தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும். தோசையில் பல வகைகள் உண்டு. அதில் பன்னீர் தோசை, வெங்காய ரவா தோசை, முட்டை தோசை, பொடி தோசை,  மசாலா தோசை, போன்றவை மிகவும் பிரபலமானவை.

எனவே இன்று இங்கு நாம் காண இருப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கொத்தமல்லி தோசை. உணவு பிரியர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கொத்தமல்லி தோசை வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையுடன் அவர்களின் சமையல் பாணிக்கு ஏற்ப செய்து சுவைக்கிறார்கள்.

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி – ஒரு கையளவு

பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப

பூண்டு – இரண்டு பல்

உப்பு – சிறிதளவு

சீரகம் தூள் – 1/2 ஸ்பூன்

தோசை மாவுக்கு

1/2 கப் பச்சை அரிசி

1/2 கப் புழுங்கல் அரிசி

1/4 கப் உளுத்தம் பருப்பு

செய்முறை

கொத்தமல்லி தோசை செய்வது எப்படி:

தோசை செய்வதற்கு முந்தைய நாள் ஒரு bowl ல் இட்லி அரிசி மற்றும் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

3 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை எடுத்து கிரைண்டரில் போட்டு அதை சிறிது அரைத்த பின் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை போட்டு அரைக்கவும்.

பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலக்கி அதை சுமார் 8 மணி நேரம் வரை room temperature யில் புளிக்க விடவும்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் மொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு, உப்பு, சீரகம் தூள் ஆகியவற்றை செய்து பேஸ்ட்டு போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அரைத்த கலவையை தோசை மாவில் நன்கு கலத்து மாவு முழுவதும் கொத்தமல்லி பேஸ்ட் கலந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.

தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் கொத்தமல்லி கலந்த தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் தோசைக்கல்லில் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும்.

இப்பொழுது உங்களுக்கு சூடான மற்றும் மிகவும் சுவையான கொத்தமல்லி தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.