தக்காளி தோசை செய்வது எப்படி?

Written by

in

தோசை தென்னிந்தியாவின் பழமையான உணவுகளில் ஒன்றாகும். இவை மிகவும் பிரபலமான மற்றும் அதிகமான நபர்களால் விரும்பி உண்ணும் காலை உணவு. இதை மிக எளிதாக செய்யலாம்.

தோசையில் கொழுப்பை உண்டாக்கும் பொருட்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எதுவும் இல்லை. மேலும் அவை செய்ய எளிமையான மற்றும் எளிதான உணவு.

தோசையில் பல வகைகள் உள்ளன, இன்று நாம் இங்கு காண இருப்பது மிகவும் சுவையான மற்றும் தனித்துவமான தக்காளி தோசையாகும். உங்கள் அறிவார்ந்த பசியையும் திருப்திப்படுத்த ஒரு சுவாரஸ்யமான தோசை வரலாற்றைக் கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படித்து செய்துபாருங்கள்.

தேவையான பொருட்கள்

3/4 cup கப் அரிசி

1/2 cup உளுத்தம் பருப்பு

3 தக்காளி

6 காய்ந்த மிளகாய்

2 பூண்டு பல்

தேவையான அளவு கொத்தமல்லி

1/2 tblsp கல்லுப்பு

தேவையான அளவு நெய்

செய்முறை

தக்காளி தோசை செய்வது எப்படி:

முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

அடுத்த தக்காளி மற்றும் பூண்டை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2 மணி நேரம் கழித்து தண்ணியை நன்கு வடித்து அதை மிக்ஸியில் போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, பூண்டு, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், மற்றும் கல்லுப்பை போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து சுமார் ஒரு மணி நேரம் வரை நன்கு ஊற வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து அந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அதை கரைத்துக் கொள்ளவும்.

அடுத்து pan ஐ அடுப்பில் வைத்து அதில் அரை ஸ்பூன் அளவு நெய் விட்டு அதை சூடாக்கவும்.

Pan சூடானவுடன் அதில் தோசையை ஊற்றி அதை சுற்றி ஒரு ஸ்பூன் அளவு நெய் விட்டு சற்று நேரம் வேக விடவும்.

தோசை லேசாக பொன்னிறம் ஆனதும் அதை திருப்பிப் போட்டு சற்று நேரம் வேக விடவும்.

தோசை வெந்ததும் அதை சுடச்சுட ஒரு தட்டில் எடுத்து வைத்து உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் அதை பரிமாறவும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *