமோ அல்லது ஒரு துணியின் மூலமோ பிடித்து பக்குவமாக சுற்றி மாவை பரப்பி விடவும்.

    பிறகு கடாயில் ஒரு மூடியை போட்டு அதை சுமார் 1 லிருந்து 2 நிமிடம் வரை வேக விடவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு தேங்காய் பால் ஆப்பத்தை ஒரு தட்டில் எடுத்து வைத்து அதில் தேங்காய் பாலை ஊற்றி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் உடம்புக்கு மிகவும் நன்மையான ஆப்பம் தேங்காய் பால் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • பீட்ரூட் தோசை செய்வது எப்படி?

    தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும். தோசையில் பல வகைகள் உண்டு. அதில் பன்னீர் தோசை, வெங்காய ரவா தோசை, முட்டை தோசை, பொடி தோசை, மசாலா தோசை, கொத்தமல்லி தோசை, அடை தோசை போன்றவை மிகவும் பிரபலமானவை.

    எனவே இன்று இங்கு நாம் காண இருப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் தோசை. உணவு பிரியர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    பீட்ரூட் தோசை வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையுடன் அவர்களின் சமையல் பாணிக்கு ஏற்ப செய்து சுவைக்கிறார்கள்.

    தேவையான பொருட்கள்

    துருவிய பீட்ரூட் – ஒரு கையளவு

    இஞ்சி – 1/2 துண்டு

    காய்ந்த மிளகாய் – 3

    உப்பு – தேவையான அளவு

    தோசை மாவுக்கு

    1/2 கப் பச்சை அரிசி

    1/2 கப் புழுங்கல் அரிசி

    1/4 கப் உளுத்தம் பருப்பு

    செய்முறை

    பீட்ரூட் தோசை செய்வது எப்படி:

    தோசை செய்வதற்கு முந்தைய நாள் ஒரு bowl ல் இட்லி அரிசி மற்றும் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    3 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை எடுத்து கிரைண்டரில் போட்டு அதை சிறிது அரைத்த பின் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை போட்டு அரைக்கவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலக்கி அதை சுமார் 8 மணி நேரம் வரை room temperature யில் புளிக்க விடவும்.

    ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள் அவற்றில் பீட்ரூட், இஞ்சி, காய்ந்த மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    இவ்வாறு அரைத்த கலவையை தோசை மாவில் நன்கு கலத்து மாவு முழுவதும் பீட்ரூட் பேஸ்ட் கலந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

    இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.

    தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பீட்ரூட் கலந்த தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் தோசைக்கல்லில் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும்.

    இப்பொழுது உங்களுக்கு சூடான மற்றும் மிகவும் சுவையான பீட்ரூட் தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • கொத்தமல்லி தோசை செய்வது எப்படி?

    தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும். தோசையில் பல வகைகள் உண்டு. அதில் பன்னீர் தோசை, வெங்காய ரவா தோசை, முட்டை தோசை, பொடி தோசை,  மசாலா தோசை, போன்றவை மிகவும் பிரபலமானவை.

    எனவே இன்று இங்கு நாம் காண இருப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கொத்தமல்லி தோசை. உணவு பிரியர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கொத்தமல்லி தோசை வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையுடன் அவர்களின் சமையல் பாணிக்கு ஏற்ப செய்து சுவைக்கிறார்கள்.

    தேவையான பொருட்கள்

    கொத்தமல்லி – ஒரு கையளவு

    பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப

    பூண்டு – இரண்டு பல்

    உப்பு – சிறிதளவு

    சீரகம் தூள் – 1/2 ஸ்பூன்

    தோசை மாவுக்கு

    1/2 கப் பச்சை அரிசி

    1/2 கப் புழுங்கல் அரிசி

    1/4 கப் உளுத்தம் பருப்பு

    செய்முறை

    கொத்தமல்லி தோசை செய்வது எப்படி:

    தோசை செய்வதற்கு முந்தைய நாள் ஒரு bowl ல் இட்லி அரிசி மற்றும் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    3 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை எடுத்து கிரைண்டரில் போட்டு அதை சிறிது அரைத்த பின் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை போட்டு அரைக்கவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலக்கி அதை சுமார் 8 மணி நேரம் வரை room temperature யில் புளிக்க விடவும்.

    ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் மொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு, உப்பு, சீரகம் தூள் ஆகியவற்றை செய்து பேஸ்ட்டு போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

    இவ்வாறு அரைத்த கலவையை தோசை மாவில் நன்கு கலத்து மாவு முழுவதும் கொத்தமல்லி பேஸ்ட் கலந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

    இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.

    தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் கொத்தமல்லி கலந்த தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் தோசைக்கல்லில் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும்.

    இப்பொழுது உங்களுக்கு சூடான மற்றும் மிகவும் சுவையான கொத்தமல்லி தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • முட்டை தோசை செய்வது எப்படி?

    வீட்டில் தோசை செய்ய திட்டமிடுகிறீர்களா? ஆனால் அதற்கு சைட் டிஷ் செய்ய பிடிக்கவில்லையா? எனவே உங்கள் வீட்டில் முட்டை இருக்கிறதா? அந்த முட்டையில் முட்டை தோசை செய்து சுவையாக சாப்பிடலாம். இந்த முட்டை தோசையை இரண்டு விதமாக செய்யலாம். இரண்டுக்கும் சைட் டிஷ் தேவையில்லை.

    முட்டை தோசையின் இரண்டு வகைகளை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இரண்டு வகையான முட்டை தோசைகள் உள்ளன. நீங்கள் விரும்பியபடி சாப்பிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்

    வெரைட்டி – 1

    தோசை மாவு

    முட்டை – 4

    வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

    பச்சை மிளகாய் – 2

    தக்காளி – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

    உப்பு – சுவைக்கேற்ப

    மிளகுத் தூள் – சுவைக்கேற்ப

    எண்ணெய் – தேவையான அளவு

    வெரைட்டி – 2

    தோசை மாவு – 2 கப்

    முட்டை – 3

    பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

    உப்பு – சுவைக்கேற்ப

    மிளகுத் தூள் – சுவைக்கேற்ப

    எண்ணெய் – தேவையான அளவு

    செய்முறை

    முட்டை தோசை செய்வது எப்படி:

    தோசை செய்வதற்கு முந்தைய நாள் ஒரு bowl ல் இட்லி அரிசி மற்றும் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    மற்றொரு bowl ல் உளுத்தம் பருப்பு, வெந்தயம், மற்றும் அரை மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பையும் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதையும் சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    3 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை எடுத்து கிரைண்டரில் போட்டு அதை சிறிது அரைத்த பின் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை போட்டு அரைக்கவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலக்கி அதை சுமார் 8 மணி நேரம் வரை room temperature யில் புளிக்க விடவும். தோசை மாவு தயார்.

    வெரைட்டி- 1

    முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் உப்பு, மிளகுத் தூள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.

    தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும். அதன் மேல் இந்த முட்டை கலவையை ஊற்றி பரப்பி, எண்ணெய் ஊற்றி, முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், முட்டை தோசை தயார்.

    வெரைட்டி – 2

    முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.

    தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும். அதன் மேல் கலந்து வைத்துள்ள முட்டையை பாதி ஊற்றி பரப்பி, மேலே சிறிது உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை தோசை தயார்.

    இதையும் செய்யலாம்!: அடை தோசை செய்வது எப்படி?

  • ரவா தோசை செய்வது எப்படி?

    தோசை என்பது தமிழர்களின் பாரம்பரிய உணவு. தமிழ் சமையல் முறையில் மிக நீண்ட வரலாறு உண்டு. தோசை என்பது தமிழ்நாட்டில் வாழும் பல குடும்பங்களின் காலை டிப்பன். இவை பொதுவாக சாம்பார், தேங்காய் சட்னி மற்றும் பருப்பு பொடியுடன் பரிமாறப்படும்.

    தோசையில் பல வகைகள் உண்டு. ப்ளைன் தோசை, கீ ரோஸ்ட், மசால் தோசை, ரவா தோசை, பன்னீர் தோசை, வெங்காய தோசை, கல் தோசை போன்றவை மிகவும் பிரபலம். இவை தமிழ்நாட்டில் உருவானவை என்றாலும் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டன.

    இந்தியாவில் இவை இல்லாத தென்னிந்திய உணவகங்களை நீங்கள் காண முடியாத அளவுக்கு அவை பிரபலமாக உள்ளன. அதுமட்டுமின்றி, இந்தியர்கள் அதிகம் உள்ள அமெரிக்கப் பகுதிகளிலும் அமெரிக்கர்களின் விருப்ப உணவாக இவை மாறிவிட்டன என்றால் மிகையாகாது.

    தேவையான பொருட்கள்

    1 கப் அரிசி மாவு

    1 கப் ரவை

    2 மேஜைக்கரண்டி மைதா மாவு

    2 மேஜைக்கரண்டி தயிர்

    1 பெரிய வெங்காயம்

    1 பச்சை மிளகாய்

    1 துண்டு இஞ்சி

    8 to 10 முந்திரி

    1/2 மேஜைக்கரண்டி மிளகு தூள்

    1/2 மேஜைக்கரண்டி சீரகத் தூள்

    1/4 மேஜைக்கரண்டி எள்

    1/4 மேஜைக்கரண்டி சர்க்கரை

    1 கை அளவு கொத்தமல்லி

    1 கை அளவு கருவேப்பிலை

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    செய்முறை

    முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் முந்திரியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரவை, மற்றும் மைதா மாவை கொட்டி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும் முந்திரியை சேர்த்து அதனுடன் மிளகு தூள், சீரகத் தூள், எள், தயிர், மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    இப்பொழுது அந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து முதலில் அதை நன்கு கட்டி தட்டாமல் கலந்து கொள்ளவும்.

    மாவை நன்கு கட்டி தட்டாமல் கலந்த பின்பு அதில் மேலும் தண்ணீர் சேர்த்து அதை நன்கு தண்ணியான பதத்திற்கு கொண்டு வந்து அதை சுமார் 20 லிருந்து 30 நிமிடம் வரை ஊற விடவும்.

    20 நிமிடத்திற்குப் பிறகு மாவு கட்டியாக ஆகியிருந்தால் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அதை தண்ணீர் பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு கலந்து விடவும்.

    பின்னர் ஒரு தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து ஒரு பெரிய வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி அந்த கல்லின் மீது வைத்து நன்கு தேய்த்து விடவும்.

    தோசைக்கல் சூடானதும் அதில் நாம் கரைத்து வைத்திருக்கும் மாவை சுத்தி நன்கு பரவலாக ஊற்றவும்.

    ஆங்காங்கே ஏற்படும் சிறு சிறு குழிகளிலும் தேவைப்பட்டால் சிறிதளவு மாவை ஊற்றி கொள்ளவும்.

    அடுத்து நாம் ஊற்றி வைத்திருக்கும் மாவை சுற்றி தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றவும். (நெய்யை விரும்புபவர்கள் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.)

    தோசை நன்கு பொன்னிறம் வரும் வரை அதை வேக விட்டு பொன்னிறம் வந்ததும் அதை ஒரு தோசை கரண்டியின் மூலம் எடுத்து மடித்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பொதுவாக ரவை தோசையை ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பிப் போட வேண்டிய அவசியமில்லை. எனினும் தேவைப்பட்டால் அதைத் திருப்பிப் போட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பான ரவா தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • மிக சுவையான மசாலா தோசை செய்வது எப்படி?

    தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும். தோசையில் பல வகைகள் உண்டு. அதில் பன்னீர் தோசை, வெங்காய ரவா தோசை, முட்டை தோசை, பொடி தோசை போன்றவை மிகவும் பிரபலமானவை.

    எனவே இன்று இங்கு இருப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மசாலா தோசை. உணவு பிரியர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    மசாலா தோசையிலேயே பல வகைகள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை பேப்பர் மசாலா தோசை, மெட்ராஸ் ஸ்பெஷல் மசாலா தோசை, கேரளா மசாலா தோசை, மற்றும் மைசூர் மசாலா தோசை.

    மசாலா தோசை வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையுடன் அவர்களின் சமையல் பாணிக்கு ஏற்ப செய்து சுவைக்கிறார்கள்.

    தேவையான பொருட்கள்:

    1/2 கப் இட்லி அரிசி

    1/2 கப் புழுங்கல் அரிசி

    1/4 கப் உளுத்தம் பருப்பு

    1/4 கப் அவல்

    2 பெரிய வெங்காயம்

    3 உருளைக்கிழங்கு

    4 பூண்டு பல்

    1 பச்சை மிளகாய்

    8 காஞ்ச மிளகாய்

    2 1/2 மேஜைக்கரண்டி கடலை பருப்பு

    1 1/2 மேஜைக்கரண்டி வெந்தயம்

    3 மேஜைக்கரண்டி சீரகம்

    1/4 மேஜைக்கரண்டி கடுகு

    1/4 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்

    1/2 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    சிறிதளவு கருவேப்பிலை

    சிறிதளவு கொத்தமல்லி

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு நெய்

    தேவையான அளவு உப்பு

    செய்முறை:

    தோசை செய்வதற்கு முந்தைய நாள் ஒரு bowl ல் இட்லி அரிசி மற்றும் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    மற்றொரு bowl ல் உளுத்தம் பருப்பு, வெந்தயம், மற்றும் அரை மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பையும் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதையும் சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    மற்றொரு bowl ல் அவலை போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதையும் சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    3 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை எடுத்து கிரைண்டரில் போட்டு அதை சிறிது அரைத்த பின் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை போட்டு அரைக்கவும்.

    பருப்பு சிறிது அரைபட்டதும் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் அவலையும் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலக்கி அதை சுமார் 8 மணி நேரம் வரை room temperature யில் புளிக்க விடவும்.

    8 மணி நேரத்திற்கு பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்டதும் அதில் 2 மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பு மற்றும் சீரகத்தை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு வெங்காயம், பூண்டு, மற்றும் காஞ்ச மிளகாயை போட்டு அதை நன்கு வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.

    பின்பு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை high flame ல் வைத்து அதில் உருளைக்கிழங்கு வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு சுமார் 25 லிருந்து 30 நிமிடம் வரை அதை வேக வைத்து எடுத்து மசித்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்டதும் அதில் கடுகு, கால் மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு, மற்றும் கால் மேஜைக்கரண்டி சீரகத்தை சேர்த்து கடுகு வெடிக்கும் போது அதில் பெருங்காயத் தூள் மற்றும் சிறிதளவு கருவேப்பிலை போட்டு அதை வறுக்கவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மீதமுள்ள ஒரு வெங்காயத்தையும் மற்றும் பச்சை மிளகாயையும் போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் நாம் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சிறிது நேரம் வேக விடவும்.

    பிறகு அதை இறக்குவதற்கு முன் சிறிதளவு கொத்தமல்லியை அதில் தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.

    தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும்.

    தோசை ஒரு புறம் வெந்ததும் அதை மறு புறம் திருப்பி போட்டு வேக விடவும்.

    பின்பு தோசையை திருப்பி போட்டு அதன் உள்புறத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியை எடுத்து நன்கு தடவிய பின் அதில் நாம் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து தோசையை மடித்து கல்லிலிருந்து எடுத்து தட்டில் வைத்து சுட சுட சாம்பார் சட்னியுடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான மசாலா தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • சுவையான மிருதுவான கர்நாடக ஸ்டைல் ​​செட் தோசை!

    செட் தோசை என்பது கர்நாடகாவின் மிகவும் பிரபலமான காலை உணவாகும். இது 3 தோசை , தேங்காய் சட்னி மற்றும் காய்கறி சாகுவுடன் வழங்கப்படுவதால் இது செட் தோசை என்று அழைக்கப்படுகிறது. இந்த தோசைகள் அளவில் சிறியவை, அடர்த்தியானவை, மென்மையானவை மற்றும் பஞ்சு போன்று இருக்கும்.  கர்நாடக   ஸ்டைலில்  ​​செட் தோசை  செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    இட்லி அரிசி / இட்லி புலுங்கல் அரிசி – 2 கப்

    உளுந்தம் பருப்பு – 1/2 கப்

    வெந்தயம் – 1 தேக்கரண்டி

    அவல் -1 கப் வென்றது

    உப்பு – தேவைக்கேற்ப

    தோசை தயாரிப்பதற்கான எண்ணெய்

    செட் தோசை செய்வது எப்படி:

    உளுந்தம் பருப்பு மற்றும் வெந்தய விதைகளை  5-6 மணி நேரம் கழுவி ஊற வைக்கவும்.

    அரிசியை 5-6 மணி நேரம் கழுவி ஊற வைக்கவும்.  அரைப்பதற்கு முன் 30 நிமிடங்கள் தனித்தனியாக ஊற வைக்கவும்.

    5 மணி நேரம் கழித்து  சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டில் அரிசி மற்றும் அவல் ஒன்றாக அரைக்கவும்.

    வெந்தய பருப்பை வெந்தயத்துடன் சேர்த்து ஒரு பஞ்சுபோன்ற இடிக்கு அரைக்கவும். மிக்சியில் அரைத்தால், உளுந்தம்  பருப்பை அரைக்க ஐஸ் தண்ணீரைப் பயன்படுத்தவும், இறுதியில் விப்பர் பட்டனை அழுத்தி சில நிமிடங்கள் பஞ்சுபோன்ற அரைக்கவும்.

    இப்போது அரிசி + அவல்  மற்றும் உளுந்தம் பருப்பு + வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ இருக்கக்கூடாது. உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    ஒரே இரவில் அல்லது 6-7 மணி நேரம் புளிக்க வைக்கவும். நொதித்தல் நேரம் வானிலை நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது.

    பிறகு மாவை எடுத்து சிறிய அளவிற்கு வட்டமாக பரப்பிவிடவும். இந்த தோசை கொஞ்சம் தடிமனாக இருந்தாலும் மென்மையாகவும், உத்தப்பம் போன்ற பஞ்சுபோன்றதாகவும் இருக்கும்.

    தோசையைச் சுற்றி ஒரு தேக்கரண்டி எண்ணெயைத் தூறவும். அதை ஒரு மூடியால் மூடி வைக்கவும்.

    மாவு மிகவும் தடிமனாக இருந்தால், தோசைகளை செய்யும் முன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

    மூலைகளைத் தூக்கியதைக் கண்டதும், தோசை மறுபுறம் புரட்டி, சில நிமிடங்கள் சமைக்கவும்.

    தோசையை எடுத்து, எந்த சட்னி அல்லது சாம்பார் அல்லது வாடா கறி அல்லது காய்கறி சாகுவுடன்  சேர்த்து பறிமாறலாம்.

    மென்மையான மற்றும் சுவையான செட் தோசை ரெடி.

  • இனிப்பு ராகி தோசை செய்வது எப்படி!!

    நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது. ஆம்! இந்த உணவு ஆரோக்கியமான உணவு.

    தேவையானவை:

    கேழ்வரகு மாவு – 200 கிராம்,

    வெல்லம் – 100 கிராம்,

    ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,

    அரிசி மாவு – 4 டீஸ்பூன்,

    நெய் – ஒரு கப்

    செய்முறை:

    வெல்லத்தைப் சிறிய துண்டுளாக உடைத்து கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்து கொள்ளுங்கள், வெல்லத்தில் மண் இருக்கலாம் அதனால் நன்கு வடிகட்டிக்கொள்ளவும்.

    வெல்ல தண்ணீருடன் கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். இதனுடன் அரிசி மாவு, ஏலப்பொடி சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    வெல்ல தண்ணீருடன் மாவு சேர்வதால் கட்டி இல்லாமல் கலந்துகொள்ளவும். அதன் பின் தோசைக்கல்லில் நெய் விட்டு, இந்த மாவை தோசையாக வார்த்து எடுக்கவும்.

    குறிப்பு:

    கேழ்வரகில் கார்போஹைட்ரேட்டும், வெல்லத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளன. இவை இரண்டுமே உடல் வளர்ச்சிக்குத் தேவையானவை. தொட்டுச் சாப்பிட ஏதும் தேவை இல்லை.