Blog

  • சுவையான முருங்கை கீரை வடை செய்வது எப்படி?

    வடை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. வடைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் மெது வடை, மசால் வடை, சாம்பார் வடை, தயிர் வடை, ரச வடை, கீரை வடை போன்றவை மிகவும் பிரபலம். பொதுவாக பலர் மேற்கண்ட வடைகளை தவறாமல் உண்டு மகிழ்வர்.

    நாம் பயன்படுத்தும் முருங்கை கீரையில் உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது என்பது முருங்கை வடையின் சிறப்பு. மேலும் மற்ற வடைகளைப் போல் எந்த சிரமமும் இல்லாமல் மிக எளிதாக செய்து விடலாம். அதுமட்டுமல்லாமல், அவை நமது வழக்கமான மாலை நேர சிற்றுண்டிகளுக்கு சிறந்த சத்தான மாற்றாகும்.

    தேவையான பொருட்கள்

    200 கிராம் கடலை பருப்பு

    1 கைப்பிடி அளவு முருங்கை கீரை

    1 பெரிய வெங்காயம்

    4 காய்ந்த மிளகாய்

    ½ துண்டு இஞ்சி

    1 மேஜைக்கரண்டி சோம்பு

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு கருவேப்பிலை

    செய்முறை

    முதலில் கடலை பருப்பை எடுத்து அதை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 2 மணி நேரம் வரை ஊற விடவும்.

    பின்பு வெங்காயம், முருங்கைக்கீரை, இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

    2 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பை எடுத்து அதை மீண்டும் ஒரு முறை நன்கு சுத்தம் செய்து அதில் இருக்கும் தண்ணீரை முற்றிலுமாக வடித்து விடவும்.

    அடுத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, காய்ந்த மிளகாய், சோம்பு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை கொர கொரப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும். (தேவைப்பட்டால் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.)

    பின்னர் அதை எடுத்து ஒரு bowl ல் கொட்டி அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் முருங்கைக்கீரையை சேர்த்து அதை நன்கு கலந்து பிணைந்து கொள்ளவும்.

    இப்பொழுது உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பை சேர்த்து கொள்ளவும்.

    பிறகு இந்த மாவில் இருந்து சிறிதளவு மாவை எடுத்து அதை உருண்டையாக உருட்டி அதை கையில் வைத்து ஒரு தட்டு தட்டி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமுள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை தட்டில் தயாராக வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த வடையை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப அதில் நாம் தட்டி வைத்திருக்கும் வடைகளை ஒவ்வொன்றாக போடவும்.

    அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.

    வடை இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சத்தான முருங்கைக்கீரை வடை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • வெஜிடபிள் மஞ்சூரியன் கிரேவி செய்வது எப்படி?

    பொதுவாகவே மஞ்சூரியன் பெரும்பாலானோரின் விருப்பமான உணவாகும். அவற்றில் சிக்கன் மஞ்சூரியன், முட்டை மஞ்சூரியன், கோபி மஞ்சூரியன், வெஜிடபிள் மஞ்சூரியன் போன்றவை மிகவும் பிரபலம்.

    இவற்றுடன் ஃபிரைடு ரைஸ், நாண் மற்றும் சப்பாத்தி ஆகியவை இருக்கும். அதனுடன் கேரட், முட்டையின் மஞ்சள் கரு, பீன்ஸ் போன்றவற்றைச் சேர்ப்பது உடலுக்கு நல்லது.

    காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகள் இப்படி சுவையாக செய்தால் தானாகவே சாப்பிடுவார்கள். மேலும் இது மிக எளிதாக செய்ய முடியும்.

    தேவையான பொருட்கள்

    1 கப் துருவிய கேரட்

    1 கப் துருவிய முட்டை கோஸ்

    10 to 12 பீன்ஸ்

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    2 மேஜைக்கரண்டி மைதா மாவு

    2 மேஜைக்கரண்டி சோள மாவு

    மிளகாய் தூள் தேவையான அளவு

    மிளகு தூள் தேவையான அளவு

    2 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்

    1 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்

    1 மேஜைக்கரண்டி சோயாசாஸ்

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    வெங்காயத்தாள் சிறிதளவு

    செய்முறை

    முதலில் கேரட், முட்டை கோஸ், பீன்ஸ், வெங்காயம், குடை மிளகாய், இஞ்சி, மற்றும் பூண்டை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு bowl ல் துருவிய கேரட், முட்டை கோஸ், பீன்ஸ், தேவையான அளவு மிளகாய் தூள், சிறிதளவு மிளகு தூள், தேவையான அளவு உப்பு, மைதா மாவு மற்றும் சோள மாவை ஒன்றாக போட்டு நன்கு கலக்கி கொள்ளவும்.

    அடுத்து இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (உருண்டை உடைந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிடிக்கவும்.)

    இப்பொழுது ஒரு வட சட்டியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை வட சட்டியின் அளவிற்கேற்ப போட்டு ஒரு பக்கம் பொன்னிறம் ஆனதும் மறுபக்கம் திருப்பி விட்டு பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போன பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் குடை மிளகாயை போட்டு சுமார் 3 நிமிடம் வரை வதக்கவும்.

    3 நிமிடத்திற்கு பிறகு அதில் தக்காளி சாஸ், சில்லி சாஸ், மற்றும் சோயா சாஸ் ஐ சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். (கிரேவியாக வேண்டுமென்றால் ஒரு மேஜைக்கரண்டி சோள மாவில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.)

    இப்பொழுது பொரித்து எடுத்து வைத்திருக்கும் உருண்டைகளை இதில் சேர்த்து பக்குவமாக உருண்டை உடைந்து விடாமல் கிளறி விடவும்.

    சுமார் 2 நிமிடம் வரை இதை வேக விட்டு இறக்குவதற்கு முன் சிறிதளவு வெங்காயத் தாள்களை அதில் தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான வெஜிடபிள் மஞ்சூரியன் கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி?

    தொக்கு என்பது இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு சைட் டிஷ் ஆகும். தொக்கு என்பது தென்னிந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் ஒரு சைட் டிஷ் ஆகும். தொக்கில் பல வகைகள் இருக்கிறது.

    இவற்றில் மிகவும் பிரபலமானவை இறால் தொக்கு, தக்காளி தொக்கு, கத்திரிக்காய் தொக்கு, புதினா தொக்கு, மாம்பழம் தொக்கு, கொத்தமல்லி தொக்கு மற்றும் நெல்லிக்காய் தொக்கு. இன்று நாம் இங்கு பார்ப்பது கொத்தமல்லிக் தொக்கு.

    பொதுவாக, நாம் அன்றாட வாழ்வில் தவறாமல் உண்ணும் உணவுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரே மாதிரியான உணவுகளை மீண்டும் மீண்டும் சாப்பிடும்போது ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படுவது சகஜம்.

    சலிப்படையாமல் இருக்க அவ்வப்போது வெவ்வேறு உணவுகளை முயற்சிக்கவும். அந்த வகையில் இந்த ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு நமது வழக்கமான உணவுகளுக்கு மாற்றாக உள்ளது.

    தேவையான பொருட்கள்

    2 கொத்தமல்லி கட்டு

    பெரிய எலுமிச்சம் பழம் சைஸ் புளி

    15 to 17 காஞ்ச மிளகாய்

    2 மேஜைக்கரண்டி வெல்லம்

    1 மேஜைக்கரண்டி கடுகு

    1 மேஜைக்கரண்டி வெந்தயம்

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    செய்முறை

    முதலில் கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து கழுவி ஆய்ந்து ஒரு தட்டில் வைத்து பரப்பி விட்டு அதை காய விடவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் புளியை ஊற வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொதிக்க வைக்கவும்.

    தண்ணீர் நன்கு கொதித்ததும் அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி அதில் புளியை போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விடவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் ஆய்ந்து வைத்திருக்கும் கொத்தமல்லியை போட்டு அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வதக்கவும். (கொத்தமல்லி இலை நன்கு சுருளும் வரை அதை வதக்கவும்.)

    3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு நாம் வதக்கிய கொத்தமல்லியை ஒரு தட்டில் கொட்டி அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.

    பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 6 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை வதக்கவும். (மிளகாய் நன்கு வதங்கி சிறிது நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.)

    காய்ந்த மிளகாய் சிறிது நிறம் மாறியதும் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் அதில் வெந்தயத்தை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வறுக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு கடாயில் இருக்கும் காய்ந்த மிளகாயை மட்டும் எடுத்து நாம் வதக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியுடன் சேர்த்து அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.

    கடாயில் இருக்கும் கடுகு மற்றும் வெந்தயத்தை எண்ணெய்யின் சூட்டிலேயே சிறிது நேரம் வைத்து பின்பு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.

    நாம் வதக்கிய அனைத்தும் ஆறியதை உறுதி செய்த பின் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை விட்டு விட்டு நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.

    பின்பு அதில் வெல்லத்தை எடுத்து அதை தட்டி போட்டு மீண்டும் நன்கு அரைத்து கொள்ளவும். (வெல்லம் விரும்பாதவர்கள் இதை போடாமல் தவிர்த்து விடலாம்.)

    பின்னர் அதில் கடாயில் இருக்கும் எண்ணெய்யை ஊற்றி மீண்டும் ஒரு சுற்று சுற்றி கொள்ளவும்.

    பிறகு கொத்தமல்லி தொக்கை எடுத்து சாதத்தில் போட்டோ அல்லது தோசைக்கு சைடிஷ் ஆக வைத்தோ அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அருமையான கொத்தமல்லி தொக்கு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழும்.

  • நாவிற்கு சுவையான வெங்காய சப்ஜி செய்வது எப்படி?

    விருந்துகளுக்கு வரும்போது, ​​நம்மில் பலர் வித்தியாசமாக ஏதாவது செய்து விருந்தினர்களை ஆச்சரியப்படுத்த விரும்புகிறோம். எனவே இன்று இங்கு நாம் காணவிருப்பது வெஜிடபிள் சப்ஜி என்ற வித்தியாசமான சைட் டிஷ்.

    வெங்காய சப்ஜி தயாரிக்க நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார்ச்சத்து, புரதம், நீர் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், எலும்பு வலிமையை அதிகரிக்கவும் உதவுகின்றன.

    இதில் நாம் பயன்படுத்தும் தக்காளியில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி மற்றும் கே ஆகியவை உள்ளன.இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும்.

    இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரதம், மாங்கனீஸ், வைட்டமின் சி மற்றும் பி6 உள்ளது. இவை இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

    தேவையான பொருட்கள்

    1/2 cup தயிர்

    2 பெரிய வெங்காயம்

    24 சின்ன வெங்காயம்

    2 தக்காளி

    3 பச்சை மிளகாய்

    7 பல் பூண்டு

    1 சிறு துண்டு இஞ்சி

    1/2 tsp மஞ்சள் தூள்

    2 tsp காஷ்மீர் மிளகாய் தூள்

    2 tsp மல்லி தூள்

    1 tsp சீரகம்

    1/2 tsp கருஞ்சீரகம்

    1 tsp பெருஞ்சீரகம்

    1 tsp கரம் மசாலா

    1/2 tsp பெருங்காய தூள்

    1 tsp கசூரி மேத்தி

    1 tsp உப்பு

    தேவையான அளவு கொத்தமல்லி

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு தண்ணீர்

    செய்முறை

    முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் பூண்டை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 1 tsp அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் கிராஸ் இட்டு வைத்திருக்கும் முழு சின்ன வெங்காயங்களை போட்டு வெங்காயம் சற்று பொன்னிறமாகும் வரை அதை வதக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    பின்பு அதே pan ல் மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 1 tsp அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் சீரகம், சோம்பு, கருஞ்சீரகம், பெருங்காயம், மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் சற்று நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் சற்று நிறம் மாறியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் அதில் மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள், மற்றும் உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வதக்கவும்.

    எண்ணெய் பிரிந்ததும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதில் இருக்கும் தண்ணீர் சற்று வற்றும் வரை அதை வதக்கவும்.

    தண்ணீர் சற்று வற்றிய பின் அதில் நன்கு அடித்த தயிரை சேர்த்து அதை கிளறி விடவும்.

    அடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வதக்கவும்.

    எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.

    ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து அதில் கரம் மசாலா மற்றும் கசூரி மேத்தியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    அடுத்து அதில் 1 cup அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 20 நிமிடம் வரை அதை வேக விடவும்.

    20 நிமிடத்திற்க்குப் பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.

    அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான வெங்காய சப்ஜி ரெடி. இதை உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • கொண்டைக்கடலை கிரேவி செய்வது எப்படி?

    இந்தியாவில் தினசரி பிரதான உணவாக குழம்பு சாதம் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் எல்லோர் வீட்டிலும் சாதத்தில் குழம்புடன் தயாரித்து சாப்பிடுவது வழக்கம். குழம்புகளில் பல வகைகள் உள்ளன. சாம்பார், பருப்பு குழம்பு, கறிவேப்பிலை, புளி குழம்பு, தக்காளி குழம்பு, வத்த குழம்பு, கத்தரிக்காய் குழம்பு போன்றவை.

    அப்படியானால் இன்று இங்கு இருப்பது வித்தியாசமான கொண்டைக்கடலை குழம்பு.

    கொண்டைக்கடலை கிரேவியின் விசேஷம் என்னவென்றால், அதற்கு கடலைப்பருப்பு, வெங்காயம் மற்றும் தக்காளி மட்டுமே தேவைப்படுவதால், வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு எளிதாக செய்யலாம்.

    கொண்டைக்கடலை உடலுக்கு மிகவும் தேவையான புரதச்சத்து நிறைந்துள்ளதால் நமது உடலுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல், அவை நமது வழக்கமான கிரேவிகளுக்கு சிறந்த மாற்றாகும்.

    தேவையான பொருட்கள்

    200 கிராம் கொண்டைக்கடலை

    2 பெரிய வெங்காயம்

    2 தக்காளி

    2 பச்சை மிளகாய்

    3 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    1 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    1 மேஜைக்கரண்டி அம்ச்சூர் தூள்

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் கொண்டைக்கடலை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைத்து பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கொண்டைக்கடலையை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் கொண்டைக்கடலை, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மற்றும் சிறிதளவு உப்பு போட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 3 லிருந்து 4 விசில் வரும் வரை வேக விடவும்.

    4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கொண்டைக்கடலையை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையில் இருந்து ஒரு கையளவு கொண்டைக்கடலையை எடுத்து போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
    எண்ணெய் சுட்ட பின் அதில் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.

    அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, அம்ச்சூர் தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி நன்கு மசியும் வரை அதை வேக விடவும்.

    தக்காளி நன்கு மசிந்தவுடன் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (சுமார் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

    பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை போட்டு நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும்.

    குழம்பு நன்கு கொதித்ததும் அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை பக்குவமாக சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்குப் பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு கொண்டைக்கடலை குழம்பை எடுத்து சாதத்தில் ஊற்றி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அருமையான கொண்டைக்கடலை குழம்பு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • சுவையான இந்திய ஸ்டைல் பாஸ்தா செய்வது எப்படி?

    பாஸ்தா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உணவாகும் மற்றும் பல உணவுப் பிரியர்களால் விரும்பப்படுகிறது. இவை இத்தாலிய சமையல் பாணியை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும், உலகம் முழுவதும் இதற்கு தனித்துவமான வரவேற்பு உள்ளது.

    குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே இது குறித்து ஒரு தனி மனப்பான்மை உள்ளது. இத்தாலியில் தோன்றிய இது, அதன் சிறந்த சுவை மற்றும் எளிமையான செய்முறை காரணமாக மெதுவாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.

    பாஸ்தாவுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. முதல் நூற்றாண்டிலேயே இன்றைய இத்தாலியில் வாழும் மக்களின் உணவின் ஒரு பகுதியாக அவை இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

    இத்தாலி மக்களின் பாரம்பரிய உணவாக இருப்பதால், உலகிலேயே அதிக பாஸ்தாவை உண்ணும் நாடு இத்தாலி. இத்தாலியில் வாழும் ஒருவர் சராசரியாக வருடத்திற்கு 27 கிலோ பாஸ்தா சாப்பிடுகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

    பாஸ்தாவின் சுவையை அதிகரிக்க தக்காளி சாஸ் சேர்ப்பதே உலகம் முழுவதும் பலரைச் சென்றடைந்ததற்குக் காரணம் என்கிறார்கள் சில உணவு நிபுணர்கள்.

    தேவையான பொருட்கள்:

    1 1/2 கப் பாஸ்தா

    2 பெரிய வெங்காயம்

    2 தக்காளி

    1/2 கப் கேரட்

    1/2 கப் பீன்ஸ்

    1 குடை மிளகாய்

    1 பச்சை மிளகாய்

    3 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    தேவையான அளவு மிளகாய் தூள்

    1/2 மேஜைக்கரண்டி மிளகு தூள்

    1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    1/2 மேஜைக்கரண்டி சீரக தூள்

    2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    செய்முறை:

    இந்திய ஸ்டைல் பாஸ்தா

    முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், குடை மிளகாய், மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாஸ்தாவை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீரை சுட வைக்கவும்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும். (பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காகவே நாம் எண்ணெய்யை சேர்க்கிறோம்.)

    பின்பு கொதித்து கொண்டிருக்கும் தண்ணீரில் பாஸ்தாவை போட்டு அதை அவ்வப்போது வெந்து விட்டதா என்று பார்த்துக் கொள்ளவும். (பொதுவாக இவை வேகுவதற்கு சுமார் 12 லிருந்து 15 நிமிடம் வரை ஆகும்.)

    பாஸ்தா வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஓரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், மற்றும் குடை மிளகாயை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு மூடி போட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு மீண்டும் மூடி போட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை அதை வேக விடவும்.

    3 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் மிளகுத் தூள், கரம் மசாலா, சீரக தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கி மீண்டும் மூடி போட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பாஸ்தாவை சேர்த்து அதை நன்கு மசாலாவோடு சேருமாறு கிளறி விடவும்.

    பின்பு இதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு தக்காளி சாஸ்சை சேர்த்து நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கி அதை சுட சுட ஒரு தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.

    இப்போழது உங்கள் சூடான மற்றும் சுவையான இந்தியன் ஸ்டைல் பாஸ்தா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • சுவையான பெப்பர் மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி?

    காளான் பொதுவாக பல வழிகளில் சமைத்து உண்ணப்படுகிறது. அதில் பெப்பர் மஷ்ரூம் கிரேவியும் ஒன்று. இவை சப்பாத்தி, பிரைடு ரைஸ், ரசம் சாதம் மற்றும் வெள்ளை சாதம் ஆகியவற்றுடன் பரிமாறுவது சிறந்தது. இதனுடன் சேர்க்கப்படும் காளானை தூள் துண்டுகளாக வெட்டி மாலை நேர சாண்ட்விச் ஸ்டஃபிங்காக பயன்படுத்தலாம்.

    காலையில் டிபனுக்கு சைட் டிஷ் ஆகவோ, மாலையில் சாண்ட்விச் ஆகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ செய்வது எளிது. காளான்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, குறிப்பாக வைட்டமின் டி, இது பெரும்பாலும் இறைச்சியில் மட்டுமே காணப்படுகிறது.

    காளான் மற்றும் மிளகு சேர்த்து செய்வதால் உடலுக்கும் மிகவும் சத்தானது. காளான்கள் சமைப்பதற்கு அதிக நேரம் எடுக்காததால் இவற்றைச் செய்வதும் மிகவும் எளிதானது. இப்போது மிளகு காளான் கிரேவிக்கான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை கீழே பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    2 பாக்கெட் பட்டன் மஷ்ரூம்

    2 பெரிய வெங்காயம்

    1 தக்காளி

    1 துண்டு இஞ்சி

    3 பூண்டு பல்

    மிளகாய் தூள் தேவையான அளவு

    1 மேசைக்கரண்டி தனியாதூள்

    1 மேசைக்கரண்டி மிளகு

    1 மேசைக்கரண்டி சோம்பு

    1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்

    எண்ணெய் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    கருவேப்பிலை சிறிதளவு

    செய்முறை:

    முதலில் மஷ்ரூம் ஐ ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும். (இவ்வாறு செய்தால் மஷ்ரூம் வெள்ளை நிறமாக மற்றும் சமைக்கும் வரை நிறம் மாறாமல் இருக்கும்.)

    அடுத்து மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, மற்றும் இஞ்சி பூண்டு ஐ ஒரு மிக்சியில் போட்டு பேஸ்ட் ஆக தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரை மேசைக்கரண்டி சோம்பு மற்றும் ஒரு மேசைக்கரண்டி மிளகு சேர்த்து சோம்பு சிறிது நிறம் மாறும் அளவிற்கு வறுக்கவும்.

    பின்பு அதை சிறுது நேரம் ஆற விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.

    பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 அல்லது 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை காய விடவும்.

    எண்ணெய் காய்ந்ததும் அரை மேஜைக்கரண்டி அளவு சோம்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை மற்றும் ஒரு பின்ச் அளவு உப்பையும் அதில் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் அளவிற்கு வதக்கவும்.

    பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
    அடுத்து அதில் தேவையான அளவு மிளகாய்த்தூள், தனியாத்தூள், நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பட்டன் மஷ்ரூம் ஐ சேர்த்து நன்கு பிரட்டி பின்பு அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து வேக விடவும்.

    மஷ்ரூம் ஐ கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். (தேவைப்பட்டால் மட்டுமே சிறுது அளவு தண்ணீர் தெளிக்கவும் ஏனென்றால் மஷ்ரூம் தண்ணீர் விடும் தன்மை கொண்டது.)

    மஷ்ரூம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள சோம்பு மற்றும் மிளகு துளை இதனுடன் சேர்த்து நன்கு பிரட்டவும். பின்பு இறக்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு சிறிதளவு கருவேப்பிலையை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான சுவையான மற்றும் சத்தான பெப்பர் மஷ்ரூம் கிரேவி தயார்.

    இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • மிகவும் சுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி?

    பாரம்பரிய செட்டிநாட்டு உணவுகள் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும். செட்டிநாட்டு உணவு வகைகளுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படியென்றால் இங்கு நாம் பார்ப்பது செட்டிநாடு வாழைக்காய் வறுவல்.

    இது செட்டிநாடு வாழை மீன் வறுவல் என்றும் அழைக்கப்படுகிறது.

    தமிழகத்தின் காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளில் நடைபெறும் திருமண விழாக்களில் இவை கட்டாயம் இருக்க வேண்டும். செட்டிநாட்டு வாழைக்காய் பொரியல் தயிர் சாதம் மற்றும் ரசம் சாதத்திற்கு அருமையான சைட் டிஷ் ஆகும். இவை தனியாகவும் மாலை நேர சிற்றுண்டியாகவும் உண்ணப்படுகின்றன.

    இவை பிரஞ்சு பொரியல்களைப் போலவே வெளியில் மிருதுவாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும், மேலும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    2 வாழைக்காய்

    1 பெரிய வெங்காயம்

    1 தக்காளி

    1/2 எலுமிச்சம் பழம்

    1/2 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    6 பல் பூண்டு

    2 துண்டு இஞ்சி

    1 மேஜைக்கரண்டி சோம்பு தூள்

    1/2 மேஜைக்கரண்டி சோம்பு

    1 துண்டு பட்டை

    சிறிதளவு கருவேப்பிலை

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு நெய்

    செய்முறை:

    முதலில் வாழைக்காயை நன்கு கழுவி தோலை சீவி அவரவர் விருப்பத்திற்கேற்ற வடிவில் நறுக்கி, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

    பின்பு அதில் சிறிதளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூள், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காயையும் போட்டு தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது அதை அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    பின்னர் தண்ணீரை வடிகட்டி விட்டு நாம் வேக வைத்த வாழைக்காய் துண்டுகளை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து அதை ஆற விடவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் சோம்பு தூள், தேவையான அளவு உப்பு, நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு எலுமிச்சை சாறை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அந்த மசாலாவில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் வாழைக்காய் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி அதை சுமார் 10 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விடவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் கடாயின் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் வாழைக்காயை 2 முறையாகவோ அல்லது 3 முறையாகவோ போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து அதை சூடாக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் பட்டை மற்றும் அரை மேஜைக்கரண்டி அளவு சோம்பை சேர்த்து வறுக்கவும்.

    சோம்பு வறுபட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் கருவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சிறிது வதங்கியதும் அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் வாழைக்காயை போட்டு பக்குவமாக நன்கு கிளறி விட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை அவ்வப்போது கிளறி விட்டு வேக விடவும்.

    5 நிமிடத்திற்குப் பிறகு அடுப்பை அணைத்து விட்டு வாழைக்காய் வறுவலை சுட சுட எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அறுசுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் தயார்.

  • வாழைக்காய் சிப்ஸ் செய்வது எப்படி?

    பொதுவாக, சிப்ஸ்கலுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் சிப்ஸ்கலின் மவுஸ் தனித்துவம் வாய்ந்தது என்றால் அது மிகையாகாது. எனவே இன்று நாம் இங்கு காண்பது பலவிதமான சிப்ஸ்களில் வாழைக்காய் சிப்ஸ் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சிப்களில் ஒன்றாகும்.

    வாழைக்காய் சிப்ஸ் பொதுவாக மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது கஞ்சிக்கு பக்க உணவாகவோ உண்ணப்படுகிறது. வாழைப்பழ சிப்ஸ் வெவ்வேறு பகுதிகளில் உள்ளவர்களால் வித்தியாசமாக செய்து சுவைக்கப்படுகிறது. உதாரணமாக, இவை தமிழ்நாட்டில் ஒரு முறையிலும், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் முற்றிலும் வேறுபட்ட வகையிலும் செய்யப்படுகின்றன.

    தமிழ்நாட்டில் வாழை சிப்ஸ் என்று அழைக்கப்படும் இவை ஈக்வடார், தாய்லாந்து மற்றும் பெருவில் சிபிலிஸ் என்றும், இந்தோனேசியாவில் கிரிபிக் பிசாங் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகளில் வாழைக்காய் சிப்ஸும் மிகவும் பிரபலம்.

    இப்போது வாழைக்காய் சிப்ஸ் தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை கீழே பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    2 வாழைக்காய்

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    1/4 மேஜைக்கரண்டி மிளகுத் தூள்

    1/4 மேஜைக்கரண்டி சீரக தூள்

    ஒரு கை அளவு கருவேப்பிலை

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    செய்முறை:

    முதலில் 2 வாழைக்காயை எடுத்து தோலை சீவி அதை தண்ணீரில் போட்டு அதனுடன் அரை மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து சுமார் அரை மணி நேரத்தில் இருந்து 40 நிமிடம் வரை ஊற விடவும்.

    40 நிமிடத்திற்கு பிறகு வாழைக்காயை எடுத்து அதை ரவுண்டாக சீவி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (வாழைக்காயை அப்படியே எண்ணெயின் மேலே வைத்து சீவி விட பழக்கப்பட்டவர்கள் நேரடியாகவும் வாழைக்காயை சீவி விடலாம்).

    அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சூடாக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் சீவி வைத்திருக்கும் வாழைக்காயை கடாயின் அளவிற்கேற்ப பக்குவமாக எண்ணெயில் போடவும்.

    பின்பு ஒரு கரண்டியின் மூலம் அதை நன்கு திருப்பி விட்டு கொண்டே இருக்கவும் அப்போது தான் அனைத்து புறங்களிலும் அது நன்றாக வெந்து வரும்.

    வாழைக்காய் சிப்ஸ் நன்கு வெந்ததும் அதை கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை வடித்து எடுத்து ஒரு bowl ல் போடவும்.

    மீதமுள்ள வாழைக்காயை போட்டு பொரித்து எடுப்பதற்கு எண்ணெய்யை, மீண்டும் மிதமான சூடான பதத்திற்கு கொண்டு வருவதற்கு சிறிது நேரம் எண்ணெய்யை சூடாக்கவும்.

    எண்ணெய் சுடுவதற்குல் நாம் பொரித்து எடுத்து வைத்திருக்கும் சிப்ஸ் சூடாக இருக்கும் போதே அதில் சீரக தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    மொத்தமாக பொரித்து எடுத்த பின் மசாலாவை அதில் சேர்ப்பதை தவிர்க்கவும் ஏனென்றால் சூடாக இருக்கும் போதே அதில் மசாலாக்களை போட்டால் தான் மசாலா நன்கு சிப்ஸ்சோடு சேரும்.

    அடுத்து எண்ணெய் சூடான பதத்தில் இருப்பதை உறுதி செய்த பின்னர் மீதமுள்ள வாழைக்காய்களை நாம் முன்பு செய்தது போன்ற எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து மசாலாக்களை தூவி நன்கு கலந்து விடவும்.

    சிப்ஸுகளை பொரித்து எடுத்த பின்பு கருவேப்பிலையை சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு அடுப்பை உடனடியாக அணைத்து விட்டு கருவேப்பிலை நிறம் மாறுவதற்குல் அதை எடுத்து சிப்ஸ் உடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு சிப்ஸை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான, சுவையான மற்றும் மொறு மொறுப்பான வாழைக்காய் சிப்ஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய பக்கோடா செய்வது எப்படி?

    பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாவில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பான்னீர் பக்கோடா, உருளைக்கிழங்கு பக்கோடா, முந்திரிப் பருப்பு பக்கோடா, முட்டைக்கோஸ் பக்கோடா என்பன மிகவும் பிரபலமானவை.

    இன்று இங்கு காண்பது வெங்காய பக்கோடா. மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடா சாப்பிடுவது பெரும்பாலானோருக்கு விருப்பமான தேர்வாகும். இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய இவைகள், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் படிப்படியாகப் பிரபலமடைந்துள்ளது.

    இங்கிலாந்தில் உள்ள இந்தியர்கள் நடத்தும் உணவகங்களில் பகோராக்கள் பிரபலமான துரித உணவுப் பொருளாகும். தமிழ்நாட்டில் பக்கோடா என்றும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பஜ்ஜி என்றும், மகாராஷ்டிராவில் பகோராஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்:

    ½ கப் கடலை மாவு

    ¼ கப் அரிசி மாவு

    3 பெரிய வெங்காயம்

    2 பச்சை மிளகாய்

    1 மேஜைக்கரண்டி சோம்பு

    1 சிட்டிகை பெருங்காய தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு கருவேப்பிலை

    செய்முறை:

    முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்த ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை கைகளின் மூலம் நன்கு பிரித்து விடவும்.

    பின்பு அதில் நம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், சோம்பு, பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு, ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கிளறி விடவும்.

    பின்னர் அதில் கடலை மாவு மற்றும் அரிசி மாவை கொட்டி அதை நன்கு கலந்து விடவும். (இதில் நாம் தண்ணீர் எதுவும் சேர்த்து விட கூடாது.)

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பக்கோடாவை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் நாம் கலந்து வைத்திருக்கும் கலவையில் சிறிதளவு தண்ணீரை தெளித்து அதை கடாயின் அளவிற்கேற்ப எடுத்து எண்ணெய்யில் உதிர்த்து விடவும். (மாவில் தண்ணீரை தெளித்து தான் விடவேண்டும் ஊற்றினால் அது பஜ்ஜி மாவு போல் ஆகி விடும்.)

    பக்கோடா கட்டியாக இருப்பதை விரும்புவார்கள் அதை சிறு சிறு கட்டிகளாக எண்ணெய்யில் போடவும்.

    பின்பு அது ஒரு புறம் வெந்ததும் அதை ஒரு கரண்டியின் மூலம் மறு புறம் திருப்பி விட்டு அது நன்கு பொன்னிறமானதும் அதை கரண்டியில் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இவ்வாறே மீதமுள்ள மாவையும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து அதை சுட சுட பரிமாறவும். (தேவைப்பட்டால் மாவை எடுத்து எண்ணெய்யில் போடுவதற்கு முன் சிறிதளவு தண்ணீரை தெளித்து கொள்ளவும்.)

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் நன்கு மொறு மொறுப்பாக இருக்கும் வெங்காய பக்கோடா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.